ஞாபக மறதி
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அல்லாதன மனதில் தங்குவது அதிகம். நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன்........... பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள் என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள் வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான் வேண்டும்:) பிறகு அவர்களின் திருமணங்கள். இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது. பிறகுதான் நினைவுகள் தடம் மாறுகின்றன. தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான் மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துக...
Comments
காய்களில் கத்திரிக்காய் எந்த வகையில் செய்தாலும் சுவைதான். அலுக்கவே அலுக்காது. முழுதாக போடும் போது மட்டும் எனக்கு பயம் உள்ளே புழு. பூச்சி என இருந்து விட்டால்.. ஹா ஹா ஹா. அதுதான் ஜாக்கிரதையாக பார்த்துதான் சமைக்க விரும்புவேன். மற்றபடி அதன் சுவைகளின் விதத்தை நான், மற்றும் எங்கள் வீட்டில் அனைவருமே விரும்புவோம். இவரும் நன்றாக செய்து காண்பிக்கிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
செய்து பார்த்தேன் நன்றாக வந்ததுமா.
வேர்க்கடலையும் எள்ளும் நல்ல காம்பினேஷன்.
மிக நன்றி மா.
நீங்கள் நம் எல்லோருடைய பயங்களையும் சொல்கிறீர்கள்.
உண்மையான கவலை அதுதான்.
முழுசாகப் போட்டு செய்ய வேண்டிய
அவசியமில்லை.
திருத்தியே போடலாம்.
நல்ல மணமாக இருந்தது.