Wednesday, March 11, 2020

தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  நலமாக வாழவேண்டும்.
டொரன்டோ நகரம்.

Image result for toronto canada




இரவு உணவுக்கான. விடுதியில் கேட்ட பாடல். கிரீஷ் தனியாக வரவில்லை. தன்  சகோதரியையும் அழைத்து. வந்திருந்தான்.   இந்து,  கனேடியர் ஒருவரைத் திருமணம் செய்து    டொரன்டோவில் வேலை,வீடு இரண்டு குழந்தைகள் என்று இருப்பவர்.
 இவர்கள் சந்தித்த   சிஎன் டவர் மிக நல்ல  ரெஸ்டரான்ட். அங்கிருந்து நகர் முழுவதும் பார்த்துக் கொண்டே உணவு உண்ணலாம். மொத்தத்தில் அந்த இரவு  மகிழ்ச்சியாகச் சென்றது.
அக்கா தன் வண்டியில் ஏறிச் செல்லும் வரை. காத்திருந்த கிரீஷ் புன்னகையோடு  கிருத்திகா
பக்கம் திரும்பினான்.   “உடனே போக வேண்டுமா, இல்லை சிறிது  தூரம் நடந்து விட்டு வரலாமா.”என்று வினவினான்.  
மணி 9 தானே ஆகிறது. நடக்கலாம்  உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்று   


சொன்னபடி நடக்க ஆரம்பித்தாள்.
கிரிஷ்  சந்தன் , ஒரு மஹாராஷ்டிரா  குடும்பத்தைச் சேர்ந்தவன்.
பெற்றோர் வெகு நாட்கள் முன்பே கனடா வந்தவர்கள்.
கிரிஷ் பிறந்ததே இங்கே தான்.
அதனால் இந்த  நாட்டு  பிரஜை  ஆனவன்.

குடும்பத்தில் அவனும் ,அக்காவும் தான்.
பெற்றோர் இருவரும் மருத்துவர்கள்.

அவனும், ஃ பார்மசூட்டிக்கல்ஸ் முடித்து , மேலாண் மை க் 
கல்வியும்  படித்து நல்ல மருந்துகள் செய்யும் 
தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான். வயது 30ஐ நெருங்குகிறது.
சொல்லி முடித்தவன் அவளை பார்க்க,
இயல்பாக தன்னை ஈர்க்கும் அவன்  புன்னகையை ரசித்தவளாகத் 
தன்னைப் பற்றிய அத்தனை விவரங்களையும் சொன்னாள் .

சங்கடமாக  இருந்தாலும் எதையும் மறைக்க விரும்பவில்லை.

தான் காதலித்தவன் ஏற்கனவே  திருமணமானவன் 
என்று தெரிந்தபோது, தனக்கு ஏற்பட்ட கசப்பை,
அவள் முகம்  இப்போதும்  காட்டியது.

ஒரு நிமிடம் கிரிஷ்  அவள் கைகளைப்  பற்றி,
விடுவித்தான்.
''மன்னிக்கணும்  கிருத்திகா , அதை மறந்து விடுங்கள்.''

"நாம்  நம்மையே  மன்னிக்காவிடில் வாழ்வதே பாரமாகிவிடும்,
இனி வரும் காலம் நன்றாக இருக்கட்டும்''
என்று சொன்னவன்  நாம் திரும்பலாமா ,
 நாளை மதியம்  நாம் மீண்டும் சந்திக்கலாம்.
வேறு சிந்தனை இல்லாமல்  தூங்குங்கள்,
என்று மென்மையாக   அவள் தோளைத்  தட்டிக் கொடுத்தான்.
உணர்ச்சி மிகுதியில்  கண்கள்  கலங்க அவனைப் பார்த்தவள்,
மிக மிக நன்றி, 
நாம்  திரும்பலாம் . சீ  யு  ,என்று  கைகளை  அசைத்தவாறே 
தன்   வண்டியில்  ஏறி   நிதானமாக ஓட்டிச் சென்றாள் .

அவள் செல்வதையே  பார்த்துக் கொண்டிருந்த  கிரிஷ் 
சட்டென்று  தன கைபேசியில் ,அவளுக்கு இரவு வணக்கம்  என்று 
செய்தி அனுப்பினான்.

வண்டியில் ஒளிர்ந்த  அந்த செய்தி  ,மனதை லேசாக்க 
அவள்  வாய்  ,சென்ற வருடம் தான் பார்க்க  வாய்ப்பு  கிடைத்த  ஒரு  ,
படப்பாடலை முணுமுணுக்க  ஆரம்பித்தது .








[mist+tower.jpg]
நன்மை தந்த  நயாகரா 


Tuesday, March 10, 2020

British Airways – The Welcome of Home

வல்லிசிம்ஹன்
Home is where the heart lives,

மீண்டும் இன்னோரு பயணம்.
ஆனால் அலுக்காத பயணம். இந்தத் தடவை துணையோடு செல்வதால். கிருத்திகாவின் மனம் பூரித்தது.

கிரீஷ் போல மாப்பிள்ளையை
பாட்டிம்மா எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஏற்கனவே காதல் அவளை ஏமாற்றி இருந்ததால்
பாட்டிம்மாவின் கடிதங்கள் அன்பும் பாசமும்
தொலைவில் கனடாவில் இருக்கும் பேத்தியைத்
தேடி வரும்.

இன்னும் தபால் துறையையும்,
பேப்பர், பேனாக்களையும் பாட்டி ,செல்லம்மா
விடவில்லை.
வித விதமான தபால் தலைகளை சேகரித்தவண்ணம்
இருப்பார்.

தினம் நடக்கும் செய்திகளை,திருமண அழைப்புகளை,
வந்து போனவர்கள் விவரங்களைத்
தூது அனுப்புவது போல அனுப்பி ,''நீ எப்போது வரப் போகிறாய்?"
என்ற கேள்வியுடன் அனுப்புவார்.

பாட்டியின் கேள்விகளுக்குப் பின் தொக்கி இருக்கும் மற்ற கேள்விகளும்
கிருத்திகாவுக்குத் தெரியும்.
தோல்விகளைப் பாட்டியுடன் மட்டும் பகிர்ந்து கொள்வாள்.
பெற்றோரின் பாசம் அவளுக்கு நன்றாகவே புரிந்தாலும்,
அவள் தனிமையை அவர்கள் தங்களுடைய தண்டனையாக
நினைத்தார்கள்.
கடிதங்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிடும்படி
வேறு ஒரு மணமகனைத் தேர்ந்தெடுக்கும்படி
புத்திமதிகள் தாங்கி வரும்.
கிருத்திகாவையும் சேர்த்து ஐந்து குழந்தைகள் அவர்களுக்கு.

அதிசயமான குடும்பம். இந்தக் காலத்தில் இத்தனை குழந்தைகள்
பெற்றுக் கொள்வது அபூர்வம்.
மிகப் பழமையில் ஊறிய வட இந்தியக் குடும்பத்தில்
கருத்தடைக்கு  அவ்வளவு ஆதரவு இல்லாத காலத்தில்
கடைசிக் குழந்தையாகப் பிறந்தவள் கிருத்திகா.

படிக்க கனடா வந்து, உத்தியோகமும் பார்த்துக் கொண்டு,
காதலித்து ஏமாந்து இருந்த வேளையில்
ஒரு நயாகராப் பயணத்தின் போது,
தன்னைப் போலவே தனியாக நின்று நயாகராவை
வெறித்த வண்ணம் இருந்த கிரீஷைச் சந்தித்தாள்.

கிருத்திகா இருப்பது டொரண்டோவில்.
கிரீஷ் அலுவலக நண்பர்களுடன்
வாங்கூவரில் இருந்து வந்திருந்தான்.
அவனும் சண்டிகாரைச் சேர்ந்தவன் என்று
புரிந்து மகிழ்ந்தாள் கிருத்திகா.
'We will be in touch'  என்று சொல்லிப் பிரிந்தனர்.

கிருத்திகாவின் மனம் கிரீஷையே
சுற்றி வந்தது. அவன் கம்பீரமும், மென்மையும்,
அழகிய புன்முறுவலும்,
இதமான மரியாதையும் மிகப் பிடித்திருந்தது.

ஏற்கனவே அடிபட்டிருந்த இதயம் கவனமாக
இருக்கச் சொல்ல,மீண்டும் புதிதாக இன்னொரு ஆண்மகனைத் தொடர
தயங்கினாள்.

அவளுக்கு ,தயக்கம் இருந்தது போல அவனுக்கு இல்லை,
ஒரு இனிய வெள்ளி மாலையில்
தன்னை இரவு சாப்பாட்டுக்குச் சந்திக்க முடியுமா
என்று அழைப்பு வந்ததும் ,உடலும் மனமும் பூரித்ததை
அவளால் தடுக்க முடியவில்லை.
உடனே யெஸ் சொல்லிவிட்டாள். தொடரலாமா.....

Sunday, March 08, 2020

Saturday, March 07, 2020

மெதுவா மெதுவா...

வல்லிசிம்ஹன்
எல்லோரும். வளமாக வாழவேண்டும்.
மானின் மேல் ஆசை வைத்து மாயையில் சிக்கிய மாது..
பரமாத்மாவை விட்டு  ஜீவாத்மா பிரிய  மாயை ஒரு காரணம் 



ஸ்ரீராமனின் கோபப் புருவ நெரிப்பும் அழகாக இருக்கிறதே.!!!!!!!
அரங்க ராமன் மணந்த சீதை எனும் கோதை

மேலே  உள்ள சித்திரங்கள் அனைத்தும் கோபுலு அய்யாவின் கைவண்ணம்.
இந்தப் படகு  படலத்தில் ஒரு கதை படித்தது 
நினைவுக்கு வந்தது.
கைகுவித்து  நிற்பது  குகன்.
இந்தப் படகு இல்லாமல் , காலில்  பாதுகை  இல்லாமல் ராமன் ,தன்  படகில் ஏறி க் கொள்வதற்கு 
அந்தப் படகோட்டி மறுத்தானாம்.
சாமி கால் பட்டு கல்லிலிருந்து ஒரு அம்மா 
வந்துட்டாங்களாம்.
என் கிட்ட இருப்பது இந்த ஒரு ஓடம் தான். சாமி கால் பட்டு அதுவும் மாறிவிட்டால்  நான்  பிழைப்புக்கு என்ன செய்வேன் என்றதும்,
ராமன் ,சீதை எல்லோருமே சிரித்துவிட்டார்களாம்.
ராமர் ,சீதையின் கரத்தை ப் பற்றியபடி ஏறி க் கொண்டு,

இந்தப் பெண்ணைத் தவிர வேறு ஒரு பெண் ,என் வாழ்க்கையில் இல்லை என்றாராம்.

ஸ்ரீராம் ஜெயராம் சீதாராமா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Image result for ramayana scenes drawing



Thursday, March 05, 2020

வீடு என்பது ...

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழவேண்டும்.

வீடு என்பது ...

நினைவுகளால்  ஆன   சாம்ராஜ்யம்.
இப்போது இருக்கும்  நம்  உடல் 
சென்று இருந்த பலவீடுகள் 
நம் நினைவில் பதித்த சுவடுகள்  ஏராளம்.

சிறிய வீடோ  பெரிய வீடோ 
உள்ளே  இருப்பவர்களின்   மன விசாலத்தைப் பொறுத்து ஆனந்தமோ ,சஞ்சலமோ  உலாவும்.
முதிர்ந்தவர்களையும், குழந்தைகளையும் போற்றிய 
இடம் என்றும் மகிழ்வுறும்.

நினைவுகள்  சேர்த்த ஒரு இல்லத்தை இன்றும் நினைத்து வாழ்த்துகிறேன்.
ஒரு இனிய குணவானை  எனக்கு அறிமுகம் செய்த அவரது பெற்றோர்கள் எனக்குப் பரிசாகக் கொடுத்த  இல்லம்.

மார்ச் 5 அவரது பிறந்த நாள்.

எப்பொழுதும்  சந்தோஷமாக இருக்கவே பிடிக்கும் அவருக்கு.
பணம் வரவு,செலவு பற்றிக்  கவலையே கிடையாது.

சேமிப்பில்  நல்ல நம்பிக்கை.
கொஞ்சம் முரனாகத் தோன்றுகிறதோ :)

தன்  செடிகள் , சிற்பங்கள்  ,அதற்கான  கருவிகள் எல்லாம் வாங்குவதில் தயக்கமே இருக்காது.
ஆனால் உடை விஷயத்தில் புதிதாக வாங்க மாட்டார்,.
இருப்பது போதும்  என்று இருந்து விடுவார்.

தினம் ஆஞ்சநேயரைப் பார்க்காமல் இருக்க முடியாது.
தினம் உண்டியலில் ஐந்து ரூபாய் உண்டியலில் சேர்த்து , கிட்டத்தட்ட 5000 வைத்திருந்தது பிறகே தெரிந்தது.

கேலி,கிண்டல் உடன் பிறந்தது.
வாயிலில்   தோட்டத்தில் நிக்கருடன் வேலை செய்து கொண்டிருப்பவரை யாராவது அணுகினால் 
அம்மா உள்ள இருக்காங்கப்பா.
கேட்டுக்க என்று கைகாட்டிவிடுவார்.

அது ஏதாவது தான தர்மமமாக இருக்கும்.
நான் உள்ளே  வேறு வேலையாக இருந்தால் சட்டென அலுப்பு தோன்றும்.

அவர்கள் முறையிட நான் மறுக்க பிறகு உதவிக்கு வருவார்,.

இதை முதலிலேயே செய்திருக்கலாமே என்று கோபித்தால்,
உனக்கும் பொழுது போக்கவேண்டாமா அம்மா.
அதுதான்  முதலாளி  அம்மாவைக் கை  காண்பித்தேன் என்று சிரிப்பார்.

எப்பொழுது பார்த்தாலும் கணினி முன் உட்கார்ந்திருப்பது அவருக்குப் பிடிக்காது.

 என்னை  வெறுப்பேற்ற,
''ரேவ் ,
இந்த   WWW.  போட்டு   அந்தோரியம்  பூ  பற்றிப் பார்த்து 
சொல்லேன்.  பெங்களூர் போய் வாங்கி வரலாம் என்பார்.

அப்போதான் என் கதையில்   லுலுலாங்காட்டி யா ஏதாவது எழுதிக் 
கொ ண்டிருப்பேன்.

''கொஞ்ச நேரம் விட்டுருப்பா. அப்புறம் பார்க்கிறேன்'' என்றாலும் ,கோபம் வராது.
நான் சின்னவனுக்கு  போன் பேசிக் கேட்டுக்கறேன்னு 
போய் விடுவார்.

அந்த வேளையில் உதவி இருக்கலாம்.

பார்க்கலாம்  அடுத்த ஜென்மத்தில் ஈடு கட்டிவிடலாம்.
எங்கிருந்தாலும் அவர் நலமாகத் தான் இருப்பார்.

நல்லவர்களுக்கு என்றும் நலமே.







Tuesday, March 03, 2020

வரும்போது .........

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
  வரும்போது   , அதுவரை இருந்த  சிநேகமும் தோழமையும்  விடைபெற்று ஓடிவிட்டன.
 மோப்ப நாய் பர பரவென்று சுற்றி வர, சக்கர நாற்காலியில் நான் அமர ,மகன்  பின் தொடர்ந்தான். அழைத்துப் போனவர் அண்டை நாட்டு நல்ல பெண்மணி.
 மம், மம்  என்று அன்புடன் விசாரித்தபடி,
பச்சைக் கணினி முன் எங்களை நிறுத்தி 
படபட வென்று இமிக்ரேஷன் விவரங்களை பூர்த்தி செய்ய வைத்தார்.
அட இத்தனை சுலபமாக ஆகிவிட்டதே என்று நிமிரும் முன் ஒரு 
ஆப்பீசர்  முன் நாங்கள் இருந்தோம்.
எள்ளு கொள்ளு எல்லாம் வெடிக்க அவர் மகனைச் சாட ஆரம்பித்தார்.
''எத்தனை நாள் ''
மகன் 
''4. நாட்கள்.''
''நீயும் உங்க அம்மா போல இங்கே இருக்கப் போறியா ''

''இல்லை என் நாடு வேறு.''

''என்னிக்கு திரும்பப் போற.''

''இத்தனாம் தேதி.''

''நம்பமுடியாது உங்க அம்மா இப்படி வந்துதான் அட்டை வாங்கிவிட்டாள் ''

''எனக்கு அவசியம் இல்லை.
என் குடும்பம் வேலை எல்லாம்  அந்த நாட்டில் தான்.''
அவர் மேலும் 
இந்த ரீதியில்   அவர்  கடுமை காட்டப் 
பொறுமையாக  நின்ற மகனைக் காண சகிக்கவில்லை.

எனக்காகத் தான் இத்தனை பாடுபடுகிறார்கள் இந்தக் குழந்தைகள்.:(

இவர்களுக்கு சீக்கிரமே என்னிடமிருந்து விடுதலை கொடு 🙏🙏🙏🙏
என்று  இறைவனை வேண்டத்  தோன்றியது .

எல்லாம் நன்மைக்கே.
இனி  பயணம் கூடாது.
நம்பிக்கையோடு  எதற்கும் ஆசைப் படாமல் ,
குழந்தைகள் வாழ்வு சிறக்கவும், அவர்கள் மக்கள் வாழ்வு சிறக்கவும் மட்டுமே 
நம் பிரார்த்தனைகள்   இருக்க வேண்டும் 
 என்ற நிலைக்கு 
என்னைச் சிந்திக்க வைத்த
 அந்த வேற்று  கிரக வாசிக்கு 
 (ஆப்பு ஈசருக்கு)
மனத்தால் நன்றி சொல்லி வெளியே வந்து 
இந்த    ஊர்க்   குளிரைச்  சந்தித்தோம்.

இயற்கை தன வேலையைச் செய்வது போல் அந்த மோப்ப நாய் தன்  வேலையைச் செய்ததைப்  போல  அந்த மனிதரும் தன்  வேலையைச் செய்தார்.

என்னைத் திட்டி இருக்கலாம்.

அப்பாவி மகனைச் சினந்து  சொற்கள்  சிந்தி இருக்க வேண்டாம்.

''நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க''




கொரோனா பயமுறுத்தலில்   வால்மார்ட்டும், செர்மாக்கும் 
பொருட்களை  விற்றுக் குவிக்கின்றன. மக்கள் 
வாங்கி குவிக்கிறார்கள். ஒரு தும்மல் சத்தம் கேட்டால் 
காத தூரம் ஓடுகிறார்கள்.  பார்க்கலாம் எப்போ விடிவுகாலம் என்று.

Monday, March 02, 2020

இறைவன் எல்லோரையும்காக்கட்டும்.

வல்லிசிம்ஹன்

அம்மா உனக்கு வயதாகிவிட்டது என்று
சிரிக்கும் மகனின் அன்னை என் பக்கத்து சீட்டில் இருந்தார்.

என்னையும் விட  சரீர கனம் அவர்க்கு அதிகம். நான்
சன்னலோர  இருக்கையில் இருந்தேன்.
அவருடைய மகனும் எங்கள் மகனும் அடுத்தடுத்த
இருக்கைகளில்.

நமக்கெல்லாம் இகானமி லாயக்கில்லை என்று புன்முறுவல் பூத்தார்
அந்த அம்மா. என் வயதிருக்கலாம்.
நானும் ஒத்துக் கொண்டேன்.
அவரிடம் சொல்ல முடியுமா. நமக்குப் பிரயாணமே வேண்டாம்
என்று.

9 மணி நேரமும் சுற்றிலும் இருமல், தும்மல்,
எல்லோர் முகத்திலும் எச்சரிக்கை உணர்வு.
யாரைப் பார்த்தாலும் சந்தேகம்.
விமானப் பணிப்பெண்கள் ஒரு கையுறை கூடப்
போடாமல் நடமாடுவது அதிசயமாக இருந்தது,

ஸ்விஸ்ஸில் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று
இருபதை எட்டி இருந்தது.
 காரணமே இல்லாமல் தாக்கப் படும் இடமாக
இருக்கிறது. போக்குவரவு நிறைய.
இத்தாலியில் முழுவீச்சில் சேதக்கட்டுப்பாடு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஊரிலும் (பாசல்) அந்த எச்சரிக்கை பரவி இருக்க வேண்டும்.

நான் வந்த விமானத்தில் பயணிகள் முழுவதும் அமெரிக்கர்கள்.

பலர் வாய் மூக்கு மூடிய ஜெயின் துறவிகளைப் போலத்தான்
நடந்து கொண்டிருந்தார்கள்.
வருமுன் காப்போனாக இருப்பதே அழகு.
வந்த பின் நம்மால் அவதியுறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமே.

பயனாக களைப்பு  ,மற்றும் இமிக்ரேஷன் படுத்தல் 
நமக்கு ஏன் இந்தத் தொல்லை எல்லாம் , 
எப்பொழுதும் நினைவில் வருவது  நம் வீடுதான்.

நிம்மதியாக  அங்கே  இருந்துவிடலாம்.
தொலைக் காட்சி பார்த்தால்  தானே 

மனக் கவலை  என்று யோசித்தாலும் 
7 வருடங்களுக்கு முன் இருந்த தெம்பு 
இப்போது  இல்லை  என்பதுதான் உண்மை.

இறைவன் எல்லோரையும்காக்கட்டும்.


அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...