Tuesday, April 03, 2018

மாசி மாத வற்றல்,வடாம் கதையின் ....12 ஆம் பாகம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மாசி முடிந்து பங்குனியும் பிறந்தாச்சு. காரடை நோன்பின் அடையாளமாக
 கன்னிப் பெண்கள் கழுத்தில்  மஞ்சள் நூல் பளிச்சிட்டது.
வெய்யில் அதிகரிக்க, முஹூர்த்த நாள் அழைப்புகளும் வரத்துவங்கின.

சீர் பக்ஷணங்கள் செய்வதில் ஜயம்மா மிகச் சிறந்தவர்.
ஒரு சில அழைப்புகளை ஏற்றுக் கொண்டார்.

பருப்புத் தேங்காய் வித விதமான உட்பொருட்கள் உள்ளே வைத்து செய்வதில் கெட்டிக்காரர்.
முந்திரிப்பருப்பு, பாதாம்,நிலக்கடலை, மனோகரம், மிட்டாய்கள் பருப்புத் தேங்காய்
என்று ஆர்டர்கள் வந்த வண்ணம் இருந்தன.,

செங்கமலம், வேதா இருவரையும்  ,பருப்புத்தேங்காய் கூட்டில்
அழுத்தி வைக்க மட்டும் சொன்னார்.
வெய்யில்,வேளையில் அடுப்படியில் அவர்களை உட்கார் வைக்க
மனமில்லை.

சீனு , மந்தைவெளிக்குச் சென்று கோதண்டராமனையும்
 பத்ரிக்கு வர அழைப்பு விடுத்தார்.
மேற்கொண்டு கல்யாண கான்ட்ராக்ட்களை எடுத்துக் கொள்ள வில்லை.
அவருடைய தம்பி கண்ணனும் இதே தொழிலில் பக்கத்து வீட்டில் இருப்பதால்
பெண்களைத் தனியே விடும் சங்கடமும் இல்லை.

வைகாசி பிறந்தவுடன் எல்லோரும் கிளம்புவதாக ஏற்பாடு.
மாதுவுக்கு ஜட்ஜ் மீனாக்ஷிசுந்தரம், தன் கோட்டாவில், ஜெயின் காலேஜில்
இடம் வாங்கிக் கொடுத்தார்.
எதிர்காலத்தைப் பற்றிக் கவலையிலேயே இருந்த அவனுக்கு,
முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.

ஜட்ஜ் வீட்டில் அவனுக்குக் கார் ஓட்டப் பயிற்சிக்கூடத்தில் சேர்த்து விடுவதாக
அழைப்பு வந்தது. எளிதில் கற்றுக் கொண்டு பரீட்சையில் தேர்ச்சியும்
பெற்றான்.
கீதுவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
முதல் தடவை ஒரு வண்டி ஓட்டிக் கொண்டு வந்த மகனைப் பார்த்துப் பூரித்துப் போனாள்.

ஜட்ஜ் வீட்டில் ட்ரைவராக இருந்த வயது முதிர்ந்த பழனி ஓய்வு பெறவும்
அந்த வேலையில் மாது அமர்ந்தான்.
காலையில் ஜட்ஜ் மாமாவுக்கு கடற்கரை நடைப் பயிற்சிக்கும், மாலையில்
அந்த வீட்டு மாமியின் ,கோவில், தோழிகள் வீடு என்று அழைத்துப் போவதற்கும் அவனுக்கு
 500 ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.
மயிலை வீதிகள் நெரிசல் இல்லாமல் இருந்த காலம் அது.

வைகாசி பிறப்பதற்கு முன்பே ,ஜயம்மா,கீதா,சீனு மூவரும் கோதண்ட ராமன்
வீட்டுக்குப் போய், அவரது தங்கையிடம் மாது அங்கு வந்து  தங்க அனுமதி கேட்டார்கள்.
அத்தைக்குக் குழந்தைகள் இல்லை.
வீடும் மூன்று அறைகளோடு காற்றோட்டமாக இருந்தது.
மாது வந்தால் தனக்குத் துணையாக இருக்கும். தொந்தரவில்லை
என்று மகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

ஊருக்குக் கிளம்பும் நாள்., சீனு ,மாதுவிடம்,ஆயிரம் ரூபாட்த் தனியாகக் கொடுத்து,
அத்தைக்கு வேண்டும் என்கிற காய்கறி, வீட்டு பொருட்கள் எல்லாம் சொல்லாமலயே வாங்கி வைக்குமாறு சொல்லிக் கொடுத்தார்.
 இத்தனை பணம் எதுக்கு மாமா என்ற மாதுவிடம், அவசரத்துக்கு வைத்துக் கொள்.
இந்தியன் பாங்க் அங்க பக்கத்துல இருக்கு.  அழகாக இரண்டு பாண்ட், சட்டை தைத்துக் கொள்.
 நன்னு ஜான் டெய்லர் அளவாகத் தைப்பார்.
லஸ் நல்லியில் துணி வாங்கி தைக்கக் கொடு.
இரண்டு டவல் உடம்பு துடைக்க வாங்கிக்கோ.
கர்சீஃப் ஒரு டஜன் இருக்கட்டும். குளிக்கிற சோப், துணி தோய்க்க சோப்
,நல்ல வெள்ளை வேஷ்டி எட்டு முழத்தில் இரண்டு ரங்காச்சாரி கடையில் வாங்கிக்கோ
என்று வரிசையாகச் சொல்லும் மாமாவின் பரிவைக் கண்டு
மாதுவுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது.
மாமா,மாமி,அம்மாவை நிற்க வைத்து நமஸ்கரித்தான்.
நான் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.
நீங்களும் நல்ல படியாகப் போய் வாருங்கள் என்றான்.

ஏற்கனவே அவனும் மாமாவுமாகக் கடைகளுக்குச் சென்று அனைவருக்கும் ஸ்வெட்டர்,ஷால்
என்று வாங்கி வந்திருந்தார்கள். ரயிலில்  சாப்பிடத் தோதாகச் சப்பாத்தி, இட்லி,
 வகையறாவை எடுத்துக் கொண்டார்கள்.
அடுத்த நாள், சாயந்திரம் கிளம்பும் க்ராண்ட் ட்ரங்க் வண்டியில் சீனு,ஜயம்மா, கீது ,கோதண்ட ராமன் தம்பதிகள் கிளம்பினார்கள்.
லஸ் வினாயகரிடம் விடைபெற்றே கிளம்பினார்கள்.

அன்று மதியம் கோதண்டராமன் வீட்டில் சாப்பிட அழைத்திருந்தார்.
நிம்மதியாக வீட்டைப் பூட்டி சாவியை மாதுவின் கையில் கொடுத்துவிட்டு
சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு இரண்டு டாக்சியில் கிளம்பினார்கள்.

அத்தையும்,பெண்களும், மாதுவும் வண்டி கிளம்பும் வரை இருந்துவிட்டு
மகிழ்ச்சியாக விடை கொடுத்தார்கள்.

அதற்குப் பிறகு நடந்த மகிழ்வான நிகழ்வுகள், நான்கு வருடங்களில்
நிறைவேறின. செங்கமலம், மாதவன் மனைவியானாள்.

வேதாவுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர்.
இப்போதைக்கு இந்த உழைப்புக் குடும்பத்துக்கு விடை கொடுப்போம்.
கூட வந்த அனைவருக்கும் மிக மிக நன்றி. சுபம்.

Saturday, March 31, 2018

என் அருமை ரங்கன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  என் அருமை ரங்கன்.

அக்கா அண்ணா இருவரிடமும் மாட்டிக் கொண்டு விழிப்பான்.
 கேலி காட்டுவதில் மன்னன்.
நடிப்பு பாட்டு எல்லாவற்றிலும் ஆர்வம்.

பதின்ம வயதுகளில் அவன் தலைமுடியைச் சீவி விட்டுக்கொள்ளும் லாகவத்தைப்
பார்க்கவேண்டும்.
தலை சொட்ட ஈரம் செய்து கொண்டு.
 குட்டி மரபீரோ மேலிருக்கும் கண்ணாடியில் இப்படி ஒருதரம் அப்படி ஒருதரம்
வாரிக்கொள்வான்.
என்னிடம் வந்து எப்படி டீ இருக்கு.
தெய்வ மகன் சிவாஜி மாதிரி இருக்கா என்பான்.
சகிக்கலையே. முடி வெட்டுக் கொள்ளேண்டா. .
என்பேன்.
ரசனையே இல்லை என்று போய்விடுவான்.
மகா குறும்புக்காரன். மஹா உதவியாளன்.
எள்+எண்ணெய் டைப். திருச்சியில் ,குடும்பமே அம்மா அருள் வந்து
இருக்கும் போது தைரியமாக வந்து  இளனீர் சப்ப்ளை செய்வான்.

1967இல் முதல் குழந்தை பிறந்தபோது அவன் ஆடிய ஆட்டம்.
சொல்லி முடியாது. உட்கார்ந்து கொண்டு ,குழந்தையைத் தொடாமல் பார்த்துக் கொண்டே இருப்பான்.
   ஏய் அவன் அத்திம்பேர் மாதிரி தான் வருவான்.பெரிய கண்ணும் இமைகளும்.
உன்னை மாதிரி சின்னக் கண் இல்ல//

தான் குழந்தையோடு இருக்கணும் என்பதற்காக
சினேகிதன் வீட்டிலிருந்து முப்பது நாற்பது காமிக்ஸ் புத்தகங்கள்
கொண்டு வந்து கொடுப்பான்.
மூன்றாவது குழந்தை பிறக்கும் போது மற்ற இரண்டு குழந்தைகளும் இவன் கழுத்தைக் கட்டிக் கொண்டுதான் தூங்கின.
அவர்களோட டங்க மாமா.
எப்பொழுது கடிதம் எழுதினாலும் , நீ எப்ப வருவே. கேள்விதான்.
அப்பா அம்மாவின் உயிர் நாடி. அவன். நான் வேறு ஊர்களில் இருக்கும் போது அம்மா அப்பாவை வைத்தியரிடம் அழைத்துச் செல்வதும் அவன் தான். வாழ்க வளமுடன்

Friday, March 30, 2018

மாசி மாத வற்றல்,வடாம் கதையின் ..........11 the part

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

முருகனோடு நலம் விசாரித்தார் ஜயம்மா.  வீட்டில
பாப்பா எப்படி இருக்கா, குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தியா
என்று துவங்கினாள்.
அல்லாம் தாடிக்கார ஸ்கூலுக்குப் போகுதுங்க. அங்கயும்
யூனிஃபார்ம் எடுக்கச் சொல்றாங்க. பொஸ்தகம்
வாங்கச் சொல்றாங்க..
மதியம் சாப்பாடு கிடைக்குது. ஒரு வேளை ஓடிப்போகுது. என்றான் முருகன்.

தாடிக்கார பள்ளி என்பது மந்தைவெளி சாயிபாபா கோவிலை ஒட்டி
நடத்தப்பட்ட ஸ்கூல்.

கவலைப் படாதே ,ஏதாவது வேண்டுமானா வீட்டுக்கு வா. என்னால் முடிந்த உபகாரம்
செய்யறேன் என்றபடி இறங்கினார்.
அவனும் ,
//விளாமரத்து வீட்டு மருமவ, அவங்க பிள்ளைங்களோட துணி மணிகளக்
கொடுத்திச்சு. நம்ம குழந்தைகள் ஈடுதான் அந்தக் குழந்தைகளும்.
  அய்யரு வீட்டு உதவி எல்லாம் இருக்கையல
எனக்குக் கவலை இல்லம்மா என்றான்.
 அவனுக்கு உண்டான பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குள்
சென்றார்கள்.

செங்கமலம், வேதா,சீனு,மாது எல்லோரும்
மாடியிலிருந்து ,பாதி காய்ந்த வடாம், வற்றல்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
வீடு முழுவதும் பரவியது ஈர வாடை.
என்ன  வேலை முடிஞ்சதா. பாட்டி சரி என்று ஒத்துக் கொண்டாரா
என்று கேட்டபடி சீனு வேஷ்டிகளை மூடி வைத்தார்.

ஆஹா, பாட்டியும் அவரது மருமகளின் அருமையைச் சொல்லி முடியாது.
பாவம் அந்த மாமாவுக்கு இப்படித் திடீரென்று ஆகி இருக்க வேண்டாம்
என்று வருத்தப்பட்டார் ஜயம்மா. கண் படுகிற மாதிரி
பெரிய குடும்பம். இப்போது பங்கஜம்மா பிள்ளையும் இங்கேயே
வந்துவிட்டார். மூன்று குழந்தைகளும் அத்தனை சமத்துகள்.
இரண்டு பாட்டிகளிடமும் ஒட்டிக் கொண்டு வளர்கின்றன. அவர்களுக்கு
இது பெரிய  சமாதானம் இல்லையோ.
ஆமாம் பகவான் எதையும் பொருள் இல்லாமல் செய்வதில்லை.

அது இருக்கட்டும் இருவரும் சாப்பிட்டீர்களா என்றார்.
பசியே இல்லை. இதோ இந்த டப்பாக்களில் புளியோதரை
இருக்கிறது , பசங்களா நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

நான் கொஞ்சம் படுத்துக் கொள்கிறேன் என்று ஒரு ஓரமாகப் படுத்துக் கொண்டார் ஜயம்மா.

இரண்டு பெண்களும், இலைகளில் சமமாகப் பங்கிட்டு, மாதுவிடம் கொடுத்துவிட்டுத் தாங்களும் சாப்பிட்டார்கள்.

இன்னும் இரண்டு நாட்களில் நம் எடுத்துக் கொண்ட அளவு
வத்தல்கள் தேறிவிடும்.
நாளை மீண்டும் ஒரு ஈடு ,போட்டுவிட்டால்  பத்து வீடுகளுக்கும் கொடுத்துவிடலாம்.

பிறகு பட்சணக் கடை ஆரம்பிக்க வேண்டும்.
என்ற  ஜயம்மாவைப்  பார்த்து, இரு இரு
அவசரமே இல்லை.
இந்த வேலை முடியட்டும்.
 மாதுவுக்கும் ஒரு காலேஜ் சீட் கிடைக்கட்டும்.
பிறகு  நாம் மூவரும் பத்ரி போக திருவல்லிக்கேணி
சம்பத்திடம்  ஏற்பாடு செய்திருக்கிறேன்.
20 நாட்கள் லீவு தான். இனிமேல் ஜூலை தான் நம் வேலை ஆரம்பம்.

என்னது இப்படி திடீர்னு சொல்கிறீர்களே.
குழந்தை எங்கே   இருப்பான்.
அங்கெல்லாம் பனியாக இருக்குமே, நாம் எல்லாம் குளிர் தாங்குவோமா.
கேள்விகளை அடுக்கினாள். அசதி எல்லாம் எங்கோ போய்விட்டது.

கீதுவின் முகம் மலர்ந்தது.
நெடு நாட்கள் கழித்து மனம் நெகிழ்ந்தது.
மாது ஆச்சரியத்தோடு பார்த்தான்.

சாப்பிட்டுக் கைகள் கழுவி வந்த அக்கா தங்கைகள், மாமி
நாங்கள் நாளை எப்போ வரணும் என்று கேட்டார்கள்.

ஒரு நாள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்  ,அடுத்த நாள் ஜவ்வரிசி கூழ்தான். அதை நாங்களே
செய்துவிடுவோம். நீங்கள் வந்து  மாடிக்கு ,எடுத்துப் போய் வத்தல் இட்டால் போதும்.
எங்களுக்குப் பெரிய வேலை வைத்திருக்கிறார் லஸ் பாட்டி. பணியாரம் செய்யச் சொல்லி இருக்கிறார்.

சரி, நாங்கள் அன்றைக்கு வருகிறோம். நீங்கள் ஊருக்குப் போவதை
அப்பாவிடம் சொல்கிறேன்.
அவர்களும் உங்களுடன் வர ஆசைப் படுவார்கள்
 என்று சிரித்தாள் பெரியவள் செங்கமலம்.
 அம்மா அப்பா இல்லாமல் தனியாக இருப்பீர்களா என்று அதிசயப்
பட்ட ஜயம்மாவிடம்,
அதான் எங்கள் அத்தை அடுத்த போர்ஷனில் தானே இருக்கிறார்கள்.
வேண்டுமானால் உங்கள் மாது கூட அங்கே வந்து இருக்கலாம்.
 வசதி குறைச்சல் என்றாலும் பாதுகாப்பாப் பார்த்துக் கொள்ளுவாள் அத்தை,
என்று குறும்புடன் சொல்லி விட்டுக் கிளம்பின பெண்களைப் பார்த்து மகிழ்ந்து
போனாள் ஜயம்மா.

பாத்தியோ இந்தப் பொண்ணை .  பட்டு பட்டுன்னு பேசறதே.
எல்லாம் இந்த ஊர்ப் பொண்களுக்குச் சொல்லியா தரணும்.
பிழைத்துக் கொள்வார்கள் என்று மனசாரப் பாராட்டினாள் கீது.

 சரி சரி நீ வாடா மாது, நாம் ஜட்ஜ் வீட்டுக்குப் போய் விட்டு
அப்படியே திருவல்லிக்கேணி போய் வரலாம் என்று கிளம்பினார்
சீனு. மாது தொடர்ந்தான்.








Wednesday, March 28, 2018

தம்பி முரளியும் அவன் வெள்ளை சட்டையும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 திருமங்கலம் 1956.

நானும் தம்பி முரளியும் முறையே மூன்றாம், இரண்டாம்
வகுப்பில் ,கஸ்தூரிபாய் காந்தி ஆதாரப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம்.

சலவைத் தொழிலாளி வீட்டுக்கு வந்து அப்பாவின் வேட்டிகள்,சட்டைகள், படுக்கை விரிப்புகளை மட்டும் எடுத்துப் போவார். ஒரே ஒரு தடவை தம்பியின்
வெள்ளை சட்டையை ,ஏதோ கறை நீக்க அவ்ரிடம் அம்மா
கொடுத்துவிட்டார்.
தம்பிக்கு மிகப் பிடித்த சட்டை.
சட்டை வந்துடுத்தாம்மான்னு கேட்டுக் கொண்டே இருப்பான்.

ஒரு வாரத்தில் கொடுப்பார்.அதில அழகா ஓரமா புள்ளி வச்சிருக்கும் பாரு
என்று சமாதானப் படுத்துவார் அம்மா.
அடுத்த நாள், அவனுடைய தோழனே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டுவந்தான்.
அவ்வளவுதான் இவனுக்கு ஒரே கலக்கம். என் சட்டையைக் கொடு  என்று அவன் பின்னாலியே சுத்தவும், பள்ளியை விட்டு ஓட ஆரம்பித்துவிட்டான் அவன்.
அவன் ஓட ,இவன் ஓட, இவன் பின்னால் நான் ஓட
 ஒரே குழப்பம். முரளி அந்தப் பையனை விடுவதாக இல்லை.
இரண்டு பர்லாங்க் போயிருப்போம். அங்கே போய் நின்ற பையனின்
வீட்டிலிருந்து வெளியே வந்தார் நம் சலவை செய்பவர்.
என்ன சாமி இங்க வந்திருக்கீங்க என்று வாஞ்சையோடு கேட்டவர்
தன் மகனையும் பார்த்தார். புரிந்துவிட்டது.

அடிக்கப் போனவரிடம் ,மனைவி வந்து தடுத்தார்.
நான் தான் போட்டுவிட்டேன். நீ அவனை அடிக்காதே.
என்றதும் அவர்,
என்னிடம்  நீங்க போங்க சாமி, நான் சட்டையைத் தோய்ச்சுக் கொண்டு வரேன்,
என்றார்.
இவனோ நகர மாட்டேன் என்கிறான். நல்ல வேளையக அங்கே எங்கள் தெருவிற்குத் தேங்காய் மிட்டாய்  கொண்டு வருபவர்
பஞ்சு மிட்டாய்க் கொண்டு வரவும்,
அம்மா கொடுத்த பத்து பைசா..என்னிடம் இருந்ததனால் ,ஒரு குச்சி வாங்கி இவன் கையில்
கொடுத்துக் கவனத்தைத் திருப்பி
வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
அம்மாவுக்கு ஒரே பெருமையும் சிரிப்பும்.
எனக்கு கோபம். அப்படியே ஓடறான் மா தெருவில. மாட்டு வண்டி வந்தால் என்ன செய்யறது.
பஞ்சு மிட்டாயை அவனுக்குக் கொடுத்துட்டேன்.
எனக்கும் வேணும்மா என்றதும் அம்மா சமாதானப் படுத்தினார்.
 மிகவும் மன்னிப்புக் கேட்டபடி வந்த சலவைக்காரரிடம்
சட்டையை வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு,
முரளிக்கு வேற ஒரு வெள்ளை புஷ் ஷர்ட் வாங்கினது இன்னோரு கதை.

அப்பா எனக்கும் அவனுக்கும் ட்ராக்கர்ஸ் என்று பெயர் வைத்தார்.

1992 ல  42 வயதில் அவன் பைபாஸ் செய்து கொண்ட போது அவனை சிரிக்க வைக்க நான்
 சொன்ன சம்பவங்களில் இதுவும் ஒன்று.
Add caption

Sunday, March 25, 2018

மாசி மாதமும் கைத்தொழில்களும் 10

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஜயம்மாவும் கீதுவும் லஸ் வீட்டில் நுழையும் போது, பாட்டியும் அவரது மருமகளும் வரவேற்றார்கள்.
மழை வருமோ  என்று நினைத்தேன். கரண்ட் போயிடுத்துன்னால் கிச்சனில் கண்ணே தெரியாது
என்றபடி பாட்டி சமயலறையை நோக்கி நகர்ந்தார். எண்பது வயதில்
பாட்டிக்கு இருக்கும் உற்சாகத்தைப் பார்த்து வியந்தபடி தொடர்ந்தனர்.

மனோரப் பணியாரம் இன்னொரு நாள் வந்து செய்ய வேண்டும் நீங்கள்.
பேத்தியை நேற்றே மாவெல்லாம் சலிக்கச் சொல்லிவிட்டேன்.
 பம்பாயிலிருந்தும், பங்களூரிலிருந்தும்
பேரன் பேத்திகள் வருகிறார்கள்.
 அவர்களுக்கு ஒழுங்கான சாப்பாடு வேண்டாம்.

நொறுக்குத் தீனி போதும்.
இதோ முறுக்கு மாவு, அரைக்கிலோ வெண்ணெய்,
சீடை உருட்டிப்போட வேஷ்டி, தட்டைக்கு ஊற வைத்த கடலைப் பருப்பு,
பெருங்காயம் ஊற வைத்த ஜலம் எல்லாம் இருக்கு.
இரண்டு ஜனதா ஸ்டவ்விலும் கெரசின் ரொப்பி வைத்து விட்டேன்.
 வாசல்ல வரவன் ரொம்ப பிகு பண்ணிண்டான். தட்டுப்பாடு வரப் போகிறதாமே
 என்றபடி நகர்ந்தார் பாட்டி. சமையல் அறையை ஒட்டி இருந்த
பூஜை அறையை எட்டிப் பார்த்து,கைகூப்பி நமஸ்காரம் செய்துவிட்டு,
இருவரும் வேலையை ஆரம்பித்தார்கள்.
பாட்டியோட நறுவிசு நமக்கெல்லாம் வருமோ என்னவோ. என்று
கேட்டுக் கொண்டே , சமையல் செய்யும் திருமலை வந்தார்.

இவர்களை விட வயதில் பெரியவர்.
பாட்டி குணுக்கு செய்து தரச் சொன்னார். நான் ஒரு பக்கமாத் தொந்த்ரவில்லாமல்
செய்து கொள்கிறேன் என்றபடி  ,அடுத்தமூலையில்
இருந்த காஸ் அடுப்பு பக்கத்தில் வைத்திருந்த,
மைதா,அரிசிமாவைக் கலந்து,
தயிர் வெண்ணெய் சேர்த்து,
பச்சை மிளகாய் ,கொத்தமல்லியுடன் மணக்க மணக்க குணுக்கு செய்த்து பாட்டியிடம் வெள்ளிக் கிண்ணத்தில் வைத்துக் கொடுத்தார்.
அதற்குள் பாட்டியின் மருமகள்,
இப்பதான் அடையாரிலிருந்த பால் வந்தது.
இதோ சூடாகச் சாப்பிடுங்கோ என்று ஆதரவாகக் கொடுத்துவிட்டுப் போனார்.
ஏ, திருமலை அவர்களுக்குக் குணுக்கு எடுத்து வை என்று குரல் கொடுத்தார்
பாட்டி.
இருவரும் பசிக்களைப்போடு இருக்கக் கூடாது என்று அவருக்குக் கவலை.
ஜயம்மா முறுக்குகளைச் சுற்ற, கீது எண்ணெயில் பொரித்து எடுத்தார்.

பாட்டியின் மருமகள் பங்கஜம்மா ,பாட்டிக்கு வாயில் கரையும்படி
மெத்தென்று இருக்கும் முறுக்குகளைத் தனியாக வைத்தார்.

அடுத்த ஒரு மணி நேரம் சீடை, தட்டை என்று இருவரும் விறுவிறுப்பாக
இரண்டு அடுப்பிலும் செய்து முடிக்கவும் மணி இரண்டாகவும் சரியாக இருந்தது.

பொன்னிறத்தில் வந்திருக்கும் பட்சணங்களைப் பார்த்து இருவருக்கும்
பெருமையாக இருந்தது.
Add caption
Add caption

தயாராக இருந்த பெரிய பெரிய எவர்சில்வர் சம்புடங்களில்
ஆறின தட்டைகளையும், சீடையும் ,முறுக்குகளையும்
எடுத்து வைத்தார்கள்.
ஸ்டவ்வை அணைத்து ,வேலை நடந்ததே  தெரியாமல்
சமையலறையைப் பெருக்கித் துடைத்தனர்.
 மணி இரண்டரை ஆகி இருந்தது.
அப்பாடி எத்தனை சுறுசுறுப்பா வேலை செய்து விட்டீர்கள். என்றபடி இருவரையும்
சாப்பிட அழைத்தார்.
ஜயம்மா,கீதுவுக்கும் பசியே  தெரியவில்லை.
 அவர்கள் தயங்குவதைப் பார்த்ததும், புரிகிறது.
பட்சண எண்ணெயில், உஷ்ணம் ஏறி இருக்கும்.
கொஞ்சமா நான் பட்டிருக்கிறேன். என்று பெரு மூச்சு விட்டார்.
 சரி ,உங்களுக்கு  புளியோதரையும், உருளைக் கிழங்கு கறியும்
டப்பாவில் போட்டுக் கொடுக்கிறேன்.
பசிக்கும்போது சாப்பிடுங்கள்
என்று சொல்லி,தன் மருமகளை அழைத்துச் சொன்னார்.
அந்தப் பெண்ணும் இன்னும் இரண்டு டப்பாக்களில் வாழையிலையில் பொதிந்து வைத்துக்
கொடுத்தாள்.
இதோ இந்தப் பையில் போட்டுக் கொள்ளுங்கள்
என்றவளைப் பார்த்து இருவருக்கும் தாம்பூலம் கொடும்மா
என்று உள்ளே சென்றார்.
பாட்டி தயாராக வைத்திருந்த பணத்தை,  ஒரு கவரில் வைத்துக்
கொண்டு வந்து கொடுத்தார் .
 முனியம்மாவை அழைத்து சைக்கிள் ரிக்ஷாவை அழைத்து வரச் சொன்னார்.
இருவரும் பாட்டியையும்,பங்கஜம்மாவையும் வணங்கிவிட்டு,
 ஜாதிப்பூவை எடுத்துக் கொண்டு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறினர்.
இந்த ஒன் வே வந்ததிலிருந்து சுத்தி வேறப் போக வேண்டிரிக்கு என்று
அலுத்தபடி மிதிக்க ஆரம்பித்தான்  ரிக்ஷா முருகன்.

Saturday, March 24, 2018

letters from past 3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   Raghavan Narayanan
5/29/15
to me
Yes, we usually travel to Madurai and stay there, and tale a travel car to go SRivilliputtur. It takes about 90 minutes. Last time we could take food in one of the mess-type hotels near the temple (our type of food) and return to Madurai by about 3 pm to 4 pm depending upon the time at the temple. Koil is open till about 12.30 pm in morning and opens by 5 in the evening..Murali.
++++++++++++++++++++++++++++++++++++++++++

rain water inside temple
Inbox
x

revathi narasimhan
5/19/15
to Raghavan

Dear  Murali  one more May 20th.

10years have passed by.

and  I thought I could not live without amma.  Irony.

rev.
++
Raghavan Narayanan
5/20/15
to me
Yes Rev,  as years pass by us and we see the quality of people around us in the society, the parents, the children, and others, we realise more and more how great noble souls our parents have been, sacrificing everything they had without a thought or expectation from us. And true to our (at least I) selfish nature, we only looked at our interests and did not show any gratitude or kindness to them (Krithagyan, I think is the right word).  I guess,  at the least we should try and follow their values, renounce self interest completely and develop the same qualities in our children, and their's..affly..Murali 

++++++++++++++++++++++++++in april 2015

To my dear sister, wishing you Many Many more Happy Returns of the Day. May Lord Sriman Narayana shower you with his Blessings, peace of mind, Happiness and Good Health. Above all may he also bless you Happy union with all your siblings, sons, daughter, daughters-in-law, and Grand children. They are the ones who make you happy and I am sure they will wish you the very best of life too.

Affly
From Vasanthi and me, Sajjan & Suja, and Chittu

Letters from the past.2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
என் அருமைத்தம்பியின் நினைவுகளைச்  சேர்த்துப் பொக்கிஷமாக
வைக்கிறேன்.

எல்லோரும் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
என் மன நிம்மதிக்காக எடுத்து வைக்கிறேன்.
இன்னும் ஒரு மாதத்தில் அவன் இறை பாதங்களை அடைந்து
ஒரு வருடமாகிவிடும்.

அனைவரும் வாழ்க வளமுடன்.


 Dear Murali,
 first time I am hearing a grand daughter calling her Raghavan thaththa  , a magical Raamar.
 god bless.
affly,
rev.
gathered from our facetime chat with Chittu and others.


Raghavan Narayanan
10/2/16
to me
Hi rev
Yes I too came to know about it from Hari. I do not know where she got the idea about me, but it is very flattering!! Shows that there are many hidden facets in a child's thoughts !!
Affly..Murali
++++++++++++++++++++
3,Rev
I beleive we have to recognise the fact that age could be a  barrier in always being in the loop. For me, I do not want to be in any loop since I want to be insulated from talks and comments that I do not need to be concerned with. Like Appa, I am perfectly fine being in the dark. I do speak out on matters of conduct, temperament when it becomes necessary. I am trying not to react to specific events or incidents but will convey my opinion in a general sort of way when we are all together

Take care,

Affly..Murali
++++++++++++++++++++ 4, Dear Rev
I read the blog too, makes wonderful reading, indeed THOSE WERE the days to recall and rejoice. Life was much simpler or is it simply that our parents took all the hardship and made us enjoy these things?
 I am not sure that we are made the same way. Lesson to learn...give more and ask for less, learn to bear any discomfort it is going to satisfy someone else. Do not complain. We are among the more fortunate ones to have reasonable comforts in life (unlike our parents!!)...
With those kind words, thanks for the posts, it was very enjoyable,,,affly..Murali
++++++++++++++++++++++++++++++++
Rev
I remember having dropped by my class friend Shahjahan's home on the way home from school, and playing in the room that was filled with groundnuts (floor to ceiling). This place was near the tank bund..murali .
reply

Yes his sister Asiya    was my classmate and I remember the  mats(பாய்)
hanging from the ceiling   for  womens  privacy. Really  nice place Thirumangalam. everyting in our life we  owe to our  Parents  simplicity  and  honesty.
and Amma  made  all the  activities  so interesting.
Viju remembers her everyday, as they had additional fun  during Kalpakkam  days  Hari  remembers  Thaththa  more.
Srinath goes  silent if I begin to talk  abt them.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Please do send in  your  memories  to refresh  my mind. Thanks  for  reading.my lines,.
Goodday,
rev.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...