Blog Archive

Sunday, May 23, 2021

பெரிய தம்பி ,சின்னத் தம்பிக்குப் பிடித்த....

முதல் இரண்டு பாடல்களும்   பெரிய தம்பியின் 
விருப்பங்களில் இரண்டு.
பிறகு வரும்  மபாடல்கள்
சின்னத்தம்பியின்  மனதைக் கவர்ந்தவை.




18 comments:

ஸ்ரீராம். said...

முதல் வரிசைப் பாடல்களை அறியேன்!  இரண்டாவது வரிசைப் பாடல்கள் ஜோர்.  நேற்று ஏதோ சேனலில் 'உயர்ந்த மனிதன்' போட்டார்கள்.

Geetha Sambasivam said...

ஹையோ! உயர்ந்த மனிதன் படம் என்றாலே ஓடிவிடத் தோணும்! அந்த அளவுக்குப் பார்க்க வைக்கப் பட்டிருக்கேன். வேணும்னு வம்பு பண்ணுவாங்க தம்பிமாரெல்லாம். :))))

Geetha Sambasivam said...

எல்லாப் பாடல்களுமே அருமை, இனிமை. முதல்லே வந்ததே எல்லாம். அதைச் சொல்லணும்.

கோமதி அரசு said...

தம்பிகளுக்கு பிடித்த பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது .
கேட்டு ரசித்தேன்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஆங்கிலப் பாடல்கள் கேட்டதில்லை இப்ப கேட்டேன். நான் எப்போதுமே வியப்பது அவர்களால் எப்படி இத்தனை ஹை பிச் வாய்ஸ் பாட முடிகிறது என்று நாபியிலிருந்து வருகிறது! அதிலும் வாய்ஸ் மாடுலேஷனும் செய்வார்கள் ....தொண்டை வோக்கல் கார்ட் செமையா ஒத்துழைக்கிறது என்று தோன்றும்...

பாடல்களைக் கேட்டு ரசித்தேன் அம்மா

தமிழ்ப்பாடல்கள் ஆஹா!!! எத்தனை கேட்டிருக்கிறோம்...அருமையான பாடல்கள்

ரசித்தேன் அம்மா

கீதா

வெங்கட் நாகராஜ் said...

பாடல்கள் பகிர்வு நன்று. பிடித்த பாடல்களைப் பகிர்ந்து கொள்வதும் ஒரு விதத்தில் மகிழ்ச்சி.

பாடல்களை மாலை கேட்டு ரசிக்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையாப் பாடல்கள்

துரை செல்வராஜூ said...

ஆங்கிலப் பாடல்களைப் பற்றி ஏதும் அறியேன்..

பின்னிரண்டு பாடல்களும் பிடித்தமானவை.. மிகவும் பிடித்தமானவை..

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.

பெற்றோர் கூட இருக்கும் போது,
சத்தமாகப் பாட்டு வைக்கக் கூடாது என்பதற்காகவே
இந்தப் பாடல்களையெல்லாம்
நம் வீட்டில் வந்து கேட்பார்கள்.
அதனால் பழகிய பாடல்களைப் பதிவு செய்தேன் மா.
சின்னவனுக்கு சிவாஜி பாட்டு எதுவாக
இருந்தாலும் பிடிக்கும்:))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ஹஹ்ஹா. நினைத்தேன். பாவம் கீதாம்மாக்கு இது பிடிக்காதேன்னு:)))))
என்ன செய்யறது! சின்னவனுக்கு சிவாஜின்னு சொன்னாலேயே
போதும்.
உருகிக் கரைந்து விடுவான்,. அவ்வளவு ரசிப்பான்.
சொல்லிக் கொண்டே இருப்பான். நானும் கேட்டுக் கொண்டே இருப்பேன்..
கேட்டதற்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

முதல்ல வந்தது எலி சார் தான். அவரைச் சொல்லுகிறீர்களா.
பாடல்கள் பதிவானது சந்தோஷம் தான். யூடியூபுக்குப் போ என்று விரட்டுமோன்னு
பார்த்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
வாழ்க வளமுடன்.
அவர்களைப் பொறுத்த வரையில்
ஒன்றும் குறையில்லை.
இருவரும் அனாயாச மரணம் தான்.
நம்ம சிங்கம் மாதிரி.
கொடுத்து வைத்தவர்கள்,. மீதியாய் நான் நின்றது தான் பாவம்.
சின்னவனுக்கு இந்த கங்க்ஃபூ மிகப் பிடிக்கும். எப்போ
பார்த்தாலும் ஜாக்கி சான், ப்ரூஸ்லீ என்று பார்த்துக் கொண்டிருப்பான்.


வந்து கேட்டதற்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சின்ன கீதாமா,
நீங்கள் சொல்லும் ரொபர்ட்டா ஃப்ளாக்,70 களில் மிகச் சிறந்த பாடகி.

பெரிய தம்பிக்கு ரொம்பப் பிரியம் அவர் குரலில்.
பின்னாட்களில்
ஆன்மீகத்தில் இறங்கி விட்டான்.

நிறைய புத்திமதி சொல்வான்.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
இனிய மண நாள் வாழ்த்துகள்.
என் ஆறுதலுக்காக்ப் பதிகிறேன்.
சும்மா யாரிடம் பேசினாலும் அவர்களுக்கும் அலுத்து விடும். அதனால என் பக்கத்தில் பகிர்கிறேன் மா.
மெதுவாகக் கேளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார்,
இங்கு வந்து கேட்டதற்கு மிக மிக நன்றி.
உங்க அனைவருக்கும் பெரிய மனது.மீண்டும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துரை செல்வராஜு,
ஆங்கிலப் பாடல்கள் அறியாததால் என்ன குறை அம்மா.

இசை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உருவத்தில் கேட்கிறது.
தம்பிக்கு அந்த ட்ரம் சத்தம் பிடிக்கும்.
''கேட்டுக் கோடி உருமி மேளம் பாட்டும்
மிக மிக ரசிப்பான்.

சந்தோஷமாக இருந்தார்கள்.
நீங்களும் வந்து கேட்க்கும் போது
தம்பிகளின் பிரதி நிதிகளாக உங்களைப் பார்க்கிறேன் மா.

கோமதி அரசு said...

வைகாசி மாதம் பிரதோஷதினம் வந்தால் அண்ணன் நினைவு வந்து விடும் சிறு வயதில் அண்ணனின் மறைவு நெஞ்சில் வடுவாக.
பாசம் மிகுந்தவன்.
நானும் அண்ணனும் நண்பர்கள் போல இருந்தோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் Gomathima.
அண்ணா வைகாசியாஇனியாவது இறைவன் நமக்குத் துணை பக்க பலமாக இருக்கட்டும். எப்போதும் piraarththanaikale..வாழ்க வளமுடன்.