Tuesday, April 28, 2026

திருக்குறுங்குடி 5 வீட்டுக்கு வந்தோம்.............


வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

நம்பியாற்றுப் பாலத்தைத்  தாண்டி அக்ரஹாரத்துக்குள்  
நுழைந்தோம்.

பழைய பாலம்.         
திருனெல்வேலி சுலோச்சனா முதலியார் பாலம்.


 பக்கத்து எதிர் வீட்டு ஜன்னல்கள் எட்டிப் பார்த்தாலும் தாத்தா முனைப்பாக
உள்ளெ வந்து விட்டார்.

கொண்டு வந்திருந்த மீதமிருந்த கட்டு சாதங்கள் வடைகள் வடாம் 
தயிர்சாதம் என்று பாட்டியின் கையிலிருந்து வாங்கிக்
கொண்டு  உறங்கத் தயாரானோம்.
அப்பாவும் சித்தப்பாவும் படுக்கை விரிக்கத் தாத்தா பெஞ்சு
மேலயும்  பாட்டி தரையிலும் ராம நாமத்துடன்
படுத்துக் கொண்டார்கள்.




இந்தப் படம் புதிதாக இருக்கிறது:) அப்பாவை சைவமாக மற்றி, வீட்டை
மாடர்ன் ஆகச் செய்துவிட்டது ஏஐ. சொற்களும் கட்டளைகளும் சரியாக
இல்லாவிடில்  வரைபடம் கூடச் சரியாக அமைவதில்லை.:)பிறகு
வாழ்க்கை நேரே இல்லையென்றால் வார்த்தைகள் தானே காரணம்!!!!!




தம்பியும் அவன் மகனும். அவர்கள் திருக்குறுங்குடி சென்ற போது.


திருக்குறுங்குடி வீடு.(கூகிள்)




தாத்தா ஶ்ரீனிவாசன்.
சகோதரர்கள்

பாட்டி சாதங்களைக் கலக்க அம்மா தயாராகக் பாத்திரங்களில் எடுத்து வைக்கிறார்.பின்னால் மஹேந்த்ர கிரி தெரிகிறது.



No comments:

திருக்குறுங்குடி 5 வீட்டுக்கு வந்தோம்.............

வல்லிசிம்ஹன் எல்லோரும்  வளமாக வாழ வேண்டும். நம்பியாற்றுப் பாலத்தைத்  தாண்டி அக்ரஹாரத்துக்குள்   நுழைந்தோம். பழைய பாலம்.          திருனெல்வேல...