Sunday, September 23, 2018

மஹாலய பக்ஷம்

Vallisimhan
மஹாலய  பக்ஷம் 
ஆரம்பிக்கிறது.

பித்ருக்கள், தேவர்கள்,வசுக்கள் எல்லோரும் நதி தீரத்தில்வந்து காத்து இருப்பார்களாம்.
இந்தப் பவுர்ணமி தினத்திலிருந்து அமாவாசை வரை.

எனக்குத் தெரிந்து தினமும்மே அர்க்கியம் விடுபவர்கள் இருந்திருக்கிறார்கள்.

நம்மைப் பொழிந்து வளர்த்தவர்களு க்கு 
இந்த பக்ஷத்தில்  எள்ளும் நீரும் கொடுத்து 
வணங்கலாம்.
ஏழைகளுக்குத்துணிமணி தானம் ,உணவு தானம் செய்யலாம்.
எல்லாவற்றையும் விட உயிரோடு இருக்கும் முதியவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம்.
இங்கு ஒருவர், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களைக் கண் பரிசோதனை செய்ய அழைத்துப் போய் 
கண்ணாடியும் வாங்கி கொடுக்கிறார்.

பூலோகத்தை விட்டுச் சென்ற உயிர்களுக்கு மட்டுமில்லாமல் இருக்கும் உயிர்களுக்கும் நன்மை செய்யும் 
மனம் நமக்கு வரட்டும்.

No comments:

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...