Blog Archive

Sunday, May 24, 2020

முருங்கை ,மாங்காய்,உ.கிழங்கு சாம்பார்

வல்லிசிம்ஹன்

இறைவன் காப்பார் .
முருங்கை ,மாங்காய்,உ.கிழங்கு சாம்பார் 


புதிய  ரெசிப்பி என்று சொல்ல வரவில்லை.
இன்று  தோசைக்குத் தொட்டு கொள்ள பசங்களுக்காகச் செய்தது.





மதியம் மிளகுக்   குழம்பும் பீட் ரூட் கறியும் , பொரித்த அப்பளமும் ஆயாச்சு.
இப்பொழுது   சாயந்திரத்துக்குத்  தேங்காய், அவல் , பாசிப்பருப்பு,மெந்தியம் 
கொஞ்சம் அரிசி சேர்த்து ஊறவைத்து அரைத்த பிறகு சாம்பார் 
வைத்துக் கொள்ளலாம்  என்று நினைத்து செய்தென்.

மாங்காய் நிறைய வர ஆரம்பித்திருக்கிறது.

ப.பருப்பு மசித்து வைத்துக்  கொண்டு, முருங்கை , மாங்காய், 
உ.கிழங்கு ஒன்றாக  உப்பு , மஞ்சள் பொடி போட்டு வேக வைத்து,
கடுகு,ப.மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து (பச்சை மிளகாய்  தான் முக்கியம்)

விட்டால்  சாம்பார் தயார்.
 பொடியும்,
புளி யும் இல்லாததால் 

ருசியே வேறு மாதிரி இருந்தது.

15 comments:

ஸ்ரீராம். said...

ஆமாம்...   இதுவரை இப்படிச் செய்ததில்லை!  செய்து பார்த்துவிடலாம்.  அட...   மிளகுக்குழம்பா..   பாஸ் கிட்ட ஒரு மாதமா கேட்டுகிட்டே இருக்கேன்...

Jayakumar Chandrasekaran said...

கூட்டும் இப்படித்தானே செய்வார்கள். கூட்டுக்கும் இதற்கும் என்ன வித்யாசம். புளிப்பு மாங்காய்???

Jayakumar

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், இனிய காலை வணக்கம்.

பசங்களுக்கு காரசாரமாக வேண்டி இருக்கிறது. அதான் மிளகு குழம்பு. இந்த மாங்காய்ப் புளிப்பு

,பச்சை மிளகாய் காம்போ நன்றாக இருந்தது. நன்றி மா. பாஸ் பண்ணித் தருவார்.
அம்மா சொன்னேன்னு சொல்லுங்ஙகோ:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார், இனிய காலை வணக்கம்.
பா. பருப்புக்குப் பதிலாக அது.பருப்புதஆன. போடவேண்டும். அஅங்கே அது வாய்வு தருவதால் பாசிப்பருப்பு போடுகிறோம். நன்றாக இருந்தது.

வெங்கட் நாகராஜ் said...

மாங்காய் இங்கேயும் நிறைய கிடைக்கிறது இப்போது.

முருங்கையும்!

சுவையான குறிப்பு. செய்து பார்த்துவிடலாம்!

KILLERGEE Devakottai said...

புதிய வகை போல...

நெல்லைத்தமிழன் said...

அட... முருங்கை உருளை மாங்காய் சாம்பார்.. முருங்கையை விட்டுவிட்டு மற்றதை உபயோகப்படுத்திச் செய்துபார்க்கலாம்.

அங்க கருவேப்பிலை கொத்தமல்லிலாம் கிடைக்குதா?

கோமதி அரசு said...

சாம்பார் நன்றாக இருக்கிறது.
மாங்கா, முருங்கை , உருளை போட்டால் சாம்பார் சுவையாக இருக்கும்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், இனிய மண நாள் வாழ்த்துகள்.
இது செய்வது ரொம்ப சுலபம்.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
புதிது இல்லைப்பா. மாங்காய் காலம்
வந்த உடன். புளிக்குப் பதிலாக மாங்காய் உபயோகப்'
படுத்துவது சகஜம். பருப்பு கடையும் போது
மாங்காய் கலந்து விடும். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
நீங்கள் சொல்வது போலச் செய்தாலும்
நன்றாகவே இருக்கும். இங்கே வீட்டிலயே
கருவேப்பிலைச் செடிகள் இருக்கின்றன.
கொத்தமல்லி நிறையக் கிடைக்கிறது.
குறைவில்லை.
நேற்றுதான் இந்தியக் கடையிலிருந்து சௌ சௌ,
புடலங்காய் எல்லாம் வந்தன.

விலைதான் ஜாஸ்தி.

மாதேவி said...

சுவையான சாம்பார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
இதுவும் பெருங்காய வாசனையோடு சுடச்சுட
நன்றாக இருந்தது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தை ஜெயக்குமார்,
மிக நன்றி மா.