Blog Archive

Wednesday, April 10, 2019

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
காலம் ஓடிக்கொண்டு  தான் இருக்கிறது.
தினம் ஒரு செய்தி.
மகிழ்ச்சி ,திகைப்பு என்று போகிறது.
அதை  எல்லாம்  சொல்வதற்கும், விவரமாகப்
பேசவும்  நம் நட்புகள்   இருக்கிறார்கள்.

ஒரு பிறந்த நாள் என்றால் எல்லோரும்
ஒன்று கூடுகிறோம் .
ஒருவருக்கு உடல் நலம் சரி இல்லையானால் அனைவருக்கும் கவலை.
எத்தனை பெரிய குடும்பம் எனக்கு,நமக்கு கிடைத்திருக்கிறது.

இனி துன்பமில்லை ஒரு சோகநிலை இனி என்றும் இல்லை.
இது எனக்கு நானே சொல்லிக் கொள்வது.
அனைவருக்கும் என் நன்றி.
இந்தப்  பாசத்துக்குப் பதிலே கிடையாது.
மனம் நிறை நன்றி.

24 comments:

KILLERGEE Devakottai said...

மீண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.

கோமதி அரசு said...

வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்களை நமஸ்காரம் செய்து கொள்கிறேன்.
உங்கள் அன்பும், ஆசியும் என்றும் வேண்டும்.

கோமதி அரசு said...

காலம் பாடல் நன்றாக இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள் அம்மா...

இணைத்த பாட்டு மிகவும் பிடிக்கும்...

ராமலக்ஷ்மி said...

இங்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லி ஆசிகளைப் பெற்றுக் கொள்கிறேன். பாடல் பகிர்வும் நன்று வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி,
இந்த அன்புக்கு நான் என கைமாறு செய்ய முடியும். நீங்கள் எல்லோரும் நல்ல படியாக
நீண்ட நாள் சௌக்கியமாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, என்றும் நீங்களும் சாரும்

அன்பில் இணைந்து, ஒரே மாதிரி சிந்தனையோடு
அனைத்து இறைத்தலங்களுக்கும் சென்று வழிபட்டு எங்களுக்கும் காணக் கொடுக்கணும்.
என்றும் நலமுடன் வாழ என் ஆசிகளும் பிரார்த்தனைகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், பழைய பாடல்களை என்னால் விட முடிவதில்லை. அவற்றில் கிடைக்கும்
நிம்மதி இப்போதைய பாடல்களில் இல்லை. நீங்கள் ரசித்ததற்கு மிக.நன்றி.

Anitha Vijay said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா. ரொம்ப காலமாக உங்கள் வலைப்பக்கத்தை தொடர்கிறேன். அருமையான வாழ்க்கை. நிறைய எழுதுங்கள். நீடூழி வாழ என் பிரார்த்தனைகள்.

துரை செல்வராஜூ said...

அன்பின் அம்மா...

தங்களுக்கு வணக்கம்...

என்றென்றும் மகிழ்ச்சியை ஐயன் ஆண்டருள் புரிவானாக...
ஸ்ரீ துர்காம்பிகை துணையிருப்பாளாக!...

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை பெரிய குடும்பம் நமக்குக் கிடைத்திருக்கிறது! உண்மை தான் மா.... நல்ல நட்பு நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

மீண்டும் மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் மா..

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் சகோதரியாரே

Thulasidharan V Thillaiakathu said...

தங்கள் பாதத்தில் வணக்கங்கள் வல்லிம்மா. பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களுக்கு எல்லாம் நல்லபடியாக நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருந்திட இறைவன் அருள் வேண்டி..

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா மீண்டும் நமஸ்காரங்கள்! எத்தனை தடவை செஞ்சாலும் வொர்த்!

நீங்கள் எப்பவும் சந்தோஷமாக இருந்திடனும். அதுதான் எங்கள் எல்லோரது விருப்பமும் வேண்டுதல்களும் அம்மா.

கீதா

நெல்லைத்தமிழன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வல்லிம்மா.... இணையம், நம் எல்லோரையும் இணைக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் என்னாளும் தங்கள் தமிழ்ப் பணி இனிதே தொடர வேண்டும்.
இந்த சகோதரியின் ஆசிகளும் தொடரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனிதா விஜய். வணக்கம் அம்மா.
தங்கள் அறிமுகம் என் பாக்கியம். தொடர்ந்து படிப்பது
மிக மகிழ்ச்சி.வாழ்க வளமுடன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
வேறே என்ன வேண்டும் அப்பா. இந்த அன்பு தான் நிலையானது.
இறைவன் உங்கள் அனைவருக்கும்
அமைதியையும் , ஆரோக்கியத்தையும்,சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும். என் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,இத்தனை நீண்ட வருடங்கள் எனக்கு இத்தனை நட்பு
கிடைத்ததில்லை. குடும்பங்களே பிரியும் போது
இணையத்தில் நாம் அன்னியோன்யமாக இருப்பது எத்தனை மகத்தான விஷயம்.
நன்றி ராஜா. என்றும் நலமாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இனிய ராமலக்ஷ்மி,

என்ன நல்ல தோழமை அம்மா உங்களுக்கு. இந்த நல்ல மனங்கள் இருக்கும் போது எனக்கு ஏது குறை.
எப்பொழுதும் உடல் நலத்தோடு ,மகிழ்ச்சி சூழ வாழ வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்,
மனம் நிறை ஆசிகள் மா.
வளம் நிறை எழுத்தும், இனிய குடும்ப வாழ்க்கையும்,மகிழ்ச்சியும் பெருக வேண்டும்.

இவ்வளவு பாசம் நிறைந்த நட்பை இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிறான்.
நன்றி. நலமே வாழ்க

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
மிக மிக நன்றி மா. ஊர்ப்பாசம்,இணைய பாசமாகிவிட்டது.
வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா. என்றும்
வளமுடன் வாழ ஆசிகள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பின் இனிய கீதா மா,
இந்த அன்பு வாழ்த்த்துகள் எனக்கு எப்போதும் துணையாக
இருக்கும். நிறைய எழுதுங்கள். எனக்கும் சொல்லுங்கள்.
மனம் நிறை ஆசிகள் மா.

Bhanumathy Venkateswaran said...

//எத்தனை பெரிய குடும்பம் எனக்கு,நமக்கு கிடைத்திருக்கிறது.// ஆம் இது இணையம் தந்திருக்கும் வரம். வெவ்வேறு ரசனைகள், இருந்தாலூம், ஏதோ ஒரு அன்பு நம் எல்லோரையும் கட்டிப்போடுகிறதே. இறைவனுக்கு நன்றி.