Yercaud | Weekend Gateway
எங்கள் சேலம் நினைவுகளுக்கு ஒரு பாலம் யேர்க்காடு.
சிங்கத்தின் ஆகச் சிறந்த தோழர் வசித்த இடம்.
எங்களுக்கு வார இறுதிப் பயணம் போகக் கிடைத்த இடம்.
யேற்காடு ஏரி அருகே இருந்த சேர்வராய் விடுதியில் தங்கி
அடுத்த நாள் சேலம் திரும்பி விடுவோம்.
காலை உணவுக்குப் பின் , நடை நடை நடைதான்.
அந்த மரங்களும் ,பறவைகளின் குரல் ஒலியும் மறக்க முடியாத
நினைவுகள்.
அடிக்கடி வந்து போகும் மேகப் பொதிகள். மஞ்சு என்று
சொல்வார்கள். மஞ்சி வருது பார்த்துப் போங்க என்று எதிரே வருபவர்களின்
குரல் மட்டும் கேட்கும்:) நல்ல நினைவுகளுக்கு நன்றி.

Comments
ஆமாம் யேற்காடு அழகிய ஊர்.
நீங்களும் சென்று வந்தது மிக மகிழ்ச்சி மா.
நன்றி மா.
கீதா