Saturday, March 05, 2016

Singam 76....March

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
எட்டமுடியாத தூரத்தில் இருப்பதாக எண்ணவில்லை.
எனக்கும் வயதாகி வருகிறது . இன்னும் கொஞ்ச நாட்கள்
சென்றால் நானும் வந்துவிடுவேன் .
 அதுவரை எவருக்கும் தொந்தரவு இல்லாமல் எல்லாக்குழந்தைகளும்
பேரன் பேத்திகளும் உற்றார் சுற்றம் நட்புகள் எல்லோரும் நலமாக இருக்க ப பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Friday, March 04, 2016

எண்ணங்கள் இணைந்தால் இருத்தல் சுகம்.

எண்ணங்கள்  இணைந்தால் 
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 APRIL  1972 மலம்புழா வாஆஆ. குழந்தைகளுக்கு  ஹோம்வொர்க் இருக்கு என்று ஆரம்பித்தாள். நான் அவள் கைகளைப் பிடித்து இன்னிக்கு ஒரு நாள் அந்தக் கவலையவிட்டு விட்டு சுந்தரத்தைக் கவனி.
கல்யாணமாகிப் பதினைந்து வருஷத்துக்குள் இதென்ன பெரிய  மாற்றம்.
அவர் மனம் மாறாமல் நீ நிதானமாக இரு என்றேன்.
சரிஎன்றதும் ஏற்பாடுகள் விரைந்து நடந்தன.
சிங்கம் தன் நண்பரிடமிருந்து   ஷெவி  இம்பாலா ஒன்றை எடுத்துவந்தார். கப்பல் போல அந்த வண்டியைப் பார்த்ததும் குழந்தைகள்  சந்தோஷக் கூச்சலிட்டன.

சந்திரன் ,ராஜி,குப்புசாமி அனைவரும் தாங்கள் பின்னால் வருவதாகச் சொல்ல எங்கள் ஒன்பது பேரை ஏற்றிக்கொண்டு படு ஜோராய் ,பாட்டுகள் ஒலிக்க வண்டி கிளம்பியது. கொஞ்ச தூரம் போனதும்   ஏம்பா சிம்மு, நாம் ஒரு க்ரேட் CRATE  பியர் வாங்கிக் கொண்டு போலாமே. இட் ஷுட் பி நைஸ் என்றார் சுந்தரம்.


நம்ம வீட்டு ராக்கம்மா வண்டியை விட்டு இறங்கிடுவாங்கப்பா,அதெல்லாம் நாம் தனியா வச்சுக்கலாம் என்றதும் உமா முகம் தெளிந்தது.
முன்சீட்டில் நாங்கள் இருவரும் சிரித்துக் கொண்டோம்.
அப்போது பிரபலமாக இருந்த  என்னடி ராக்கம்மா,மற்றும்குழந்தைகளுக்குப் பிடித்த பாடல்களை
 வண்டியில் இருந்த ரெகார்டரில் போட  கைகளைக் கொட்டிப் பாடியபடி பயணம் தொடர்ந்தது,
  உமா,சுந்தரத்துடன் ஏதோ பாடியபடி  வந்தாள்.
ஹேனா போலோ போலோ பாடல் வந்ததும் ஒரே கூச்சல்.சுந்தரமும் சிரிப்பார் என்பதை அப்போதுதான் பார்த்தேன். ஏதோ  பாரம் இறங்கியது போல இருந்தது.
   பின்னால் அவர்கள் வருகிறார்களா என்று பார்த்தபோது அந்த நீல வண்டியைக் காணோம்.
              சிறிது நேரத்தில் மலம்புழா அணைக்கட்டும் வந்தது. உடனே இறங்கிய
குழந்தைகள்  அங்கே தோட்டத்தில்  விளையாட ஆரம்பித்தார்கள்.
 நாங்கள் நால்வரும் சந்திரன் குடும்பத்தை  எதிர்பார்த்து வண்டியிலியே இருந்தோம்.
அவர்கள் வந்ததும் அவர்ஜகள் தாமததுக்கான காரணம் தெரிந்தது.
சந்திரனும் குப்புசாமியும் ஆளுக்கொரு  க்ரேட் பியர் பாட்டிகளுடன்  இறங்கினார்கள்.
ஒபவ்வொன்றிலும் ஆறு பாட்டில்கள்  இருந்தன. இதுவரை  சந்தோஷமாக இருந்த உமாவின் முகம் கறுத்தது.
ராஜியும் சந்திரனும் தரை விரிப்புகளை விரித்து ,நொறுக்குத் தீனிகளையும்,மற்ற மதுவகைகளையும் வைத்து இவரையும் சுந்தரத்தையும் அழைக்க., டேய் நீ நாளைக்கு  தலைச்சேரி போகணும்னு சொன்னயே.  டிலே இல்லாமல் நாம் திரும்ப வேண்டும் என்று அவனைத்  தடுத்தார் சிங்கம்.
கம் ஆன். திஸ் வோண்ட் டு எனி ஹார்ம்.மிஸஸ் சுந்தரம்  நீங்கள் யெஸ் சொல்லுங்கள் என்றார் சந்திரன்,
ராஜியும் சேர்ந்து கொண்டாள். பம்பாயில் வார இறுதி மிக சந்தோஷமாகக் கழிவது இந்த  ட்ரிங்க்ஸ் மூலமாகத்தான் என்றாள்.
  யூ பீப்பிள் காரி ஆன் ,நாங்கள் குழந்தைகளைப் பார்க்கப் போகிறோம் என்று நடையைக் கட்டினார் இவர். நானும் ராஜியும் தொடர்ந்தோம்.
நாளைக்கு மேனேஜிங்க் டிரக்டர் வருகிறார்ப்பா.
  இந்த வாய்வாசனையோடு அவர் அருகே போக முடியாது  என்று இவரும்
விளக்கினார்.
            பேசியபடியே படகுத்துறைக்கு வந்துவிட்டோம். வரிசையில் நின்று
படகில் ஏறியதும்  கும்மாளம் அதிகரைக்க ரோ ரோ ரோ  அ போட்,மற்றும் பல பாடல்கள் குழந்தைகள் ரசித்துப் பாட நாங்களும் சேர்ந்து கொண்டோம். இப்ப மட்டும் நிலா இருந்தால் ஆஹா இன்ப நிலாவினிலே   பாடலாம் என்ற  உமாவைப் பார்த்து சுந்தரம் சிரித்தார், வளர்ந்துட்டியே தவிர ,குழந்தைதான் நீ என்று அவர் சொல்ல சிணுங்கிக் கொண்டாள்.
 ஒரு பெரிய ரவுண்ட் முடிந்து கரையை நெருங்கிய போது இருள் கவியத்தொடங்கியது.
    மற்றவர்கள் இருந்த இடத்தை  நெருங்கிய போது அவர்களின் சத்தமான சிரிப்புச் சத்தம் கேட்டது.  என்னப்பா ,  எல்லாம் ஓவரா என்றபடி  இவரும் சுந்தரமும் அவர்களை நெருங்க. வி கான் கோ ஒன் மோர் ரவுண்ட். ராஜி ,அந்த பெரிசை எடுத்துக் கொண்டுவா என்றதும் அவளும் விரைந்தாள்,
சுந்தரம் முகம் அருவருப்பில்  சுருங்குவதை நான் பார்த்தேன்.
இப்பவே மணி ஏழுப்பா. போய்ச்  சேர்ந்து பசங்களுக்குச் சாப்பாடு வேற கொடுக்கணும் . நாம் போகலாம் என்றார்.
சந்திரன், கடிந்து கொள்ளாத குறையாக,இங்க இருக்கிற கோயம்பத்தூருக்குக் கவலைப் படுகிறாயே.
   நான் ரொம்ப ஸ்டெடியா ஓட்டுவேன். என்றார்.
எங்கள் பக்கத்தில் வந்த ராஜி ,என்னைப் பார்த்து ஒரு கொண்டை போட்டு
 சுந்தரத்தை உமா பக்கம் இழுத்துவிட்டாயே என்று சிரித்தாள்.
எனக்குப் பிடிக்கவில்லை. அவள் ஏற்கனவே  அழகிதானே. இது வேறும் மேல் அலங்காரம். மனசு சரியாக இருந்தால் தம்பதிகளுக்குள்,சலிப்பு வரக் காரணமே இல்லையே என்றேன்.
     மெட்ராஸ்  வாசிகளின் மனப்போக்கே வினோதம் என்று அந்த இடத்தைவிட்டுக் கணவனை நோக்கி   நகர்ந்தாள்.
சுந்தரமும் இவரும்   கிளம்பினார்கள்,.
  சட்டென்று எதோ தோன்ற  ஹேய் சந்திரா இந்த நிலமையில் வண்டி ஓட்டவேண்டாம். நான் உன் வேனை எடுக்கிறேன் வா,. சுந்தரம் இம்பாலாவைக் கொண்டுவரட்டும் என்று கேட்டார்.  நைட் இஸ் ஸ்டில் யங்க் ,ஐ டோண்ட் நோ ஒய்  யு ஆர் மேகிங்க் சச் ஃபஸ் என்றவன் தள்ளாடியபடியே எழுந்தான். இப்பொழுது ராஜியும் குழந்தைகளும் பயப்படுவது கண்கூடாகத் தெரிந்தது.
   ராஜி ஒரு பக்கம் சந்திரனைப் பிடிக்க,சுந்தரம் குப்புசாமியைப் பிடித்துக் கொண்டு அவர்கள் வண்டியில் ஏற உதவினார்கள்.
உமா ,கோமதிக்கு எழுதௌகிறேன் பாருங்கள் குப்புசாமி. இதுதான் நீங்கள் வேலைபார்க்கும் அழகா. பாவம் எங்க ஊர்ப் பெண்கள் ஒண்ணும் தெரியாதவர்கள் என்று நினைக்காதீர்கள்.
    பிழைக்கத் தெரிந்தவர்கள் தான் நாங்களும் என்று கொட்டித் தீர்த்தாள்.
கோமதி,குப்புசாமியின் மனைவி. இவளுக்கு அவளைத் தெரியும் என்பதே அதிசயம்.
சைடில் சுந்தரத்துக்கும் வார்னிங்க் கொடுக்கிறாளோ  என்ற சந்தேகத்தில் அவள் முகத்தைப் பார்த்தேன்.  சின்னச் சிரிப்போடு குழந்தைகளை அழைத்தாள்.
 எல்லோரும் கிளம்பிக் கோவை வந்து சேர்ந்தோம்.
சிங்கம்  ராஜி சந்திரன் குப்புசாமியை அவரவர் இடத்தில் இறக்கிவிட்டு வந்து சேரும் வரை எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.
  நான் தான் ஓட்டுகிறேன் என்ற தைரியத்தில் அவன் மிச்சமிருந்ததையும் குடித்துவிட்டான்மா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உமா வரும் சப்தம் கேட்டரது.
கையில் ஒரு பெரிய தட்டில் பத்து பதினைந்து தோசைகள் வார்த்து எடுத்து வந்திருந்தாள்.
        இந்த ஞாயிறு  இப்படியாச்சு. அடுத்த வாரம் எப்படியோ என்றாள் என்னைப் பார்த்து.

இல்லை  மிஸஸ் சுந்தரம். அவனைப் பற்றிக் கவலை வேண்டாம்.
அந்தப் புடவை கூட அவனக வாங்கவில்லை.
சந்திரன் தான் தன் மனைவிக்காக  ஒரு புடவையை எடுத்துகொண்டிருக்கிறான். பில் இவன் தலயில்.
இனி  மனம் விட்டுப் பேசுங்கள். அவன் மேலிருக்கும் நம்பிக்கையை விடவேண்டாம்.
  அதற்குப் பின் எல்லாம் சுமுகமானது. இரண்டு விஷயங்கள் காரணம்.
ஒன்று சந்திரன் குடும்பம் மீண்டும் பம்பாய் போனது.
இரண்டு  சுந்தரத்துக்கு மஸ்கட்டில் வேலை கிடைத்தது.
   பிறகென்ன ராம் நகர் ஆஞ்சனேயர் வடை மாலைகள் சூட்டிக் கொண்டார்.
சுபம்,.


Wednesday, March 02, 2016

Independance

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்




ஒருவர்தான் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வைத்தவர்.
அவருக்கு சுதந்திரம் பிடிக்கும். அதனால் என் சுதந்திரத்தை மதித்தார்.

மற்றவர்கள் பாதுகாப்பு என்ற  அன்பின்
வட்டத்தில்   என்னை வைத்துவிட்டார்கள்.

நான் அவர்கள் இஷ்டம் போல்
இருக்க விட்ட நாட்கள்
நினைவுக்கு வருகிறது. தடை விதித்ததில்லை.

அவர்கள் பொறுப்புகளைச் சுமந்து
பாதிப்புகளையும் தாங்கிக் கொண்டார்கள்.
எங்களுக்கும் ஆதரவு தந்தார்கள்.

இப்பவும் சுதந்திரம் வேண்டும்.
தங்கக் கூடு பாதுகாப்பு தான்.
என் மாமரமும் மகிழமரமும்,
பாரிஜாதப் பூக்களும் ,செம்பருத்தியும் இல்லையே .

ஒரு நன்றி இல்லாத   அம்மாவின் புலம்பல்.

Tuesday, March 01, 2016

தலை தப்பியது....3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஒரு வழியாக உமாவைத் தயார் செய்து. கொண்டையலங்காரத்துடன் அவளைப் பார்த்தால் எனக்கே பிரமிப்பாக இருந்தது. இத்தனை அழகையும்  எப்படி சின்னாளப்பட்டிப் புடவையில்

அடக்கி   வாசிக்கிறாய் என்று கேட்டேன்.
சு போடி. என்று அலுத்துக் கொண்டாள்.
கொஞ்சம் சிரி.முகத்தை  இனிமையா வச்சுக்கோ.
 ராஜியோடு கலகலப்பா பேசு. சுந்தரம் பக்கத்தை விட்டு
நகராதே. இன்னும் இது போல 24 வயதுப் பெரிய மனுஷி
32  வயது அக்காவுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அன்றைக்கு இன்னோரு விருந்தாளியும் வந்தார். அவரும் ஒரு மார்க்கெடிங்க்  மேனஜர். பெயர் குப்புசாமி. மஹீந்த்ரா அண்ட் மஹீந்த்ராவிலிருந்து வந்திருந்தார்.
எல்லோரும் அவரவர்  வண்டியில் கிளம்பினோம்.
இவர் அப்போ ஒரு புல்லட் வண்டி வைத்திருந்தார்.
குழந்தைகள் மூவரும் + நாங்கள் ...ஐந்து பேரும் அதில் போன நாட்கள் பசுமை நிறைந்தவை.
சுந்தரம் வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்ய அலுங்காமல் நலுங்காம்ல் தேவதை போல உமா ஏறிக் கொண்டாள். பெண் அம்மா முன்னாலும் ,பிள்ளை அப்பாவுக்கு முன்னால் நின்று கொண்டும்   கௌரிஷங்கர்   ஹோட்டலுக்கு விரைந்தோம்.
எங்கள்   பின்னால் பெரிய வேனில் சந்திரன் குடும்பமும் குப்புசாமியும் வந்தார்கள்.
      சிங்கம் முதலில் போய்  14  நபர்கள் உட்கார இடம் சொல்லிவிட்டு வந்தார்..

 சின்னவனை நான் மடியில் வைத்துக் கொள்ள எனகள் இருவருக்கு நடுவில் பெண்ணும்,பையனும் அமர்ந்தனர்.
எதிர்புறம் சுந்தரம் உமா அமர இருபக்கமும் அவர்கள் பெண்ணும் பையனும் உட்கார் மற்ற இடங்கள் சந்திரன் குப்புசாமி ராஜி அவள் குழந்தைகள் அனைவரும் உட்கார
மெனு பார்த்து ஆர்டர் செய்யத் தொடங்கினோம். எல்லோரையும் கவர்ந்தது உமாவின் கச்சிதமான அழகும் கம்பீரமும் தான்.
சந்திரன்,முதலில் காம்ப்ளிமெண்ட் கொடுத்தார். குப்புசாமி பின்பாட்டு பாட சுந்தரம்
கண்டு கொள்ளவில்லை.
சிங்கம் டேய் ,என்னடா கண்ணைத் திறந்து பாரேண்டா. என் பொண்டாட்டி எத்தனை கஷ்டப் பட்டு
இந்த  ஹேர்டூ  செய்து இருக்கிறாள்.
என்று சொல்லவும்
தாங்க் யூ ரேவதி என்று சாப்பிட ஆரம்பித்தார்.
 எல்லோரும் அப்போது வெளிவந்திருந்த ஆராதனா,மெக்கனாஸ் கோல்ட்
படங்கள் பற்றிப் பேச ஆரம்பிததும் கொஞ்சம் கலகலப்பு களை கூடியது.
 போகிறவர் வருகிறவர்கள் அபனைவரும் உமாவை இரண்டு தடவை
பார்த்துவிட்டுப் போனார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது.
   சாப்பாடும் முடிவுக்கு வந்தது.
பீடாவெல்லாம் போட்டுக் கொண்டதும் நான் சின்னவனைச் சுத்தம் செய்ய
 வெளியே வந்தேன். பின்னால் யாரோ வருவதைப் பார்த்துத் திரும்பினேன். ராஜி
விரைவாக வந்தாள். ரேவதி நீயா இத்தனை அழகாக் கொண்டை போட்டுவிட்டாய் என்று கேட்டதும், நானும் ஃபெமினாவில்  வந்த படங்களைப் பார்த்துப் போட்டுப் பழகினேன். சுலபம் தானே என்றேன்.
சுந்தரத்துக்கு உமா பட்டிக்காடாக  இருப்பதாக  நினைப்பு என்று சிரித்தாள்.
இல்லையே அடுத்த தடவை நீங்கள் அவளுடைய  நல்ல குணங்களை எடுத்து சொல்லுங்கள். பெண்களுக்குப் பெண்கள்  தானே  சப்போர்ட் என்றேன்.
    சொன்னால் போச்சு. நாமும் கணவர்களை  சகித்து வழிக்குக் கொண்டு வரணும் என்றாள்..
 எனக்கு அது ஏற்கவில்லை. போலாமா என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு
நகர  மற்ற எல்லோரும் வெளியே  வருவதைப் பார்த்தோம்.
  உமாஎன்னிடம் வரவும், இவரும் வந்தார்,ரேவ்  நாம் எல்லோரும்  மலம்புழா போய் வரலாமா
என்று  கேட்டபடி  வந்தார்.
Add caption

Sunday, February 28, 2016

தலை அலங்காரம் புறப்பட்டதே...2


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
           அன்றிரவு கொஞ்சம் சமாதானத்தோடு முடிந்தது. புடவை சமாசாரத்தைக் காலையில் கேட்கலாம். இப்ப அவரை சமாதானத்தோடு தூங்க வை என்று அனுப்பினேன்.

சிங்கத்தோடு குறும்பு,   ...நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம். இன்னிக்கு ராத்திரிக்கு.... என்றபடி   குளிக்கப் போனார்.

ஓகே. அடுத்த நாள் நானும் சின்னவனும் மாடியை  நோக்கிப் படையெடுத்தோம்.
அப்போதுதான் பூஜையை முடித்து வெளியே வந்த உமா என்னைப் பார்த்துக் கையிலிருந்த கல்கண்டு,தேன் எல்லாம் கொடுத்தாள்.
விஷயத்தைச் சொன்னேன். சரி உன்னிஷ்டம். இது என் வழியில் நடக்கவில்லை என்றால் உன் வழியில் போகலாம் என்றாள். மூவரும் பஜார் அதாவது ஆர்.எஸ் புரம் சென்று.
  மேக் அப் கிட்,மூன்று ஃப்ரென்ச் ரோல் பன்ஸ், எல்லாம் வாங்கி வந்தோம்.
மை க்யா கரூன் ராம் முஜெ புட்டா மில்கயா பாடிக்கொண்டே அவளுக்கு
அந்தக் கொண்டை போட்டுப் பழகினேன்.
உண்மையிலியே அழகாகத் தெரிந்தாள்.

   ஏய் இது விழாமல்  இருக்குமா என்று சந்தேகப் பட்டாள். ஒண்ணும் ஆகாது 12 ஹேர்பின்
 போட்டு  அழுத்திவைக்கப் போகிறேன். நீ காஷுவலா இரு என்றபடி என் வேலையைப் பார்க்கப் போனென்.
ஞாயிறும் வந்தது.  குழந்தைகளுக்கு  வெளியே போகும் உத்சாகம்.  மாடிக்குப் போனேன். சுந்தரம் எழுந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கையசைத்துவிட்டு உமாவைத் தேடினேன்.

அவளும் தெளிவோடு குழந்தைகளைத் தயார் செய்து கொண்டிருந்தாள்.
ரெடியா, நீலப் புடவை, நீல மாலை,நீலக் காதணி, நீல வளையல்கள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டியா என்றபடி கண்களை ஓட்டினேன்.
சுரத்திலாமல் உம் என்றாள்.

சியர் அப் மா. அர்ச்சனா,பிரகாஷ் ரெண்டு பேரும் கீழே  போங்கப்பா என்று அனுப்பிவிட்டு சுந்தரத்தை எட்டிப் பார்த்தேன்.
 நீங்களும் குளீச்சுட்டு வாங்கோ.  10 மணிக்குக் கிளம்பி விடலாம் என்றேன். மனசில்லாமல் எழுந்தூ  போனார். ஞாயிற்றுக்கிழமை நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தால் முடியாது போல இருக்கே    என்ற முணுமுணுப்பு கேட்டது. அண்ணா இன்னிக்கு என் பிறந்த நாள் நீங்க சந்தோஷமா வரணும் என்றேன்.
Brasso  print saree.

Saturday, February 27, 2016

வந்ததே தலையலங்காரம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
1970s  hairstyle
ஆனந்தம்    1972   கோவையில் குடும்பம் இருந்த நேரம் . மாடியும் கீழுமாக  இருந்த வீட்டில் நாங்கள் இருந்தோம். மூன்று குழந்தைகளுக்கும் விளையாடும் இடம் நிறைய இருந்தது.

தண்ணீர் பிரச்சினையும் இருந்தது. சிறுவாணித்தண்ணீர்  இரு நாட்களுக்கு ஒரு முறை  அடிநிலைத் தொட்டியில் பத்து   லி ட்டர் வரை வரும். மற்றத் தேவைகளுக்கு   வண்டியில்
 ஒரு    பெரிய தரம் நிறைய  இருந்தால் 5 ரூபாய்க்குக் கிடைக்கும். ஏதோ விவசாய  கிணற்றிலிருந்து கொண்டு வருவார்கள்.

 காற்றும் அன்பான  அடுத்த வீட்டுக்காரர்களுமாகப் பொழுது கழிந்தது.
அப்போது அந்தக் காலனிக்கு ப  புதிதாக வட  நாட்டிலிருந்து
 ஒரு குடும்பம் வந்தது.  தமிழ் நாட்டிலிருந்து  மும்பை சென்று
இருந்தவர்கள் வேலைமாற்றத்தில் இங்கே வந்திருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரிடம் பழக ஆசைப்பட்டாலும் எங்கள் வீட்டு  மாடியில் இருந்த  உமாவுக்கு அவர்களை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. காரணம் அவள் கணவனும் அதே கம்பெனியில் அவருக்குக் கீழே  வேலைக்கு இருந்ததுதான்.

ரேவதி   அவள் இந்த மாதிரி இருக்கிறாள். அவர்கள் குழந்தைகள்   இது போல உடை உடுத்துகிறார்கள். பெரிய வண்டி வேற வைத்திருக்கிறார்கள். இந்தப் பெருமையில் எனக்கு வேண்டியே இருக்கவில்லை.கேட்டியா., என்று புலம்புவாள்.

உன்னைப் பாதிக்கவில்லை.அமைதியா இரு என்று சொன்னாலும் கேட்கவில்லை.
இத்தனைக்கும் பூஜை,புனஸ்காரம் என்றிருப்பவள். சிக்கனமாகக் குடும்பம் நடத்துபவள். இரண்டு குழந்தைகளும் வளர்ந்தவர்கள். செக்கச்செவேல் உடம்பு. மெட்டிகள் ,கொலுசுகள் என்று அவள் படிகளில் இறங்கி வரும்போது   ஏதோ  தரிசனம் போல் இருக்கும்.

அவள் கணவர் சுந்தரம்  கொஞ்சம் நாகரீகம் பார்ப்பவர். பல ஊர்களுக்கு  டூர்
போகிறவர்..விதவிதமான பொருட்களை வாங்கி வரும்போதுப் பெருமையாகக்
காண்பிப்பாள்  உமா,.
என்னைவிட 5.6 வயது அதிகமானவள் என்றாலும் குழந்தை போலப் பழகுவாள். ஒரு நாள்  இவர்கள் வீட்டிற்கு  வந்திருந்த  புது மானேஜர்  சந்திரன்,ராஜி  குடும்பம்
 உமா செய்த கேசரி,போண்டா எல்லாம் ரசித்துச் சாப்பிட்டார்கள்.

நானும் உதவிக்குப் போயிருந்தேன். எல்லாக் குழந்தைகளும் கலகலப்பாக
விளையாட இவள் மட்டும்  அமைதியற்று இருந்தாள் .


அந்த ராஜி புது நாகரீகமாகக் கொண்டை  எல்லாம் போட்டு, அப்போது வந்திருந்த
ப்ராசோ  ஜக்கார்ட்  புடவை  அணிந்து ,காதில் புதுவிதமான  அணி எல்லாம் போட்டுக் கொண்டிருந்தாள். சுந்தரம் வேறு அவளோடு அதிகமாகப் பேசி நிலைமையைச்  சரி செய்ய  முயன்று கொண்டிருந்தார்.

அவர்கள் கிளம்பிப் போனபோது வெடித்தது  பூகம்பம்.
நான் குழந்தைகளைக் கீழே   அழைத்து வந்துவிட்டேன்.

அடுத்த நாள்   வீட்டுக்காரர்கள் வேலைக்குக் கிளம்பிப   போன பிறகு
உமா கீழே இறங்கி  வரும் சப்தம் கேட்டதும்  சின்னவனைத்
தூக்கி வைத்துக் கொண்டேன்.
 கைகளில் நீல  நிற புது ப்ராஸ்ஸோ  புடவையும் ,அதை வாங்கின பில்லும் இருந்தது.


என்ன விஷயம்  பா. என்று கேட்டதும் அழ ஆரம்பித்தவிட்டால் .

பாரு இந்த பில்லை  என்று என்னிடம் காட்டினாள். இரண்டு புடவைகளுக்கான.. 300 ரூபாய்க்கான பில் அது.  என்ன  இதுக்கு என்றதும்  அவ நேத்திக்கு கட்டிண்டு
இருந்தது   இவர்  வாங்கிய புடவை.  எனக்கும் தங்கைக்குமாக\
 இரண்டு கேட்டிருந்தேன். ஒன்று எப்படி அவ கைக்குப் போச்சு என்றுதான் எனக்கு வருத்தம்.

இதோ நான் கிளம்பிண்டே இருக்கேன்.   கரூருக்கு. அப்பா அம்மாவை அழைச்சிண்டு வரப் போறேன்.
என்றவளைப் பயத்தோடு பார்த்தேன். ஏதாவது காரணம் இருக்கும் பா .
நீ சுந்தரத்தைச் சந்தேகப் படாதே என்றேன். மனசுக்குள் அந்த மனுஷனைத் திட்டியபடி .

சரியாப் பதில் சொல்லத் தெரியாத மனுஷனோட சங்காத்தமே வேண்டாம்  பொரிந்தாள்..

அவசரப் படாதே மா.இவர் வரட்டும் என்ன விஷயம்னு கேட்கிறேன் சந்திரன் இவருக்கும் நண்பன்  தானே, இங்கயே  இன்னிக்கு சாப்பிடு.தூங்கு.சாயந்திரம் இருவரையும் வைத்துக் கொண்டு பேசலாம்.
ம்க்கும்ம் இப்போ பியர்   பழக்கம் வேற வந்திருக்கு என்றால் . எனக்கு அடிவயிற்றைக் கலக்கியது.

இது எத்தனை நாள்  ஆக நடக்கிறது. என்றேன். அவர்கள் வந்ததிலிருந்துதான்.
தினம் அங்க போய் போட்டுண்டுதான் வரார்.

கிணறு பூதம் எல்லாம் எனக்குத் தோன்றியது .இந்த சுந்தரம   ஏன்
  இப்படி மாறினார்.என்னதான் பாஸ் என்றாலும்  அவரைப் பின் பற்றி இதெல்லாம்  செய்ய வேண்டாமே  என்ற வருத்தம் மேலிட்டது. சாயந்திரமும் வந்தது.  இவர் முதலில் வந்துவிட்டார். 7 மணி அளவில் சுந்தரமும் வந்தார்.
இவர்  பெரிய குரல் கொடுத்து உள்ளே வரச் சொன்னார்.
இங்கே   வாடா எல்லாரும் இங்கதான் இருக்கோம் என்றார்..

தயங்கியவாறு உள்ளே   வந்தவரைப் பார்க்காமல் உமா  உள்ளே இருந்த  என்னிடம் வந்து காப்பி வேணுமான்னு  கேளு  என்றாள் . நானும் போய் காப்பி சாப்பிடலாமா என்று கேட்க அவர் வேண்டாம்  என்று தலை மட்டும் அசைத்தார்.
ஏற்கனவே ஆகிட்டதோ என்னவோ   நீ   ஏன்  கேட்கிறாய் என்றபடி வெளியே வந்தவளைப் பார்த்து விழித்தார் சுந்தரம்.

கண்கள் சிவந்திருந்தன.......தொடரும்.
பிகு ....... நடந்த கதையில் பெயர்களும் இடமும்   வேறு.


Monday, February 01, 2016

1966 லிருந்து 2016 வரை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 வணக்கத்துக்குரிய மாமியார்  மாமனார் 


ஜனவரி 31ஆம் தேதி புடவைகள் வாங்க நாள்.
புரசவாக்கத்துக்கும்  மணிசங்கர் புடவைக் கடைக்கும்
இரண்டு  ட்ரிப் போய் பட்டுப் புடவைகளும், ரேவதி ஸ்டோர்ஸில்
கடாவ் புடைவைகளும் வாங்கி  பெட்டிகளில் அடுக்கப்பட்டன,.

ஸ்ரீராம் நாயுடு  அழகாக  எல்லா  ஜாக்கெட்டுகளையும் தைத்துக் கொடுத்தார்.
 புது செருப்பு வாங்கியாச்சு.
வாசலில் வாழை  மரங்கள் மாமா கொண்டுவந்து கட்டிவிட்டார்.

 வைரத்தோடுகள் ,தயார் என்று தொலைபேசி வந்தது. பாரிஜாதம் போய்
 காதில்  |வலிக்க வலிக்கப்} போட்டுக் கொண்டு திரும்பி வந்தோம்.
அடுத்த நாள்  எங்களுக்கு  அங்கே சாப்பாடு.
கல்யாண அழைப்பிதழை  அங்கே கொடுத்துவிட்டு
ஏழு  நாத்தனார்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு

  அந்த வீட்டைப் பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சித்தேன்.
ஒரே சிரிப்பும் உல்லாசமும் தான்.
 இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் ஒரு   இரண்டுங்கெட்டான் நிலை.

அத்தை டில்லியிலிருந்து வந்துவிட்டார் அழகாக மருதாணி வைக்க.
கங்காதீஸ்வரர்  கோவில் கடையில் கண்ணாடி வளையல்களும்,
நான் மிக விரும்பும் குடை ஜிமிக்கிகளும்  வாங்கிக் கொண்டேன்.
இரவெல்லாம் பேச்சு பேச்சுதான்.
   மாமாக்கள் மாமிகள் அனைவருக்கும் நான் புடவை தடுக்காமல்
மேடை ஏறி இறங்கவேணுமே என்கிற கவலை.


பிப்ரவரி 3 ஆம் தேதி  பந்தக்கால்  நட்டு சத்திரத்தை அடைந்தோம்.
சாயந்திரம்  நிச்சயதார்த்தம்  விசேஷமாக நடந்தது.
 அடுத்த நாள் 4 ஆம் தேதி  காலை இரண்டுமணிக்கே நாதஸ்வரம்  மேளம் என்னை எழுப்பின.

கால்களுக்கு நலங்கு இட்டு  புனித ஸ்னானம் செய்வித்தார்கள்.
ஊஞ்சல் புடவையாக  ஸ்கார்லெட்  புடவை, மாலையுடன்
நான் தயாராகவும் மாப்பிள்ளை வீட்டார் வரவும் சரியாக இருந்தது.
 நான் காப்பி கூடக் குடிக்கவில்லை என்பதே எல்லோரும் மறந்துவிட்டனர்.

சரியாக  காலை 9 மணி10  நிமிடத்திற்கு சிங்கம் என்னை மனைவியாக்கிக்
கொண்டார்.
அதன் பிறகு  நலங்கு அது இது என்று 12 மணி வரை புகை மண்டலத்தில் இருவரும்
அல்லாடிய பிறகு .ஒருவழியாகத் திருமணம்  பூர்த்தியானது.

அருமையான  மனிதரின் மனைவி என்ற பெருமையுடன் புகுந்த வீட்டுப் பிரவேசமும்
நடந்தேறியது.  இதோ 50
வருடங்களும் ஓடிவிட்டன. அனைவருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ வணக்கம்.


கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...