Blog Archive

Wednesday, January 18, 2023

அறுவடை செய்த உடனே சமைத்துத்தரும் இயற்கை விவசாய தம்பதியர் | catering from...

என்றும் வாழ்க வளமுடன்.

7 comments:

ஸ்ரீராம். said...

கடைகளிலிருந்து அன்றன்று புதிதாக பசுபசுவென்று வாங்கி வந்து உடனே சமைத்தாலே சுவாரஸ்யமாய் இருக்கும்..  அறுவடை கண்ணுக்கெதிரே செய்து உடனே சமைத்து சாப்பிட்டால் சுவைதான்.

கோமதி அரசு said...

பார்க்கவே நன்றாக இருக்கிறது.
அவர்கள் உற்சாகமாக எப்போதும் இப்படியே இருக்கட்டும். விவசாய தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமை அருமை.....எனக்கு இதில் ஆர்வம் உண்டு. ஆனா வீட்டுக்குக் கூட போட இடமில்லை...வசதி இல்லை. முன்ன இருந்த வீட்டில கூட சின்னதா மண் இருந்தது..இங்கு தொட்டிகள்தான்...

பெரிய தோட்டம்...செமையா இருக்கு அம்மா. எனக்கு பார்த்துக் கொண்டே இருக்கணும் போல....எனக்கு மிகவும் பிடிக்கும்

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் வளமுடன் இருக்க வேண்டும்.
உண்மைதான். காய்கறி கடைகளுக்குப் போவதே மன உற்சாகம் தரும். கோவையில் இருக்கும் போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை

குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போய் வருவேன்.
நம்மூர் ஹார்ட்டி கல்ச்சர் தோட்டம் அவ்வளவு தெம்பு தரும்.
ஆக்சிஜன் லெவல் உயர்ந்திருக்கும் இடம் .

இந்தத் தம்பதியர் நன்றாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.
படித்து சம்பாதித்து விட்டு இப்போது விவசயத்துக்கு வந்திருப்பது அவர்களுக்கு மேன்மை தரும்.

எங்க சிங்கம் மிகவும் ஆசைப்பட்டது இது போல ஒரு தோட்டம் தான்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன் மா,

எப்பொழுதும் நலமுடன் இருங்கள்.
நல் வாழ்க்கை உங்கள் விருப்பப் படி அமைய இறைவன் அருளவேண்டும்.
ஆமாம் முன்பே சொல்லி இருக்கிறீர்கள்.
இடம் ரொம்ப சின்னது என்று.

பங்களூரில் சின்னதாக வீடு கிடைப்பதே சிரமம் என்று
என் தங்கை சொல்வாள்.

அவள் தாம்பரத்தில் இருந்து பங்களூர் சென்றவள்.
மகளின் வேலைக்காகச் சென்றவள், மீண்டும் திரும்பி
விட்டாள்.
மூச்சே விட முடியலை அக்கா என்கிறாள்.

நிலைமை அப்படி இருக்கிறது . என்ன செய்யலாம்.

நல்ல காலத்துக்குக் காத்திருப்போம்.

மாதேவி said...

மருந்தில்லாத இயற்கை விவசாயம் சிறப்பு. உடனே பறித்து சமைப்பதில் உள்ள சுவை தனிதான். இளம் விவசாயிகளுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.இந்த எண்ணம் வந்ததே சிறந்தது.

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்தவை சமைப்பதுண்டு அதற்கு ஈடே இல்லை.