லக்ஷ்மி என்ற சொல்லுக்கு என்னைப் பொறுத்த வரையில் அர்த்தம் என் அம்மா தான்.
முதன்முதலில் கால்ண்டர் லக்ஷ்மியை பெரிய ஃப்ரேமில் வடிவு செய்து என் தந்தை பூஜை அறையில் மாட்டிய போது ,அப்பாவிடம் கேட்டது நினைவுக்கு வருகிறது வரைந்தவர் நம் அம்மாவைப் பார்த்திருக்கிறாரா என்பதுதான். அப்பாவுக்கு எவ்வளவு சந்தோஷம் என்று சொல்லி
முடியாது.
அவளும் தன் தாமரை விளக்கில் வெள்ளி தவறாமல் விளக்கு பூஜை செய்வாள். பால் பாயசம் உண்டு.
அப்பாவின் சுந்தர காண்டம் உண்டு.
எனக்கும் குரு முகமாக விளக்குப் பூஜை செய்யக் கற்றுக் கொடுத்தார்கள். இந்த அடங்காப் பிடாரியும் அடங்கி வணங்கியது அந்தத் தெய்வத்தை.
தம்பி தன் சினேகிதன் கொடுத்த பெரிய லக்ஷ்மி படத்தை ஒரு நாள் பரிசாகக் கிடொத்தான். அவளுக்கும் அழகான ஃப்ரேம் வாய்த்தது.
ஒரு கொலுவுக்கு 20 ரூபாயில் லக்ஷ்மி பொம்மையும் கொண்டுவந்து கொடுத்தான்.
அக்கா வாழ்வில் பொன்னும் பொருளும் குவிய வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம்.
உண்மையான பக்தியுடன் என் லக்ஷ்மியைப் பூஜித்தேன்.
வளம் பெருகியது.
பெற்ற மக்கள் பூரிக்கும் படியாகப் படித்து முடித்து வாழ்வும் அமைத்துக் கொண்டார்கள்.
என் அம்மா வருடா வருடம் ஏதாவது ஒரு லக்ஷ்மி ரூபத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பாள். அவள் கை என்றும் வற்றியதில்லை.
இதயமும் விசாலம்.
வாழ்வில் சோதனை மேல் சோதனை வந்தும்
அவள் தன் தெய்வத்தைப் பூஜிப்பதை நிறுத்தவே இல்லை.
மகனையே இழந்தவுடன் மலைத்தாலும் மனம் கோணி தெய்வத்தைச் சபிக்கவில்லை.
பூமா தேவியைப் போல் துயரம் காத்தாள்.
தவக்கோலம் கொண்ட அம்மன் போல ,மெய்யடக்கி உயிரையும் தியாகம் செய்தாள்.
அவள் கொடுத்த அத்தனை
தெய்வ உருவங்களையும் பார்க்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலே என் தாய். அவள் தான் என் லக்ஷ்மி. அம்மா வணக்கம். உன் பரம்பரையைக் காப்பாற்று. எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
முதன்முதலில் கால்ண்டர் லக்ஷ்மியை பெரிய ஃப்ரேமில் வடிவு செய்து என் தந்தை பூஜை அறையில் மாட்டிய போது ,அப்பாவிடம் கேட்டது நினைவுக்கு வருகிறது வரைந்தவர் நம் அம்மாவைப் பார்த்திருக்கிறாரா என்பதுதான். அப்பாவுக்கு எவ்வளவு சந்தோஷம் என்று சொல்லி
முடியாது.
அவளும் தன் தாமரை விளக்கில் வெள்ளி தவறாமல் விளக்கு பூஜை செய்வாள். பால் பாயசம் உண்டு.
அப்பாவின் சுந்தர காண்டம் உண்டு.
எனக்கும் குரு முகமாக விளக்குப் பூஜை செய்யக் கற்றுக் கொடுத்தார்கள். இந்த அடங்காப் பிடாரியும் அடங்கி வணங்கியது அந்தத் தெய்வத்தை.
தம்பி தன் சினேகிதன் கொடுத்த பெரிய லக்ஷ்மி படத்தை ஒரு நாள் பரிசாகக் கிடொத்தான். அவளுக்கும் அழகான ஃப்ரேம் வாய்த்தது.
ஒரு கொலுவுக்கு 20 ரூபாயில் லக்ஷ்மி பொம்மையும் கொண்டுவந்து கொடுத்தான்.
அக்கா வாழ்வில் பொன்னும் பொருளும் குவிய வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம்.
உண்மையான பக்தியுடன் என் லக்ஷ்மியைப் பூஜித்தேன்.
வளம் பெருகியது.
பெற்ற மக்கள் பூரிக்கும் படியாகப் படித்து முடித்து வாழ்வும் அமைத்துக் கொண்டார்கள்.
என் அம்மா வருடா வருடம் ஏதாவது ஒரு லக்ஷ்மி ரூபத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பாள். அவள் கை என்றும் வற்றியதில்லை.
இதயமும் விசாலம்.
வாழ்வில் சோதனை மேல் சோதனை வந்தும்
அவள் தன் தெய்வத்தைப் பூஜிப்பதை நிறுத்தவே இல்லை.
மகனையே இழந்தவுடன் மலைத்தாலும் மனம் கோணி தெய்வத்தைச் சபிக்கவில்லை.
பூமா தேவியைப் போல் துயரம் காத்தாள்.
தவக்கோலம் கொண்ட அம்மன் போல ,மெய்யடக்கி உயிரையும் தியாகம் செய்தாள்.
அவள் கொடுத்த அத்தனை
தெய்வ உருவங்களையும் பார்க்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலே என் தாய். அவள் தான் என் லக்ஷ்மி. அம்மா வணக்கம். உன் பரம்பரையைக் காப்பாற்று. எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.






