Wednesday, December 20, 2017

மார்கழிப் பாசுரம் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மாயனை மன்னு வட   மதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
 ஆயர் குல த்தினுள் தோன்றும் அணிவிளக்கைத்
 தாயைக்  குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க
 போய பிழையும் புகுதறுவான் நினறனவும்
 தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

12 comments:

Anuprem said...

ஆண்டாள் திருவடிகளே சரணம்....

நெல்லைத் தமிழன் said...

மாயனை, வடமதுரை மைந்தனை, யமுனை ஆற்றின் துறையிலிருப்பவனை, ஆயர் குலத்துக்கே அணிவிளக்காகத் தோன்றியவனை, அசோதையின் வயிற்றில் பிறந்தவனை, தூய்மையா வந்து, நாம் மலர் தூவி, வாயினால் அவன் புகழைப் பாடி, மனத்தினால் அவனோடே ஒன்றியிருக்க, நம் எல்லாப் பிழைகளும் போகும், எல்லாப் பாவங்களும் நெருப்பில் இட்ட பஞ்சுபோல் தூசாகும். அதனாலே அவன் நாமத்தைச் சொல்லிப் பாட வாருங்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பாசுரம் படித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அனுராதா மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் நெல்லைத்தமிழன்,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைப்
பாடுவோம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் திரு .ஜம்புலிங்கம்.
நானும் பாசுரம் மறக்கக் கூடாது என்றே எழுதுகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

ஐந்தாம் பாசுரம் சிறப்பு.

தொடர்கிறேன் மா.

பூ விழி said...

பகிர்வுக்கு நன்றி

'பரிவை' சே.குமார் said...

பாசுரமும் வாசித்தேன்...
நெல்லைத் தமிழன் அவர்களின் விளக்கத்தையும் வாசித்தேன் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
ஐந்து வயதில் கற்றது இந்தப் பாட்டுகள். கடவுள் இந்த
பாவை நோன்பை நான் இருக்கும் வரை என் மனதில்
பாட வைக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூ விழி மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமார், மிக மிக நன்றி ராஜா.

தாத்தா பாட்டி எக்ஸ்பிரஸ். 2008ஆம் வருடம்.

வல்லிசிம்ஹன் 293,பயணமா ..மீண்டுமா... 2008 தை மாதம் உருண்டோடும் நாளில்,கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா? என்று பத்மினி கேட்பார்   சம்சாரம் ஒ...