Wednesday, October 31, 2018

என் பயணம் ஆரம்பித்த நாள்

Vallisimhan
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 

அக்டோபர் 31
++++++++++++++++++
ஐப்பசி மாதம் மருதாணி வாசம், மழை, நீண்ட புரட்டாசியின் வெய்யிலிலிருந்து விடுதலை.
இதமான சீதோஷ்ண மாறுதல்.
மதுரை மிக அழகாகத் தோன்றும் நாட்கள்,இந்த மழையும் ,குளிரும் சேர்ந்த நாட்கள். இந்த ஊரில் அதை வசந்தம் எனக்கூடச் சொல்லி இருப்பார்கள்.

புலரும் காலைப் பொழுதிலிருந்து , இருள் சூழும் மாலை வரை
அலுக்காமல் ,சலிக்காமல் நேரம் சென்ற வருடம் 1965.
அப்பா பைண்ட் செய்த தொடர்கள், சென்னையிலிருந்த தோழிகளுக்குக்
 கடிதங்கள். வாரம் ஒரு முறை கோவில்கள் தரிசனம். 
தீபாவளி பக்கம் வர  புரட்டாசியிலியே வாங்கிவிட்ட புடவைகள். பசுமலை தையற்காரர் தைத்த அழகு ரவிக்கை.

எல்லாம் ரசனையுடன் நடந்த இந்த மாதத்திலேயே 
வாழ்வின் முக்கிய கட்டமும் நிறைவேறியது.

மனதுக்கு இனிய மணாளனை முதன் முதல் சந்தித்த நாள் இன்று 31 அக்டோபர் ,ஞாயிற்றுக்கிழமை.

இனிமை மட்டுமே தெரிந்த நாட்கள்.
அவற்றின் சுவாரஸ்யம் மாறாமல் நடக்கத் தெரிந்த கணவர்.
47 வருடங்கள் நீடித்த சந்தோஷம். பிள்ளைகளிடம் அவர் வைத்திருந்த பாசம்

எல்லாமே அழகான கனவாய் மனதில் தங்கி இருக்கின்றன.
இன்னும் இருக்கும்.


No comments:

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...