Blog Archive

Monday, May 24, 2021

இந்த உண்மை தெரியாமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது -Shri Aasaanji உடைக்க...

🧡💛❤💜

12 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான தகவல்கள்.  பேட்டி காண்பவர் கங்குலிக்கு தம்பி மாதிரி இருக்கிறார்!

கோமதி அரசு said...

கடவுளை முழுமையாக நம்ப வேண்டும் என்பதை சொல்கிறார்.
கேட்டு இருக்கிறேன்.
கடவுள் நம்பிக்கை இருந்தால் பயம் இருக்க கூடாது என்கிறார்.

கடைசிகாலம் வரை நம் கை காலும் தான் நல்லா இருக்க வேண்டும்.
நேர்மறை எண்ணங்கள் வாழ்க!

கோமதி அரசு said...

மன அமைதி , நிம்மதி நம்மிடம் தான் இருக்கிறது. நம்மில் தேடுவோம்.
பகிர்வுக்கு நன்றி.
குலமாய், வளமாய் இருக்க வளைகாப்பு.

அன்பின் அரவணைப்பு தேவை எல்லோருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ஹாஹாஹா. ஶ்ரீராம். அவர் நிறைய ஆமாம் சாமி போடுகிறார் என்று தோன்றியது மா.:)

முற்றும் அறிந்த அதிரா said...

வல்லிம்மா நலம்தானே?...

நானும் இந்த ஆசான் ஜி யின் சொற்பொழிவுகள் பார்ப்பேன்.. பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
நிறைய நல்ல விஷயங்கள் சொல்கிறார்.
தூக்கத்தின் முக்கியம், மன அமைதி எல்லாமே
எல்லோருக்கும் வேண்டிய அறிவுரை தான்.

கேட்டபடி நாம் நடக்க வேண்டும்.
உன்னிப்பாகக் கேட்டிருக்கிறீர்கள்.
அம்மாவும் இப்படித்தான் சொல்வார்.
உள்ளுறையும் ஆத்மாவுக்காக நாம் உடலையும்
பாதுகாக்க வேண்டும் என்று.
இறைவன் அருளுடன் நாம் நன்றாகவே இருப்போம்.
கைகால் நன்றாக விளங்க
உடல் பரிபூர்ண சுதந்திரத்துடன் இருக்க
அவனே கருணை செய்ய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் அதிரா,
நலம்ப்பா. நீங்களும் மகன்கள்,
கணவர் எல்லோரும் நலம் என்று நம்புகிறேன்.
எபி பக்கம் கூட உங்களைக் காண முடியவில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

நியூஸ் நியூசென்ஸ் !!!! நல்லாருக்கு.

பார்ட்னரை ஏமாற்றுதல் சூப்பர்!! நல்ல கருத்து உடல் பேணல் முக்கியம்...

குலமாய் வளமாய் இருக்க வளைகாப்பு

எல்லா கருத்தும் நன்றாகத்தானிருக்கிறது.

ஈரோடு மகேஷ் ஒரு கேள்வி கூடக் கேட்கவே இல்லை. அவர் சொல்வதற்கு ஓவர் எக்ஸ்ப்ரெஷன்ஸ் கொடுக்கிறார் கொஞ்சம் ஆர்டிஃபிஷியலா இருக்காப்ல இருக்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அவர் சொல்வது நல்ல கருத்துகள். பெரும்பாலும் தெரிந்தவைதான் நம் பெரியவர்கள் சொல்வதுதான். என்றாலும் சுவாரசியம்.

பகிர்விற்கு மிக்க நன்றி வல்லிம்மா

துளசிதரன்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
ஆமாம் இவர் சொல்லும் விஷயங்கள்
இதமான அட்வைஸ்.
அதற்காக அந்த மஹேஷ் இவ்வளவு உற்சாகமாகக்
களித்துப் பதில் சொல்வது கொஞ்சமே கொஞ்சம்
அதிகம். :)
வளைகாப்புக்கு அவர் சொல்லும் விளக்கம் எனக்கும் பிடித்தது.
நியூசென்ஸ் நிஜம் தான்.
எதுவும் அளவுக்கு மீறி நம்மை வந்தடைந்தால்
மன உளைச்சல் அதிகமாகிறது.
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களே
விஷமாகி விடுகின்றன.
நலமுடன் இருங்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நீங்கள் சொல்வது சரிதான்.
நாம் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை இப்போதைய
காலத்துக்கு ஏற்ற மாதிரி சொல்கிறார்.
இதைக் கேட்டு இளைய தலை முறையினர் புரிந்து கொள்ளட்டும்.
மிக மிக நன்றி மா.