Blog Archive

Wednesday, January 10, 2018

மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா..

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
 மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம்  மாலே மணிவண்ணா..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தைஎல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன்  பாஞ்சஜன்யமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
  கோலவிளக்கே  கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 முந்தைய பாசுரத்தில் உன்னையே தருவாய் என்று கேட்ட
கோதையிடம் ,இன்னும் என்னவெல்லாம் வேண்டும்
என்று கேட்கிறான்.இந்தக் குழந்தைகளைப் பார்த்து அவனது
 உள்ளம் உவகையில் லயிக்கிறது.
 ஆர்வத்துடன் பட்டியல் இட்டுக் கேட்கிறாள்,.
திருமாலே மணிவண்ணா அழகிய ரூபத்தால் எங்களை ஈர்த்து
உன் சௌலப்ய குணத்தால் ஆலிலைப் பெருமாளைப் போல
எங்களுக்கு வைகுண்டப் பிராப்தியும் கொடுக்கப் போகிறாய்.
இப்பொழுது எங்கள் மார்கழி நீராட்டம், வீதி தோறும்
உன்னைப் பாட, தலைக்கு மேல் ஒரு விதானம், கைகளில் ஏந்த விளக்குகள்,
நாங்கள் வருகிறோம் என்று அறிவிக்க ஒவ்வொருவருக்கும்
பாலன்ன வண்ணத்து வெண்சங்கங்கள், கருடக் கொடி,ஒரு பெரிய பேரி முழக்கம் செய்யும் பறை
எல்லாம் வேண்டும் என்கிறாள்,
இதை எல்லாம் எந்த சாஸ்திரம் பார்த்துக் கற்றாய் என்று கேட்கிறான்
கோவிந்தன்.
நீ இருந்த ஆயர்ப்பாடிக் கோபிகைகள் செய்த அதே நோன்புதான்
எங்களுக்கு மேலையார் சொன்னது என்று பதில் சொல்லி
அருள் செய்வாய் என்று வணங்குகிறாள்.
 ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்.

4 comments:

ஸ்ரீராம். said...

__/\__

வெங்கட் நாகராஜ் said...

மாலே மணிவண்ணா.... நல்ல பாசுரம். விளக்கமும் நன்று.

தொடர்கிறேன் மா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பாசுரம் கண்டேன், மகிழ்ச்சி.

Anuprem said...



ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்........

அருமையான விளக்கத்துக்கு நன்றி மா...