Blog Archive

Tuesday, December 28, 2021

மறு பிறவி.







வல்லிசிம்ஹன்எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
கிட்டத்தட்ட ஒரு வாரமாக  இங்கிருக்கும் தோழமைகளுடன்
ரீ இன்கார்னேஷன் , மறு பிறவி நிகழ்ச்சிகளை அலசி வருகிறேன்.

அதிசயத்தின் மேல் ஆச்சர்யம்  நிகழ்வது போல இருக்கிறது.

எல்லோருக்கும் ஒரு மீண்டும் மீண்டும் வரும் ஒரு கனவு இருக்கிறது. சிலருக்கு 
அடையாளம் தெரியாத பயம்.

பார்த்த ஞாபகம் இல்லையோ  முகங்கள்.
அடுத்த பதிவில் இதை விவரிக்கிறேன்.
  இந்திப் படங்கள் மஹல் இலிருந்து ஆரம்பித்த
திரைப் படங்கள். மதுமதியிலும் ,மிலன், பீஸ் சால் பாத்,கர்ஸ்
என்று தொடர்ந்தது.
நம் ஊரில் பிராப்தம், நெஞ்சம் மறப்பதில்லை
இதுவரை தெரியும். பிறகு ஏதாவது படம் வந்ததாக நினைவில்லை.


உங்கள் அனைவரின் அபிப்பிராயங்களுக்காகக் காத்த்ருக்கிறேன்!!!





24 comments:

ஸ்ரீராம். said...

மஞ்சுளா நடித்த மறுபிறவி இதில் சேருமா, தெரியவில்லை.  படங்கள் இருக்கட்டும் சப்ஜெக்ட் சுவாரஸ்யமானது.  அந்த எட்டு விதிகளை யார் வகுத்தது?  யாரால் வகுக்க முடியும்?  இவை தாமே அனுமானங்களாகத்தான் இருக்க முடியும்.

ஸ்ரீராம். said...

முந்தைய பிறவியின் மிச்சம் / எச்சம் உடலில் இருக்கும் என்றால் அதைக் கண்டு பிடிப்பவர் யார்?  உறுதிப்படுத்துபவர் யார்?  ஜோஸ்யர்களோ, குறி சொல்பவர்களோ சொல்வதை எவ்வளவு தூரம் நம்மால் நம்ப, ஏற்றுக்கொள்ள முடியும்? நாடி ஜோஸ்யங்களே நம்ப முடியாதவையாய் இருக்கின்றன.

ஸ்ரீராம். said...

இது மாதிரி முன்பிறவி கதைகள், அனுபவங்கள் நிறைய படிக்கக் கிடைக்கின்றன.  எந்த அளவு உண்மையோ என்றுதான் தோன்றும்!  யோகியின் சுயசரிதை புத்தகத்தில் கூட இந்த சப்ஜெக்ட் பற்றி எழுதி இருப்பார்.

Thulasidharan V Thillaiakathu said...
This comment has been removed by a blog administrator.
Thulasidharan V Thillaiakathu said...

அம்மா சப்ஜெக்ட் வெகு சுவாரசியமான சப்ஜெக்ட்!! உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஆனால் இதில் எனக்கு நிறைய கேள்விகள் எழுகின்றது.

தப்பு செய்யக் கூடாது என்று திருத்துவது வேறு ஆனால் போன ஜென்மத்துக் கடன், மறு ஜென்மத்தில் இந்தப் பாவம் தொடரும் என்பது நிறைய யோசிக்க வைக்கிறது. தப்பு செய்யாதே என்று சொன்னால் பொதுவாக மக்கள் சைக்காலஜிப்படி அதை ஏற்பது நடப்பதில்லை என்பதால் பயம் இருந்தால்தான் தப்பு செய்யமாட்டார்கள் என்பதால் இப்படியானவை சொல்லப்பட்டதா?

வகுப்பில் கூட நீங்கள் இதை நாளை முடிக்க வேண்டும் என்று சொன்னால் யாரும் ஹோம்வொர்க்கையோ அசைன்மெண்டையோ பெரும்பாலோர் முடிக்க மாட்டார்கள். ஆனால் முடிக்கவில்லை என்றால் பனிஷ்மென்ட் அல்லது முடித்தால் மார்க்கு போடுவோம் இல்லையே ஃபெயில் என்று கூட ஒரு இணைப்பு கொடுத்தால்தான் பயத்தில் செய்வதுண்டு. அது போலவா? படிப்பது கூடப் பாருங்கள் மார்க் இல்லை என்றால் அடுத்த மேல்படிப்பு போகமுடியாது என்பதால்தான் ஆழ்ந்து படிக்காமல் மேலோட்டமாகப் படிப்பது நடக்கிறது...பாஷனோடு படிப்பது வெகு குறைவு இல்லையா? அப்படிப் படித்தால் அது வேறு இல்லையா?

சமூகச் சட்டங்கள் கூட அதனால்தான் வந்ததோ என்றும் ...பயமுறுத்தல் இல்லை என்றால் ஒழுங்கீனம் போய்விடும் என்பதாலோ என்றும் தோன்றுவதுண்டு. ஆனால் சட்டம் வந்தும் கூட தப்பு செய்தால் தண்டனை என்றுதெரிந்தும் கூட தப்பு, விதி மீறல்கள் நடக்கத்தான் செய்கின்றன இல்லையா? அடுத்த பிறவி நம்பிக்கை உடையவர்கள் கூட தவறு செய்யத்தான் செய்கிறார்கள்!!!!!!!!!

உங்கள் பதிவில் உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அம்மா...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.

நல்ல ஃபாசினேட்டிங்க் சப்ஜெக்ட்.
வருடத்துக்கு ஒரு முறையாவது ஆழ்ந்து படிப்பேன்.

அந்த எட்டு வரிகள் நம்மூர் எண்ணங்கள் தான்.
உறுதி சொல்பவரும் நம்மூர்க்காரர்.

கிட்டத்தட்ட 50 வருடங்களாக இந்த செய்தி வளர்ந்து வருகிறது.
நான் இதை நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

முந்தைய பிறவியின் எச்சம் என்று
உடல் லக்ஷணம் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.'
அவையே அங்க அடையாளங்கள்.

சிங்கத்துக்குத் தெரிந்த ஆங்கில பேராசிரியர்,
சிங்கத்தில் காலில் இருந்த வடுவொன்றைக் காண்பித்து
போர்வீரனின் வடு என்றார்.

சிங்கத்துக்கு அதில் நம்பிக்கையில்லை.:)

வல்லிசிம்ஹன் said...

யோகியின் சுயசரிதை புத்தகத்தில் கூட இந்த சப்ஜெக்ட் பற்றி எழுதி இருப்பார்.

ஓஹோ.
எங்களுக்குத் தெரிந்த ஃபேஸ் ரீடர்
ஒருவர், எனக்கு இருக்கும்

இடி மின்னல் பயத்துக்கும் என் முன் ஜன்ம மரணத்துக்கும் சம்பந்தம் இருக்கும் என்றார்.

ரெக்ரஷன் செய்தால் சரியாகிவிடும் என்றும் ஆலோசனை சொன்னார்.
நான் மறுத்துவிட்டேன்.!!!

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் கருத்தையும் வழி மொழிகிறேன் அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

என்றால் பனிஷ்மென்ட் அல்லது முடித்தால் மார்க்கு போடுவோம் இல்லையே ஃபெயில் என்று கூட ஒரு இணைப்பு கொடுத்தால்தான் பயத்தில் செய்வதுண்டு. அது போலவா? படிப்பது கூடப் பாருங்கள் மார்க் இல்லை என்றால் அடுத்த மேல்படிப்பு போகமுடியாது என்பதால்தான் ஆழ்ந்து படிக்காமல் மேலோட்டமாகப் படிப்பது நடக்கிறது...பாஷனோடு படிப்பது வெகு குறைவு இல்லையா? அப்படிப் படித்தால் அது வேறு இல்லையா? சமூகச் சட்டங்கள் கூட அதனால்தான் வந்ததோ என்றும் ...பயமுறுத்தல் இல்லை என்றால் ஒழுங்கீனம் போய்விடும் என்பதாலோ என்றும் தோன்றுவதுண்டு. ஆனால் சட்டம் வந்தும் கூட தப்பு செய்தால் தண்டனை என்றுதெரிந்தும் கூட தப்பு, விதி மீறல்கள் நடக்கத்தான் செய்கின்றன இல்லையா? அடுத்த பிறவி நம்பிக்கை உடையவர்கள் கூட தவறு செய்யத்தான் செய்கிறார்கள்!!!!!!!!"
will come back

Geetha Sambasivam said...

நல்ல சுவையான விஷயம். விவாதம்/வாதம் செய்வதற்கும் ஏற்றது. என்னையும் நம்ம ரங்க்ஸையும் முன் பிறவியிலும் கணவன், மனைவி என்று சொன்ன ஜோசியர்கள் பலர் உண்டு. :)))) ஆனால் எனக்கு இதற்குப் பின்னர் பிறவி இல்லை எனவும் பலர் சொல்லி இருக்காங்க! யாருக்குத் தெரியும்! :))) ஆனால் இந்தப் பிறவியில் உள்ள நினைவுகளையே நம்ம ரங்க்ஸ் எனக்குப் போன ஜன்மத்து ஞாபகம் எல்லாம் வருதுனு கேலி செய்வார். :)))))

Geetha Sambasivam said...

கீதா ரங்கனின் அலசலும் நன்றாக உள்ளது. நீங்கள் அடுத்துச் சொல்லப் போவதற்குக் காத்திருக்கேன். கொடுத்திருக்கும் படங்களும் பாடல்களும் அருமையாகக் கேட்டு ரசித்தவை. எனக்குத் தெரிந்து சுமார் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரசாந்த் மற்றும் மீனா நடித்து வெளிவந்த ஒரு திரைப்படம் திகில் காட்சிகளோடு இருந்தது. படம் பெயரெல்லாம் நினைவில் இல்லை. இன்னொரு படம் ஆனந்த என்னும் தலைப்பில் ஆரம்பிக்கும். இதுவும் நன்றாக இருக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

வீடியோ பார்க்கிறேன் வேலைகள் முடித்துவிட்டு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எனக்கு நம்பிக்கை உண்டு வல்லிம்மா. முற்பிறவி மறுபிறவி . காணொளிகளையும் பார்க்கிறேன்.

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன்,
நலமுடன் இருங்கள் .

இந்த கர்மா, அதன் பலன் எல்லாமே பிறந்ததிலிருந்தே நாம்'

கேட்டு வளர்கிறோம்.
சமூகத்தில் சட்ட திட்டங்கள் இருக்கும் போது
எல்லாம் சரிவர நடக்கும் என்ற நம்பிக்கை நமக்கு
எப்பொழுதுமே உண்டு.

பரீட்சை,படிப்பு அதற்கேற்ற மதிப்பெண்கள்
எல்லாமே நம் வாழ்வின் வரைமுறைகள் தான்.

வென்னீரில் கையை வைத்தால் சுடும் என்று நாம்
சொல்லியும் தெரிந்து கொள்கிறோம்.

வாழ்வின் பல அமயங்களில் மனம் தளர்ந்து
என் அப்பாவிடம் சிரமப் படுவேன்.
அப்பொழுதும் அவர் நிதானமாகச் சொல்வது
வருவதை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்.
அது தானாகவே சரியாகும்.
என்ற வார்த்தைதான். மிகக் கசப்பான அறிவுரை.

பலவிதங்களீல் நமக்கு சோதனைகள் வருகின்றன.
நாம் இந்தப் பிறவியில் தெரிந்து
தவறு செய்யவில்லை. இப்போது நடக்கிறது என்றால் அதற்கு
முன் பிறவியின் கர்மா என்றே உணர்வேன்.
பிரார்த்தனைகள் நமக்குப் பொறுமையைக் கொடுக்கும்.
நம் கெட்ட கர்மாவுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
என்பார்கள் இல்லையா.

வல்லிசிம்ஹன் said...

என் தம்பிகள் மறைந்த போது
கோவிலுக்குப் போகக் கூட கால் வரவில்லை.
என்னையே மாற்றிக் கொள்ள தினம் செல்ல ஆரம்பித்தேன்.

இந்தப் பதிவு அடுத்த ஜன்மம் உண்டு
என்பதற்கான விளக்க வீடியோக்கள் தான்.
தமிழில் தேடியபோது
பயமுறுத்துவது போல சில இசை கேட்டது. அதனால் தொடரவில்லை.
இது மிக விவாதத்துக்கு உரிய செய்தி.

சனாதன தர்மத்தில் மட்டுமே இதற்கு
சட்டங்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இங்கே சிகாகோவில் கூட நம் வாழ்வை மாற்றி அமைக்கும் மைய்யங்கள் இருக்கின்றன,

அங்கெல்லாம் போக வேண்டாம். நமக்குள்ளேயே நோக்கி
நம்மையே சீர் செய்து கொள்வதே முடிந்த காரியம்.
இரவாகி விட்டதால் மீண்டும் இறைவன் அருளில்
காலை பார்க்கலாம்.நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்கள்...

Jayakumar Chandrasekaran said...

பிறவிகள் பற்றி விவாதித்தால் முடிவு இல்லை. ஆசிய மதங்கள் தவிர மேலை நாட்டு மதங்கள் சுவர்க்கம் நரகம் என்று பேசுகின்றனவே தவிர அடுத்த பிறப்பு என்பதை பற்றி பேசுவதில்லை. விதிவிலக்கு  இயேசு பிரான். 

இந்து மதத்திலும் பல்வேறு குழப்பங்கள். துவைதம் ஜீவாத்மா தனி என்று பேசுவதால் வெவ்வேறு பிறவிகள் உண்டு என்றாகிறது. 

அத்வைதம் ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு இல்லை. இரண்டும் ஒன்றே. அப்படியாயின் தனி ஆத்மா என்று ஒன்று இல்லை. ஆகவே பிறவிகள் தனித்தன்மையற்றவை. பரமாத்மாவே அவ்வப்போது ஜீவ ராசிகளை உண்டாக்குகிறார்.

 விஷிஷ்டாத்வைதம் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது

 
ஊழ் என்பது பற்றி பல இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. 

ஆக பிறவிகள் உண்டு என்றும் இல்லை என்றும் கொள்வது அவரவர் நம்பிக்கை. 


இனி உங்களுடைய நம்பிக்கையான மறுபிறவி பற்றிய உங்கள் ஆராய்ச்சிகளை எதிர் பார்க்கிறேன். 

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
நலமுடன் இருங்கள்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நலமுடன் இருங்கள்.

என் வாழ்க்கையில் நடந்த நடக்கும் எல்லா
சம்பவங்களையும் நான்
Pre destined என்றுதான் பார்க்கிறேன்.

இன்னார்க்கு இன்னார் என்று நாமே தேர்ந்தெடுக்க
வைக்கப் படுகிறோம்.
அது நம் பெற்றோரையும் சேர்த்துத்தான்.குடும்பம் அமைவதும்
அது போலவே.

மாமாவும் நீங்களும் நல்ல ஜோடிக்கு ஒரு உதாரணம்.
எப்படிப் பொருந்துகிறது பாருங்கள்.
கேலியோ கிண்டலோ,
இருவர் மனதிலும் ஓடுவது பாசமும்,நேசமும் தான்.
என்றும் நன்றாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள்.
திருவள்ளுவர் வாக்கிலேயே எளிதாகச் சொல்லப் படுவது
இந்த வினைகளைப்
பற்றித்தான்.

மனிதராகப் பிறந்திருக்கிறோம்.
கூடுமானவரை ஒருவரையும் நோகாமல்
நம் வாழ்வை பாலன்ஸோடு நடத்திச் செல்லத்தான் முயற்சிக்க வேண்டும்.
புரிதலுக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

@ கீதா சாம்பசிவம்,
''அருமையாகக் கேட்டு ரசித்தவை. எனக்குத் தெரிந்து சுமார் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரசாந்த் மற்றும் மீனா நடித்து வெளிவந்த ஒரு திரைப்படம் திகில் காட்சிகளோடு இருந்தது;''

எனக்கு இந்தப் படம் நினைவில் இல்லை. அம்மா.
தேடிப் பார்க்கிறேன்.
ஆமாம் இந்தப் பூர்வ ஜன்மப் படங்கள்,
பேய் ஆவி என்று சிலசமயம் குழப்பி விடுவார்கள் படங்களில்.
இங்கு நாங்கள் விவாதித்தது அதைப் பற்றி இல்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

@Jayakumar Chandrasekar,

அன்பு ஐயா, ஜயக்குமார் சந்திரசேகர்,,
வணக்கம். நலமுடன் இருங்கள்.

''விஷிஷ்டாத்வைதம் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது


ஊழ் என்பது பற்றி பல இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.

ஆக பிறவிகள் உண்டு என்றும் இல்லை என்றும் கொள்வது அவரவர் நம்பிக்கை.''////////

உண்மை. நாம் எதை நம்புகிறோம் என்பது எப்பொழுதுமே வேறுபடும்.

இங்கே சிலர் இதை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டதையே
என்னிடம் அதைப் பற்றிப் பேசினார்கள்.

எல்லோருக்கும் இனம் தெரியாத வேதனைகள் ஏற்படும் போது
முட்டி மோதி ,பதில்களைத் தேடிய நிலைமை.
இதில் மதம் சம்பந்தப் படவில்லை.

என்னிடம் பேசியவர்கள், இந்தியா, மற்றும் தெற்காசிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள்.
ஒரு சைனீஸ், ஒரு ஜாப்பனீஸ்.
அத்ற்காக ஒரு இணையம் இருப்பதையும் அவர்களே

எனக்குக் காண்பித்துக் கொடுத்தார்கள்.
நான் மேலோட்டமாக உணர்ந்த பல நிகழ்வுகளை
அந்த வெப்சைட்டில் பலர் பேசி இருக்கிறார்கள்.

எல்லாமே அவரவர் வாழ்க்கையில் நிகழ்ந்த
சில அசாதாரண நிகழ்ச்சிகளுக்கும்
பயங்களுக்கும் விடுதலை காண ஏற்பட்ட ஆராய்ச்சிகள்.

என்னால் முடிந்தவரை தெளிவாக எழுத முயற்சிக்கிறேன்.
எல்லா மதங்களிலும் இதற்கு உண்டான
சாட்சியங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

கருத்து வேறுபாடுகளுக்கு மதிப்பு கொடுத்து
நம் சமயத்தினர், அமெரிக்கர்களின்
எண்ணங்களை மீண்டும் அடுத்த பதிவில் பதிகிறேன்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

''இனி உங்களுடைய நம்பிக்கையான மறுபிறவி பற்றிய உங்கள் ஆராய்ச்சிகளை எதிர் பார்க்கிறேன். ''

அன்பின் ஜெகே சார். இது ஆராய்ச்சி இல்லை. ஒத்த
எண்ணங்கள் கொண்ட மனிதர்களின்

வார்த்தை பரிமாற்றம். இது என்ன என்று கண்டு பிடிக்கும் ஆவல்.
நன்றி மா.