Blog Archive

Sunday, September 22, 2019

பகுதி இரண்டு....... பாசுமதி

Vallisimhanபகுதி இரண்டு பாசுமதி.
++++++++++++++++++++++++++
முதல் வேலையாக தினேஷை  அழைத்தான்.
என்னடா, என் குழுவோடு தேக்கடி, முன்னாறு
வருகிறாயா.
கொஞ்சம் உன் வேலையைத் தள்ளிப் போடு. எனக்கு உன்னால் ஒரு வேலை நடக்கணும் என்று பீடிகை
போடுபவனிடம், என்னடா, பெண்கள் சமாசாரமா. வசமா எங்கயாவது
பிடிபட்டு விட்டாயா. வலையிலிருந்து மீட்கணுமா
என்று சிரித்தான் தினேஷ்.
டேய், வலை விரிக்க உன்னை அழைக்கிறேன்
என்னைக் குத்திக் காண்பிக்கிறாயே என்று வருத்தப் பட்ட பாசுவை அக்கறையோடு
பார்த்தான் தினேஷ்.
நீதான் பறவைகள் பலவிதம்னு  பல வண்ணம் பார்த்தவனாச்சே,
இப்போ புதிதா சால்லஞ்ச் வந்திருக்கா உனக்கு என்றவனிடம் விஷயத்தைச் சொன்னான். மதிவாணன் சுமதி நட்பு, தான் எப்படியும்
சுமதியைக் காதலித்து மணக்க வேண்டிய உணர்வு...
என்று விவரித்தவனைப் புதிராகப் பார்த்தான் தினேஷ்.
உன்னைத் திருமணம் செய்ய யாரும் மறுக்க மாட்டார்கள். வாட்ஸ் த ப்ராப்ளம்
என்று கேட்டவனிடம்,
தன் நடவடிக்கைகள், பெண்தோழிகள் அனைத்தையும் அறிந்தவளாக
சுமதி இருப்பதே பிரச்சினை.
தன்னை நல்லவனாகக் காட்ட ,தினேஷின் உதவி தேவை என்றதும் திகைத்துப் போனான்
தினேஷ்.

இதைவிட அதிசயம் மறு நாள் அவனுக்கு கம்பெனியில் காத்திருந்தது.
அவனுடைய அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு  மதி வந்திருந்தான்..
 என்ன விஷயம் மதி. பாஸ் ரொம்பக் கடிக்கிறானா. நான் வேணா பேசிப்பார்க்கிறேன்
என்று புன்னகையோடு கேட்டான் தினேஷ்.
இல்லப்பா, நான் காதலிக்கும் பெண்ணை அவரும் காதலிக்கிறார்.

நீ தான் உதவி செய்யணும். என்றான்.
ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டேனே அவனுக்கு என்றதும்
 அதிர்ச்சி காட்டினான்  மதிவாணன்.
என்ன கேட்டிருக்கிறார்//என்றதும் அதை சொல்ல முடியாது.
உனக்கு என்னவேணும் என்றதும்.
நீங்கள் அவரைப் போலவே உருவத்தில் ஒத்திருக்கிறீர்கள், அசப்பில் யார் வேணுமானாலும் ஏமாறுவார்கள்.
 இப்பொழுது போகப்போகும் ரிசார்ட்டில் கொஞ்சம் அப்படி இப்படி சுமதியிடம்
நடந்து கொண்டால் அவள் பாசுவை வெறுக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.
எனக்குச் சாதகமாக அமையும் என்றான். கலகலவென்று சிரித்துவிட்டான்
தினேஷ்.
அப்படியே செய்கிறேன் நீ கவலைப் படாதே போய் வா என்று அனுப்பிவிட்டு
யோசனையில் ஆழ்ந்தான்.ஒரு வெள்ளிக்கிழமை பஸ் முழுவதும் ஏறிக்கொண்ட
 அலுவலக நண்பர்களுடன்  பாட்டும் நடனமுமாக
உற்சாகமாகக் கிளம்பினார்கள்.
சுமதி,தாரிணி ,இன்னும் அவளுடன் வேலை செய்யும் உதவி மருத்துவர்கள், சுமதியின் செகரட்டிரி
சரண்யா என்று வண்ணமலர்க்கூட்டமாக மங்கையர்.

பாசுவும் ,மதியும் அடிக்கடி அவர்களிடம் வந்து நலம் விசாரித்துப் போனார்கள்.
சுமதிக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. இதென்ன புது அக்கறை என்ற படி திரும்பினவளின் கண்களில் தினேஷ் தென்பட்டான்.
சட்டென்று தன் முகம் மலர்ந்ததை அவளால் மறைக்க முடியவில்லை.
ஹேய் அதுயார் ,அச்சு அசல் பாசு மாதிரியே இருக்கிறாரெ
என்று கேட்ட தாரீணியிடம் அவர்,இவருக்கு கசின் என்றாள் சுமதி.
ஓ. அதென்ன திரும்பித் திரும்பி உன்னைப் பார்க்கிறார்,
எனிதிங்க் கோயிங்க் ஆன் பிட்வீன் யூ டூ
என்று கேலி செய்தாள்.
இல்லைப்பா. நீ வேற 😔😔😔😔😔.அவர்கள் லெவலே வேற.நான் வெறும் பணி செய்பவள்.
பாசு அங்கு உட்கார்ந்திருந்தால்  முன்னாறில் செய்திருக்கும் ஏற்பாடுகளைச் சொல்லலாம்
என்று பார்த்தேன்.
தினேஷ் இருக்கிறதைப் பார்த்ததும் ஒரு சர்ப்ப்ரைஸ் அவ்வளவுதான்
என்றவளைப் பார்த்து அந்த பேப்பர்களை என்னிடம் கொடு, நான் நம்ம பாஸ் உடன்
அரட்டை அடிக்கிறேன். நீ உன் புத்தகத்தை எடுத்துக் கொள் காதில்
இளையராஜாவை மாட்டிக் கொள்.,என்றபடி எழுந்த தாரிணியைத் திகைப்புடன்  பார்த்தாள்  சுமதி.


பேப்பர்களை எடுத்துக் கொண்டு பாசுவை நோக்கி விரையும்
தாரிணியை, குறும்பாகப் பார்த்த தினேஷ், தன் இடத்திலிருந்து எழுந்த சுமதியின் பக்கத்தில் இருந்த
காலி இருக்கையில் அமர்ந்தான்.
திடுக்கிட்டு நிமிர்ந்த சுமதியின் முகத்தைப் பார்த்தவனுக்கு
அவளின் சாந்தமான அழகு,மனதைத் தைத்தது.
ஒரு நிமிடம் தன் வாக்குகளை மறந்தான்.

இங்க உட்காரலாமா. உங்களுக்கு மறுப்பொன்றும் இல்லை என்றால் என்
பக்கத்தில் இருக்கும் அருணின் குறட்டையிலிருந்து தப்ப
ஆசை என்று இனிமையாகப் பேசினான்.
ஆச்சரியத்தில் விரிந்த விழிகளுடன் அவனை நோக்கிய
சுமதி பதில் சொல்லத் திணறினாள்.

சமாளித்துக் கொண்டு,இல்லை எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை.
தாரிணி...என்று பின்னோக்கிப் பார்த்தாள்.

ஓ...அவளுடைய அஜெண்டாவே பாசுவை நெருங்குவதுதான்
உங்களுக்குத் தெரியாதா. இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்களே.

நான்,நான் என்று தயங்கிய சுமதியைப் பார்த்து புன்னகைத்தபடி,
நீங்கள் உங்கள் பாடலைக் கேளுங்கள்,
நான் என் ஓய்வை எஞ்சாய் செய்கிறேன்,என்று இருக்கையை நீட்டி,பரிபூரண
அமைதி முகத்தில் பிரதிபலிக்கக் கண்களை மூடிக் கொண்டான்.
கண்களை மூடிக் கொண்டாலும் அவன் நினைவுகள் அவளைச் சுற்றியே வந்தன.
 அப்பழுக்கில்லாத அழகு. பாசு ,இவளை விரும்புவதில் ஆச்சர்யமே இல்லை.
கொஞ்சம் தன் வாழ்க்கை முறைகளைச் சீராக்கிக் கொண்டால்
இவளைக் கவருவதில் அவனுக்குச் சிரமம் இருக்காது//
என்று நினைத்தபடி உறங்க முற்பட்டான். கனவிலும் சுமதியே
வர, சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.
அவன் தோளில் சுமதியின் முகம்.
மூச்சே நின்றது போல உணர்ந்தான். பஸ்ஸின் வெளியே மழை.
பாட்டு கேட்டுக் கொண்டே அவள் உறங்கி இருக்க வேண்டும்.
பஸ் ஒரு குலுக்கலுடன் நின்றது.
அதில் எழுந்த சுமதி அருகில் தினேஷின் முகத்தைப் பார்த்துத் திகைத்துத் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.
மன்னிக்கணும். என்னை அறியாமல்...
என்றவளைக் கனிவுடன் பார்த்தான். இட்ஸ் ஓகே.
நாம கீழ இறங்கணும்.
பலத்த மழை.அதனால் தேக்கடி விருந்தினர் மாளிகையில் தங்கப் போகிறொம். என்றபடி  எழுந்த சென்றவனைப் பார்த்த வண்ணம் இருந்தவள் ,பாசு அருகில் வருவது கண்டு  மழையைப் பார்ப்பது போலாகி கண்களைத் திருப்பிக் கொண்டாள் . பின்னாலயே வந்த  தாரிணி நல்லாத தூங்கிட்டியே சுமதி. இயற்கைக் காட்சி கள் யானைகள் எல்லாம் மிஸ் பண்ணிட்டே என்று கேலி செய்தாள் .

ஆமாம் இந்த மழையில் பார்த்த பாறைகள  இவள்  யானை னை
ன்னு சொல்லிவருகிறாள்.
வாங்கப்பா  எல்லோரும்  க்ரீனவூட்ஸ் ரிஸார்ட்டுக்குப் போகலாம் என்று கிளப்பினான்.
மதுரையிலிருந்து இவ்வளவு சீக்கிரம் வந்துட்டோமே  என்றும் முப்பது  பேரும்  அந்த சொகுசுப் பேருந்திலிருந்து  இறங்கும்போது வரிசையாக நின்று கொண்டிருந்த ரிசார்ட்  பணியாளர்கள் குடை பிடித்து அழைத்துச் சென்றனர்.

மொத்தம் 10 அறைகள், ஒவ்வொன்றிலும் மூவர் தங்கலாம்.




8 comments:

துரை செல்வராஜூ said...

பாசுமதியா?..
வாசமதியா!..

இல்லையேல்
மோசமதியா?..

என்னவாகப் போகின்றதென்று
தெரியவில்லையே!..

ஸ்ரீராம். said...

ஏற்கெனவே படித்த மாதிரி இருக்கிறதே...

அந்தக் கதை கதை என்ன ஆச்சு?!!

நெல்லைத்தமிழன் said...

பகுதி ரெண்டா? ஒன்று எப்ப வந்தது? பழைய கதையே முடியலையே

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
முதலில் நீங்க எல்லோரும் மன்னிக்கணும். இது எங்கள் ப்ளாகிற்கு எழுதிய கதை.

என் வலைப்பதிவில் கிடப்பில் கிட்டத்தட்ட 112 வெளியியாத பதிவுகள் இருக்கின்றன. முதலில் கண்ணில் பட்டது இது. படித்துப் பார்த்து விட்டு
இதை வெளியிடலாமே,சுமாராக இருக்கிறது என்று பப்ளிஷ் பட்டனைத் தட்டி விட்டேன்.
இனி இதன் மற்ற பகுதிகளைத் தேட வேண்டும்.
இனிமேல் எல்லோரும் கேட்கப் போகிறர்கள் . ஏம்மா இது இப்ப எழுதியதா
முன்னாலியே எழுதியதை மீண்டும் பிரசுரிக்கிறீர்களா என்று. நானும் தருமி மாதிரி விழிக்கப் போகீறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் சாரிமா.

இது எபியில் எழுதியதுதான். ஆதியும், முடிவும் அங்கே இருக்கலாம். மன்னிக்கணும்.
பழைய பதிவுகளில் தேடி கிடைத்தால் போடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா,

இது ஏற்கனவே எபியில் வந்தது என்று நினைக்கிறேன்.

தலைப்பு கொடுத்து எழுதச் சொல்லி இருந்தார்கள்.
ஆதி,அந்தம் இரண்டும் கிடைத்தால் போடுகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கணும்.

கோமதி அரசு said...

புதிய கதையா?
அதுவும் பகுதி இரண்டு என்றதும் புரியவில்லை.
முதல் பகுதியை தேடினேன். முன்பு எழுதிய கதை என்னாச்சு என்று தேடினேன்,
குழப்பம் ஏற்பட்டாலும் இந்த கதையும் நன்றாக இருக்கிறது.
தேக்கடி தங்கும் விடுதி அழகு, தேக்கடியை சுற்றிப்பார்த்து விட்டேன். பல வருடங்களுக்கு முன்பு போனது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
இது பழைய கதை. வெளியிடப் படாமல் கிடப்பில் இருந்தது.
உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது.
நலமாக இருங்கள்.