Thursday, March 14, 2013

வீரத்தமிழன்....கட்டுரை 'பழைய விகடன்'

 



 தமிழ்ப் புலவர் ஒருவர் மன்னனைப் பாட   வந்தவர் .
பாடி முடித்து , உணவு உபசாரங்களை ஏற்று


சற்றே கண்ணயர் அ  ஒரு இடம் தேடுகிறார்..
அப்பொழுது கண்ணில் படுகிறது
ஒரு பூப்போல மஞ்சம்.
சுற்றுமுற்றும் பார்க்கிறார். யாரும் இல்லை.
ஓஹோ  இது ஓய்வெடுக்க மன்னன் செய்த ஏற்பாடு என்று நினைத்த வண்ணம் அதில் சாய்கிறார்.

இளந்தென்றலும்,பஞ்சு மெத்தையும் சேர்ந்து தாலாட்ட புலவர் எளிதில் உறக்கவசப்படுகிறார்.
சிறிது நேரத்தில் காவலாளிகள் அங்கேவருகிறார்கள்.
புலவரைப் பார்த்து அதிசயமும்
அதிர்ச்சியும் அடைகிறார்கள்.

அது அரசனுடைய முரசுக் கட்டில் .
அரசன் அமரும் ஆசனத்துக் கேற்ற மரியாதை இதற்கும் உண்டு.
  அரசானின் வெற்றிகளை அறிவிக்கும் முரசு வீற்றிருக்கும் கட்டில்/
அதில் போய் ஒரு ஏழ்மைப் புலவன் உறங்குவதா.
உள்ளம் படபடக்கச் செய்தியைச்  சொல்ல அரசனிடம் விரைகிறார்கள்..

மன்னன்  அவர்கள் எதிர்பார்த்தபடியே சினம் கொள்கிறான்.
விரைந்து  முரசிருக்கும் மண்டபத்துக்கு வருகிறான்.
அங்கெ கண்ட காட்சி  அவனை அமைதியடையச் செய்கிறது.

காவலர்களை அங்கிருந்து   செல்லும்படி உத்தரவிடுகிறது.
நீராடச் சென்ற வெற்றி முரசும்  திரும்புகிறது. மரியாதைக் குரிய இடத்தில்
அதை   பத்திரமாக வைக்கிறார்கள்.

அரசன் கையில் சாம்ரத்தை ஏந்தி புலவருக்கு வீசுகிறான்.

புலவரும் திடீரென்று விழித்துக் கொள்கிறார்.
பக்கத்தில் அரசன்.
அடடா இதென்ன அபசாரம்.  மன்னா என்ன  செய்கிறீர்கள்?
தமிழுக்கு மரியாதை செய்கிறேன் என்று பொறுமையாகப் பதிலளிக்கிறான்

சேரமன்னன்,சேரமான்.
சிறந்த வீரத் தமிழ் மன்னர்களில் ஒருவன்.
அப்போதெல்லாம் கேரளம் இப்போது அழைக்கப் படுமிடங்களில்
தமிழ் பேசும் சேர மன்னர்களே ஆண்டுவந்தார்கள்..

இந்தச் சேரனுக்குத் தகடூர் எறிந்த பெரும்சேரல் இரும்பொறை  என்ற சிறப்புப் பட்டமும் உண்டு,.

ஆமாம்  அதே தகடூர் அதியமான், நெல்லிக்கனியை ஔவையாரிடம் இருந்து பெற்ற பாக்கியவான்.அதியமான் நெடுமான் அஞ்சி..

அவனை வென்ற வீரன் இந்தச் சேரமன்னன்.

அவன் வீரமும் தமிழுக்கு அடிபணிந்தது என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
உங்கள் எண்ணம் என்னவோ. ஆனால் இதுபோன்ற கட்டுரைகளால் பலன் அடைந்தவர்கள் பல பேர் இருப்பார்கள்.

வள்ளல் அதியமானை  இந்த அரசன் ஏன் போருக்கு அழைத்துவென்றான். ?
அதுதான் அரச லட்சணமோ.
சரித்திரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
பெருஞ்சேரலிரும்பொறையும்    அதியமானும்   தோழர்களாக இருந்திருந்தால்
நமக்குக் காவிரிப் பிரச்சினை வந்திருக்காதோ!!!!










எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Sunday, March 10, 2013

மனம் ஒரு குரங்கு

ராம   நேயனுக்கு நமஸ்காரங்கள். உங்களைச் சொல்ல்வில்லை ஐயா.

உலகம் முழுவதும்    வித விதமான மனிதர்கள்.
சிலருடன்  மனம் உருகும் .
சிலரிடம் தள்ளி இருக்கும்.

பாராமல்   மனங்கள் இணையும் இணையம்.
பார்த்துப் பழகி மனத்தை அணுகி
நட்பாகும் இதயங்கள்.

பார்த்துப் பழகி   உறவாகி
மனதை அறிந்த துணை
துணையோடு வரும் உறவுகள்.

சில ஒத்துப் போகும் சில விலகி நிற்கும்.
பெரியோரின் அறிவுரைப் படிக் குற்றம் பார்க்காத சுற்றமாக
இருக்கவே    நம் முயற்சி.



நீ என்ன பழங்கால   நீல வண்ணக் கண்ணா வாடா அண்ணியா.:)
 அப்படி இருந்தால் இறந்த பிறகு கௌரவிக்கப் படுவாய்.

நீ என்ன  தருகிறாயோ அது உனக்கு மீண்டும்  வரும்.

ஊசலாடுவதில் சிலசமயம் பழங்கள்
சிலசமயம் முள் நிறைந்த கொப்புகள்

இரு புறத்திலும் சமமென  நினை.
வந்துசேரும் நிம்மதி.
அகங்காரத்தில்.................................................
வீழாமல் வாழ்க்கையைத் தொடருவாய்.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, March 09, 2013

பிழையாகப் பதிவான பதிவு



 ப்ளாகர்  ரீடரில்
திருமதி சம்பத் அவர்களின் படம் மட்டும் போட்டு பதிவில்லாமல் இருக்கிறது. அதை எப்படி நீக்குவது என்று தெரியவில்லை.
படிக்க வருபவர்கள் மன்னிக்கணும்.



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

,மகளிர் முன்னேற்றத்தை விரும்பிய மாமியார்






சக்கர வண்டியில் ஏற  மறுத்த திடம் வேறயாருக்கும் வராது.என் அன்புள்ள அம்புலு அம்மா




அற்புதமான     மங்கை
சாதனை புரிந்தவர்,
எட்டுவயதில் திருமணம் புரிந்து
எட்டாம் வகுப்பு வரை  படித்து
மாமியார் மாமனார் காட்டிய வழியில்

சேலம் சென்று புதுக் குடித்தனம் ஆரம்பித்து
சிறிய அளவில்  ஆரம்பித்த  லிஃப்கோ கரி வியாபாரத்தைப் பெருக்கி,
தன்முனைப்பால் மகளிர் அணியைத் திரட்டி

சாரதா  பள்ளியின் மேலாளராகத் திறம்பட நடத்தி
போர் முனைத் தீவிரத்துடன்
வருந்திய   மகளிர் விஷயங்களில் தலையிட்டு
ஆயிரக் கணக்கான  வழக்குக்களைத் தீர்த்து வைத்தவர்

என் சிறிய மாமியார் திருமதி அலமேலு சம்பத்.

கொண்டாடப் படவேண்டிய மனுஷி.
தன் 92 வயதில் சென்ற சனிக்கிழமை அன்று
இயற்கை எய்தினார்.

சேலத்தில் இவரைத்  தெரியாதவர் இருக்க முடியாது.
அதற்குச் சாட்சி  அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை.

அவருடன் இருந்தால் நம்மையும் தொற்றிக் கொள்ளும்
அந்தக் கம்பீரமும் உற்சாகமும்.
ஒரு நொடி   கூட    உட்காராமல் சுறுசுறுப்பாக இயங்கி
அஷ்டாவதானியாகச் செயல் பட்டவர்.
மற்றவர்களையும் இயங்க வைத்தவர்.

பேரன்,பேத்திகளிடம்  கண்டிப்பு,செல்லம் என்று சரியான விகிதத்தில்

வழங்கியவர்.
திறமை கண்ட இடத்தில் பாராட்டாமல் இருக்கமாட்டார்..
அவர் உண்மையாகவே  ஒரு சகாப்தம் தான்.

எங்கள் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்த அன்பு அம்புலுஅம்மாவுக்கு அஞ்சலிகள்.





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, March 07, 2013

மார்ச் மாதப் பிட் போட்டிக்கு இயற்கை வண்ணங்கள்

எத்தனை ரகசியங்கள் என்னுள்
காலம் அரித்தாலும் நிலைத்து நிற்பேன்
பசுமை இவர்களுக்கு வாய்த்த வாழ்த்து
நாளை மீண்டும் பார்ப்போமா
சூரியப் பழம்
இது சாயுங்காலமோ
நயாகராவின் வண்ணங்கள்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Tuesday, March 05, 2013

பாஸ்கரனின் அம்மா'''எழுதியவர் பிரேமாகிருஷ்ணமூர்த்தி

G
 இது  புதுவிதமான  ஆனாலும் பழைய கருத்து கொண்ட கதை.
சீதா  ,அவளுக்குத்    நடந்து,கணவனின்  துர்க்குணங்களை அனுசரித்து   வாழ்வு நடத்தும்போது  குழந்தை  தரிக்கிறாள்.
  பிறக்கும் போது  சீதாவின்  நரம்புகள் பாதிக்கப் பட்ட நிலையில் பிறந்த குழந்தையும் இறந்துவிடுகிறது.

ஹிஸ்டீரியா வியாதி தாக்குகிறது.

  உடல் ரீதியாகப் பாதிக்கப் பட்டபோது,அவள் கணவனுக்கு அவளை ஒதுக்கிவிடத் தோன்றி  வாரணாசிபாளையத்திலேயே   கொண்டுவந்து விட்டுவிடுகிறான்.
சிலமாதங்களில் முழுக் குணம் அடைந்தாலும் அவளை ஏற்க  மறுக்கும் கணபதி  திரும்பிப் பார்க்கவில்லை.
கணவனால் கைவிடப்பட்ட  பெண்மணி. பிறந்தகத்திலியே விடப்பட்ட வாழ்விழந்தவள் என்று அழைக்கப் படுபவளாகிறாள்..

அவளைக் கைவிட்ட கணவன் இன்னோரு பெண்ணை மணந்து
மும்பையில்  குடித்தனம் வைத்து  ஐந்தாறு   குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறான்  ..

சீதா அம்மாவீட்டில் அனுசரித்துக் கொண்டு மனம் நைந்துபோனாலும்
கோவில்,நல்ல புத்தகங்கள்,கைவேலை என்று தன் வாழ்க்கையை
நெறிப் படுத்திக் கொள்கிறாள்.
அவள் ஒரே பெண்தான் அந்தவீட்டில். தந்தையும் இவள் மணம் முறிந்த போதே இறைவனடி சேர்கிறார். தாய் மட்டும்
துணையாக இருக்கிறாள்.

பத்தொன்பது வருடங்கள் இவ்வாறு கழிந்த நிலையில்
ஒரு கண்ணயரும் மதிய வேளையில் தபால் ஒன்று வருகிறது.

அதப் பார்த்த மாத்திரத்தில் கணவனின் கையெழுத்தைப் புரிந்து
கொண்டுப் படபடப்புடன் பிரிக்கிறாள்.
அவள் அம்மா பெயரில் கடிதம் ஆரம்பிக்கிறது.
மதிப்புக்குரிய   ருக்மணி அம்மாவுக்கு தங்கள் மாப்பிள்ளை கணபதி எழுதும் அவசரக் கடிதம்.
இங்கே என் மனைவி கடைசிப் பிரசவத்தில் எங்களைத் தவிக்கவிட்டுப் போய்விட்டாள்.
இரண்டு மாதக் குழந்தை தாயின் அரவணைப்பில்லாமல் நோயுற்று வருந்துகிறது.
இந்தக் கடிதத்தை எழுதின கையோடு நனும் என் மூத்த பையனும் கிளம்பி வருகிறோம்.
தாங்கள் சீதாவை எங்களுடன் அனுப்ப வேண்டும். பழையதெல்லாம் மறந்து
என்னை மன்னித்து  என் குடும்பத்தைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
கணபதி///////

இதைப் படித்த சீதாவுக்கு உடலெல்லாம் நடுங்குகிறது..
சத்தம் கேட்டு வந்த அம்மாவிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டுச் சமையலறைக்குப் போய்விடுகிறாள்.
ருக்மணி அம்மாளும் படித்துவிட்டு வயதான சரீரம் தளர்வடைய,மகளைத் தேடி வருகிறாள்.
'என்னடி இது புது சோதனை?''

எனக்குத் தெரியவில்லை என்றபடி சுருங்கிக் கொள்கிறாள்.கண்ணிலும் முகத்திலும் படபடப்பும் சோகமும்.

இதற்குள் அக்கம்பக்கத்துவீட்டுக்காரகளுக்கு விவரம் பரவி
பத்துப் பதினைந்து பெண்மணிகள் வந்து கணபதியைக் கண்டபடித்
திட்டித் தீர்க்கிறார்கள்.
தங்கள் ஊர்ப் பெண்ணை வதைத்தவனாயிறே!

இரண்டு நாட்களில்  கணபதியும் அவரது முதல் மகன் 16 வயது
பாஸ்கரனும் வருகிறார்கள்/

சீதா,அடுப்பங்கரையிலிருந்து  வெளியே  வரவில்லை.
கதவிடுக்கிலிருந்து ஒருகணம்  கணவனைப் பார்க்கிறாள். முகத்தில் கம்பீரமும் அகம்பாவமும்  தெரிகின்றன.

ஓஹோ!  அந்த சுயநலம் இன்னும் போகவில்லை'
என்று மீண்டும் உட்கார்ந்துவிட்டாள்.

வந்திருந்தவர்கள் அனைவரும் கணபதையைக் கேட ஆரம்பிப்பதற்கு முன்னால்
அவரே  பேசுகிறார்.
நான் தவறு இழைத்தவந்தான்.
ஆனால் இப்போது   என் வயது வந்த மகள், அவளது தம்பிகள், கடைசியாகப் பிறந்த  ஆறு மாதக் குழந்தை எல்லோருமே  கஷ்ட திசைக்கு வந்துவிட்டோம்.
உங்கள் தயவில் தான் என் குடும்பம் தழைக்கவேண்டும்'என்று சுருக்கமாகச் சொல்லிமுடிக்கிறார்.
வயதின் அடையாளங்கள் உடலிலும் முகத்திலும் தெரிகின்றன.

ருக்மணி அம்மாள்
சொல்லால் பாய்கிறாள்.
இப்போது சீதா  எதற்கு உங்களுக்கு.
உங்களுக்குக் கல்யாணம் செய்து கொள்ளத் தெரியுமே.
பணம் இருக்கும் போது இன்னோரு மனைவி கிடைக்க மாட்டாளா.
நாங்கள் சீதாவை அனுப மாட்டோம். அவளை அழைத்துப் போய் மீண்டும் நட்டாற்றில் விடமாட்டிர்கள் என்று என்ன  நிச்சயம்'
என்று ஆற்றாமையோடு முடிக்கிறாள்.

கணபதி மௌனமாகிறார்.
என் குடும்பம் பாழடைந்து கொண்டிருகிகிறது. அங்கே குழந்தைகள் என்ன பாடு படுகிறார்களோ.
முடிந்தால்    சீதாவை அனுப்புங்கள் நாங்கள் பிழைப்போம்.

சீதா உள்ளே தவிக்கிறாள்.
குழந்தைகள் என்ன பாவம் செய்தது.
இருந்தாலும் பன்னிரண்டு வருடங்கள் பிரிந்தாலே
கோவிலில் தான் பார்க்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறதே!
என்ன செய்வேன்.

இப்படி யோசிக்கும்பொதே அம்மா என்றோரு அறைகூவல் அவள் காதில் வந்துவிழுகிறது.
திடுக்கிறது அவள் உடலும் மனமும். இறந்து போன தன் குழந்தைதான் அழைப்பதுபோல  பிரமிக்கிறாள்.
எட்டிப் பார்க்கிறாள்.
அங்கே வேட்டியும் சன்னமான சட்டையும் போட்ட பாஸ்கரன் கைகூப்பி நிற்கிறான்.

அம்மா!எங்களைக் காப்பாற்றுங்கள்.
தங்கை தம்பிகள் சின்னப் பாப்பா எல்லோரும் உங்களை நம்பித்தான் இருக்கிறோம்.
வாருங்கள் அம்மா. எங்கே இருக்கிறீர்கள்?
என்று கண்ணீர் தாரை தாரையாக  விழ
கைகளை நீட்டி நிற்கும் பிள்ளையைப் பார்க்கிறாள்.

இதோ இருக்கேன் அப்பா.
உங்கள் அம்மா. உன்னோடு உன்னை நம்பி வருகிறேன்.
என்று வெளியே  வருகிறாள்.

கணபதியும் பார்க்கிறார்.
நலிந்த உருவமும் ,முகத்தில் தவம் செய்த வலிமையுமாகச் சீதா தென்படுகிறாள்.
அவர் கண்களிலும் அன்பு தெரிகிறது.
உடனே சுதாரித்துக் கொள்கிறாள்   ருக்மணி அம்மாள்.
சரி இதுதான் தீர்ப்பு என்றால். உடனேஎ அகிலாண்டேஸ்வரி கோவிலுக்குப் போய் வாருங்கள். சாப்பிட்டுவிட்டு ஊருக்குக் கிளம்புங்கள் என்று

ஆணையிடுகிறாள்.
இருந்த ஒரு நல்ல படவையைக் கட்டிக் கொண்டு
கோவிலுக்குப் போகும் சீதாவை பலவித வம்புக் கண்ணோட்டதில் எல்லோரும் பார்த்தாலும்,
சீதையின் மனதில் மன்னிப்பின் மகத்துவம்

முகத்தில் சுடராக    வெளிப்படுகிறது.
நண்பர்களே.
இப்படியும்  ஒரு கதை.
அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு வாழ்வு,









எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, March 02, 2013

"புதுவாழ்வு"...எழுதியவர் ஸி.ஆர்.ராஜம்மா

வாழ்வு பிறக்கிறது.

அந்தக் காலத்தில் 40களிலிருந்து ஐம்பதுகள் வரை  சமூக அமைப்புகள்

எந்தவிதமாக    இயங்கி வந்து இருக்கின்றன என்று ஒரு மாதிரி
புலப்படுகிறது.

எண்பது சதவித நேர்மையும்   இருபது சதவிகித  அநீதிகளுமாக நடந்திருக்கவேண்டும். குடும்பக் கதைகளைப் படிக்கும் போது நேரே பார்ப்பது போல நினைக்கத் தோன்றுகிறது.
பழைய நினைவுகளைக் கிளறிவிடுகிறது.

நாராயணன்  23 வயது வாலிபன்.
தாயில்லாதவனை வளர்த்தது அன்பு மிக்க சித்தி,அப்பாவின் இரண்டாந்தாரம்.

அவள் மேல் அவ்வளவு பாசத்தோடு இருப்பவனுக்குத் தந்தை திருமணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார்.

சேந்தமங்கலத்தில்   பெண் பார்த்து மணமும் முடிகிறது.
பதினைந்து வயதே  ஆன பங்கஜம்   பக்குவப்படவில்லை.
பெரியவளானதும் உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லி

விடுகிறார் அவள்  தாய்மாமன்.அவளை வளர்த்தவர்..
நாராயணனின் தந்தைக்கு வருத்தம். மணம் முடித்தும் மருமகள் வீட்டுக்கு
வரவில்லையே என்று.

நோய்வாய்ப்படுகிறார். ஆனால் சித்தியின் அன்பான கவனிப்பில்
தேறிவிடுகிறார்..

அதிசயத்திலும் அதிசயமாக அவர்களுக்கு   ஒரு குழந்தையும் பிறக்கிறது.
அழகான தம்பியிடம் நாராயணன் அன்பைச் சொரிகிறான்.

தம்பிக்கு மூன்று வயது இருக்கும் போது தந்தை மறைகிறார்.

அப்போது துக்கத்துக்கு வந்த  பங்கஜத்தின்மாமா
'மாப்பிள்ளையிடம் சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு தங்களோடு வந்துவிடுமாறு சொல்கிறார்.

உங்க சித்தி மனம் எப்படி மாறுமோ. பங்கு கேட்பாள்.
எதற்கும்  தமிழ் வருஷப்பிறப்பிற்கு  ஊருக்கு வாங்க  ன்னுட்டுப் போய்விடுகிறார்.
நாரயணனுக்கு மூக்கு மேல்  சினம் வந்தாலும் இளம் மனைவியைப் பார்க்கும் ஆர்வத்தில் .  வருவதாக ஒத்துக் கொள்கிறான்.
பங்கஜத்தின்   மாமா

கொஞ்சம் பேராசை பிடித்த ஆசாமி.

நாராயணன்  இந்தத் தடவை மனைவியைச் சந்திக்க முடிகிறது.
அவளோ  செழுமையான பூங்கொடியாகச் சுற்றி வருகிறாள்.
.
இவன் ஒன்றும் அறியாமல்,அவளைப் பார்க்கும் தருணத்தில் இன்னும் இங்கே ஏன் இருக்கிறாய்.எனக்கு நல்ல வேலை  ஆகிவிட்டது. என்னோடு கிளம்பி வா என அழைக்க,
அவள் கிளிப்பிள்ளை போல''நான் வரவில்லை. மாமா சொல்வது போலச் சொத்தைப் பிரித்துக் கொண்டு, வந்துவிடுங்கள்'என்று பார்க்கும் போதெல்லாம் சொல்கிறாள்.

இவன் வருத்தமும் சினமும் மேலிட இனி  உங்களுக்கும் எனக்கும் பந்தம் இல்லை,என்று சட்டென்று கிளம்பி வந்துவிடுகிறான்.
மருமகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிற்றன்னை,
தன் மகனின் துயரம் கண்டு   வருந்தியே உயிர் விடுகிறாள்.

அதற்குப் பிறகு அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல்
நிலபுலன்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு,வீட்டை விற்றுப் பணத்தையும் எடுத்துக் கொண்டு  தான் வேலை  செய்யும் சென்னைக்கே,
குட்டித் தம்பியுடன் வந்துவிடுகிறான். இரண்டு வருடங்கள் கழிகின்றன.
தம்பியை அருகில் உள்ளப் பாடசாலையில் முதல் வகுப்பில் சேர்க்கிறான்.


நன்றாகச் சமைக்கக் கற்றுக் கொண்டுத் தானும் உண்டு
குழந்தைக்குச் சாதம் ஊட்டி,அன்பாக வளர்த்து வருகிறான்.

பக்கத்துவீட்டுப் பாட்டி இந்தக் குழந்தையை,நாராயணன் வேலையிலிருந்து வரும் வரை பார்த்துக் கொள்கிறாள்.
ஒரு சனிக்கிழமை  .அடுத்தநாள் வருடப் பிறப்பு.
அண்ணா பாயசம் செய்து தரயா. மணி எல்லாம் சாப்பிடுவானாம் நாளைக்கு என்கிறது    பையன்.
அதுக்கென்னடா நாம ஓட்டலுக்குப் போய் ஜம் ஜம்னு சாப்பிடலாம்
என்று தம்பியை அணைக்கும் போது குழந்தை முகம் சிணுங்குகிறது.
 குழந்தைக்கு  அவசரமில்லாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம்   என்று   அவனை அழைத்துச்   சட்டையைக் கழட்டுகிறவன்  திடுக்கிறான்.
குழந்தையின் முதுகில்  பழுப்பு நிறத்தில் கோடு போலத் தெரிகிறது  காயம்.
ஏதடா  இது ,யார் உன்னை அடித்தது
என்று  கேட்கிறான்.
குழந்தை       மென்று முழுங்கியபடி  டீச்சர்தான் அடித்தார் அண்ணா
என்கிறான்.  அவ்வளவுதான்!!
ஆஹா  குழந்தை முதுகில் கைவைக்கப் போச்சா?

இதோ உடனே  பள்ளித் தலைமை ஆசிரியரிடம் போய்  அவளை உண்டு இல்லை என்று செய்கிறேன் பார்.
என்றபடி தன் சட்டையை மாட்டிக் கொள்கிறான்.

டீச்சர் நல்ல டீச்சர் அண்ணா. ஒண்ணும் பண்ணாதே  என்று கெஞ்சுகிறது குழந்தை.
ஏன் நீ என்ன செய்தாய் இத்தனை அடிப்பதற்கு?
ஒரு பையனோட புது பென்சிலை எடுத்தேன் அண்ணா.
அதுக்கு இப்படி அடிப்பதா
இல்லை இரண்டாந்தரமும் எடுத்து ஒளித்து வைத்தேன்'

என்ன இருந்தாலும் அவள் உன்னை அடித்திருக்கக் கூடாது.
நீ வா அந்த டீச்சர் வீட்டுக்கே போகலாம். தெரியுமா இடம்?
ஓ.தெரியுமே பக்கத்துவீட்டு    பாலு  கணக்குக்  கத்துக்கொள்ள டீச்சர் வீட்டுப் போவான். நானும்போயிருக்கேன்.

நாராயணனின் முகம்  சுருங்கியது. என்ன வெல்லாம் எனக்குத் தெரியாமல் இந்தக்  குழந்தை பண்ணுகிறானோ  என்று யோசிக்கும் போதே டீச்சர் வீடு வருகிறது.


ஒரு வீட்டின்   பல குடித்தனங்களுக்கு நடுவே
ஒரு சிறிய பகுதியைத் தம்பி காண்பித்ததும்
புயலாக    உள்ளெ நுழைகிறான்.
திடுக்கிட்டு எழுந்திருகிறாள்    ஒரு இருபது வயதுப் பெண்.
இப்போது நாராயணன்  முறை  அவளைப் பார்த்து வெறிக்கிறான்.
பங்கஜம்!
இவள் எங்கே இங்க வந்தாள்
என்று நினைத்தபடி ஏன் குழந்தையை இப்படி அடித்தாய்
என்  தம்பி என்றதாலா?
என்று கேள்விகளை வீசுகிறான்.

அவள் அவன் இருக்க ஒரு நாற்காலியைப்  போட்டுவிட்டு
வா கண்ணா  என்று குழந்தையை அழைக்கிறாள்.

அவனும் அவள் புடவையோடு ஒட்டிக் கொள்கிறான்.

இன்னும் கோபமடையும் நாராயணன்  ஏன் அடித்தாய். பிஞ்சு முதுகு பிளந்து போயிருக்கும்.!!

முதலில் நான் சொல்வதைக் கேளுங்கள்.
அவன் தவறு என்று தெரிந்தே செய்தான். மெதுவாகத் தான் அடிக்க நினைத்தேன்.
பலமாகப் பட்டு விட்டது.
கண்ணா வலிக்கிறதா.   என்றபடி குழந்தையை  அணைத்துக் கொள்கிறாள்.

நான் இந்த ஊருக்கு இரண்டு மாதங்கள் முன்னால்தான் வந்தேன்.
நீங்களும் இங்கே இருப்பீர்கள் என்று தெரியாது.......''

''என்ன ஆச்சு உங்க மாமா மாமிக்கு.''

அவர்கள் செய்கை பிடிக்காமல் தான் தனியே ஹாஸ்டலில் இருந்து படித்துப் பிறகு இந்த ஆசிரியைத் தொழிலில் சேர்ந்தேன்.

அவர்களுக்கு ஏகப்பட்ட கடன்.
என்னை மிகவும் தொந்தரவு செய்து  உருவேற்றி  உங்களிடம்  ஒப்பிக்கச் சொன்னதை அப்படியே உங்களிடம் சொன்னேன்.

இப்போதுதான்  நான் செய்த தவறை உணர்கிறேன்.
என்னை மன்னியுங்கள் என்று மெதுவாகச் சொல்கிறாள்.
இப்போதும் அவர்களுக்கு என் சம்பாத்தியத்தில் ஒரு பங்கை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்   என்றும் சொன்னாள்.

குழம்பியபடியே வீடு திரும்பும் நாராயணன் பழையதையெல்லாம் யோசிக்கிறான்.
அடுத்தநாள் புத்தாண்டாக துன்முகி பிறக்கிறது.மன்மத வருடம் முடிகிறது.

சற்றுத் தாமதமாக எழுந்திருக்கும்   கண்ணனின்  காதில் அண்ணாவும் இன்னோருவரும் சிரிக்கும் ஓசை கேட்கிறது.
டீச்சர்  என்று விளித்தபடி  ஹாலுக்கு ஓடிவருகிறான்.
அங்கே நின்று பேசிக்கொண்டிருக்கும் டீச்சரைப் பார்த்து  ஆச்சரியப்
படுகிறான்.

இங்கே வா கண்ணா என்கிறாள்  அவள். அண்ணாவைத் திரும்பிப் பார்க்கும்
கண்ணனிடன்
நாராயணன் இனிமேல் இது மன்னி டா. டீச்சர் இல்லை. என்று சிரிக்கிறான்.
கண்ணனுக்கு உறவு புரியாவிட்டாலும் பிடித்திருக்கிறது.
மன்னி பால் பாயசம் செய்கிறாயா என்றபடி அவளை அணைத்துக் கொள்கிறான்.
அவளும் அவனைக் கட்டி அணைத்து நிறையச் செய்து தருகிறேனடா
'என்று முடிக்கிறாள்.
கொஞ்சம்  நீண்ட கதைதான். நேற்று ஆரம்பித்து இன்று முடிக்க முடிந்தது.
சி.ஆர்.ராஜம்மாவின் கதைகள் எனக்கு மிகவும்    விருப்பம்.

.





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...