| தக்காளி ஊறுகாய்/கிராமத்து சமையல்
இந்தப் பெரியம்மாவின் வெள்ளை சிரிப்பும், அவரைப்
படம் எடுத்து இணையத்தில் வெளியிடும்
பெண்ணின் மரியாதையும் , திரு நெல்வேலிக்காற்றும், பசுமையும் என்னைத் தொடர்ந்து பார்க்க வைக்கின்றன.
அசைவ சமையலை விட்டு விட்டு மற்ற
சமையல்களை வெகு நேர்த்தியாகச் செய்யும்
விதம் மிக இனிமை. இதற்காக வயல் வெளியில் ஒரு
செட் போட்டு, சிமெண்ட் தளம் அமைத்து
அவர்கள் செய்யும் நேர்த்தியும்
அதற்குப் பயன்படுத்தும் அம்மி, கல்லுரல், மாவு அரைக்கும்
உரல் எல்லாமே பழக்கப் பட்டவைகளாகத் தோன்றுகின்றன.
வீடியோ எடுப்பவரும் சுற்றுப்புறத்தை
அழகாகக் காமிராவில் பதிகிறார்.
பறவைகள் வித விதமாக மரக்கிளைகளில்
உட்கார்ந்து சமையலைப் பார்க்கும் அழகும்
தேங்காயைக் கொறிக்கும் அருமையும் சிறப்பு.
Comments
உடன் பேசுபவர்களும் மிக அருமையாக பேசுவார்கள்.
இயற்கை அழகு மிகுந்த இடம்.
இன்றைய தக்காளி ஊறுகாய் அருமை.
நானும் செய்வேன்.
தண்ணீரீல் வேக வைக்காமல் இடலி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து தக்காளி தோலை நீங்கி விட்டு செய்வேன்.
வாழ்க வளமுடன் மா.
உண்மைதான். இவர்கள் செய்யும் விதம் வேறு மாதிரி இருக்கிறது.
உடனே செலவழித்து விடுவார்களோ
என்னவோ.
இவர்கள் இருவரும் செயல்படும் முறை அழகாக இருக்கிறது.
அதுவும் அந்தப் பெரியம்மாவின் பற்கள் எவ்வளவு வெள்ளை!!!!
சிரிப்பும் உள்ளத்திலிருந்து வருகிறது.
நன்றிமா.
நான் தக்காளியை முழுவதும் வதக்கிவிடுவேன்.
கோவையில் அவினாசிலிங்கம் கல்லூரியில்
ஒரு கோர்ஸ் கற்றேன்.:)
என்ன வேலை.
அரைப்பது என்பது தெரபிடிக். மனமெல்லாம் கொஞ்சம் தெளியும்.
நலமுடன் இருங்கள் அப்பா.
எனக்கு அந்த அம்மாவை மிகவும் பிடிக்கும்.
எங்கள் ஊர்ப்பக்கம் இது போலக் களங்கம் இல்லாத மனிதர்களைக் காணமுடியும்.
நலமுடன் இருக்க வேண்டும்.
நீங்களும் ரசித்துக் கண்டது மகிழ்ச்சி.
இவர்களின் சமையல்களில் விறகடுப்பும், அம்மி, உரல் என்று
பழங்காலப் பொருட்களை உபயோகித்தே செய்வார்கள்.
அதனால் பிடிக்கும். முடிந்த போது பாருங்கள்.
நலமே வாழ்க.
இந்தக் கிராமங்களில் சென்று பார்க்க மிக ஆசையாக இருக்கிறது மா.
நன்றி மா.
அதிசயமாக இத்தனை வகைகளில்
உணவு, பயணம், திரைப்படம் என்று
விரியும் உலகம் யூடியூப்.
நிறைய ரசித்துப் பார்க்கிறேன். நன்றி மா.