Blog Archive
Tuesday, May 11, 2021
Sunday, May 09, 2021
அம்மா.
வல்லிசிம்ஹன்
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள்
நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம்.
கீழே இருக்கும் பாடல் 1950களின் கடைசியில் திருமங்கலத்தில்
ஒலி பெருக்கிகளில்
கேட்ட நினைவு.
பள்ளி விட்டு வரும் வழியில் இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு,
வீட்டுக்கு வந்து அம்மாவிடம் அழுத நினைவு.
''வெறும் சினிமாப் பாட்டு தானே , ஏன் அழறே''
என்று முதுகில் தட்டித் தேற்றிய அம்மாவை நினைத்துக் கொள்கிறேன்.
எதற்கெடுத்தாலும்
அம்மா,அப்பாவிடம் ஓடும் சுபாவம்
என்னை விட்டுப்போகப் பல வருடங்கள் ஆயின.
நம் சிரமங்களை நாமே சமாளிக்க வேண்டும் என்ற திடத்தையும்
கற்றுக் கொடுத்தவள் அவளே.
அதைத் தன் அம்மாவிடமிருந்து அவள் கற்றிருக்க வேண்டும்.
இப்போது அதே திடத்தை என் மகளிடமும் காண்கிறேன்.
நமக்கு வல்லமை தருவது அந்த அன்னை சக்தி.
தாய்மைக்கே உண்டான இரக்கம்,கருணை, மன்னிக்கும் குணம்,
ஈகை,அரவணைப்பு, உண்மை எல்லாம்
வழி வழியாக நம்மை அடைய நாம் பொறுமையுடன்
இருக்க வேண்டும்.
இருப்போம். துன்பம் தாண்டி வருவோம்.
''இன்பமே வேண்டி நிற்போம்..
யாதும் அவள் தருவார். நம்பினார் கெடுவதில்லை''
பராசக்தி அன்னையின் அருள் நம்மைக் காக்கட்டும்.
அன்னையின் ஆணைப் படப் பாடலை
இசையுடன் பதிய மனம் வரவில்லை.
நான் கேட்கும் போதே கரைந்துவிடுவேன்.
இன்று நம்மைக் கரைய வைக்கும் துன்பங்கள் விலகப்
பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ செய்தாள்... ஆஆஆஅ....
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை ... மனிதரில்லை ...
மன்ணில் மனிதரில்லை....
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே........ஏ .....ஏ......ஏ.....
ஆஆஆஆஅ......
துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே..........நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை ... மனிதரில்லை ...
மன்ணில் மனிதரில்லை......
நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்
ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே.......
நேர்மையாய் நாம் வாழ செய்திடுவாள்
ஆஆஆஆஆஆஆ.....
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை ... மனிதரில்லை ...
மண்ணில் மனிதரில்லை....
Saturday, May 08, 2021
Friday, May 07, 2021
மரகதமணி சார் அன்று.
பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் மரகதமணி.
நான் தான் இதையறியாமல் இத்தனை
நாட்கள் ரசித்திருக்கிறேன்.
எஸ்பிபி சாரின் குரலில் எந்தப் பாடலும் ஒளிவிடும்.
பாலச்சந்தர் படங்களுக்கு
ஸ்பெஷல் இசை அமைந்தது.
ரசிக்கலாம்.
Thursday, May 06, 2021
Wednesday, May 05, 2021
Tuesday, May 04, 2021
Monday, May 03, 2021
என்றும் சுஜாதா சார்.
வல்லிசிம்ஹன்
இன்னும் நினைவில் இருக்கிறது.
அவரை சந்தித்தது.
ஜெமினி ஃப்ளை ஓவர் கீழே ஒரு சாலையில்
''அம்பலம்'' அலுவலகம்.
சில வருடங்கள் வேலை செய்த இடத்திலிருந்து ஒரு கிலோ
மீட்டர் தொலைவில் இருந்தது.
என்ன தைரியத்தில் அவரைக் காணச் சென்றேன் என்று
இன்னும் புரியவில்லை.
வெளியே காத்திருந்த இருவரில் பதிப்பகத்தார் ஒருவர் என்று நினைவு.
சாரின் உதவியாளர் கிட்டே
ஒரு நிமிடம் அவரைச் சந்திக்க வேண்டும்
என்று கேட்க உள்ளே போகலாம் என்று அவர் சொல்ல
நான் தயக்கத்துடன் சென்றேன். சாதாரண மனிதராக
ஒரு நீல வண்ண முழுக்கை சட்டையில்
சிறு புன்னகையோடு அவரைப் பார்த்து
ஹலோ சார், வணக்கம்னு சொல்லி விட்டு
''அம்பலம் மின்னிதழ் அரட்டை நன்றாகச் செல்கிறது.நேரத்தை
நீட்டித்தால் எங்களுக்கெல்லாம் சந்தோஷம்'
என்று சொல்லி வெளியே வந்துவிட்டேன்.
அவ்வளவுதான் தைரியம்:)
அதற்கப்புறம் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்ததெல்லாம்
ஒரு சொப்பனம் போல இருக்கிறது.
இன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்திருக்கலாம் சார் நீங்கள்.
ஜெயகாந்தனின் ஒரே interview
திரு ஜெயகாந்தன் அவர்களின் பேச்சை முதன் முறை
கேட்கிறேன்.
மதிப்புஇன்னும் உயர்கிறது.
Sunday, May 02, 2021
நட்புகள் புத்தகங்கள். ,மற்றும் வெங்காய போண்டா.
வல்லிசிம்ஹன்
கொண்டு வந்த ,வாங்கின புத்தகங்களை எல்லாம்
பத்து தடவையாகப் பாராயணம்
செய்தாகி விட்டது.
ஜானகிராமனும்,அகிலனும்,சுஜாதாவும், ஐயா ராச நாராயணனும்,
பிவிஆரும்,ஜெயகாந்தனும்,லக்ஷ்மியும்,காலச்சக்கிர நரசிம்மாவும்
என் கைகளையும் கண்களையும்
கண்டு அலுத்துப் போய்
புத்தக அலமாரிக்குப் பக்கம் நான் வந்தாலே சுருங்கிக் கொள்கிறார்களோ
என்று தோன்றி விட்டது.:)))))))))
இங்கே வந்த பிறகு மகளின் தோழிகள்
அனைவரும் என் தோழிகள் ஆகிவிட்டார்கள்.
அதில் ஒருவர் திருமதி லதா ராஜேந்திரன்.
வாழ்க வளமுடன். அவர் இங்கிருக்கும் நூலகத்தில்
நல்ல வேலையில் இருக்கிறார்.
நல்ல புத்தக அறிவு உண்டு.
என்னை சில நாட்கள் முன்னால் ''மாமி,பொன்னியின் செல்வன்
வந்திருக்கிறது .உங்களுக்குக் கொண்டு வந்து தரட்டுமா
என்றதும் தலைகால் புரியவில்லை.
தொற்று காரணமாக லைப்ரரி போவதையும் அங்கிருந்து
புத்தகங்கள் எடுப்பதையும் நிறுத்தி
15 மாதங்கள் ஆகிறது.
அப்பவும் ஆங்கில புத்தகங்கள் தான்
எங்கள் டிஸ்ட்ரிக்ட் லைப்ரரியில் கிடைக்கும்.
அன்பு லதா வேலை செய்யும் இடத்தில்
தமிழ்ப் புத்தகங்கள் இருப்பதாகச் சொன்ன நேரம்
நாங்கள் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுவிட்டோம்.
அஞ்சாமல் புத்தகங்களைப் படிக்கலாமே...
என்று நானே பாடிக் கொண்டேன்:)ஒரே ஒரு சந்தேகம் .சிறிய எழுத்தாக இருந்தால் படிக்க முடியாது!!!அதனால் ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பச் சொன்னேன்.
பொன்னியின் செல்வன் சின்ன எழுத்து:(
வரிசையாக ஆசிரியர்களை நிற்க வைத்துப்
பெயர்களைப் படித்தார்.
அதில் தேறியது 6 புத்தகங்கள்.
சுகிசிவம்,
கல்கியின் பார்த்திபன் கனவு,
பட்டுக்கோட்டை பிரபாகரின் சில புத்தகங்கள்,
எஸ்.ராவின் இடக்கை.
தொலைபேசியில் சொல்லி முடித்த பத்தாவது நிமிடம்,
அவர் வண்டி வாசலில்,
புத்தகங்களை வாயில்படியில் வைத்துவிட்டு
சென்றுவிட்டார்.
24 மணி நேரம் காத்திருந்து,உள்ளே கொண்டுவந்து
நன்றாகத் துடைத்துவிட்டு பார்க்கும் போது மனம் நிறைய
ஆனந்தம்.
இதோ நாலு புத்தகங்களை முடித்தாகிவிட்டது.
ஒன்று பிடிக்கவில்லை. பார்த்திபன் கனவு கனஜோராகப்
போய்க் கொண்டிருக்கிறது.
அன்பு லதாவிற்கு மனம் நிறை நன்றி.
புத்தகங்கள் படிக்கத் துணைக்கு ஏதாவது கொறிக்க வேண்டாமா?
கோதுமை மாவு+அரிசிமாவு+தயிர் கலந்து போண்டா.
வெங்காயம் கலக்காமல் இருந்தால் நல்ல
உருண்டையாக வந்திருக்கும். கலந்ததால் மாவு இளகி
கொஞ்சம் வடையாகி விட்டது.
உளுத்தம் பருப்பு ஊற வைத்து வடை போடும்போது
''ஹை..... போண்டாவா'' என்று பசங்க கேட்கும் நினைவு வர
சிரிக்கத் தான் தோன்றியது.
பேரன் சாப்பிட்டுவிட்டு ''பாட்டி, பஜ்ஜி வெரி நைஸ்''
என்றதும் எல்லோருமே சிரித்தோம்.
ரோஜாவை எந்தப் பெயர் வைத்து அழைத்தாலும் அது ரோஜா தான்.
அதைப் போல மாவு எத்தனை வடிவம் எடுத்தாலும்
Subscribe to:
Posts (Atom)