Blog Archive

Tuesday, January 14, 2020

ஸ்ரீ ஆண்டாளின் திருவடிகள் சரணம்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி பாடிக்கொடுத்த பாசுரங்களை பதிந்தது அவள் அருளால்.

வரும் போகியும்,பொங்கலும்,கணுப்பொங்கலும் நன்றே நிறைவேற 
அவளே அருள்வாள்.

திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள்வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார்
பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்பூதூர்
மாமுனிக்குப் பின்னானாள் வாழியே/
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கேற்கண்ணி உகந்துரைத்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி  வளனாடு வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.//

ஸ்ரீ ரங்கமன்னார் கோதை திருவடிகளே சரணம்.
ஸ்ரீராமானுஜர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் திருவடிகளே சரணம்.
சகல ஆச்சார்யர்கள் திருவடிகளுக்கும் சரணம்
சொல்லி இம்மார்கழி இனிதே நிறைவேற வைத்த
கோதை நாச்சியாருக்குப் பல்லாண்டு சொல்கிறேன்.
சரணம் சரணம் சரணம்.

Image result for sRI ANDAL RANGAMANNAR

5 comments:

Geetha Sambasivam said...

ஆழ்வார்கள் அனைவருக்கும், ஆசாரியர்கள் அனைவருக்கும், பக்தர்கள் அனைவருக்கும் நமஸ்காரங்கள்.

கோமதி அரசு said...

ஸ்ரீ ஆண்டாளின் திருவடிகள் சரணம்

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு.

நன்றிம்மா...

வல்லிசிம்ஹன் said...

வாழி நலம் வாழ்க அடியார்கள்.

மாதேவி said...

ஆண்டாள் அடிகளே சரணம்.