Blog Archive

Thursday, May 20, 2021

SUPERMAN RETURNS: How it Could Have Been

எப்பொழுதும் அதிசயங்களிலும் நல்ல எதிர்காலத்திலும்
நம்பிக்கை வைக்க வேடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

12 comments:

ஸ்ரீராம். said...

என் மகன்கள் சொல்வார்கள்..   இதை எல்லாம் இந்திய படங்களில் செய்தால் கிண்டல் செய்வீர்கள்..  ஆங்கிலப் படங்களில் செய்தால் ரசிப்பீர்கள்!

ஆக்சிஜன் இல்லாமல் சூப்பர்மேன் பரபபதை கற்றுக்கொள்ள வேண்டும்!  நம் தெலுங்கு ஹீரோக்கள் ரயிலை தடுத்து நிறுத்துவார்கள்.  சூப்பர்மேன் விமானத்தையே தூக்கி வந்து விடுகிறார்!

கோமதி அரசு said...

இப்பொழுது நமக்கு இந்த மாதிரி சூப்பர் மேன்கள் தேவை.
அனுமன் சஞ்சிவி மூலீகை கொண்டு வந்து காப்பாற்றியது போல இந்த கொரோனா காலத்தில் மக்களை காக்கும் அனுமனும் சூப்பர்மேன் களும் தேவை.
அதிசயங்கள் நடந்தால் நல்லது.
காணொளிகள் நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
உங்கள் பிள்ளைகள் இந்தக் காலத்தவர்கள்.
எங்கள் காலத்தவர்களுக்குக்

கொஞ்சம் இந்த விஷயங்களில் ஆர்வமும் விருப்பமும்
இருந்தது.
மாயா பஜார் படத்தை மன அமைதிக்காகப் பார்ப்பவள் நான்:)
அதுவும் இப்போதைய நெருக்கடி நிலைமையில்
எதாவது நன்மை நடக்காதா,
இறைவன் கருணை முழுவதும் வற்றிவிட்டதா
என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஸ்ரீராம். said...

//இறைவன் கருணை முழுவதும் வற்றிவிட்டதா
என்றே நினைக்கத் தோன்றுகிறது.//

நேற்று பேஸ்புக்கில் மோகன்ஜி தனது இளைய சகோதரர் -54 வயது - கொரோனா தொற்றால் மறைந்தார் என்று சொல்லி இருந்ததை படித்தபோது எனக்கும் இதே எண்ணம் ஏற்பட்டது.  நம் உறவுகள், நட்பிலேயே எத்தனை எத்தனை இழப்புகள்....

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி,
வாழ்க வளமுடன் அம்மா. என் இதயத்தை அப்படியே படித்து விட்டீர்கள்.
ஆமாம் சூப்பர்மேன் படம் பார்க்கும் போது குழந்தைகளோடு
நாங்களும் ரசிப்போம்.

எனக்கும் அனுமன் சஞ்சீவி மலைதான் நினைவுக்கு
வந்தது.
இப்போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள்.
காற்றுதான் மாசினைப் போக்கும் என்கிறார்கள்.

அனுமனும் வாயு குமாரன் தானே.
ஆண்டவன் கருணை வைத்தால் தான்
இந்த விபரீதங்கள் தீரும்.

புரிதலுக்கு மிக நன்றி மா.

கரந்தை ஜெயக்குமார் said...

அதிசயங்களிலும் நல்ல எதிர்காலத்திலும்
நம்பிக்கை வைக்க வேடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

உண்மை
உண்மை

Thulasidharan thilaiakathu said...

அம்மா சூப்பர்மேன் படம் ஆஹா இப்படி வந்து மாயாவியைக் கொண்டு போக மாட்டாரோ? எதற்கு சூப்பர் மேன்? நம்ம ஆஞ்சுவைக் கூப்பிட்டா போச்சு!

எப்போதோ ஏதோ ஒரு இதழில் வாசித்த நினைவு. அமெரிக்காவுக்குச் சென்ற நம்மூர் பாட்டி அவர் பேரன் அங்கு சூப்பர்மேன் பற்றிச் சொல்லி சிலாகித்ததும் பாட்டி சொன்னாராம், குழந்தாய் இந்த ஊர் சூப்பர் மேன் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவிற்கு நம்மூரில் ஒரு சூப்பர் மேன் இருக்கிறார் தெரியுமா என்று ஆஞ்சுவின் கதையைச் சொல்லிட அந்தப் பையன் தன் நண்பர்களிடம் எல்லாம் ஆஞ்சுவைப் பற்றிப் பேசி பெருமைப்பட்டானாம். அதன் பின் ஆஞ்சுவின் கதை கூட டிவியில் வந்ததையும் காட்டியதாக எழுதியிருந்த நினைவு.

இப்போது தேவை இதுதான் அம்மா..

கீதா

Thulasidharan thilaiakathu said...

மீண்டும் சூப்பர்மேன் வருகிறாரா? என் குழந்தைகள் முன்பு பார்த்திருக்கிறார்கள்.

ரசித்தேன் வீடியோவை.

நம்பிக்கதானே வாழ்க்கை

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். இனிய காலை வணக்கம்.
நானும் செய்தி அறிந்து மிக வருத்தப்பட்டேன்.
நம் ப்ளாகர் குடும்பத்திலேயே ஜெயஷ்ரீ கோவிந்தராஜன், லக்ஷ்மி,பாலா,
கனி
இவர்களும் பாதிக்கப்பட்டு மீண்டு கொண்டிருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு ஜெயக்குமார். எத்தனையோ திரு விளையாடல்களைப்
பெருமானும், பெருமாளும் நடத்தி
நம்மைக் காத்திருக்கிறார்கள்.
அது போல ஒரு அதிசயம் நடக்காதா என்று தோன்றுகிறது
அப்பா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
அஞ்சுவை வழிபடுகிறோம் காப்பார்.
சூப்பர்மேனை ஒரு உட்சாகத்துக்காக்ப்
பார்க்கிறோம். நன்மையை எதிர் நோக்கித் தான் வாழ்வு நகர்கிறது.
பாட்டி பேரனுக்கு நல்லதைச் சொல்லி இருக்கிறார்.
இனி அவன் குழந்தைகள் ஆஞ்சனேயரை நம்பும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசி,

மீண்டும் வருகிறாரா தெரியவில்லை. வந்தால்
எப்படி இருக்கும் என்று
நானும் யோசிக்கிறேன்.
நம்மூர் ஸ்வாமி அவதாரங்கள் எல்லாமே

நம்மைக் காக்க தானே. நன்மை நடக்கும் என்று நம்புவோம்.