Blog Archive

Tuesday, March 30, 2021

வாழும் வரை.......

வல்லிசிம்ஹன்



செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள்
ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே
விரிந்து ஏற்கிறது.

வலைப்பதிவுகளால் என்ன லாபம்
என்று ஒரு உறவினர் வெகு நாட்களுக்கு முன் கேட்டார்.

தமிழ்ல எழுதறியாமே ?? அத்தனை படித்திருக்கிறாயா?
என்று கேட்கும் போது எனக்கு சிரிப்பே வரும்.
எங்கள் திண்டுக்கல் ஆசிரியர்களைப் பற்றி 
இவர்கள் அறியவில்லையே.:(

அந்தத் தங்க ஆசிரியைகள், ஒரு நிமிடம் கூட 
வீணாக்காமல் 45 நிமிடங்களில்  நம் அறிவை எத்தனை 
விசாலப் படுத்த முடியுமோ
அவ்வாறு போதிப்பார்கள். அதை முழுவதும் மனத்தில் பதிய வைத்தால்
எந்தத் தேர்விலும் வெற்றி பெறலாம்.
எங்கள் பள்ளியில் படித்தவர்கள் சோடை போனதாகச் சரித்திரமே
கிடையாது.

தம்பிகளும் நானும் வாழ்வின் நற்பாடங்களைக் 
கற்றது அங்கேதான். அன்பான ஆசிரிய சகோதரிகள்
மதம், பண வலிமை, இல்லாமை பார்க்காது
அனைவரையும் அருமையாக நடத்தினார்கள்.
இப்போது எப்படி இருக்கிறதோ 
தெரியவில்லை. நம் திண்டுக்கல் தனபாலன் சொல்வார்.

காலங்கள் கருத்துகள் கட்டிடங்கள் மாறி இருக்கலாம்.

இள வயதில் கற்பிக்கப் பட்ட ஒழுக்கம் என்றும் 
மாறுவதில்லை.
என் வலை சகோதரிகள், கீதா சாம்பசிவம், கோமதி அரசு, 
கமலா ஹரிஹரன் ,அன்பின் காமாட்சி அம்மா

எல்லோருமே தென் தமிழகத்திலிருந்து
வந்தவர்கள்.
பல சகோதர்களையும் என் வட்டத்தில் சேர்த்திருக்கிறது
நெல்லை மாவட்டம்.மற்றும் மதுரை மாவட்டம்.
 கோடை காலம் கண்கள் வறண்டு போகின்றன.

அதனால் நிறைய கதைகள் கேட்கிறேன்.
நம் கோமதி சொல்வது போல கேட்பது 
கண்ணுக்கு ஓய்வு தரும்.

வெய்யில் காலம் கடுமையானது தான். அனைவரும் 
நிறைய நீர் அருந்த வேண்டும்.
பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
வாழ்வில் மகிழ்ச்சி கூட வேண்டும்.
அனைவரும் வாழ்க வளமுடன். இணையத்துக்கு நன்றி.

இப்படியும் ஒரு ரசமா?? நெஞ்சு சளி,இருமலுக்கு ஏற்ற மிக சுவையான தேங்காய் பா...

கடைசியாகச் சொன்ன வேண்டாததைச் சேர்க்கவேண்டாம்:)

Monday, March 29, 2021

Evergreen Suez Canal | Vaanga Pesalam | Pattimandram Raja | Bharathy Baskar

   தற்போதைய நிலைமை.

 29th March

Suez Canal Live Updates: The Ever Given Is Free, Clearing Way for Traffic to Resume

Aided by the moon and the tides, the giant container ship was wrenched from the shore on Monday afternoon, five days after blocking the vital trade route.

சில பழைய பாடல்கள்










Sunday, March 28, 2021

பங்குனி உத்திரக் கோலாஹலம்.

வல்லிசிம்ஹன்

ஸ்ரீரங்கம் தம்பதிகள் மகா தரிசனம்.


சண்பக மாலையும் மேலே பூப் பந்தலும் ரங்கா!!
உன்னையும் தாயாரையும் காணும் நாள் என்னாளோ.!!!!

ஸ்ரீரங்கம் தம்பதிகள் மகா தரிசனம்.
ஜகார்த்தா அதிபதி ஸ்ரீ ஸ்ரீனிவாசனும் தாயார் ஆனந்தவல்லியும் 
சேர்த்தி கண்டருளும் வைபவம்.


28-03-2021 பங்குனி உத்திரம்  

மட்டையடி, ப்ரணயகலஹம் மற்றும் நம்பெருமாள் பெரிய பிராட்டியார் சேர்த்தி நிகழ்வுகள் 

பங்குனி உத்திரம் பெரிய பிராட்டியாரின் திருநட்சத்திரம். திருவங்கத்தில் அந்த ஒரு நாள் மட்டுமே தாயாருக்கும் பெருமாளுக்கும் சேர்த்தி நடைபெறும். 

பெரிய பிராட்டியார் கருணையின் பிறப்பிடம். நம்மைப் போன்ற அடியார்களின் பிழைகளை போக்க புருஷாகாரம் செய்பவர். 

பங்குனி உத்திரம் அன்று நடைபெறும் நிகழ்வுகள்:

பெருமாள் 8 வீதிகள் எழுந்தருள்வார்
தாயார் சன்னதியில் மட்டையடி நடைபெறும்
பெருமாளுக்கும் தாயாருக்கும் நடைபெறும் வாக்குவாதம் – பிரணய கலஹம்
பெரிய பிராட்டியார் சேர்த்தி
ஸ்வாமி இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்த கத்யத்ரய பாராயணம்
பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏக சிம்மாசனத்தில் திருமஞ்சனம்
பெருமாள் தேரில் எழுந்தருளல் கோரதம்
அதிகாலை 4 மணி பெருமாள் ராஜகோபுரத்தை தாண்டியவுடன், பெரியமேளம் (உடல்) நிறுத்தப்பட்டது. சப்தமின்றி நேரே வெளி ஆண்டாள் சன்னதியை அடைகிறார். மாலை மாற்றிக் கொண்டு சப்தமில்லாமல் மூலஸ்தானத்திற்கு எழுந்தருளி விடுகிறார்.

ஏன்? உறையூர் சேர்த்தி முடிந்து திரும்பி வருவதனால்!!!

ஏழாம் திருநாள் எப்போதும் போல் இரவு தாயார் சன்னதிக்குச் சென்று திருமஞ்சனம் கண்டருளுகிறார். எட்டாம் திருநாள் அன்று கொள்ளிடத்தில் இறங்கி பின்னர் உள்ளே செல்கிறார்.

மேலே சொன்ன விஷயங்களுக்கும் பங்குனி உத்திரத்திற்கு என்ன சம்பந்தம்? சம்பந்தம் உள்ளது, தொடர்ந்து படிக்கவும்.

பங்குனி உத்திரத்தன்று காலை பெருமாள் 8 வீதிகளும் வலம்வருதல்
காலை 6 மணிக்கு பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். 

முன்னே அரையர் தாளம் இசைக்க, சத்தம் இல்லாமல் மெதுவாக 8 வீதிகளும் பெருமாள் எழுந்தருளுகிறார்.

மட்டையடி வைபவம்
அதுவரை நிதானமாக வந்து கொண்டிருந்த பெருமாள், சக்கரத்தாழ்வார் சன்னதியை தாண்டியவுடன் திடீர் பரபரப்பு! பெருமானின் முகத்தில் கூடுதல் பொலிவு!!

மின்னல் வேகத்தில் தாயார் சன்னதியை அடைகிறார். பெரியமேளம் (உடல்) ஒலிக்கத் தொடங்குகிறது. விண்ணைப் பிளக்கும் வேகத்தில் தாயார் சன்னதிக்குள் நுழைய முற்படுகிறார். பெருமாள் வருவது கண்டு தாயார் சன்னதி கதவுகள் மூடப்படுகின்றன. உறையூர் சென்று வந்த பெருமாளை, தாயார் அனுமதிக்க மறுப்பதால் கதவுகள் மூடப்படுகின்றன.

கதவுகள் மூடப்படுவதை கண்ட பெருமாள் மெல்ல பின்னே செல்கிறார். தாயார் சன்னதி கதவுகள் மீண்டும் திறக்க இரண்டாவது முறையாக பெருமாள் ஓட்டத்தில் வேகமாக உள்ளே நுழைய முற்படுகிறார். இந்த முறையும் கதவுகள் மூடப்பட்டு பூவும், தயிரும் வீசப்படுகின்றன. மீண்டும் பெருமாள் பின்னே மெதுவாக சென்று விடுகிறார். (மட்டையடி வாங்கிய சிலர்)

மூன்றாவது முறையாக கதவுகள் திறக்கப்பட்டு பெருமாள் முன்னே ஓட, கதவுகள் மீண்டும் மூடப்படுகிறது. பெருமாள் மெதுவாக பின்னே சென்று நின்று விடுகிறார்!!

தாயார் தன் மீது கோபத்தில் இருப்பதால், இனி பேச்சுவார்த்தை நடத்துவது உசிதம் என்று பெருமாள் நினைக்க! மணியக்காரர் சமயம் சொல்லி அரையருடன் நம்மாழ்வார் சமாதானம் செய்ய வருகிறார்.

பிரணய கலஹம் – பெருமாளுக்கும் தாயாருக்கும் நடக்கும் வாக்குவாதம்
பெருமாள் சார்பாக அரையரும், தாயார் சார்பாக பண்டாரியும் விண்ணப்பம் செய்வார்கள். இந்த விண்ணப்பங்கள் தம்பிரான் படி வியாக்கியானத்தை கொண்டு அரையர்கள் சேவிப்பார்கள்.

இந்த விண்ணப்பங்களின் சுருக்கத்தை மட்டும் நாம் இங்கே பார்ப்போம். முழுவதுமாக அறிந்து கொள்ள கோயிலொழுகு புத்தகத்தை படிக்கவும்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்-1:
தாம் தாயாரை காண வந்தால் தன்னை உள்ளே வரவேற்று, சிம்மாசனத்தில் அமர்த்தி உபசாரங்கள் செய்வீர். இன்று தன்னை பார்க்காமல், கதவுகளை மூடி, பூக்களை எறிந்து இப்படி அவமானம் செய்வது ஏன்?

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-1:
பெருமாள் எப்போதும்போல் எழுந்தருளியிருப்பது மெய்யானால்:

திருக்கண்கள் சிவந்து இருப்பானேன்?
கஸ்தூரி திலகம் கலைந்து இருப்பானேன்?
திருவதரம் வெளுத்து இருப்பானேன்?
திருமேனியில் குங்குமப் பொடி இருப்பானேன்?
தாம் நேற்று எழுந்தருளிய இடத்திற்கே செல்லலாம் என நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -2
திருக்கண்கள் சிவந்து இருப்பானேன்?

தாம் “செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்” ஆதலால் இரவு முழுவதும் தூக்கமின்றி ஜெகத்ரக்ஷகம் செய்ததால் கண்கள் சிவந்து இருக்கிறது!

கஸ்தூரி திலகம் கலைந்து இருப்பானேன்?

சூரியனின் கிரணங்கள் காரணமாக கஸ்தூரி திலகம் கலைந்து இருக்கு!

திருவதரம் வெளுத்து இருப்பானேன்?

அசுரர்களை அழிக்க பாஞ்சஜன்யதை பயன்படுத்தியதால், ஆதரம் வெளுத்து இருக்கு!

திருமேனியில் குங்குமப் பொடி இருப்பானேன்?

தேவதைகள் புஷ்பங்கள் தூவியதால் குங்குமம் திருமேனியில் இருக்கு!

தான் வேட்டையாடி வரும்போது திருமங்கையாழ்வார் வந்து தன் பொருட்களை களவாடினார். அவரை திருத்தி, பின்னர் ஆபரணங்களை கருவூலத்தில் சேர்த்தோம். அப்போது பார்த்தால் கணையாழி தொலைந்து இருக்கு! ஆகையாலே தான் கொடுக்கும் புஷ்பத்தை ஏற்றுக் கொண்டு தன்னை உள்ளே அழைக்கச் சொல்லி பெருமான் அருளிச்செய்த பிரகாரம்.

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-2:
கணையாழி மோதிரம் காணாமல் போனது மெய்யல்ல. தாங்கள் அதிகாலையில் கிளம்பி உறையூர் சென்று அங்கு நாச்சியாருடன் சேர்த்தி கண்டருளிய தடயங்கள் இவை. இந்த பொய்களை ஏற்க முடியாததால், நேற்று எழுந்தருளிய இடத்திற்கே இன்றும் செல்லலாம் என்று நாச்சியார் அருளிச்செய்த பரிகாரம்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -3
நாம் உறையூரை கண்ணாலும் கண்டதில்லை காதாலும் கேட்டதில்லை!
யாரோ சிலர் சொன்னதை நம்பி தன்னை அவமானம் செய்கிறீர். ஆகவே தான் கொடுக்கும் புஷ்பத்தை ஏற்று உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்.

இதை அறிந்து தான் ஆண்டாள் பாடினால் போலும்

“ஏலாப் பொய்கள் உறைப்பான இங்கே போதக் கண்டீரே”

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-3:
ஏழாம் திருநாள் அன்று இங்கு எழுந்தருளிய போது நாங்கள் செய்த உபசாரங்களை சரியாக ஏற்றுக் கொள்ளாமல், தாங்கள் மிகவும் அசதியாக இருந்தீர். நாங்கள் பதறிப்போய் தங்கள் திருமேனிக்கு என்ன ஆயிற்று என்று தங்கள் அந்தரங்க பரிஜனங்களிடம் விசாரித்ததில் தாங்கள் உறையூர் சென்று வந்த விஷயம் அறிந்தோம்! ஆகையாலே தாங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -4:
இந்த சந்தேகங்கள் தீர தான் சில பிரமாணங்கள் செய்து தருகிறோம்.

கடலில் முழுகுகிறோம்
அக்னிப்பிரவேசம் செய்கிறோம்
பாம்பு குடத்தில் கை இடுகிறோம்
இப்படிப்பட்ட பிரமாணங்களை ஏற்று உள்ளே அழைக்க சொல்லி பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்.

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-4:
கடலில் முழுகுகிறோம் என்று சொல்ல வந்தீரே!!

பிரளய காலத்தில் சகலத்தையும் வயிற்றில் வைத்து ஒரு ஆலிலையில் துயின்ற உமக்கு சமுத்திரத்திலே முழுகுவது அருமையா?

அக்னி பிரவேசம் செய்கிறேன் என்று சொல்ல வந்தீரே!!

பிரம்மாவின் வேள்வியில் ஆவிர்பவித்த உமக்கு அக்னி சுடுமோ?

பாம்புக் குளத்தில் கட்டுகிறோம் என்று சொல்ல வந்தீரே!!

திருவனந்த் ஆழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருக்கிற உமக்கு பாம்பு குடத்தில் கைவிட்டால், பாம்பு கடிக்குமா?

இப்படிபட்ட பிரமாணங்களை ஏற்கும் இடத்திற்கு செல்லவும் என்று நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்.

பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -5:
நாம் சொல்லும் பிரமாணங்களை பரிகாசம் செய்து, சற்றும் இறக்கம் வராமல் கோபத்தில் – “கண்கள் சிவந்து இருக்கு!” “திருமுகம் கருத்து இருக்கு!” இப்படி இருந்தால் நமக்கு என்ன கதி இருக்கிறது?

அழகிய மணவாளன் தாயார் சன்னதி வாசலில் தள்ளுப்பட்டு கொண்டிருக்கிறார் என்ற அவமானம் தங்களுக்கே!! எனவே தன்னை அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்.

தாயார் அருளிச்செய்த பிரகாரம்-5:
தாம் ஆண்டுக்கு ஒருமுறை இப்படி வழிமாறி சென்று இங்கு மீண்டும் வந்து பிரமாணங்கள் செய்வதை பொறுக்க மாட்டோம். நம்மாழ்வார் வந்து மங்களமாக சொன்னதால் பொறுத்தோம்! பொறுத்தோம்!! பொறுத்தோம்!!!
பெருமாளை உள்ளே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம். 

பெருமாளின் மாலை, சந்தனம், சால்வை ஆகியவை தாயாருக்கு கொடுக்கப்படும். தாயாரிடம் அனைவருக்கும், பெருமாளிடம் பண்டாரிக்கும் விண்ணப்பம் செய்ததற்காக மரியாதை வழங்கப்படும்.

முதல் ஏகாந்தம்: பெருமாள் பல்லக்கில் தாயாரை பார்த்தபடி நேராக எழுந்தருள்வார். ஏகாந்தத்தில் நாயனம் சற்று நேரம் வாசிக்கப்பட்டு பின்னர் முதல் ஏகாந்த தளிகைகள் சமர்ப்பிக்கப்படும்.

பெருமாளும் தாயாரும் சேர்த்தியில் நமக்கு சேவை சாதிப்பார்கள்

இரவு சின்ன பெருமாள் கொள்ளிடத்திற்கு சென்று தீர்த்தவாரி கண்டு, பின்னர் தாயார் பெருமாளுடன் சேர்த்து எழுந்தருளுவார்.

ஸ்வாமி இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்த கத்யத்ரய கோஷ்டி
ஸ்வாமி இராமானுஜர் இதே பங்குனி உத்திர நாளில் சேர்த்தியில் சரணாகதி அனுஷ்டித்தார். கத்யத்ரயம் சொல்லி இருவரிடம் சரணாகதிஅடைந்தார். இதற்காக கத்ய த்ரயம் பாராயணம் செய்யப்படும். இதன் பின்னர் இரண்டாவது ஏகாந்தம் நடைபெறும்

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏக சிம்மாசனத்தில் நடைபெறும் திருமஞ்சனம்
திருமஞ்சன நேரத்தில் வசந்தனுக்கு அருளப்பாடு ஆகும். அதன் பின்னர் 18 முறை பெருமாளுக்கும், தாயாருக்கும் ஈரவாடை (வஸ்திரம்) மாற்றி திருமஞ்சனம் நடைபெறும். உடையவர் திருக்கோஷ்டியூருக்கு ரகசியங்களை அறிய 18 முறை நடந்ததை எடுத்துக் காட்டுவதற்காக, இந்த திருமணத்தில் 18 முறை ஈரவாடை மாற்றப்படுகிறது.

இதன் பின்னர் மூன்றாவது ஏகாந்தம் முடிந்து தாயார் உள்ளே செல்ல பெருமாள் பிரிய மனமில்லாமல், தாயார் சன்னதி வாசலில் சற்று நேரம் நின்று பின்னர் கோரதTHதிற்க்கு எழுந்தருளுவார்.

 இந்தப் பதிவிற்கு முழுக்காரணம்
என் தோழி பி எஸ் சந்த்ரா.
அன்புடன் அனுப்பி வைத்தவளுக்கு மிக நன்றி. எனக்கு இந்தக்
கோயில் பரிபாஷை எல்லாம் தெரியாது. காணொளி கண்டிருக்கிறேன்.
நன்றி அன்பு சந்திரா.



Thursday, March 25, 2021

அன்பு,பாசம் தபால் அலுவலகம்



வல்லிசிம்ஹன்
அனைவரும் ஆரோக்கியமாக இணைந்திருப்போம்.

திண்டுக்கல்


இங்கே....

  ஆழ்வார்பேட்டை
இங்கு ஆரம்பித்த எழுத்துகள் அரிச்சுவடியிலிருந்து இன்று வலைப் பதிவு வரை தொடரும் எண்ணங்கள்.
அறியும் செய்திகள் ,தொடரும் நட்புகள்
எல்லாவற்றுக்கும் அடிப்படையான நம் தமிழ்.

1963,64,65,66  இந்த வருடங்கள் தபால் துறைக்கு என்னால் வருமானங்கள்
அதிகரித்தன என்று நான் பெருமையாகச் சொல்லிக்
கொள்வேன்.
1963இல் சென்னை வந்து பள்ளியில் சேர நினைத்து மீண்டும்
 திண்டுக்கல்லுக்கு வந்த போது
என் தோழிகளிடம் வாங்கிக் கொண்ட செல்லக் கோபங்கள்
கொஞ்ச நஞ்சம் இல்லை.
அந்த ஒரு வருடத்தை முடித்து சென்னை திரும்பி
கல்லூரியில் படித்த அந்த ஒரு வருடம்
தொடர்ந்து தொடர்பில் இருக்க 
உதவியது கடிதங்களே.

நட்பில் இருக்கும் போது எப்படி காலையிலிருந்து
இரவு வரை கணமும் பிரியாது
பேசிக்கொண்டிருந்தோமோ,
அந்தத் தோழமையைப் பிரிவது மிகக் கடினம்.

வாழ்க்கையின் அடுத்த கட்டம் நம்மை எல்லாவிதத்திலும்
பழக்கி விடுகிறது இரு கோடுகள் தத்துவம் போல
மகிழவைக்கும் நிகழ்வுகள், புதுத் தோழமைகள்
புதிய உறவுகள் வந்தாலும், அந்தப் பதினாறு வயதுvarai கூடவே வந்த பிம்பங்கள் அவ்வளவு
எளிதாக நம்மை விட்டு நகர்வதில்லை.


இப்பொழுது ஒரே ஒரு தோழி வாட்ஸாப்பில் 
தொடர்பில் இருக்கிறாள்.
பழையபடி மூச்சு விடாமல் பேச நேரம் இல்லை. 
எல்லோருமே மாறி விடுகிறோமோ.??

ஆனால் பெற்றோர் மாறுவதில்லை . எப்பொழுதும்
நம்முடன் யார் வடிவத்திலாவது
நிரூபித்துக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.



Tuesday, March 23, 2021

கடிதங்கள்.1

குடும்பம் ஆரம்பித்த பொழுது

எங்கள் வீட்டின் வீட்டுக்காரம்மா லக்ஷ்மி.என் அன்புத் தோழி.
நலன் விசாரித்து எழுதிய கடிதம். 1066
என் பள்ளித்தோழி ஆறுமுகத்தாய்,
திண்டுக்கலிலிருந்து இருந்து எழுதிய
உயிர்க் கடிதம். வருடம் 1965

பாட்டி எழுதின கடிதம்.1967
 பாட்டியின் பக்கத்து வீட்டு பகவதி மாமியும், ராமகிருஷ்ண மாமாவும்
நான் மதுரை வந்த பிறகு எனக்கு எழுதிய 
கடிதம்.1965
அப்பாவுக்கு உடல் நலம் இல்லாத போது
தாமதமாக அம்மா எழுதிய கடிதம். 
''நீ கவலைப் படுவாயே என்று சொல்ல வில்லை'':(       1969 year.
கொண்டு போய் விட அம்மா, மீண்டும் கொண்டு வந்துவிட பாட்டி.
அந்தக் காலம்1966
  அம்மாவின் அழகான கையெழுத்து.



வல்லிசிம்ஹன்