பாடல்கள் வெகு அருமை. அடிமை பெண் பட பாடல்களை கேட்டுள்ளேன். படம் இன்னமும் பார்க்கவில்லை. இதில் கடவுளைக்கண்டேன் எனற படத்தின் பாடலும் இப்போதுதான் கேட்டு ரசித்தேன். படம் வந்ததே தெரியாது. சந்திரபாபு அவர்களின் பாடல் வரிகள் எப்போதுமே அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். அவரே அவர் சம்பந்தபட்ட பாடல்களை எழுதி பாடுவார் என கேள்வி பட்டுள்ளேன். நல்ல நடிகர்.நகைச்சுவை அவரிடம் இயல்பாக வரும். நடிகர் தங்கவேலுவும் அப்படித்தான். அலட்டிக் கொள்ளாமல் நடிப்பார். பழைய பாட்டுக்களை கேட்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அல்லாதன மனதில் தங்குவது அதிகம். நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன்........... பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள் என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள் வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான் வேண்டும்:) பிறகு அவர்களின் திருமணங்கள். இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது. பிறகுதான் நினைவுகள் தடம் மாறுகின்றன. தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான் மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துக...
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,மனைநலம் காத்து நூறாண்டு காலம் செழித்திருக்க வேண்டும்.
Comments
பாடல்கள் வெகு அருமை. அடிமை பெண் பட பாடல்களை கேட்டுள்ளேன். படம் இன்னமும் பார்க்கவில்லை. இதில் கடவுளைக்கண்டேன் எனற படத்தின் பாடலும் இப்போதுதான் கேட்டு ரசித்தேன். படம் வந்ததே தெரியாது. சந்திரபாபு அவர்களின் பாடல் வரிகள் எப்போதுமே அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். அவரே அவர் சம்பந்தபட்ட பாடல்களை எழுதி
பாடுவார் என கேள்வி பட்டுள்ளேன். நல்ல நடிகர்.நகைச்சுவை அவரிடம் இயல்பாக வரும். நடிகர் தங்கவேலுவும் அப்படித்தான். அலட்டிக் கொள்ளாமல் நடிப்பார். பழைய பாட்டுக்களை கேட்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என்னவோ பழைய பாடல்கள்தான் வெகுவாக
ஈர்க்கின்றன. நன்றி மா வந்து கேட்டதற்கு.
ஏதோ மார்கழி மாதத்துக்காக கோலம்.
பாடல்களை ரசித்ததற்கு மிக நன்றி. கடவுளைக்
கண்டேன் 1963இல் வந்தது என்று நினைக்கிறேன்.
நானும் பார்த்ததில்லை. அடிமைப் பெண்ணும் பார்த்ததில்லை.
வானொலியில் கேட்டு ரசித்தவை இவை எல்லாம்.
இங்கு நடக்கும் அரசியல் நிகழ்வுகள் மனதை அசர வைக்கின்றன.
இசையில் மனத்தைப் புகுத்தி மாற்றிக் கொள்கிறேன்.
உங்களுக்கும் பிடித்தது நன்மையே.