Blog Archive

Wednesday, September 19, 2018

சீதை மனம் சிரித்தது...4

Vallisimhan
எல்லோரும் இன்பமாக  வாழவேண்டும்.

   ஆராய்ச்சிகள் முடிய இன்னும் 5 நாட்களே இருக்கின்றன.
சீதாவுக்கு, ரகுராமனிடம் ஏற்பட்ட நட்பு வளர்ந்தது.
அவனைச் சென்னைக்கு வரும்மாறு அழைக்கத் தயக்கம்.
குழுவோடு வந்தவனைத் தனிப்பட்ட முறையில் அழைக்க என்னவோ போலிருந்தது.

காணொளி 
குழுத்தலைவரோடு பேச விரைந்தாள் சீதா.
இவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள்.
நம் சொகைட்டியின் வழியாக இவர்களைச் சென்னை அழைத்தால் என்ன சார். ஹெரிடேஜ் சைட்ஸ் அங்கேயும் இருக்கிறதல்லவா. சென்னை மட்டுமில்லை. உத்தமர் கோவில், தஞ்சாவூர்,
கங்கை கொண்ட சோழபுரம், சித்தன்ன வாசல் இன்னும் எத்தனையோ இடங்கள்
பார்க்கலாமே.
நம் கைலாசனாதர் கோவிலைப் பார்த்து முடிக்கவே ஒரு வாரம் ஆகுமே.
நீங்கள் அவர்கள் குழுத்தலைவரிடம் 
கேட்டுப் பாருங்கள்.
அடுத்த திட்டமாக நாமும் மாரிஷியஸ் போகலாம்
என்று உற்சாகத்தோடு பேசும் சீதாவைப் 
புன்முறுவலுடன் பார்த்தார் குழுத்தலைவர்  பத்மனாபன்.



ஆரம்ப நாட்களிலிருந்து அவளது ஆர்வத்தை மெச்சியவர் அவர்,.
இப்போது ஆராய்ச்சியையும் மீறி அவள் கண்கள் அதிகமாக
ஒளிவிடுவதைக் காணத்தவறவில்லை.
Add caption

யோசிக்கலாம் அம்மா. நான் இன்று மதிய இடைவேளையில் அவரிடம்
இதைக் கேட்கிறேன். ஆமாம் நம் ஊர்ப் பெருமைகள் அவர்களுக்குத் தெரிய வேண்டும்.

உன் தயாரிப்பு எந்த அளவில் இருக்கிறது என்று கேட்டார்.

என்னைப் பொருத்தவரை இது ஒரு சமாதான பூமியாகத் தான் இருந்திருக்கிறது. நான் படித்த புத்தகங்களும் அதை உறுதிப் படுத்துகின்றன.
மொஹஞ்சதாரோ சென்றால் மேலும் ஆவணப்படுத்தலாம், என்றாள்.
உன் தோழன் ரகுராமன் என்ன சொல்கிறான்
என்றதும் திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள் சீதா.
Add caption

அவர் கட்டிட அமைப்புகளின் அடிப்படைகளையும், இவர்களுக்கு இந்தக் கட்டுக் கோப்பு எங்கிருந்து 
கிடைத்தது. அதுவும் ரோமன் நாகரீகத்துக்கு முன்பே தெரிந்த அற்புத மனிதர்களாக இருக்கிறார்களே

என்று, மேலும் அதில் ஆழ்ந்திருக்கிறார். என்று பதில் சொன்னாள்.
மாரிஷியஸ் 
நல்லதும்மா. சரித்திரம் படிப்பதே நம்மைப் பண்படுத்தும்.
வாழ்த்துகள் என்று சொல்லிச் சென்றார்.
சீதையின் மனம் அமைதியில் ஆழ்ந்தது.
ஆராய்ந்தே நட்பைத் தொடர வேண்டும் என்று தீர்மானித்தாள்.
அதில் வெற்றியும் நிச்சயம் என்ற முடிவோடு நிமிர்ந்தவளின் 
முன்னால் ரகுராமன். 
இன்று சாப்பிட வரவில்லையா. do you have date with Arjuna. என்றவனைப் பார்த்து நகைத்துவிட்டாள்.

mm you can say that. He is here// என்று புன்னகைத்த வண்ணம் அவனுடன் நடக்கத் தொடங்கினாள்.
தொடரும்.

No comments: