Thursday, July 27, 2017

சீதை, ராதை,கோதை, மீரா இன்னும்.....

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
முதல் இருவரும்   புராண நாயகிகள் முறையே ராமனுடனும் , கண்ணனுடனும்   கூடும்  அனுபவங்களை படித்திருக்கிறோம்.
நம் ஆண்டாளோ, நினைவிலேயே திருமணம் செய்து ,கனவிலேயே  காளை யைக் கண்டு,  அரங்கனை அடைந்தாள்.
மீராவும் அதே போல  உருகி உருகிக் கண்ணன் தாள் அடைந்தாள்.
என்ன ஒரு மன உறுதி.
எத்தனை எதிர்ப்புகளையும், கேலிகளையும், பழிப்புகளையும் சந்தித்தார்களோ.
இப்பொழுதோ, இந்த நாளில்  திரு ஆடிப்பூர மங்கைக்கு நிகர் வேறு யார்.
எந்த விதை இப்படி ஒரு ஆல  விருட்சமாக
அவர்கள் உள்  புதைந்தது.

என்ன ஒரு வலிமையான எண்ணம் இருந்தால், மானிடர்க்கென்று வாழ்க்கைப் படேன்  என்று சொன்ன வண்ணம் செய்தாள்  கோதை. ஆச்சர்யமான அதிசயமான பிறவி.
திருவிடந்தை கோவில் சென்ற பொது மனதில்  உலாவியவள் கோதை தான்.

பூமா தேவி திருமால் புகழ்  பாட வில்லிபுத்தூர் வந்தாள்  என்று முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹ சுவாமிகள் சொல்வார்..
அதைக் கண்கூடாக மட்டப்  பள்ளி   க்ஷேத் ரம்   சென்ற பொது பார்த்தோம்.  அந்த ஊர் மக்களுக்குத் தமிழ் தெரியாது. ஆனால் கோதையைத் தெரியும்.
தினம் அவளைத்  தோளில்  ஏற்றி க்  கொண்டு பாவைப் பாடல்களை பா டிக் கொண்டாடிய அழகே அழகு.
அவர்கள் பக்தி கோதையின் பக்திக்கு குறைந்ததில்லை.
கோதை  தன்  பாசுரங்களில் கறவைகள் பின் சென்று கானம் சென்று உண்ட மகிமையை அவர்கள்  நேரிலேயே  செய்து காண்பித்தார்கள்.
அம்மா கோதா , உன்னை எட்டு வயது வரை த் தரிசனம்  செய்யும்
பேறு
 கிடைத்தது. உன் மண்ணில் விளையாடும் புண்ணியம் கிடைத்தது. உன் தேரில் ஏறிக்  குதித்துப் புரண்டோம். உன் கண்ணன் மேய்த்த பசுக்களின் பாலின் சுவையில் வளர்ந்தோம்.

அனைத்திற்கும் பூர்வ ஜென்ம புண்ணியமே காரணம். நீக்கமற நிறைந்திருக்கும் பூங்கொத்தாய் எந்நாளும் எங்கள் இதயத்தில் இருந்து  வழி நடத்து.  ஆண்டாள் ரெங்கமன்னார் திருவடிகள் சரணம். பெரியாழ்வார், கருடாழ்வார் திருவடிகள் சரணம்.

Wednesday, July 26, 2017

ஆடிக் கொருதரம் அமாவாசைக்கு ஒரு தரம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வலைப்பூவில் எழுத்துக்களை பதிவதால்
மனா பாரம் குறைக்கிறதென்று நினைத்தேன். பல நல்ல இதயங்களை நோகடிக்கிறேன் என்பதை தாமதமாகப் புரிந்து கொள்கிறேன்.
துன்பம் என்பது யாருக்கு இல்லை.
மரணத்தை விடக் கொடிய   வியாதிகளில் துன்புறுபவர்களை , எத்தனையோ நபர்களை சென்னையில் தங்கி இருக்கும் போது பார்த்தேன்.

முக்கியமாக முதியவர்கள்.
முன்னெல்லாம் இல்லாத அளவுக்கு ,வயது கூடிக் கொண்டே போகிறது.
எண்பதுகளில் 90 களில்  இருந்த அளவு கட்டுக்கோப்பான குடும்பங்கள் இல்லை.
எங்கள் தெருவிலேயே  என்னைவிட வயதான பெண்மணிகள்  ஓரளவு சமாளித்துக் கொள்ளுகிறார்கள்.
ஆண்கள் அந்த அளவிற்கு மனவலிமை கொண்டது   போலத்  தோன்றவில்லை.
என் கணவரின் சிறுவயதுத் தோழர், பிரமாதமாகக் கிரிக்கெட் விளையாடுபவர்,  அறுபது வருடங்கள்  தாம்பத்தியத்திற்குப் பிறகு மனைவியை இழந்த அதிர்ச்சியில்    மனம் பிறழ்ந்திருக்கிறார்.

வழக்கமாக  நடக்கும் விஷயம் இல்லை இது. எல்லாக் குடும்பத்தைப் போல இவரது மகன் மக்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில்.
தந்தைக்கு வேண்டும் அளவு வசதி செய்து விட்டு
தம் தம் ஊருக்குத் திரும்பிவிட்டனர்.  மனைவி யைப் பிரிந்த வருத்தத்திலு ம்  அக்கம் பக்க  விஷயங்களில் மிக அக்கறை காட்டி, அன்றாட வேலைகளைக் கவனித்து வந்தவர்க்குத் திடீர்  என்று மன அழுத்த நோய் வந்து விட்டது.

நான் முன்பெல்லாம் அவரும் மனைவியும் அழகாக  அனுமன் கோவிலுக்குப் போவதையும், மாலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடை  பயிற்சி  மேற்கொள்ளுவதையும் இவரிடம் சொல்லி காட்டுவேன்.
அட எவன் மா நடப்பான் அங்க. எல்லாம் உட்கார்ந்து அரட்டை அடிக்கிறார்கள் என்று சிரிப்பார் சிங்கம்.

இந்த தடவை அவரைக் காணாததால் பால் கொண்டு வருபவரிடம் விசாரித்தேன்  அய்யா எல்லாத்தையும் மறந்து போயிடறாருமா. மகன் வந்து வைத்தியம் செய்தார். இப்ப தூக்க மாத்திரை கொடுக்கிறாங்க.
காலையில் எழுந்து  முகம் கழுவி பலகாரம் அருந்திவிட்டு, மாத்திரை எடுத்துக் கொண்டு தூங்கப் போய்விடுகிறார்.
         இன்னும்  கொஞ்ச  நாட்களில்  நகருக்கு வெளியே இருக்கிற   முதியோர் இல்லத்துக்கு  அழைத்துப் போகிறார்கள். என்று வருத்தத்துடன் சொன்னார்.
          வயதானாலும் மிகச் சுறு சுறுப்பாக இயங்குபவர்களையும் பார்த்தேன்.  நடந்து சென்று வேலை முடித்தவர்கள் இப்பொழுது வண்டியில் சென்று அதே உத்ஸாகத்துடன்   வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் .
                                யாருக்கு  என்ன என்று யாரோ எழுதி வைத்த விதிப்படி நடக்கிறது.  மனமகிழ்ச்சி இருந்தால்  வாழ்வும் மகிழ்ச்சிதான்.  எல்லா வசதியும் இருந்தும்  துணை இழந்தவர்கள் முடங்குகிறார்கள்.  துணை மறைந்தாலும் ஆட்டோவிலாவது எரிக் கபாலி தரிசனம் செய்யும் வாசுமதி அம்மாவும் இருக்கிறார்கள் 😊

Tuesday, July 11, 2017

சென்னை நகரிடம் விடை பெறுகிறோம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இந்த நான்கு  வருடங்களில்  நான்கைந்து தடவை வந்து சென்றேன்.
இந்த நான்கு  வருடங்களில்  நான்கைந்து தடவை வந்து சென்றேன்.
அப்போதெல்லாம்  அனுபவிக்காத  தண்ணீர் கஷ்டம் இந்தத் தடவை முறுக்கி
விட்டுவிட்டது இயல்பான வாழ்க்கையை.

 கிணறு தூர் வாரியும் மஞ்சள் வண்ணத்தில் தான் 
தண்ணீர். சென்னை  மெட்ரோ  உதவியில் சில நாட்கள் ஓடின.
இந்தத்த் தொந்தரவு பொறுக்க முடியாமல் குடும்பத்தில் சில பேற் பிறந்தகலம் சென்றனர். குழந்தைகள் மட்டும் என்னுடன் தங்கினர்.
அவர்களுக்கு எல்லாமே  உத்சாகம்தான்.
குழந்தைகள்  கபடில்லாத அன்பை மனம் கொண்ட அளவு அனுபவித்தேன்.
 பழைய படங்களைச் சேமித்தேன்.

நல்ல நிகழ்வுகள் அல்லாத நிகழ்வுகள் எல்லாம் மனதைப் பக்குவப் படுத்தும் என்றே 
நினைக்கிறேன்.

ஒரு சில நண்பர்களைத் தவிர மற்றவர்களிடம் அளவளாவ முடியவில்லை.
கொடுப்பினை இருந்தால் மீண்டும் சந்திக்கலாம்.
இறைவன்  அனைவரையும் காக்கட்டும்.

Wednesday, June 28, 2017

இனிதாக நிறைவேறிய மகிழ் நிகழ்வு.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டுமகடந்த ஞாயிறு பேரனின் உபநயன பிரும்மோபதேசம்  நிறைவாக நடந்தேறியது.
என் பங்களிப்பு  என்பது  வருபவர்களை  உபசரித்தல் ஒன்றே.
பாலிகை சேர்த்து  கும்மி  அடித்துக் கொண்டாடியதைப் பார்க்க  கூட  நேரம் இல்லை.

பெண்ணின் புகுந்த வீட்டார்,  எங்க  சம்பந்தி  இல்லாத  குறை தெரியாமல்  ,நல்ல ஏற்பாடுகள் செயதிருந்தார்கள். நமக்கு  வேலை  சீர் செய்வது ஒன்றே.  அதை எங்கள் புதல்வரகள் சிறப்பாக  நிறைவேற்றினார்கள்.
ஒரே ஒரு குறை  இணைய நண்பர்களை அழைத்துச் சிறப்பிக்காத து.

இன்னம் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா  போகும்!அனைவரும் இனிதாக வாழவேண்டும்.

Saturday, June 17, 2017

நிகழ்வுகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நினைவுப்பசுமை.  இந்த மாதக் கடைசியில்  நல்ல நிகழ்வு  பேரனின்  உபநயனம்.  பூர்ததியானதும் அமெரிக்கப் பயணம்.
மீண்டும் பார்க்கலாம்.

Friday, May 26, 2017

ஒரு குழந்தையும் ஒரு தாத்தாவின் மறைவும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

ஏன்பா நீதானே  ஒயிட் ஹேர் இருந்தா உம்மாச்சி அழைச்சுண்டு போவார்னு சொன்ன.
ஆமாம் கண்ணா.
தாத்தா தலைல க்ரே ஹேர் தானே இருக்கு.
உம்மாச்சி சரியாய் பார்க்காம அழைச்சுண்டு போயிடப் போரார்ப்பா.
தாத்தாவைப் பொட்டி யிலிருந்து
எடுத்துடுங்கோ.

Wednesday, May 24, 2017

N.S. Raghavan... நல்ல தம்பி 1950 June 10 May 22 nd 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 அருமை அன்பு,மாண்பு, பக்தி. எல்லாமாக ஒரு உருவம் என் சகோதரன்.
25 வருடங்கள் நோம்பு போல் , வாழ்க்கை, இருதய சிகிச்சைக்குப் பிறகு. தந்தைக்கு அடுத்தபடி இன்னும் அதிகமாக என்ன என்னிடம் பிரியம் கொண்டவன்.
முரளி, தலை முடி  வெட்டிக்கோடா.
முரளி சட்டை இல்லாமல் இருக்காதே  டா. எனக்குப் பார்க்க முடியல.
சரி இதோ போறேன்  ரெவ் னு சொன்னதைச் செய்துவிடுவான்.
அவனுக்கு வாய்த்த மனைவியோ தங்கம்.
 கணவனுக்காக எத்தனையோ விரதம் .கோவில்கள்.
மகன் தந்தை சொல் மீறாத பிள்ளை. அப்பா இந்தக் கோவில்னு சொல்ல வேண்டியதுதான். அடுத்தவாரம் பயணம் கிளம்பி விடுவார்கள். குருவாயூர், திருமலை, ஸ்ரீரங்கம், கும்பகோணம் என்று வண்டி பறக்கும்.
 60 வயது வரைத் தன அலுவலகத் தலைமைப் பொருப்பைப் பார்த்துக் கொண்டவன் , சேர்த்த பணம் போதும் என்று பக்தி மார்க்கத்தில் இறங்கிவிட்டான் .
பேத்தியின் காவலன்.மாணவன் என்று பல அவதாரம்.
ஒரு நொடி உட்காராமல் ஏதாவது செய்து கொண்டிருப்பான்.
இதோ இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை ஒரு வினாடியில் இறைவன் அழைத்துக் கொண்டான்.
நான் இங்கிருக்கிறேன்.
என் உயிராக நேசிப்பவர்களைக் கண்ணாடிப் பெட்டியில் பார்த்து அலுத்துவிட்டது.
நான் இந்தியா  செல்லவில்லை. அதற்குத்தக்க சரியான
விமான டிக்கட்டும்  கிடைக்கவில்லை.
அடுத்த நாள் போவதற்குள் காரியங்கள் முடிந்திருக்கும்.
மௌனம்  காத்துக்   கண்ணீர்வடிக்க மட்டுமே தெம்பு.

இனி வரும் சிரம நாட்களை எதிர்கொள்ள இறைவன் துணை இருப்பான்,. இதுவும் அவன் சொல்லிக் கொடுத்து
தான்.  நன்றி முரளி.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...