Blog Archive

Saturday, January 09, 2021

தூங்கும் அழகு ...



வல்லிசிம்ஹன்


 தூங்கும் சுகம் தூங்காதவர்களுக்குத் தெரியும்.
7 வயதில் வரும் தூக்கம் 70இல் வருவதில்லை.

அலுத்துக் களைத்த உடலுக்கு எந்த மருந்தும் வேண்டாம் தூங்க.
கணினியும் ,கதையும் கண்ட கண்களுக்கு
உறக்கம் உடனே வருவதில்லை..

கொஞ்சம் இருட்டு கொஞ்சம் வெளிச்சம்
கொண்டுவரும் தூக்கம்.
பிரச்சினைகள் அண்டிய மனமும்
நோய் அண்டிய  உடலும் முரண் கொள்ளூம் 
உறக்கத்துடன்.

இங்கே உறங்கும் கண்ணன் அன்னையின் கவனிப்பில் 
அயர்ந்து உறங்குகிறான்.

அப்பா வந்து எழுப்பும் முன்னால்
அவன் உறக்கம் சுகப்படும்.


3 comments:

வெங்கட் நாகராஜ் said...

எண்ண ஓட்டம் சிறப்பு. கௌதமன் ஜி தளத்திலும் படித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

தூக்கம் = நல்லதொரு உடற் பயிற்சி...

Geetha Sambasivam said...

எனக்கெல்லாம் உள்ளத்தில் நல்ல உள்ளம் என்பதால் உறங்காது! :))))) ஜாதிக்காய்ப் பவுடர், கசகசாப் பவுடர்னு முயற்சி செய்து பார்த்தாச்சு. அவை தீர்ந்து போவது தான் மிச்சம். தூக்கம் அன்னிக்குத் தான் சுத்தமா வராது.