Monday, September 13, 2021

Magic!!! Music and All that!!





வல்லிசிம்ஹன்

இசை வலியைக் குறைக்கும்.
மனதை மிருதுவாக்கும். 
நாடித்துடிப்பை சீராக்கும்.
ஓடிக் கொண்டே இருந்தால் அலுக்கும் வாழ்க்கை சிலசமயம்
ஓய்வையும் விரும்புகிறது.

9 comments:

ஸ்ரீராம். said...

நான் கேட்டிராத பாடல்கள்!

மாதேவி said...

இசை கேட்டால் புவி அசைந்தாடும் ' மனமும் மகிழும். ஆமாம் மகிழ்ந்திருங்கள்.

கோமதி அரசு said...

பாடல்கள் கேட்டேன், நன்றாக இருக்கிறது.
இசை வலியை குறைக்கும். மனதுக்கு இதம், சாந்தி தரும்.

ஓய்வும் தேவைதான். சில நேரம் உடல் சொல்வதையும் கேட்க வேண்டி இருக்கிறது.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? முதுகு வலி எப்படி இருக்கிறது? சற்று குறைந்துள்ளதா? மருந்துகள் எடுத்து வருகிறீர்களா? உடல் நலன் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இசை கேட்கும் போது மனதிற்கு நன்றாகத்தான் இருக்கும்.வலிகளின் வேகத்தை குறைக்கும் சக்தியும் இசைக்கு உண்டு. நீங்கள் பகிர்ந்த பாடல்களை கேட்கிறேன். பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் இட முடியவில்லையே என வருந்தாதீர்கள். மெதுவாக உடல் நலம் தேறி வந்த பின் பின்னூட்டங்களுக்கு பதில் கருத்துகள் தாருங்கள். அவசரமில்லை. முதுகு வலியின் தொந்தரவை நானும் உணர்ந்து வருகிறேன். இன்னமும் என்னை விட்டு முழுமையாக அகல மறுக்கிறது. அப்போது மனமும் சோர்ந்து போகும் நிலையை நானும் அனுபவித்திருக்கிறேன். உங்கள் வலிகள் முற்றிலும் அகன்று முன்பு போல் இயல்பான நிலைக்கு விரைவில் தாங்கள் வர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

இப்போதுதான் கேட்கிறேன் அம்மா.
இரண்டவது பாடல் கொஞ்சம், பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை நினைவூட்டுகிறது அதாவது இரு பாடல்களையும் மெட்லி செய்யலாம். இசை அப்படி இருக்கிறது..

மூன்றாவது முதலில் ஸ்டாண்டப் காமெடி என்று நினைத்தேன்!!!!! ஹிஹிஹி எனக்கு அம்புட்டுத்தான் அவர்கள் ஆங்கிலத்தின் புரிதல்!!

பாடலின் இடையிலும் சிரிக்கிறார்களே! நம்ம சந்திரபாபு போன்றவரா?

நான் காவது பாடல் உச்சரிப்பு புரிகிறது. வரிகள் பார்க்காமலேயே...வரிகள் பார்த்ததும் பரவாயில்லை பார்க்காமலேயே புரிகிறதே என்று நினைத்துக் கொண்டேன்..எனக்கு நானே ஷொட்டு வைத்துக் கொண்டே ஹிஹிஹிஹி

நன்றாக இருக்கிறது அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இப்போதுதான் கேட்கிறேன் அம்மா.
இரண்டவது பாடல் கொஞ்சம், பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை நினைவூட்டுகிறது அதாவது இரு பாடல்களையும் மெட்லி செய்யலாம். இசை அப்படி இருக்கிறது..

மூன்றாவது முதலில் ஸ்டாண்டப் காமெடி என்று நினைத்தேன்!!!!! ஹிஹிஹி எனக்கு அம்புட்டுத்தான் அவர்கள் ஆங்கிலத்தின் புரிதல்!!

பாடலின் இடையிலும் சிரிக்கிறார்களே! நம்ம சந்திரபாபு போன்றவரா?

நான் காவது பாடல் உச்சரிப்பு புரிகிறது. வரிகள் பார்க்காமலேயே...வரிகள் பார்த்ததும் பரவாயில்லை பார்க்காமலேயே புரிகிறதே என்று நினைத்துக் கொண்டேன்..எனக்கு நானே ஷொட்டு வைத்துக் கொண்டே ஹிஹிஹிஹி

நன்றாக இருக்கிறது அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம் மா.
இந்தப் பாடல்கள் எங்களது மிக இளவயதுப் பாடல்கள்.
யாருமே கேட்டிருக்க வாய்ப்பில்லை மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
இசை ஒன்றுதான் இப்போது அமைதி தருகிறது.
யாரையும் தொந்தரவு செய்யாமல்.
சத்தம் இல்லாமல் கேட்டு மகிழலாம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி

வாழ்க வளமுடன்.
உடல் சொல்வதை எப்பொழுதாவது கேட்கத்தான் வேண்டி இருக்கிறது.
இருக்கும் வரை நிம்மதி வேண்டுமே.
ம்க நன்றி மா.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...