கிருஷ்ண கிருஷ்ண முகுந்தா பாட்டு அப்பா நன்றாக பாடுவார்கள். கிருஷ்ண பக்தி கொண்டவர்கள் அப்பா. சின்மயாமிஷனில் சேர்ந்து இருந்தார்கள். நிறைய பஜனை பாடல்கள் கிருஷ்ணர் பாட்டு பாடுவார்கள். நான் அதில் பால பஜன் கோஷ்டியில் இருந்தேன், நானும் பாடுவேன் அப்பாவுடன். பழைய நினைவுகள் வந்தன இந்த பாடலை கேட்டவுடன்.
எம். எஸ் அம்மா பாடலும் பிடிக்கும் கேட்டு மகிழ்ந்தேன், நன்றி.
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அல்லாதன மனதில் தங்குவது அதிகம். நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன்........... பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள் என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள் வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான் வேண்டும்:) பிறகு அவர்களின் திருமணங்கள். இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது. பிறகுதான் நினைவுகள் தடம் மாறுகின்றன. தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான் மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துக...
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,மனைநலம் காத்து நூறாண்டு காலம் செழித்திருக்க வேண்டும்.
Comments
பழைய நினைவுகள் வந்தன இந்த பாடலை கேட்டவுடன்.
எம். எஸ் அம்மா பாடலும் பிடிக்கும் கேட்டு மகிழ்ந்தேன், நன்றி.
வாழ்க வளமுடன்.
அப்பாக்களால் நல் விஷயங்களைக் கற்கிறோம்.
நம்மைப் பார்த்து நம் குழந்தைகள்
நற்செயல்களைக் கடைப்பிடிக்கிறார்கள்.
இன்றும் கண்ண பகவான் பிறப்பை ஒட்டிப்
பேரன்கள் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.