Sunday, February 28, 2021

.கேட்க விரும்பும் சில பறவை ஓசைகள்.

சென்னையில் இருக்கும் போது 
இந்தக் குயில்கள் தினம் நம் மாம

ரத்தின் கிளைகளில் 
வந்து உட்காரும்.
தென்னை மரங்கள் இரண்டிலும் ஊஞ்சாலாடிக் கொண்டு  பேசும் 
கிளிகள் கூட்டமாக வந்து போகும்.
இதோ இன்றுடன் இங்கு வந்து 
ஒரு வருடப் பூர்த்தி.
இன்னும் அந்த சாலை மும்முரமும், 
பல வியாபாரிகளின் குரல்களும் எப்போதாவது விசாரிக்கும்,''அம்மா
ஈயம் பூசலியா''வும்
''ஐயா இருந்த அரிவாள் கத்தி எல்லாம் சாணை
பிடிப்பாருங்க. நீங்க அந்த அருவாமணையைக் கூடத் தீட்டறதில்லை''
என்று வருந்தும் சாணைபிடிப்பவரும்,
பழைய பேப்பர் எடுப்பவர்''அம்மா நீங்க பேப்பர் 
போடறதைக் கூட நிறுத்தீட்டீங்களா''
என்று பார்த்துப் பேசிப் பழகும் 
காயலான் கடைக்காரருக்கும் 
என்ன பதில் சொல்வது என்று விழிப்பேன்.
அந்த விதத்தில் தனிமையே  இல்லாத ஊர் 
நம்ம ஊர்.

Friday, February 26, 2021

வாயு என்னும் தீராத தொல்லை.

வல்லிசிம்ஹன்

வாயுக்கு எதிரிகள்!

மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.


பூண்டு, வெங்காயம், இஞ்சி சேர்த்தகலவை

பெரும்பாலார்க்குப் பிடிப்பதில்லை.

எல்லாமே அளவோடு இருந்தால் அதிக பாதிப்பு
இருக்காது.1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்தனர். இது எந்த விதமான நோய் என்றும், இதற்கு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றியும் யோசித்து வந்தனர். அந்த சூழ்நிலையில் ஒரு விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த ஆரோக்கிய சீர் கேடுகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது. எப்படி இருந்தாலும் இவரது குடும்பத்தினக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் எப்படி இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியம் என்று மருத்துவர்கள் சிந்தித்தனர்.

மற்ற குடும்பத்தினரை விட இவர்கள் எந்த விதத்தில், வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு முறை அந்த விவசாயின் வீட்டிற்கு சென்று, நீங்கள் மற்றவர்களை விட எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் அந்த விவசாய குடும்பத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. பின்னர் மருத்துவ ஆய்வாளர்கள் அவர்களது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகளை கண்டனர். இது எதற்கு என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் நீண்ட நாட்களாக நாங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் வெங்காயத்தை இரண்டு தூண்டுகளாக அரிந்து வைத்து, காலையில் அதனை எடுத்து வெளியே எடுத்து எரிந்து விடுவோம். என்று கூறினர்.

பெருங்காயத்துக்கும் அதே வார்த்தைதான். அளவுக்கு மீற வேண்டாம்.
தேடியதில் கிடைத்தைப் பகிர்கிறேன்.


  பெருங்காயம் நல்லதா கெட்டதா
* தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள். தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச்சுருட்டிக்கொண்டு ஓடும். 

* நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம். 

* அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது. 

அன்னம் ,தானம் உயிர் காக்கும்.

வாழ்க வளமுடன்.

Thursday, February 25, 2021

அம்மா செய்முறையில் மசாலா உருளைக் கிழங்கு

சனிக்கிழமை மதியம் பள்ளிவிட்டதும்
மூவரும் வந்துவிடுவோம்.
அன்றைய மாலை விளையாட்டுக்குப் போவதற்கு முன்ஸ்பெஷல் டிஃபன் உண்டு. 
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம் செய்து கொடுப்பார்
அம்மா. 
தேங்குழல்,ஓமப்பொடி, நாடா பக்கோடா
இப்படி கறுக் முறுக் இருக்கும்.

எல்லாமே அப்போது புதிதாக வந்த ஜனதா ஸ்டவ்வில்
தான் செய்வார்.
அதற்கு முன் விறகடுப்பில் செய்திருப்பாரோ
என்னவோ.
கரியடுப்பில் செய்வதனால் நானும் உதவி இருக்கிறேன்.

ஞாயிற்றுக் கிழமைக்கு சின்ன வெங்காய சாம்பாரும் 
வடாம் பொரித்ததும் இருக்கும். சாயந்திரம்
பூரி  உருளைக்கிழங்கு மசாலா இருக்கும்.
திருமங்கலம் உருளைக்கிழங்கு மிக மிக ருசி.
ஏன்  சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைக்கு 
இவ்வளவு முக்கியத்துவம் என்றால் 
காரணம் அப்பாதான்.
அலுவலகத்துக்குப் போகும் போது
க்ரோஷாவில் பின்னப்பட்ட ஒரு பையில் தெர்மாஸ்
ஃப்ளாஸ்கில் காப்பி மட்டும் எடுத்துச் செல்வார்.
தபால் அலுவலகம்  அதே சாலையில்  தான் இருக்கும்.
மதியம் கிடைக்கும் நேரத்தில்
குறைவான சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போனால்

இரவுதான் வருவார்.
ஞாயிறன்றுதான் முழு ஓய்வு, எண்ணெய்க் குளியல்,
தோட்டம் கவனிப்பு, எங்கள் படிப்பு
பற்றி  செக்கிங்க் எல்லாம் நடக்கும்.
அம்மாவுக்கும் சமையலில் உதவி செய்வார்.

அதில் சின்ன வெங்காயம் உரிப்பதும் அடக்கம்:)
அந்த வீட்டு சமயலறையீலேயே  கிணறு இருக்கும்.
அந்த முற்றத்தில் நானும் அம்மாவும் குளிப்போம்.
வெளிப்புறம் இருக்கும் கிணற்றில் அப்பாவும் தம்பிகளும் குளிப்பார்கள்.

சமையலறையில் அம்மி, கல்லுரல் இருக்கும்.
தோசை வார்க்கும் போது அம்மா பக்கத்தில் உட்கார்ந்து கொள்வோம்.

சமையலறை அடுத்த அறை சாப்பிடும் அறை..
அங்கு தான் ஜன்னல்கள் மூடி இருக்கும்.
ஒரு தடவை பின்புறக்கதவில் பேர் சொல்லாதது வந்ததால்.,
இந்த ஏற்பாடு. இதமான அறை.இரண்டு பக்கத்திலிருந்தும் வெளிச்சம் வரும்

கொலுவைப்பதும் அந்த அறையில் தான்.
அதைத் தாண்டி பெரிய கூடம்.

படுப்பது,படிப்பது,விளையாடுவது அங்கே தான்.

ஒரு சாய்வு நாற்காலி, தாத்தா வந்தால் உட்கார,
படிக்கும் மேஜையும் நாற்காலியும்.
சுருட்டி வைக்கப் பட்ட மெத்தைகள்,
பாய்கள், ஜமக்காளம் எல்லாம்  ஒரு மூலையில்.

''பத்து பைசா கொடுத்து ஆடச் சொன்னால் லட்ச ரூபாய் கொடுத்து
ஓயச் சொல்லணும்.'' பாட்டி சொல்வது   எனக்கு மிகப் பொருத்தம்.:)

அம்மா செய்முறையில் மசாலா உருளைக்கிழங்கில் காரம் இருக்காது.
தக்காளி போட மாட்டார்.
ப்ளெயின் சிம்பிள் உ.கிழங்கு.
மிக நன்றாக வேகவைத்த உருளைக் கிழங்கை
தோல் எடுத்த பிறகு
நன்றாக மசித்து விடுவார்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக
நறுக்கி வைத்துக் கொண்டு  ,
அடுப்பில் இரும்பு வாணலியில்
நல்லெண்ணெய் விட்டுக் கடுகு போட்டு
வெடித்ததும்
வெங்காயம் ,பச்சை மிளகாய் போட்டு வதங்கியதும்
மஞ்சள் பொடி சேர்ப்பார். உப்பும் அதில் சேரும்.

கொஞ்சம் ஜலம் சேர்த்துக் கொதித்ததும்
உ;கிழங்கும் அதில் சங்கமம் ஆகும்.
அதுவும் ஒன்று சேரக் கொதித்ததும்

வீட்டில் இருக்கும் கருவேப்பிலைச் செடியிலிருந்து
உருவின கருவேப்பிலை இலைகளைத் தாராளமாகத் தூவி
அடுப்பில் இருந்து
இறக்க வேண்டியதுதான்.

நடுவில் ஓடின குடும்ப புராணத்தைத் தடுக்க முடியவில்லை:)





வல்லிசிம்ஹன்

வீதி சுற்றி வழிபட்டு.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...