Friday, October 10, 2008
Thursday, October 09, 2008
Tuesday, September 30, 2008
வருமுன் காத்தல் மாந்தருக்கு அழகு





அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.
நன்மை தழைத்திங்கு நானிலம் பிழைத்திட வந்திடுவாள் பராசக்தி.
முந்தின பதிவில் இதயப் பரிசோதனை செய்து கொண்டதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
இன்றோடு அந்த மலிவு விலை சோதனைக் காலம் முடிகிறது.
அதாவது 300 டாலர் கொடுக்கவேண்டிய இடத்தில் நூற்றம்பது டாலரோடு முடிந்தது.
மருந்த மறந்து நான் நயகரா போனது நினைவு இருக்கலாம். அப்போது ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதிக் கொடுத்து என்னைக் காப்பாற்றியவர்.:)
அவருக்கு நன்றி சொல்லிப் பணமும் கொடுக்கப் போனபோதுதான் எனக்கு இதய முப்பரிமாண சோதனைக்கு சீட்டு எழுதிக் கொடுத்தார்.
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, இதயபாதிப்புக் கட்டாயம் வரும்.முன்னெச்செரிக்கையாக இருப்பது நல்லது என்றுதான் அவர் சொன்னார்,.
நான் பண செலவை யோசித்தபோதுதான், வருமுன் காப்பது நல்லது என்று தோன்றியது.
ஏனெனில் எங்கள் வீட்டில் எல்லோருக்கும்(பிறந்த வீட்டில்) இந்த இதயம் சோதித்துவிட்டது.
பெண்ணிற்குக் கவலை.
அவள் இணையத்தில் தேடியபோது எட்வர்ட்ஸ் ஆஸ்பத்திரியில்
இந்தச் சோதனை செப்டம்பர் 30 வரை வெறும் 150 டாலருக்குச் செய்து கொடுப்பதாகச் சொன்னதும், உடனே பதிந்து கொண்டாள்.
போயாச்சு,வதாச்சு.
இப்போது நிலைமை என்னவென்று தெரியும். அதற்கேற்ற மருந்துகளும் கொடுத்துவிட்டார்கள்.
இன்ஸுரன்ஸ் செய்திருக்கிறோம்.
இந்த செகப்பிற்கு ரி எம்பர்ஸ் செய்ய மாட்டார்களாம்.
பரவாயில்லை.
இந்தியாவில் செய்திருந்தாலும் இதே செலவுதான் ஆகியிருக்கும்.
நான் இவ்வளவு விலாவாரியாக இதை எழுதுவதற்குக் காரணமே
சில உறவுகள் ,ஏன்யா, சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிற என்று
என்னைச் சலித்துக் கொண்டதுதான்.
இந்தச் சோதனையை நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் செய்து கொள்ளலாம்.
ஊசி, இந்த இதயத்துக்குள்ள செலுத்தற சாயம் அதெல்லாம் கிடையாது(ஆஞ்சியோ கிராம்)
ஒரு பத்து நிமிடம் சோதனைக்குப் போய்விட்டு,கேள்விகளுக்குப் பதில் சொல்லி வீட்டுக்குத் திரும்பி விடலாம்.
இதுதானப்பா விஷயம் சரியா.
Sunday, September 28, 2008
இந்த நாள் நல்ல நாள்



நிறைய விஷயங்கள் கண்ணில் பட்டது.
நல்லவங்க பிறந்திருக்காங்க.
இந்த வருடம் இன்னிக்கு மஹாலய அமாவாசை. நவராத்திரிக்கு ஏற்பாடு செய்கிற நாள்.
சென்றவர்களை நினைத்து வணங்கும் நாள்.
லதா மங்கேஷ்கர் பிறந்த நாள்.
இன்னும் கூகிளில் தேடினால் ஏகப்பட்ட பிரபலங்கள்,நடிக நடிகையர்
பிறந்திருக்கிறார்கள்.
அந்தக் கால கனவுக்கன்னி ப்ரிஜிட் பார்டொ பிறந்து மயக்கி இருக்காங்க.
தி.ரா.ச சார் 100ஆவது பதிவு போட்டு இருக்கிறார்.(கௌசிகம்)
இயற்கை, தமிழ்,சினிமா,சிவாஜி கணேசன்,மகள்,பெற்றோர்,அக்கா,அண்ணா,மனைவினு எல்லோரையும்,எல்லாவற்றையும் நேசித்த,
வாழ்க்கையை ரசித்த என் தம்பியும் பிறந்தான்.
இன்று அவனுக்கு 56 வயது பூர்த்தியாகிறது.
நீ கொடுத்த,காட்டிய அன்புக்கும், செய்த உதவிகளுக்கும் நன்றி தம்பி.
இன்னும் ஒரு உதவி செய்ய நீ மறந்துவிட்டாய்.
இன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்திருக்கலாம்.
வாழ்த்துக்களுடன்,
உன் அன்பு அக்கா.
Friday, September 26, 2008
உள்ளத்தினுள்ளெ ஒளிந்திருப்பது ஒன்றல்ல.
Good,bad ugly cholestrols
சாப்பிட வேண்டிய பதார்த்தங்கள்
ஃப்ளாக்ஸீட்

நீல பெர்ரி

சிவப்புத் தக்காளி

நம்ம இருதயம்.(என்னுடையதல்ல)
சாப்பிட வேண்டிய பதார்த்தங்கள்
ஃப்ளாக்ஸீட்
நீல பெர்ரி

சிவப்புத் தக்காளி

நம்ம இருதயம்.(என்னுடையதல்ல)
பயமில்ல,
ஐந்து நிமிடம்தான்.என்ன இருக்கு,என்ன அதிகமா இருக்கு......
இதெல்லாம் டைப் செய்து கம்ப்யூட்டரில் ப்ரிண்ட் அவுடெடுத்த்க் கொடுத்துவிட்டார்,.
என்னோட இருதயத்துக்கு இப்போது 70 வயதாம்:)
இந்தக் கால்ஷியம் கொஞ்சம் அதிகமா இருக்காம்.
அது இருதயத்தோட இடது பக்கத்தில நாலு இடத்தில இருக்காம்.
சரிப்ப்பா அது மாட்டு ஒரு ஓரத்தில இரூக்கட்டும் .இனிமேகாஅல்ஷியம் மாத்திரை சாப்பிடலைன்னு சொன்னேன்.
அதுக்கு அவங்க நாங்க சொல்ற கால்ஷியம் வேற.
நீங்க சர்க்கரையை விட்டீங்க,இப்ப உப்பு,சிகரெட் எல்லாம் விட்டுடுங்கன்னு சொன்னாங்க,.
சரின்னுட்டேன்.
நமக்குத்தான் அந்த வாசனையே பிடிக்கிறதில்லையே:)
ஒரு ஹைரிஸ்க் பட்டம் போட்டு 150 டாலர் வாங்கீக் கிட்டு,
ம்ம்,ஜாக்கிராதையா இருங்கனு அனுப்பிட்டாங்க.
அது வெள்ளைக்காரங்க ஆஸுபத்திரி அப்படித்தான் சொல்லுவாங்க,
அதூக்காக நம்ம இந்திய வம்சாவளி வைத்தியரிடம் போனோம்.
அந்த அம்மா, ரெகார்டெல்லாம் பார்த்துட்டு
ஆமாம்மா,கொலஸ்ட்ரால் கொஞ்சம் நிறைய இருக்கு.
அதுக்கு மருந்து கொடுக்கிறேன்.
தினம் ஒரு மணி நடங்க.
பழம் சாப்பிடுங்க. தட்டை,முறுக்கு,ஊறுகாய் எல்லாம் வேண்டாம்.(ஹையோ)
பழுப்பு அரிசி,சப்பாத்தி இதெல்லாம் ந்நிறையச் சேர்த்துக் கோங்கன்னு ஆதரவா விளக்கினாங்க.
என்ன இருந்தாலும் நம்ம வைத்தியர் மாதிரி வருமா சொல்லுங்க:0)
சரின்னு வீட்டுக்கு வந்தா,சென்னையிலிருந்து வந்தவங்க, தேன்குழல்,
சீடை,தட்டை எல்லாம் ஆசையாக் கொண்டுவந்து கொடுத்திருக்காரு. அதில புளீக்காய்ச்சலும்,தக்காளீத்தொக்கும் அடங்கும்.
ப்பிரச்சினைன்னு வந்தா
சமாளித்துதானே ஆகணும்.
சாப்பிடக்கூடிய பொருட்கள்
ப்ளூபெர்ரி,
தொண்டங்காய் கறி,
ஃப்ளாக்ஸ் சீட் ஆயில்,
ஆலிவ் ஆயிலில் சமையல்,
வறட்டுத்தனமா இங்க ஒரு பிஸ்கட் இருக்கு. தவிட்டில தட்டினா மாதிரி. அதை சாப்பிடலாமாம்.
பயறு,சேத்துக்கலாம்.
ஆனா வேர்க்கடலை ஆகாது
பாதாம் நாலு சாப்பிடலாமாம்.
இன்னும் தேடிக்கொண்ட்டு இருக்கிறேன். நடூவில உங்களூக்கும் ஒரு ஆவலாதி பதிவு போட்டுடலாமேனு வந்தேன்.
உங்களுக்குத் தெர்ரிந்ததை சொல்லுங்க.
ஆங் நோ தயிர்சாதம்:(
மறக்கக் கூடாது.
Sunday, September 21, 2008
புரட்டாசி..சனிக்கிழமை,அரிசிப்பாகு,மாவிளக்கு
இவருக்கு நேர்ந்து கொண்டு மாவிளக்கு ஏற்றுவது, குடும்பங்களில் வழக்கம்.
தீராத வயிற்றுவலிதீர வயிற்றின் மேலேயெ, ஒரு வாழையிலையில் மாவிளக்கு ஏற்றி கொள்வதை, நான் பார்த்திருக்கிறேன்.
சீனிம்மாவின் அக்கா நாச்சிப் பெரியம்மா.
அவருடைய பெண்ணின் பெயர் மங்கை. நாச்சியார் பெரியம்மா அந்த நாளில் ஒவ்வொரு புரட்டாசி மாதமும் திருமலை ஏறிப் போவது வழக்கம்.
இத்தனைக்கும் அவர் உருவம் ஒரு நாலடி உய்ரமும் உழக்குக்கு ஆடை கட்டின மாதிரி,
ஒரு கட்டம்போட்ட சிகப்புக் கலர் ஒன்பது கஜப்புடவையை நேர்த்தியாகக் கால் தெரியாமல் கட்டிக் கொண்டு,
அந்த வயதில் வாய் கொள்ளாத சிரிப்போடு ஏறும் அழகை அம்மா சொல்லிக் கேட்டு இருக்கிறேன்.
எனக்கு விவரம் தெரிந்தபிறகு நானே பார்த்தும் இருக்கிறேன். 1962ஆம் வருடம் மே மாதம் ஒரு மாமாவின் திருமணம் முடிந்து
நாங்கள் எல்லோரும் திருப்பதி போனோம்.
வெளியில் சாப்பாடு வாங்கி சாப்பிடாத வகை இவர்கள்.
கையில் பலவகை உலர்ந்த பழங்கள்,முந்திரி இவைகளை எடுத்துக் கொள்வார்கள்.
காப்பி டிகாக்ஷன் பாட்டிலில் இருக்கும். பால் வாங்கிக் கலந்து கொள்வார்கள்.
போனால் போகிறது என்று எனக்கும் ஒரு மிடறு கொடுப்பார்கள். அதுவே அம்ர்தமாக இருக்கும்.
தங்குமிடம் ஏதாவது ஒரு மடமாக இருக்கும். பழைய பரகால மடம் என்று நினைக்கிறேன்.
அங்கு போய்ச் சேர்ந்ததும் கோபுரத்தைத் தரிசனம் செய்துவிட்டு,
இரவு ஆகியிருப்பதால் கொண்டுவந்த பூரி உருளைக் கிழங்கை முடித்து,
தயிர்சாதமும் முடித்து உறங்கிவிட்டோம்.
சரியாகப் பன்னிரண்டு மணிக்கு வெந்நீரோடு வந்து எழுப்பினார்கள். அனைவரும் நன்றாகக் குளித்துவிட்டு, எதிர்த்தாப்போல் இருக்கும் புஷ்கரணியில் தண்ணிர் எடுத்துத் தெளித்துக் கொண்டு கோவிலுக்குப் போனோம்.
அப்போதெல்லாம் கோவில் வாசல் வழியாகவே உள்ளே நுழையலாம். வெளிச்சுற்று கியூ எல்லாம் கிடையாது.
அங்கப் பிரதக்ஷிணம் செய்பவர்கள் பூர்த்தி செய்தார்கள்.
பெருமாளையும் மிக அருகில் போய்ப் பார்த்ததாக நினைவு.
அப்போதுதான் மடப்பள்ளி நாச்சியார் வெளித்திண்ணையில் மாவிளக்குக்கான
பொருகளான,ஊறவைத்து அரைத்த அரிசி மாவு,
அங்கேயே இடித்த வெல்லம்,வீட்டிலிருந்து கொண்டு போன நெய்,திரி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி,
ஒரு வாழை இலையில் வைத்து ஈர உடையுடன் இருந்த பெரியம்மாப் பாட்டி தன் குட்டி சரீரத்தை அங்கே தரையில் சாய்த்துக்கொண்டு, வயிற்றின் மேல் மாவிளைக்கை ஏற்றச்சொல்லி வைத்துக் கொண்டார்கள்.
ஸ்வாமி மலையேறும் வரை கோவிந்த நாம ஜபம்தான்.
புரட்டாசியும் பெருமாளும் மாவிளக்கும் இங்கேயும் நினைவு வரத்தான் செய்கிறது.
ஆனால் வழக்கம், இல்லாவிட்டால் ஏற்றமாட்டார்கள்.
அதனால் அரிசிமாவும் வெல்லமும் சேர்த்து ஏதாவது ஒரு பண்டம்
வெங்கடேசனுக்குக் கை காண்பிக்கணுமே என்று மேலே இருக்கும்,பாகு,பர்ஃபி
செய்தேன்.
செய்த விதம் பார்க்கலாமா.
அரிசிமாவு வறுத்துக் கொண்டு,
அதில் பாதி அளவு வெல்லத்தைப் பொடித்துப் போட்டு,
200கிராம் வெண்ணெயும் கலந்து
வாணலியில் கிளறி ஒரு பீங்கான் கிண்ணத்தில் சேர்த்துக் கொண்டேன்.
இந்தக் கலவையை அப்படியே எடுத்து
மைக்ரோவேவில் எக்ஸ்ப்ரஸ் 4இல் வைத்ததும், மைசூர்பாகு மாதிரியே நுரைத்துக் கொண்டு வந்தது.
அதை வெளியே எடுத்து கட்டம் கிழித்தாச்சு.
பெருமாளும் பிரமாதம்னு சொல்லிட்டார்:)
பெத்த பெருமாள்,சின்னப் பெருமாள் சளித்தொல்லை இருந்தாலும் அனுபவித்துச் சாப்பிட்டார்கள்.
ஒரு வாரம் தாங்கும் என்று நினைக்கிறேன்.
வட்டிக்காசு வாங்கற வடமலையானுக்கு குட்டிக் கோவிந்தா கோவிந்தா!!!

தீராத வயிற்றுவலிதீர வயிற்றின் மேலேயெ, ஒரு வாழையிலையில் மாவிளக்கு ஏற்றி கொள்வதை, நான் பார்த்திருக்கிறேன்.சீனிம்மாவின் அக்கா நாச்சிப் பெரியம்மா.
அவருடைய பெண்ணின் பெயர் மங்கை. நாச்சியார் பெரியம்மா அந்த நாளில் ஒவ்வொரு புரட்டாசி மாதமும் திருமலை ஏறிப் போவது வழக்கம்.
இத்தனைக்கும் அவர் உருவம் ஒரு நாலடி உய்ரமும் உழக்குக்கு ஆடை கட்டின மாதிரி,
ஒரு கட்டம்போட்ட சிகப்புக் கலர் ஒன்பது கஜப்புடவையை நேர்த்தியாகக் கால் தெரியாமல் கட்டிக் கொண்டு,
அந்த வயதில் வாய் கொள்ளாத சிரிப்போடு ஏறும் அழகை அம்மா சொல்லிக் கேட்டு இருக்கிறேன்.
எனக்கு விவரம் தெரிந்தபிறகு நானே பார்த்தும் இருக்கிறேன். 1962ஆம் வருடம் மே மாதம் ஒரு மாமாவின் திருமணம் முடிந்து
நாங்கள் எல்லோரும் திருப்பதி போனோம்.
வெளியில் சாப்பாடு வாங்கி சாப்பிடாத வகை இவர்கள்.
கையில் பலவகை உலர்ந்த பழங்கள்,முந்திரி இவைகளை எடுத்துக் கொள்வார்கள்.
காப்பி டிகாக்ஷன் பாட்டிலில் இருக்கும். பால் வாங்கிக் கலந்து கொள்வார்கள்.
போனால் போகிறது என்று எனக்கும் ஒரு மிடறு கொடுப்பார்கள். அதுவே அம்ர்தமாக இருக்கும்.
தங்குமிடம் ஏதாவது ஒரு மடமாக இருக்கும். பழைய பரகால மடம் என்று நினைக்கிறேன்.
அங்கு போய்ச் சேர்ந்ததும் கோபுரத்தைத் தரிசனம் செய்துவிட்டு,
இரவு ஆகியிருப்பதால் கொண்டுவந்த பூரி உருளைக் கிழங்கை முடித்து,
தயிர்சாதமும் முடித்து உறங்கிவிட்டோம்.
சரியாகப் பன்னிரண்டு மணிக்கு வெந்நீரோடு வந்து எழுப்பினார்கள். அனைவரும் நன்றாகக் குளித்துவிட்டு, எதிர்த்தாப்போல் இருக்கும் புஷ்கரணியில் தண்ணிர் எடுத்துத் தெளித்துக் கொண்டு கோவிலுக்குப் போனோம்.
அப்போதெல்லாம் கோவில் வாசல் வழியாகவே உள்ளே நுழையலாம். வெளிச்சுற்று கியூ எல்லாம் கிடையாது.
அங்கப் பிரதக்ஷிணம் செய்பவர்கள் பூர்த்தி செய்தார்கள்.
பெருமாளையும் மிக அருகில் போய்ப் பார்த்ததாக நினைவு.
அப்போதுதான் மடப்பள்ளி நாச்சியார் வெளித்திண்ணையில் மாவிளக்குக்கான
பொருகளான,ஊறவைத்து அரைத்த அரிசி மாவு,
அங்கேயே இடித்த வெல்லம்,வீட்டிலிருந்து கொண்டு போன நெய்,திரி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி,
ஒரு வாழை இலையில் வைத்து ஈர உடையுடன் இருந்த பெரியம்மாப் பாட்டி தன் குட்டி சரீரத்தை அங்கே தரையில் சாய்த்துக்கொண்டு, வயிற்றின் மேல் மாவிளைக்கை ஏற்றச்சொல்லி வைத்துக் கொண்டார்கள்.
ஸ்வாமி மலையேறும் வரை கோவிந்த நாம ஜபம்தான்.
ஆனால் வழக்கம், இல்லாவிட்டால் ஏற்றமாட்டார்கள்.
அதனால் அரிசிமாவும் வெல்லமும் சேர்த்து ஏதாவது ஒரு பண்டம்
வெங்கடேசனுக்குக் கை காண்பிக்கணுமே என்று மேலே இருக்கும்,பாகு,பர்ஃபி
செய்தேன்.
செய்த விதம் பார்க்கலாமா.
அரிசிமாவு வறுத்துக் கொண்டு,
அதில் பாதி அளவு வெல்லத்தைப் பொடித்துப் போட்டு,
200கிராம் வெண்ணெயும் கலந்து
வாணலியில் கிளறி ஒரு பீங்கான் கிண்ணத்தில் சேர்த்துக் கொண்டேன்.
இந்தக் கலவையை அப்படியே எடுத்து
மைக்ரோவேவில் எக்ஸ்ப்ரஸ் 4இல் வைத்ததும், மைசூர்பாகு மாதிரியே நுரைத்துக் கொண்டு வந்தது.
அதை வெளியே எடுத்து கட்டம் கிழித்தாச்சு.
பெருமாளும் பிரமாதம்னு சொல்லிட்டார்:)
பெத்த பெருமாள்,சின்னப் பெருமாள் சளித்தொல்லை இருந்தாலும் அனுபவித்துச் சாப்பிட்டார்கள்.
ஒரு வாரம் தாங்கும் என்று நினைக்கிறேன்.
வட்டிக்காசு வாங்கற வடமலையானுக்கு குட்டிக் கோவிந்தா கோவிந்தா!!!
Thursday, September 18, 2008
ஊறுகாயும் பெரிய மனுஷனும்

எலுமிச்சங்காய் ஊறுகாயைப் பத்தின பதிவில்லைம்மா இது.
ஊறுகாயச் சாப்பிட்டவங்களைப் பத்தினது.
எல்லாரும் நல்லா இருக்காங்க. (சாப்பிட்டவங்களைச் சொல்றேன்)
ஊறுகாய்ப் பாத்திரத்தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்.
பாதிதான் மிச்சம் இருக்கு:)
சாதாரணமா வடுமாங்கா...பாட்டி போட்டது கொடும்மான்னு கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க ரெண்டு பேரன்களும்.
சின்னவனுக்குத் துளி சாறு அவன் சாப்பாட்டில் விட்டாப் போது. பெரியவன் தயிர்சாதத்துக்கு உண்மையாவே ரசித்துச் சாப்பிடுவான்.
மாவடு தீர்ந்து போயிடும் பாட்டி,சீக்கிரம் இன்னோரு ஊறுகாய்ப் போட்டுக் கொடு என்று ஆசையாக் கேட்கிறானெ என்று
மைக்கல்ஸில் வாங்கின எலுமிச்சம்பழங்களில் சிலதை
நீர் எலுமிச்சையும், மற்ற இருபது பழங்களை ஆவக்காய் எலுமிச்சையாகவும் செய்துவிட்டேன்.
தினம் இந்த மூடியைத் திறந்து பார்த்து விட்டு இன்னும் ஊறலையா பாட்டின்னுட்டுப் போய் விடுவான்.
நானும் அவன் இவ்வளவு காரம் சாப்பிடக்கூடாதே என்று கொஞ்சமாகத்தான் மிளகாய்,கடு எல்லாம் சேர்த்து இருந்தேன்.
அதைப் பரிசோதிக்க நேற்று அவனுக்கு எண்ணம்.
ஒரு சின்ன கப்பில் எடுத்து வைத்துக் கொண்டான்.
ஜஸ்ட் அ லிட்டில் என்று சொல்லிச் சாப்பிட்டுப் பார்த்தான்.
எங்க அவன் அம்மா கையால(சொல்லால) எனக்கு மண்டகப் படியோன்னு பயமா இருந்தது.
ஒரு துண்டு எலுமிச்சையையும் சாப்பிட்டு விட்டு,
அவன் சொல்லிய பாங்கு இருக்கிறதே அதற்காகத்தான் இந்தப் பதிவு:)
பாட்டி இப்ப உனக்கு அது எப்படி இருந்ததுன்னு சொல்லறேன். என்று என் முன்னால் வந்து நின்று கொண்டான்.
ரொம்பக் காரமாயிருக்கும்னு நினைச்சுத்தான் சாப்பிட்டேன்.
ஆனால் ஊறுகாய் அப்படியில்லை.
''You have done an awesome job paatti.
If you had added more chillipowder ,the pickle would be just another pickle.
this pickle is LEMON PICKLE.
not chilli,salt pickle''
என்று நிறுத்தி விட்டு, தொடர்ந்தான்.
நீ நிறைய எஃபர்ட் போட்டு இருக்க. இன்னும் கொஞ்சம் ஒரு முக்கால் டீஸ்பூன் மிளகாய்ப் பொடியும்,
கால் டீஸ்பூன் சால்டும் சேர்த்துக் கலக்கிவிட்டால் இன்னும் பிரமாதமா இருக்கும் என்றான்.
நான் வாயடைத்துப் போனேன்.
எங்கே கத்துக் கொண்டது இந்
தப் பிள்ளைகள் பேச!!!!
டிஸ்கி...
எல்லா வரிகளுக்கும் லைன் போட்டது நான் இல்லப்பா.
Subscribe to:
Posts (Atom)
அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.
வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...




