Blog Archive

Tuesday, February 01, 2022

மணமாலை சூடும் நேரம்



வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.











பாடல்கள் பதிவதும்,அவைகள் இங்கே 
கேட்க முடியாமல் போவதும் யோசிக்க வைக்கிறது .இருந்தும் தன் முயற்சியைக்
கைவிடாத விக்கிரமாதித்யன் நாம் இல்லையா:)

அனைவரும் நலமாக வாழ வேண்டும்.
இன்று மண நாள் காணும் சேலத்துத் தோழியும் அவள் மகளும்
இனிதே இல்லறத்தில் பெருமை பெற வேண்டும்.

13 comments:

ஸ்ரீராம். said...

இன்று திருமண நாள் காணும் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் வாழ்த்துகள். ஒன்றிரண்டு பாடல்கள் கேட்டதில்லை. மற்ற பாடல்கள் கேட்டிருக்கிறேன். நாளாம் நாளாம் திருநாளாம் பாடல் மறைந்த என் மாமாவுக்கு மிக மிக மிக மிக பிடித்த பாடல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம் ,
என்றும் நலமுடன் இருங்கள்.

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக நன்றி.
தொடர்ந்து வரும் தை நாட்கள்
வளம் பெறட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் உங்கள் மாமா பாடுவார் என்று சொல்லி இருக்கிறீர்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

மாலை சூடும் மண நாள், யாரோ யாரோடு பாடலும் கேட்டிருக்கிறேன் ஆனால் மற்ற பாடல் கேட்டதில்லை.

இன்று மண நாள் காணும் அனைவருக்கும் நம் வாழ்த்துகள்!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாப் பாடல்களும் கேட்டிருக்கிறேன். ஆனால் மாதவன் நடித்த திரைப்படல் பாடல் அதிகம் கேட்டதில்லை.

எல்லோருக்கும் பிரார்த்திப்போம்.

துளசிதரன்

Geetha Sambasivam said...

அந்த வராத வீடியோவில் இருப்பது நாளாம், நாளாம், திருநாளாம் பாடலா? மற்றவையும் தெரிந்தவையே. இன்று மணநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இன்று திருமணநாள் கொண்டாடும் உங்கள் தோழிக்கும், மற்றும் நட்புகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள். இன்றைய பாடல்கள் தொகுப்பும் நன்றாக உள்ளது. முதல் பாடலான தங்கமலை ரகசியம் பாடல் கேட்டு ரொம்ப நாளாகி விட்டது. இன்று ரசித்து கேட்டேன். கடைசி இரு பாடல்கள் வரவில்லை. ஆனாலும் மீண்டும் நீங்கள் பகிரும் போது கேட்டு விடலாம். கவலை ஒன்றுமில்லை. தளராத முயற்சிக்கு தெய்வம் என்றும் கைவிட்டதில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

பாடல்கள் எல்லாம் நல்ல தேர்வு கேட்டு மகிழ்ந்தேன்.

நாளாம் நாளம் திருநாளாம்.பிடித்த பாடல்.
காட்சியும் நன்றாக இருக்கும்.
காட்சி இல்லை இந்த காணொளியில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்.
நலமுடன் இருங்கள். இப்போது கேட்டுப் பழகிக் கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
அலை பாயுதே சினிமா, மாதவன் ஷாலினி நடிச்சது

அப்போது மிகப் பிரபலம்.
மற்றதெல்லாம் பழசு. நீங்க
இனிமேல் வல்லிம்மா ரேடியோ கேளுங்கள்:))))))

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள் அம்மா.
அப்பாடி .எல்லாப் பாட்டும் தெரிந்தவர் ஒருவர்
இருப்பது மகிழ்ச்சி!!!!
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
உங்கள் வாழ்த்துகளைச் சேர்த்து விடுகிறேன்.
நன்றி.

''ஆனாலும் மீண்டும் நீங்கள் பகிரும் போது கேட்டு விடலாம். கவலை ஒன்றுமில்லை. தளராத முயற்சிக்கு தெய்வம் என்றும் கைவிட்டதில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.''

அதேதான் முயற்சி ஒன்றே நமக்கு நலம் தரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி நா,
வாழ்க வளமுடன்.

நல்ல பாடல்கள் எப்பொழுதும்
மனதில் நிற்கும். அதுவும் ஆனந்தம் தரும்
பாடல் என்றால் மறக்கவே முடியாது.
உங்களுக்கும் பிடித்தது எனக்கு மகிழ்ச்சி.