Blog Archive

Sunday, January 15, 2023

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கத்திரிக்காய் சாதம்| Brinjal Rice Recipe| C...

 அனைவருக்கும் கனுப் பொங்கல் வாழ்த்துகள்.

7 comments:

Geetha Sambasivam said...

மார்கழி மாதம் அஷ்டமிச் சப்பரததன்று மதுரையில் எல்லார் வீட்டிலும் கத்திரிக்காய்க் கறி+சாதம் தான். அதெல்லாம் ஒரு காலம். இந்த வீடியோவை நாங்களும் 2,3 முறை பார்த்திருக்கோம்.

Thulasidharan V Thillaiakathu said...

சூப்பர் ! நன்றாக இருக்கு

ஆனா காரம் கூடுதலோ?

என் மாமியார் மொச்சை (பங்களூரில் சிலவருடங்கள் இருந்ததாலோ என்னவோ மொச்சையை எல்லாத்திலும் அது போல நிலக்கடலையும் போடுவதுண்டு. அப்படி கத்தரிக்காய் சாதம் செய்வாங்க இதோடு கொஞ்சம் தனியாவும் சேர்த்துடுவாங்க(தனியா இல்லாத ரெசிப்பி இப்பக்கங்களில் இல்லவே இல்லைனலாம். நம் திருநேல்வேலிப்பக்கங்களில் தனியா ஜீரகம் பயன்பாடு என்ன ரெசிப்பிக்குத் தேவையோஉ அதுக்குமட்டும்தான்...அதனால நிறைய வகை வித விதமான ரெசிப்பிக்கள். எனக்கு முதலில் இப்பக்க ரெசிப்பிஸ் எல்லாமே ஒரே மாதிரிதான்....அப்புறம் நம் பக்க ரெசிப்பிஸ் அறிமுகப்படுத்தி அதையும் மாமியார் மாமனார் ரெண்டு பேருமே ரசித்துச் சாப்பிட்டதுண்டு)

அப்படிக் கற்றது மாமியாரிடம் இந்தக் கத்தரிக்காய் சாதம். கடுகுப்பச்சடி எல்லாம்...

இன்று கூட மொச்சை பயன்படுத்தினேன் இங்க ஃப்ரெஷா கிடைக்கிறது. இப்ப சீசன் இல்லையா...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கடைசில சுண்டிய காய்சல் கொஞ்சம் தான் போடறாங்க இல்லையா அப்ப ஓகே காரம்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மாமியார் இவ்வ்ளவு எண்ணை போட மாட்டாங்க!!! ஹாஹாஹா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
எப்பவும் நலமாக இருக்க வேண்டும்.

இதுவரை இந்த காணொளி நான் பார்க்கவில்லை.
ஆனால் டவுனில் சின்னப் பாட்டி அகத்தில் வேற மாதிரி கத்திரிக்காய்
சாதம் சாப்பிட்டு இருக்கேன்.
இவர் நிறைய எண்ணெய் சேர்க்கிறார்.
எல்லாம் மதுரை நினைவுதான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் நலமுடன் இருக்க வேண்டும்.

". நம் திருநேல்வேலிப்பக்கங்களில் தனியா ஜீரகம் பயன்பாடு என்ன ரெசிப்பிக்குத் தேவையோஉ அதுக்குமட்டும்தான்...அதனால நிறைய வகை வித விதமான ரெசிப்பிக்கள். எனக்கு முதலில் இப்பக்க ரெசிப்பிஸ் எல்லாமே ஒரே மாதிரிதான்."

அதைத்தான் நானும் நினைத்தேன். இடத்துக்கு இடம் மாறுபடும்
சமையல் முறை.
கத்திரிக்காய் எண்ணெய்க்கறியில் மட்டும் தான் "தனியா"
சேர்ப்பார் என் அம்மா. பாட்டியும் தான்.
சிக்கனமான சமையலில் மிளகு மட்டும் சேர்ப்பார்.
சென்னை வந்த பிறகு தான் இதெல்லாம் பழக்கமானது மா.

விரிவான பின்னூட்டங்கலுக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

கீதாமா,
கடுகு பச்சடியா? அதென்னது!!!
''அப்படிக் கற்றது மாமியாரிடம் இந்தக் கத்தரிக்காய் சாதம். கடுகுப்பச்சடி எல்லாம்...

இன்று கூட மொச்சை பயன்படுத்தினேன் இங்க ஃப்ரெஷா கிடைக்கிறது. இப்ப சீசன் இல்லையா...

கீதா''

பங்களூரில் மொச்சை, பட்டாணி, வெல்லம் எல்லாமே நன்றாக
இருக்கும். அந்தக் காய்கறிகளே கண்ணுக்கு விருந்து.

அளவாகச் சாப்பிட்டால் அமிர்தம் தான்.

ஆமாம் இந்த ஐயா ஏகப்பட்ட எண்ணெய் உபயோகிக்கறார்:)