Thursday, May 26, 2011

கறுப்புக் காட்டிற்கு ஒரு பயணம்(Black forest .Germany)

உலகத்தரம் வாய்ந்த கடிகாraங்கள்,குயில்  கூவும்

 
செராமிக்கில் செய்யப்பட  பொம்மைகள்

சக்கர நாற்காலியில்  மனைவியை அழைத்து வந்திருந்த பெரியவர்


விழாக்காலங்களில்  அலங்கரிக்க உபயோகப்படும்   பொம்மைகள்



ஏரி  இல்லாத ஊரா 




வசந்தகாலப்  பூக்கள்










இத்தனை வண்ணங்களுக்கு நடுவே
வானின் வண்ணம்
 

 

பெயருக்கேற்ற  அடர்த்தியான   காடு
















சாக்கலேட் பாக்டரி 
ரயில் பாதை ஓர வீடுகள்.







காடும் வெளியும்

ஒரு தொலை நோக்குப் பார்வை.:)

மகனின்  அலுவலக  நண்பனுக்காக ஒரு குக்கூ  கிளாக்  வாங்க  ப்ளாக் பாரஸ்ட் போகனும்மா. வருகிறீர்களா    என்று கேட்டதும் ,என் கண்ணில் ஒரு பெரிய வட்டமான ஐஸ்க்ரீம் தடவிய கேக்   விரிந்தது.
சாப்பிடத்தான் தடை
  கனவு காணலாம்   இல்லையா.:)
இந்த இடத்தில் தான் அது முதன் முதலாகச் செய்யப்பட்டது என்று தெரியும்.
கூட வருபவர்கள்  கேக்  கடைக்குப் போவார்கள் என்றும் தெரியும்.
அதில் ஒரே ஒரு துளி சாப்பிட்டால் வயிறு சண்டை போடாது என்ற தீர்மானத்துக்கு நானே வந்துவிட்டேன்.
பாசல் நகரத்திலிருந்து பக்கத்திலிருக்கும் ஜெர்மன் ரயில் நிலையத்துக்கு
 ரொட்டிகள், பிஸ்கட்,வறுவல்கள் சகிதம்   வந்து சேர்ந்தோம்.

அங்கு வந்த பிறகு தெரிகிறது. போகும் ரயில் பாதையில் விபத்து என்றும் , டிக்கெட் வாங்கியவர்களை பஸ், ரயில், மீண்டும் பஸ்,மீண்டும் ரயில் என்று மூன்று மணிநேரத்தில் செர்த்துவிடுவதாகச் சொன்னார்கள்.

என்னம்மா, ஏறி ஏறி இறங்கணும்   போகனுமா  இல்லை திட்டத்தைக் கைவிட்டுவிடலாமா
  என்று மகன் வினவ நான் மருமகளைப் பார்த்தேன்.
அவள் தானே குழந்தையின் சாப்பாடு வேலைகளை அனுசரிக்கணும்!

இவர்கள் ரயில் நிற்கும் இடத்திலிருந்து
 பஸ்சுக்கு நடக்கணும். அங்கிருந்து முப்பத்தைந்து கிலோமீட்டர் பயணம்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.

முன்ன  மாதிரி  ஜெர்மனி இல்ல. பணக்கஷ்டம். ஒழுங்கு குறைந்துவிட்டது. ஒரு நாள் முழுவதும் மராமத்துச் செய்யாமல் என்ன செய்தார்கள்."
இதெல்லாம் சகபயணியர்களின் முணுமுணுப்பு.

கொஞ்சம் சிரமப்பட்டாலும் இரண்டு மணிநேரப் பயணத்தில் அலுங்காமல் நலுங்காமல் ப்ளாக் பாரஸ்ட் வந்துவிட்டோம்.
வழி நெடுகக் காணக் கிடைத்த செழிப்பான இயற்கைக் காட்சிகள் அலுப்பே தெரியாமல் செய்து விட்டன.

கொண்டு போயிருந்த உ கிழங்கு  சான்ட்விச், தயிர்சாதம் உள்ளே போனதும்
 உலகமே  ஒரு நிலைப் பட்டதாகத் தோன்றியது.:)
 .
மீண்டும் பயணிக்கலாம்.








RUVARUKK

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, May 23, 2011

பக்கத்துப் பட்டிக்கு .. பழம் பறிக்கப் பயணம்


ஒரு பூ இரண்டு பிரான்க்.
பூக்களைப் பரித்துக்கொண்டுஉண்டியலில் பணம் போடவேண்டும்

ஸ்ட்ரா பெர்ரீஸ்  வியாபாரத்துக்கு.
வாசமுள்ள பூ. பெயர் தெரியவில்லை
எல்லாப்பூவுக்கும் ஒவ்வொரு விலை.
மொட்டு
மலர்ந்தது
மஞ்சள் நிறம் கண்ணைப் பறிக்கிறது
குதிரை ஏறி கடு சுற்றும் உரிமையாளர். இவர் ஒரு பெண் என்பதை அருகில் வந்து "கிரேட்சி "  சொன்னதும் தான் புரிந்தது.
அப்பாவோட  வாக்கிங் போகும்  செல்லங்கள். பெயர் வில்லி
 னில்லி:)
.
தந்தையும் மகனும் சுற்றிப் பார்க்கிறார்கள்.
மக்காச்சோள வயல் என்றார்கள்.
காமிரா கண்ணுக்கு அகப்பட்டது இவ்வளவு தொலைவுதான்.

மகன் வீட்டிலிருந்து பத்துமைல்கள் தொலைவில் பண்ணைகள் இருக்கின்றன.

எல்லாப் பயிர்களையும் பார்க்கலாம் என்ற ஆசையில் மகன் எடுத்து வந்த வாடகைக் காரில்


சென்றோம்.

ஒரு பத்துமைல்கள் வித்தியாசத்தில் இவ்வளவு பசுமையா என்று அதிசயிக்கவைக்கும் அளவிற்கு



அவ்வளவு அருமையான இயற்கை வெளி. நடைப் பயிற்சி செய்பவர்களுக்கு இதுதான் மெரீனா பீச் போல.

குதிரைகளில் ஆங்காங்கே வலம் வந்து கொண்டிருந்த உரிமையாளர்கள்.

ஸ்ட்ரா பெரிப் பழங்கள் பாத்திகளில் விளைந்து கண்ணைப் பறிக்கும் சிவப்பில் மினுமினுத்தன.

அவ்வளவு பெரிய அளவில் அந்தப் பழங்களைப் பார்த்ததில்லை.

அடுத்த நாள் பறித்தால் கொஞ்சக அளவு பணத்துக்கே

பழங்களை அள்ளிக் கொள்ளலாம் என்றார்கள்.



நாங்களும் ஆளுக்கு இரண்டு பழங்களைச் சுவைத்தப் பார்த்தோம். மம். யம்மம்

என்று சொல்லலாம் போல் இருந்தது.:)



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Thursday, May 19, 2011

மே மாத நான்காம் நாள் நிலா.


சிவப்பு வண்ணம்   பூசியதென்ன  மாயமோ
இன்னும் கொஞ்சம் கீழே  வரலாகாதோ நிலவே
நீல வான வீதியில் நீந்துகின்ற வெண்ணிலா.
நட்சத்திரம் இல்லாத வானம். நான் மட்டும் தனி.
நீ எங்கே போனாலும் நானும் உன்னைத் தொடர்வேன்
உன்னை எட்டிப் பிடிக்க நினைக்கிறேன். நீயோ  கதிர்க் கடிதம் அனுப்புகிறாய்.



கை கொடுக்கும் தெய்வமோ  மேகங்களுக்கு நடுவே அம்மா நிலா.
ஜன்னல் திரை காட்டும் ஜாலம்
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, May 09, 2011

"உடைகள்" மே மாதப் புகைப்படம் --



விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம்
சுவிஸ் பெண்களின் கருத்தைக் கவரும் இன்றைய நாகரீகம்
தென் ஆப்பிரிக்கப் பொம்மைப் பெண்
இரு முகமூடிகளுக்கு நடுவே நாரீமணீ
மகனின்  திருமணத்துக்கு வரும் இளவரசர் சார்லஸ்
மனைவி கமீலாவுடன்.
ஆயத்த உடை அணிந்து ஒய்யாரமாக நிற்கும்  பொம்மை ....... திருமணப் பெண்
கடையில் உட்கார்ந்திருக்கும் முயலார்

மே  மாதப் புகைப்படத் தலைப்பு
  உடைகள்..
கடைகன்னியில் கண்ணில் பட்டதைக் கிளிக்கியிருக்கிறேன்.:)


Posted by Picasaபேத்தி பேரன் இருவரும் வெளியே சென்றிருப்பதால் பதிவேற்ற முடிந்தது...
ஒரு பிறந்த நாள் விழாவுக்குச் செல்லும் முன்னர் மகனும் மருமகளும்  என்னை  ஆன மட்டும் ,அசைத்துப் பார்த்தார்கள்.

கணினியை தொடாத கையும் ஒரு கையோ   என்று சொல்லி
அவர்களை அனுப்பி விட்டு
 இதோ உட்கார்ந்துவிட்டேன்.

பிஜூ கேட்பான் "நீ என் வரலைன்னு"

"ரொம்ப கால்வலிடா."
மேலும் சின்னப் பசங்க நீங்க என்ஜாய் பண்ணுங்க.
நான் இங்க விட்டுப் போன சீரியல் (!)  எல்லாம் பார்க்கறேன்."

ஒரு  மூன்று மணி நேரம்  பத்திரிக்கை,கடிதங்கள், இந்தியா
தொலைபேசல்  எல்லாம் முடித்துவிட்டேன்.:)

.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.




Tuesday, May 03, 2011

பெண் எழுத்து

 படிப்பது எவ்வளவு பயன் தரும் என்பதை நாம் எழுதுவதைச் சிறிது நிறுத்தினால் தான் தெரிகிறது:)


நாச்சியார் பதிவில் படங்களை ஏற்றுவதில் இருக்கும் சுலபம்,

எழுதுவதில் இல்லை.

இ கலப்பையும் உதவ முடியாத இந்த நேரங்கள் மற்ற பதிவுகளைப் படிக்கத் தோதாக அமைகிறது.

முக்கால்வாசி நேரம் மழலைகளுடன் செலவாகிவிடுகிறது.

ஓய்வெடுக்க ஒரு மணி.

மீண்டும் வேலைகள். மருமகளைப் பார்த்தால் அனுதாபம்தான் தோன்றுகிறது.

நம் ஊரைப் போல இஸ்திரி செய்ய ஒரு ஆள். வீடு பெருக்கித் துடைக்க ஒரு ஆள் என்றெல்லாம் இங்கு இல்லை.

தெரிந்த விஷயமே.



இருந்தாலும் கையில் ஏழு மாதக் குழந்தையுடன் எல்லாவற்றையும் கவனிப்பது

கடினம்..

இருந்தும் எனக்குக் கிடைக்கும் சில மணித்துளிகளில் கமலா சடகோபனின்

"என் இனிய மந்திரக் கோலே" படித்தேன்.

பக்கத்துவீட்டில் நடப்பதை நேரில்பார்ப்பது போல இருக்கிறது.



எண்ணங்களில் கீதாவின்  பெண் எழுத்து படித்தேன் அருமையாக பெண்களின்  எழுத்துப் பரம்பரையையே அலசி இருக்கிறார்.

இந்தப் பதிவிலேயே     .எல்.கார்த்திக்
*********************************************அவர்கள் என்னை எழுத அழைத்த  பெண்களின் எழுத்தைப் பற்றிய என் கருத்துகளைப் பதிவிடுகிறேன்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் காலங்களில் எழுதிய பெண்கள் குறைவாக இருந்தாலும்  எங்களுக்குப் பழகிய சூழ்நிலைக் களமாகக் கொண்டே
கதைகள் அமைந்தன.மிகவும்...பிடித்தவர்....லக்ஷ்மி.....பிறகு///சிவசங்கரி

அதில் புதுப்பாணியைக் கொண்டு வந்தவர் ஆர். சூடாமணி.
பெண் மனசில் உள்புகுந்து அழகுகளையும் விகாரங்களையும் தைரியமாக எழுதியவர்.
பின் என்னைக் கவர்ந்தவர்  ராஜம் கிருஷ்ணன்.
முறுக்கு,சீடை,மைசூர்பாகு என்று உழலாமல்  வேறு  நிலைக்கு எடுத்துவைத்தார்.
அதற்குப் பின்னர் வந்தவர்களின் கதைகளில் , கண்ணம்மா,,டார்லிங் இவைகள் முக்கிய வார்த்தைகளாக உயர் மட்டக் காதல்களும் தியாகங்களும்
வேறொரு பார்வை பார்க்க வைத்தன.
கண்ணம்மா  என்றழைக்கும் கணவன் வேண்டும் என்று என் தோழி ஒருத்தி கனவு காணுவாள்:):சிவசங்கரி,வாஸந்தி,இந்துமதி..)

ஆறடி உயரம் ரிம்லெஸ்  கண்ணாடி,,பியட் கார் என்று வலம் வந்த கதா நாயகர்கள். படித்த காதலி, இப்படிப் போகும் கதை..
இப்பொழுது இணையத்திலும் காதல் கவிதைகளுக்குக் குறைவில்லை.

அதில்லாவிட்டால் உலகம் இல்லையோ.
இல்லைதான் என்று நினைக்கிறேன்.:)
பிறகுபடித்தவர்கள்....வித்யாசுப்ரமணியம்,உஷாசுப்ரமணியம்.
கமலாசடகோபன்.....அனுராதாரமணன்.

பாட்டியின் பார்வையில் வேறென்ன தெரியும்!
படிக்க அனைத்து எழுத்துகளுமே நன்றாக இருக்கின்றன.
நேரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இலவசமாகக் கரும்பு போல இனிக்கும் எண்ணங்களையும்,ஆழ் நோக்குடன் பதியப்படும் முற்போக்குக் கதைகளையும் வாசிக்கக் கிடைக்கின்ற ஒரே இடம் இணையம்.

பெண்பேசும்   தமிழுலகம் இன்னும் விரியும்.
ஆன்மீகத்திலிருந்து, ,பற்பல சுற்றுலா சென்று நம்மை மகிழ்விக்கும்
***************************************************************************
 பதிவுகளிலிருந்தும்,
படித்தாலே சிந்தனையைக் கிளரும் ராமலக்ஷ்மி போன்றவர்களின் தீர்க்கமான கருத்துகளும், லக்ஷ்மியின் மலர்வனமும்,
சித்ரா,அன்புடன் அருணா, மாதங்கி மாலி,அப்பாவி புவனா,ஹுசைனம்மா,மாதேவி,சிறுமுயற்சி   முத்துலட்சுமி,
இவர்களெல்லாம் இளைய தலைமுறை.

பெரியவர்களாக நம் துளசி,கீதா,நானானி,கோமா,கோமதி அரசு, திருமதி
************************************************** லக்ஷ்மி பூனாவிலிருந்து
***************************************************************** எழுதும் பதிவுகள்
***********************************************
 எல்லாமே அள்ள அள்ளக் குறையாத இன்பம் தரும்  எழுத்துகள்.

இவர்களைப் பற்றி  மதிப்பிடவோ,கருத்துக் கூறவோ
 நான் இன்னும் நிறைய தொலைவு கடக்க வேண்டும்.
தெரிந்ததை எழுதி

விட்டேன் கார்த்திக்.!!
 நேரக் குறைவு காரணமாக நிறைய
பதிவர்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பு அதிகம்
நம் சின்ன அம்மிணி அகிலா மாதிரி.:)
மற்றவர்கள் மன்னிக்கணும்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...