Blog Archive

Thursday, January 13, 2022

இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன்


 இவ்வுலகிலும் எவ்வுலகிலும் என்றும் நன்மைகள் அளிக்கும்
ஸ்ரீ பெருமாளும் பிராட்டியும்
அன்னையும் தந்தையுமாக இருந்து நம்மைக் காக்க வேண்டும்.

அனைவர் வாழ்வும் இனிமை சிறக்கத் தைத்திங்கள்
பிறக்கும்  நன்னாள்
நம் அனைவரின் நலனும் மேம்பட அவர்களே
அருள்வார்கள். எல்லோரும் நன்றே வாழ இறைவனும் இறைவியும்
துணை.




6 comments:

வெங்கட் நாகராஜ் said...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தெய்வீக படங்கள் அருமை. தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் போகி, மற்றும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

எண்ணம் நன்றாக இருந்தால் எல்லாம் நலமாகும். நலம் தரும் நாராயணன் எல்லோருக்கும் நன்மையே தருவார். நானும் ஸ்ரீமன் நாராயணனின் பாதம் பற்றி உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
எல்லோர் வீட்டிலும் பால் இனிதே பொங்கியிருக்கும்
என்று நம்புகிறேன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள் அம்மா.

நீங்கள் சொல்வதும், பிரார்த்தனை செய்வதும் இப்போது மிக
அவசியம்.
காதில் விழும் செய்திகள் ரசிக்கும்படி இல்லை. சதா சர்வகாலமும்
அனைவரின் நல்ல சுகத்துக்காகவும்,
தொற்றிலிருந்து வெளியே வரவும்
பகவானே அருள வேண்டும்.

நீங்களும் குடும்பமும் என்றும் நலமுடன் இனிய வாழ்வுடன்
இருக்க இறைவன் உங்களுடன்
இருக்க வேண்டும் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ராமலக்ஷ்மி,
என்றும் நலமுடன் இருங்கள்.
மிக நன்றிமா.

பழைய நாட்கள் மீள வேண்டும். புதிய தொற்றில்லா உலகம் நமதாக வேண்டும்.
இணைந்தே பிரார்த்திப்போம்.

பத்திரமாக இருங்கள்.