Blog Archive

Thursday, September 13, 2018

இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்

Vallisimhan
1976 இல் சென்னையே சதம் என்று வந்த நாள் முதல் லஸ்ஸின் நவசக்தி கணபதியே
வாழ்க்கையின் எல்லா நலங்களுக்கும் ஆதாரம்.
கண் முன வந்து போகின்றன சதுர்த்தி அலங்கார மேடையும்
பாடல்களும், சொற்பொழிவுகளும்.
முதலில் குட்டிக் கோவிலாக இருந்த இடம் இப்போது பெரிய மண்டபமாகி வருடங்கள் ஆகிறது.
குட்டி குருக்கள் எல்லோரும் திருமணம்,பிள்ளை குட்டிகள்
என்று பெற்றுவிட்டார்கள். மாறாத இளம் பிள்ளை எங்கள் கணேசன் தான்.
என்றும் செவி மடுப்பான் ப்ரார்த்தனைகளை. எப்போதும் உனக்குத் துணை நான்
என்று சொல்லி என் கடமைகளை நிறைவேற்றுவான்.
அன்பு கணபதியே என்னாளும் உன் நினைவு அகலாமல்
என் புத்தியில் அமர்ந்திரு.
மனம் அலை பாயாமல் எங்கிருந்தாலும் நான் உன்னைக் காப்பேன்
என்று என்னிடம் செய்தி கொடுத்துவிடு.
அம்மாவின் அருமைப் பிள்ளையே அருள் தா.😍🙏🙏🙏🙏

No comments: