குறும்படம்
வல்லிசிம்ஹன்
இப்படிக் கூட ஒரு தோழமை தொடங்குமா,
ஒரு சினேகம் மலருமா என்று ஆச்சரியப்
பட வைத்த படம்
ஆனால் இயல்பாக இருந்தது.
இருவரும் இள வயதுக்காரர்கள். இருவரும் ஏதோ ஒரு துறையில்
உயர்ந்து இருப்பவர்கள்.
பேசத்தெரிந்தவர்கள்.
படத்தின் நாயக, நாயகி இருவரும் பார்க்கவும் அழகாக,
கம்பீரமாக இருப்பதும்(அதனால் தானே அவர்கள் ஹீரோ ,ஹீரோயின்!!)
ஒருவர் பால் ஒருவர் கவர்ந்திழுக்கப் படுவதின்
காரணம். இதுவே அவனோ அவளோ
அந்தச் சூழலில் இருந்து மாறுபட்டிருந்தால்
என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்:)
பூனே மும்பை சாலையில் நடக்கும் சந்திப்பு.
தன் வண்டி திடீரெனப் பழுது படுவதால்
நாயகன், பொதுப் பேருந்தில் ஏற, அங்கு ஏற்கனவே
பயணித்துக் கொண்டிருக்கும், பன்முக ஆய்வாளினி
ரெயினாவைச் சந்திக்கிறான். உதயன்.
விவாதத்தில் ஆரம்பிக்கும் சந்திப்பு
நட்பு+ காதலாக மலர்கிறது.
KHAMAKHA என்றால் Agree and Disagree or Strange Arguement
என்று பார்த்தேன். ஏதோ ஸ்வரம் பாடுவது போல
இருந்தது எனக்கு. கமகம்...
நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Comments
நன்றி மா. உங்களை நினைத்துக் கொண்டேன். உங்கள் மஹராஷ்டிரா நாட்களைப்
படித்த நினைவு.
எனக்கும் பூனா மிகவும் பிடிக்கும்.
மகன் அங்கே இருக்கும் போது அடிக்கடி
சென்று வருவோம்.
அதுவும் மலை உச்சியில் ஒரு ஹோட்டலில் தங்கினோம்.
பால்கனியிலிருந்து பார்த்தால் ஒரு நீர்வீழ்ச்சி.
மிக ரம்யமாக இருந்தது.
இந்தப் படமும் அப்படியே தோழமையோடு
யதார்த்தமாகப் பயணிக்கிறது.
வந்து படித்ததற்கு மிக நன்றி மா.
எனக்கும் இந்த இயல்பு தான் பிடித்தது. நன்றாக
எடுத்திருக்கிறார்கள்.
மிக நன்றி மா.
நடித்தவர்கள் எல்லோரும் நன்றாக நடித்து இருந்தார்கள்.
பஸ்ஸில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோரும் இயல்பாக இருந்தார்கள்.
//ஒரு சினேகம் மலருமா என்று ஆச்சரியப்
பட வைத்த படம்//
சினேகம் அழகாய் மலர்ந்து இருந்தது உண்மை.
பரீடசைக்கு படிக்கிறாயா? என்று கேட்டு ஆரம்பிக்கும் விவாதம் அருமைதான்.