Sunday, May 20, 2007

உண்ணும் சோறும் பருகும் நீரும்
















ஸ்விட்சர்லாண்ட் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு.
ஏற்கனவே படைக்கப்பட்ட காலத்திலிருந்தே செழுமை.
அதைத் தொடர்ந்து அவர்கள் செழிப்பாக இருக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளும்,
இன்னும் தங்கள் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றிக்கொள்ள எந்த
வித இழப்பையும் தாங்கிக் கொண்ட விதம்.
அவர்கள் இந்த நிலையில் இருக்க அவர்கள் நடுனிலை அரசியலும் ஒரு காரணம்.
உலகம் முழுவதும் வலது,இடது என்று இரு பாகமாகப் பிரிந்தாலும்
தங்கள் நாடு பிரியாமல்
ஒற்றுமை காத்து இருக்கின்றனர்.
இத்தனைக்கும் வேறு வேறு மொழிகள் பேசுபவர்கள்.
ஜெர்மானியர், பிரெஞ்சு,இத்தாலியர்கள்
என்று பல மொழி பேசுபவர்களும்
ஜெர்மன் மொழியைப் பிரதானமாக எடுத்துக் கொண்டு
முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
உடல் அமைப்பைக் கொண்டு ஒரொரு இனத்தவரையும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
சர்வ சுதந்திரமாக அனைவரும் இயங்குகின்றனர்.
நல்ல சுகாதாரம்,படிப்பு,பணப் புழக்கம் இத்தனையும் சேர்ந்து உழைப்பும் உண்டு.
சரித்திரத்தை மறக்காமல் ஒரு சின்னத் தெருவைக்கூடக்
கட்டிக் காப்பாற்றிப் பிற்காலச் சந்ததியினருக்கு
தங்கள் பெருமை புரியும் வண்ணம் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.
நம் நாட்டு இளைஞர்களின் உழைப்பும் இப்போது இங்கே
பயன்பட்டு வருகிறது.
அநேகமாக எல்லாக் கணினி சம்பந்தப்பட்டத் தனியார் நிறுவனங்களும் இங்கே தங்கள்
பிரிவு அலுவலகங்களை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
மீண்டும் பார்க்கலாம்.

Saturday, May 19, 2007

புரிந்த மனிதரும் புரியாத மொழியும்


























இந்த ஊருக்கு வருவது ஒரு அலுப்பில்லாத நிகழ்வு.


பொட்டியைத்திற.


அங்கே போ, இங்கே போ விவகாரம் கிடையாது.




இறங்கினதும், பாகேஜ் கலெக்ஷன்,


வெளீயில் நடக்க வேண்டியதுதான்,


படிகள்


இறங்கினால் நாம் போக வேண்டிய ஊருக்கான வண்டி.


நம்ம ஊரிலிருந்து இந்த ஊர் வித்தியாசப்படுவது சத்தமில்லாமல் இருப்பது .




அதென்ன ,ஒரு குரலே எழும்பாமல் ஒரு மொழி பேசுவாங்களோ.~


அதுவும் முன்ன இருந்த இடத்தில மக்கள் அவ்வளவு மோசம் இல்லை




ஒரு ஹை, சொன்னா பக்கத்துவீட்டுக்காவது கேட்கும்.




இங்கே குழந்தைகூட அம்மாவைப் பார்த்துவிட்டு,அப்ரூவல்


வாங்கிண்டு தான் அழுகிறது


ஏகத்துக்குச் செழுமை.


விதவிதமான பூக்கள்.பாலுக்கும் அதன் கூடவே வரும் தயிர்,வெண்ணை


ஒன்றுத்துக்கும் குறைவில்லை.


முன்னரே சொல்லியபடி லாண்ட் ஆஃப் பிளெண்டி.


அதற்காக எல்லோரும் உடல் பெருத்து ,கனத்துக் காணப்படவில்லை.


அழகாக அளவோடுதான் இருக்கிறார்கள்.நல்ல ஆரோக்கியம். தொண்ணூறு


வயதுக் கிழவர்,கிழவிகளும் வாக்கிங் ஸ்டிக் உதவி இல்லாமல்


நிதானமாக நடக்கிறார்கள். வாழ்க்கைக்குத் தேவையான உற்சாகம்.சுதந்திரம்
எல்லாம்...சற்று மேலோட்டாமாக இருந்தாலும் , உணர முடிகிறது.
போக்குவரத்துக்குப் பயன்படும் டிராமில் ஏறினால்
வயதானவர்களுக்கும் ,குழந்தைகளுக்கும்,வளர்ப்புச் செல்லங்களுக்கும் முதலிடம்.
மீண்டும் பார்க்கலாம்.












Friday, May 18, 2007

பதிவு,பின்னூட்டங்கள்,லேபல்ஸ்,குறியீடுகள்







திரு திருனு முழிக்கிறது சகஜமான ஒண்ணுதான்.
இருந்தாலும்
எப்பப் பார்த்தாலும் தானே தனக்கு அறிவாளினு பட்டம் சூட்டிப்பாங்க.பக்கைத்தில வர அப்பாவிகளை
மட்டம் தட்டித் தட்டி, அவங்களுக்கு
ஏதோ துளி, புத்தி இருந்தாலும் மழுங்க வச்சுடுவாங்க.
நான் ஒண்ணும் பெரிய மேதாவியோ,மேல்தாவியோ இல்லை.
அதுக்காக இடத்,வலது தெரியலைன்னு சொன்ன்னா எப்படி.
இதோ நேத்திக்கு வண்டியில் வந்துகொண்டு இருக்கோம்.
இங்கேயோ எல்லாத்துக்கும் டான்க்கே சொல்ல வேண்டிவரது.
பஸ்ஸை ஓட்டி வந்தவர், பின்னால் பார்த்து
நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது
என்கிறார்.
இவர் ரைட் சொல்ல
நான் டான்க்கே சொல்ல
அவர் வண்டியை ஸ்டார்ட் செய்வதற்கு பதிலா நிறுத்த
வண்டி குலுங்க
மீண்டும் டான்க்கெ,பைபை,ஆவ் விடர்சன்,மெர்சி
எல்லாம் சொல்லி ஒரு வழியா இறங்கினோம்.
போச்சு. ,வெளில வந்தா ரைட்ல இறங்கணும்னு தெரியாதா_
நான்...நான் ரைட்லதான் இறங்கினேன், மறந்துபோய்
இறங்கிற பட்டனை மறுபடி அழுத்திட்டென்..என்று நான்
சொல்ல,
வீட்டுக்கு வந்ததும் மகனிடம்
>>பையா,அம்மாவை வெளில கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டியது நீயே
பார்த்துக்கோ.>>
மனுஷனுக்கு நிம்மதி இல்லாமல் போச்சு.
ஏறனும்னா இறங்கறா.
இறங்கணும்னால் நிக்கிறாள்
ரொம்ப டூ மச்///
என்று பொரிய
எனக்கு சிரிப்புதான் வந்தது.
மனுஷனுக்கு நான் மறுபடி எங்கேயாவது விழுந்து வைக்கப் போறேனோ என்ற கவலை.
இப்ப எனக்கென்ன கவலை தெரியுமா.
இந்த மடிக்கணினியில்
கமா,செமிகோலன்,கேள்விக்குறி ஒண்ணும் போட முடிய வில்லை.
எல்லாம் சிரிப்பாச் சிரிக்கபோகிறதே என்றுதான்.
இதோ பின்னூட்டம் போடமுடியலை.
பின்ன நானே கமெண்ட் போடலைன்னால்
யார் போடுவாங்க.
ஸ்விஸ் மலையப்பா நீயே காப்பாத்து.

Tuesday, May 15, 2007

பால் வாசம் வீசும் பசுமை
















அங்கே போய் இறங்கினதும் சிகாகோவில் நடந்த கோளாறுகளெல்லாம் தெளிந்து
ஒரு மாதிரி செட்டில் ஆகி முடிந்த வரை உதவியாக இருந்துவிட்டு'_
இங்கே ஸ்விட்சர்லாந்துக்கும் வந்தாச்சு .
இங்கே அவ்வளவு களேபரம் செய்ய வசதி இல்லை.
நிலைமை அப்படி.
நம்ம சொல்லுக்கு மேல் யாரும் சொல்ல மாட்டாங்களா...
அதுவே ஒரு சோதனை.
ஏதாவது வாயாடாமல் தினம் அமைதியாகப் போனால் போரடிக்குமே..
ஊரை விட்டுக் கிளம்பும்போது மாமரமே,தென்னை மரமேனு உருகினது போய்
இப்ப அமெரிக்கா பேரன்கள் சாப்பிட்டார்களோ.
பள்ளிக்கூட ஹோம்வொர்க் முடிக்க நேரம் இருக்கோ
இப்படி இரண்டு நாளாகச் சிந்தனை.
பூனைக் கண்ணை மூடிக்கொண்ட கதைதான்..,..
மீண்டும் வம்பு கிடைக்கும் போது எழுதுகிறேன்.
-

Friday, May 11, 2007

நல்ல பயணம்,இனிய ஆரம்பம்










பயணங்கள் முடிவதில்லை படத்தின் பெயர்தான் நினைவு வருகிறது.
உண்மையாகவே உடலால் மேற்கொள்ளும் பயனங்கள் ஓரிடத்திலிருந்து ஆரம்பித்து மறு இடத்தில் முடிகிறது.
மீண்டும் ஒரு அசைவு.
வாழ்க்கையின் வேறு வேறு நிகழ்வுகளும்,
அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்றவிதத்தில்
தொடங்குகின்றன.
ஆதலினால் , இயங்கும் சக்திக்கும் முடிவில்லை.
ஆசைகளுக்கும் அளவில்லை.
தொடரும் பந்தங்கள்,
நட்புகள் எத்தனையோ.
நினைக்காத விதத்தில் எனக்குக் கிடைத்த இணைய நட்புகள்
இங்கே வட அமெரிக்கா வந்ததும் பெருகின.
இப்போது ஆறு மாதங்களுக்குப் பிறகு
பிரியும் போதும்,
பதிவுகளில் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருப்பதால் பாரமாகத் தோன்றவில்லை
அழகிய அர்த்தமுள்ள இந்தப் பயணம் வேறு ஒரு இடத்தில் ஆரம்பிக்கீறது.
அங்கிருந்து மீண்டும் பேசிக்கொள்ளலாம்.:-)

Wednesday, May 09, 2007

சித்திர ராமன்.....18 யுத்தம் முடிந்தது, ஸ்ரீராமஜயம்











பதினெட்டு பதிவாக வந்துவிட்டச் சித்திரம்,
பதினெட்டு நாள் யுத்தம் முடியும் வரை வந்துவிட்டது.
கும்பகர்ணனின் வீரமூம் விஸ்வாசமும்,
இந்திரஜித்தின் நிகும்பலையும்,
மண்டோதரியின் அழியாத பதிபக்தியும் ராவணனைக் காக்கத் தவறின.
அனுமனின் சஞ்சீவி சாகசம்,
ராமனுக்குச்
சூரியக் கடவுளின் மந்திர உபதேசம்,
ராமனின் கருணா விலாசம்,
இலக்குவனின் பக்தி,




சகல வானரங்களின் உற்சாகம்
எல்லாவற்றிற்கும் மேல் நன்மையே ,
தர்மமே
வெல்லும் என்ற உறுதிப்பாடு
இவையே யுத்தகாண்டம் முழுக்கக் காண்கிறொம்.
வானர சேனைகள் சகிதம்ஸ்ரீராமன்
இலங்கையில் கால் வைத்த முகூர்த்தம்,ராவணனின்
நெஞ்சில் பாரம் ஏறியது..
உப்பரிகையில் நின்று ராம சைன்யத்தை
அளவிடுகிறான்.
ராவணன் நிற்பதை ராமனும் பார்க்கிறான்.
அப்போதும் அவனுக்கு தூது அனுப்பி,
ரத்தம் சிந்தாமல்
சீதையை மீட்கத்தான் தோன்றுகிறது.
அங்கதன் தூது செல்ல , தோல்வியுற்று வருகிறான்
ராவணனின் மனதில் மாற்றம் இல்லை.
யுத்தம் துவங்கி 18 நாட்கள் ,சமர் நடக்கிறது.
சகல அரக்கர்களையும் அழித்து,
யுத்தம் முடிகிறது.
ராவணனோடு மண்டோதரியும் உயிர் துறக்கிறாள்.
சீதாபிராட்டியின் அக்கினிப் பிரவேசம் முடிந்து,
ராவணனுக்கு உண்டான கிரியைகளை விபீஷணன் முடித்து,
அனைவரும்
பூரண மனமகிழ்ச்சியுடன்
அயோத்தி நோக்கிப் புறப்படுகிறார்கள்.
அவர்களுக்கு முன்னால் ஸ்ரீராம நாமம் பதித்த கணையாழியுடன்
அனுமன் சென்று,
, பரதனையும், குகனையும் காக்க.
ராமன் வரவுக்குமுன்னால் அவர்களுக்கு நல்ல செய்தியைக் கொடுத்து அவர்கள் உயிரையும் மீட்கிறான்.
அனுமா உன் நாமம் வாழி.
மரவுரி நீக்கி ராம,லக்குவ, சீதை
அயோத்திப் பிரவேசம் நடக்கிறது..
பிரிந்தவர்கள் கூடுகிறார்கள்.
வசிஷ்டர் ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கும் நாள் குறித்துவிடுகிறார்.
அந்தப் புண்ணியநாளும் வந்தது வசந்தமாக.


























ஸ்ரீராம பட்டாபிஷேகம்
வைதேகி சகிதம் சுரத்ரு மதலே
ஹைமே மகாமண்டபே//
மத்யே புஷ்பகமாசனே
மணிமயெ வீராசனே சூஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்சன சுதே
தத்வம் முனிப்யபரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபிஹி பரிவ்ருதம்
ராமம் பஜே ச்யாமளம்//
ஸ்ரீராம வள்ளலுக்கு, சுவாமிக்கு வசிஷ்டர்
உலகின் புனித நீரெல்லாம் நிரம்பிய குடத்தைக்
கையில் பிடித்து ராஜ்யாபிஷேகம் செய்கிறார்.
சுந்தரவதனன் என்றும் மாறாத புன்னகையோடு மணிமுடி ஏற்றுக்கொள்ளுகிறான்.
அருகில் வைதேஹி,
சீதாபிராட்டி ,நம் தாயார் இந்தப் பட்டாபிராமனைப் பார்த்துப் பூரிக்கிறாள்.
பரதன் குடை பிடிக்க,
இலக்குவனும் சத்ருக்கினனும் சாமரம் வீச,
அங்கதன்
அரியாசனத்தைத் தாங்கிப்பிடிக்க
அனுமன் கைகூப்பி என்றும்
பக்தனாய்ச் சிரஞீவியாய் நிற்க
சுற்றமெல்லாம் மங்கள கோஷம் எழுப்ப
ராம பட்டாபிஷேகம் இனிதே பூர்த்தியானது.
ஸ்ரீராம கதையைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்
பூரண ஆயுசும்
சகல சம்பத்தும், புத்திர பாக்கியமும்,
பித்ருக்களின் ஆசியும் பரிபூரணமாக இருக்கும்.
எப்போதெல்லாம் மனம் சஞ்சலப் படுகிறதோ அப்போதெல்லாம் ராமனையும்,
அவன் தூதனான அனுமனின்சுந்தர வைபவத்தையும்
நினைத்து ருசிப்பவர்கள்,
படிப்பவ்ர்கள்
என்னாளும் சோர்வடைந்தது இல்லை.
எல்லாம் நலமே.
ஸ்ரீராகவம் தசராத்மய அப்ரமேயம்
சீதபதிம் ரகுகுலான்வய ரத்ன தீபம்
ஆஜானு பாகும் அரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர வினாசகரம் நமாமி.
அன்புச் சக பதிவர் அனைவருக்கும் நன்றி.
ஆயிரம் பிழைகள் இருக்கும்,.
சொல், எழுத்து, வழ்ங்கிய விதம்
என்று
அனைத்துப் பிழைகளையும் பொறுத்து
படித்தவர்கள்,
உங்களுக்கு எப்போதும் நன்றி.
ஆனாலும் ராமன் இங்கே தன் நாமத்தைத் தந்து
எழுதவைத்தான்..
அதனாலேயே சித்திர ராமாயணம் பதிய முடிந்தது.
ஜெயஜெயராம் ஜானகிராம்.

Saturday, May 05, 2007

கிராண்ட் கான்யான் 3











ஐமாக்ஸ் பெரிய திரையில்
கிராண்ட் கான்யான் பிறந்த கதையைச் சொல்லுவார்கள் என்று ஆசையுடன் போன எனக்கு அதன் நிகழ்கால
மூவாயிரத்துச் சொச்ச கதையைக் காண்பித்தார்கள்.
ஏதோ அட்வெஞ்சர் படம் பார்த்த நினைவு வந்தது.
இருந்தாலும் வரலாறு தானே.
ரசிக்கும்படியாகவும் இருந்தது.
கொஞ்சம் ரீல் கொஞ்சம் ரியல் என்று 30 நிமிடப் படம்.
அதிரடியாக ஓடும் கொலராடோ நதி இத்தனை ஆழத்தில் இருக்கிறதே என்று வருத்தமாக இருந்தது.
நேரே பார்க்க முடியாவிட்டால் ,
என்ன பலன்?
இந்தப் பள்ளத்தாக்கு,(?)
ஒரு மைல் ஆழம்.
விஸ்தீரணம் 277 மைல்கள் நீளமும்
கிட்டத்தட்ட 12 மைல்கள் அகலமும்
இடத்துக்கு இடம் வித்தியாசமாக இருக்கும் என்றார்கள்.
மலையைச் சுற்றி வர 7 நாட்கள்
கூட எடுக்கலாமாம்.
அங்கேயும் குடி இருப்பவர்கள்.
ஹோட்டல்கள்,
காபின் அமைப்பில் இருந்து கொண்டு நடப்பவர்கள்.
பூகோள ஆராய்ச்சி செய்பவர்கள்,
விடுமுறை கழிக்க வந்தவர்கள்,
என்று ஒரு சிறிய நகரமே இயங்குகிறது.
வயதானவர்கள் நல்ல உடல் நலத்தோடு
இரு கைகளிலும் வாக்கிங் ஸ்டிக் உதவியோடு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
போக மூன்று, ஏறி வர ஐந்து மணிநேரம் என்று நல்ல ஆரோக்கியத்தில்
இருப்பவர்களுக்கே
அவ்வளவு நேரம் ஆகுமாம்.
நமக்குத் தான் இன்னோரு வீக்னஸ் உயரமாச்சே.
என்னுடைய உயரம் பத்தி சொல்லலை.
க்ராண்ட் உயரத்தைச் சொல்கிறேன்.
வியூ பாயிண்ட் என்று ஏகப்பட்ட இடங்கள்.
அதிலேருந்து பார்க்கும்போது ஏஞ்சல் கான்யான் தான் ரொம்பப் பிடித்தது.
மேலிருந்து பார்க்கும்போது அதுபாட்டுக்கு ஒரு குட்டிக் கான்யானாகப் போய்க் கொண்டே இருந்தது.
நல்ல பச்சை நிறத்தில் கீஈஈஈஈஈஈஈஈஈழேஏஏஏ
கொலராடொ நதி நெளிந்து கொண்டிருந்தது.
அதில் வெள்ளைநிற ராபிட்ஸ் (rapids) நுரைத்துக் கொண்டுபோவதும் தென்பட்டது.
river rafting நடக்கிறது.
மியுல்ஸ் எனப்படும் கோவேறு கழுதைகள் கட்டிவைக்கப் பட்டுக் காத்திருக்கின்றன.
நானென்ன வைஜயந்திமாலாவா.
பாட்டுப்பாடவா கேட்டுக்கொண்டே
அதுமேல் போக.
கண்ணால் எல்லவாற்றையும் ஆசீர்வாதம்தான் பண்ணமுடியும்:-)
எதற்கு என்கிறீர்களா.
அங்கே வந்த இரட்டை நாடி தேகங்களைச்
சுமந்து கொண்டு நடக்கணும்.
கால் வழுக்காமக் கொண்டுபோய்ச் சேர்க்கணூம்.
இதுக்கெலாம்தான். அதுகள் பாவம்தானே.
எனக்கென்னவோ சு. என் சுந்தரி கதையில் நாகேஷ் விரட்டப் பின்னாலேயே போகும் குதிரை
தான் ஞாபகம் வந்தது.;-0)
எனக்கு அதுமாதிரி ஏறிப் பயணம்
செய்ய முடியாதேங்கிற பொறாமையாக் கூட
இருக்கலாம்:-)
இப்படியாகத்தானே சுற்று முற்றும் பார்க்கும்போடு,
கிடைத்த கூழாங்கற்கள்,
மரத்துண்டுகள் எல்லாவற்றையும் பொறுக்கிக்
கொண்டோம் நானும் என் பேரனும்.
அவ்வப்ப்போது
மலை முனையில் காலைத் தொங்கப்போட்டுக்
கொண்டுப் போஸ் கொடுக்கும் ஜோடிகள், காளைகள்
கன்னிகள் எல்லோரையும் வேடிக்கை பார்த்தேன்.
வியர்டூனு சொல்ல முடியாது.
அதற்கு மேலோர்கள் அவர்கள்.
கரணம் தப்பினால் மரணம்
என்ற நிலையில் ,
புகைத்தபடி,
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதானு பாட வேண்டுமா:-)
ஓ.இவர்கள் அனைவரும் 'ஹார்லீ டேவிட்சன்
பைக்கர்ஸ்.'
இவங்க தனி உலகத்தைச் சேர்ந்தவர்கள்.
அதற்குப் பிறகு வருண ராஜா வந்துவிட்டார்.
அதனால் படங்களை அடுத்த பதிவில் போடுகிறேன்.





அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...