Blog Archive

Wednesday, May 26, 2021

அத்தை ...தொடர்கிறாள்.

வல்லிசிம்ஹன்


மனதில் எழுந்த சங்கடத்தை அடக்கிக் கொண்டு
வெளியே வந்த சுந்தரி அத்தை என்ன செய்வது என்று தெரியாமல்
வாசல் நாற்காலியில் உட்கார

வண்டி வரும் சத்தம் கேட்டது.

''ஐய்யா வராருங்க'' என்ற படி வாசல் கேட்டைத் திறந்தான்
கோபாலு.
ஏதோ பயம் தோன்ற வரும்  தம்பியைப் பார்த்தாள் 
சுந்தரி.
''என்னக்கா வெளியில உட்கார்ந்திருக்கே?"
என்று வினவியபடி வந்தவன் முகத்தில் 
களைப்பு.
   ''ஏதாவது சாப்பிடுடா. பிறகு பேசலாம்.
ஏன் இந்த நேரத்தில் திரும்பி விட்டாய்.? ஆனாலும் மிக அலைச்சல்
உனக்கு"
என்றபடி இருவரும் உள்ளே நுழைய

இந்த சத்தத்தில் மெதுவாகக் கதவைத் திறந்து 
கொண்டு மாலாவும் அவள் தோழனும் வெளியே
வந்தார்கள்.
கணபதி முகத்தில் ஒன்றும் உணர்ச்சி தெரியவில்லை.
யாரும்மா உன் ஃப்ரண்டா.?
என்றபடி, 'அக்கா இதோ வரென் ''என்றபடி,
உள்ளே குளிக்கச் சென்று விட்டான்.

இன்னதென்று தெரியாத குழப்பம் சுந்தரி மனதில்.
மாலாவின் பரிகாசமான புன்னகையை
வாங்கிக் கொள்ள சக்தி இல்லை.
சட்டென்று எழுந்தவள் ,பங்காருவை அழைத்து அவளிடம்
தான் வாங்கி வந்த பலகாரங்களைக் கொடுத்துவிட்டு,
ஐய்யாவை எனக்கு ஃபோன் பண்ணச் சொல்லு.

பிறகு பார்க்கலாம் என்றபடி திரும்பியவள் கண்ணில்
கணபதியின் மனைவியின் படம் பட்டது.
நீயே உன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்'
என்று வேண்டியபடி வெளியே இறங்கி நடந்து
விட்டாள்.
பஸ் டெர்மினசில் 41 ஆம் நம்பர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் தான்
தன் கண்கள் நீர் வடிப்பதை உணர முடிந்தது.
எதற்காக இந்தப் பாசம்.
யார் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு.
கணபதிக்கு 47 வயதில் இந்த சோகம் வேண்டாம் தான்.

அதற்காக அவனால் ,தாயில்லாத குழந்தைகளை
விட்டுக் கொடுப்பானா. ஏதோ சமாளிப்பான்.
இந்தக் காலம் எல்லோரும் எல்லாவற்றையும்
புரிந்தே  செய்கிறார்கள்.
தான் ஒரு பழங்காலப் பெண்மணி.
 இனி கணபதி ,தொலைபேசினால் பார்த்துக்
கொள்ளலாம்.
கைப்பையைத் திறந்து கந்த சஷ்டி கவசத்தைப்
படிக்க ஆரம்பித்தாள்.

வீட்டுக்கு வந்து ,கணவரிடமும் ,மாமியாரிடமும் சொல்லி
அரற்றினாள்.
''இனிமே காலம் இப்படித்தான். நீ மனசைத் தேற்றிக் கொள்''
யாருக்கு யார் பொறுப்பு' என்று தேற்றினார் மாமியார்.
கணவர் அதிகம் சொல்ல வில்லை.
இரண்டு நாட்களில் கணபதியிடம் இருந்து 
ஃபோன் வந்தது. ''அக்கா, பெரியவளுக்குத் திருமணம்
நடக்கப் போகிறது. எதிராஜ மண்டபத்தில் 
நீயும் அத்திம்பேரும் வந்து நடத்திக் கொடுக்கணும்.
அடுத்த இரண்டு மாதங்களில்
மாலாவுக்கும் அர்ஜுனுக்கும் அவர்கள் வீட்டு முறைப்படி
திருமணம்.

படிப்பு முடியாத நேரத்தில் ஏன் இவ்வளவு அவசரம் என்று கேட்காதே.
புரிந்து கொள்வாய் நு நினைக்கிறேன்.
நம் காலம் இல்லை இது.
எனக்கு சக்தி இல்லை. 

என் மாமனார் மாமியார் வந்திருந்து  நடத்தப் போகிறார்கள்.''
என்று சொன்னவன் குரலில் மகிழ்ச்சியை விட விரக்தி தான் தெரிந்தது.

சுந்தரிக்குத் தன் பாசங்களை இந்த நாளில்

நினைத்து நடத்த முடியாது என்று புரிந்தது.
20 வருடங்களுக்கு முன் காலம் சென்ற அத்தைக்காக
இந்த நாளில் இத்தனை பாடு பட்டிருக்க வேண்டாம்.

அன்பு கூடத்   தேவையானால் தான்  கொடுக்கலாம் .
அனாவசியமாக   நம்  பாசத்தை  வேண்டாதவர்களிடம் 
காண்பிக்க  வேண்டாம்.

இனி நாம் எச்சரிக்கையுடன் இருக்கலாம் என்று
மனதில் தெளிவுடன் இருக்க ஆரம்பித்தாள்.
சம்பவம் நடந்த காலம், நகரம் எல்லாம் வேறு..
நடந்தது உண்மை.

திருமணங்களுக்கு அவர்கள் சென்று வந்தார்கள்.

மாலாவின் திருமணத்துக்கு ஏன் அவசரம் என்பது 
பிறகே தெரிந்தது.

அவள் கருவுற்றதால் ,சீக்கிரத் திருமணம்.
இன்னும் அவர்கள் வாழ்க்கையில் ஸ்திரமாகத் தான் 
இருக்கிறார்கள்.
லீலா குட்டி மத்திரம் இன்னும் 
மெயில் தொடர்பில்.அமெரிக்க கலிஃபோர்னியாவில்
கல்லூரி ப்ரொஃபெசராக வேலை .
56 வயதில் நல்ல குடும்பப் பெண்ணாகவும்
இருக்கிறாள்.

கணபதிதான்  பாவம். டிமென்ஷியா வந்து 
17 வருடங்களுக்கு முன் இறைவனடி 
அடைந்தான். 

கதை  தெளிவாகச் சொல்லி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.



அத்தை......1

வல்லிசிம்ஹன்



 எங்கள் ப்ளாகில் வெளியிட்ட கௌதமன் ஜி க்கும்  ஸ்ரீராமுக்கும் மிக நன்றி.
அங்கு வந்து பின்னூட்டம் இட்ட எல்லோருக்கும்
மீண்டும் நன்றி. வாழ்வு நிறைவது அன்பு நட்புகளின் 
துணையுடன் தான். சங்கடங்கள் தீர்ந்து 
நல் வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1980 களில் ஒரு சம்பவம்.

''அக்கா, !!
என்ன மாலா?

அந்த அத்தை நம் வீட்டுக்கு வருகிறாளாம். எதுக்கு அண்ணா நகரிலிருந்து இங்க மைலாப்பூர் வரணும்.
அப்பாவுக்குபெரியப்பாவின்  பெண் என்றால் அந்தக் காலத்தோடு
போச்சு. இங்க வந்து நம் நேரமும் வீணாக்கி,
நம் மீது அதீத அன்பைக் கொட்டணும்னு 
என்ன அவசியம்?''
"பெற்ற பிள்ளைகள் எல்லாம் திருமணம் ஆகி
வெளியூர் போயாச்சு. பொழுது போக இங்கே வர வேணுமா?''
கோபத்துடன் பொரிந்த  தங்கையை
அன்புடன் கண்டித்தாள் பெரிய அக்கா லக்ஷ்மி.
அப்படியெல்லாம் சொல்லாதேம்மா.
அவர்கள் எல்லாம் கசின்ஸ் ஆக இருந்தாலும்
நல்ல பாசத்தோடு இருந்தவர்கள்.
நம் அம்மா திடீரென்று இப்படி காலமானது அவர்களுக்கு அதிர்ச்சி.
அதுதான் வந்து நம்மைப் பார்த்து விட்டுப் 
போகிறார்.

''கசின்ஸ் நா, அந்தக் காலத்தோட போச்சு''
நம் வாழ்க்கையில் இப்போ வந்து குறுக்கிட என்ன அவசியம்?
சரியான busybody" என்று கரித்துக் கொட்டின
தங்கையைப் பார்த்து வியந்தாள் அக்கா.
அவர்கள் மூவரும் பதின்ம வயதுப் பெண்கள்.
இரண்டு மூன்று மாதங்கள் முன் தான்
அவர்களின் தாயார், தீராத வியாதிக்குப் 
பலியானார்.

அப்போது ஆரம்பித்த பாசம், ,கவனிப்பு இந்த அத்தையோடது.
தன் வியாபாரத்தில் மும்முரமாக இருக்கும்
பெரியப்பா மகன்,
அவன் பெற்ற  பெண் குழந்தைகள்
மீது கவலை கொண்டு , கிடைத்த பலகாரங்களைப்
பையில் அடைத்துக் கொண்டு வந்து 
தந்து சில மணி நேரம் இருந்து பேசிச் செல்வாள்
சுந்தரி அத்தை.
சின்ன லீலா,கடைசிப் பெண்ணுக்கு சுந்தரி அத்தையைப் பிடித்திருந்தது.
14 வயதே ஆகி இருந்தது அந்தப் பெண்ணுக்கு.
அம்மாவை இழந்த துக்கத்திலிருந்து மீள முடியாத சூழ்னிலையில்
இந்த அத்தை வருவது
அந்தக் குழந்தைக்கு மிக இதமாக இருந்தது.

ஐந்து வருடங்களுக்கு முன் தான் சென்னை வந்தார்கள். அதுவும் 
அவர்கள் அம்மாவின் உடல் நலம்  சரியில்லாமல் போனதும்
வைத்தியத்துகாகச் சென்னைக்கு வந்தனர்.

இந்த ஐந்து வருடங்களும் அம்மாவின் நோயோடு 
போராடிக் களைத்து விட்டனர்
கணபதியும் குழந்தைகளும்.
சுந்தரி அவர்கள் சென்னை வந்த நாளிலிருந்து
தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தாள்.

பெரிய மகள் அந்த வருடம் கல்லூரியில்
சேர்ந்திருந்தாள். நடுவில் பிறந்த மாலா
பள்ளி இறுதி வகுப்பை எட்டி இருந்தாள்.
கடைக்குட்டி லீலா ,ஒன்பதாம் வகுப்பு.

இவர்களுக்கு உதவியாகக் கூடவே இருக்கும் 
பங்காரு சொந்த ஊரிலிருந்து
இங்கே வந்திருந்தாள்.
நூற்பாலை சம்பந்தமான இயந்திரங்களை
இறக்குமதி செய்து விற்பனை செய்யும்
வியாபாரத்தில் இருந்த கணபதிக்கு
கடந்த வருடங்களில் சரியாகக் கவனம் 
செலுத்த முடியாமல் போனது.கோயம்பத்தூருக்கும்
சென்னைக்கும் அலைய வேண்டிய
தொழில்.

சுந்தரி அடிக்கடி வந்து போவது அவனுக்கு 
நிம்மதி.
தனியாக இருக்கும் பெண்குழந்தைகளைப் 
பற்றி அவனுக்கு எப்பொழுதுமே கவலை.முதல் பெண் லக்ஷ்மிக்கு, கணபதியின் மனைவி
தன் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து வைத்திருந்தாள்.

அவனும் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தான்.

எல்லாமே சற்று ஏறுக்கு மாறாக நடந்தாலும்
கணபதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவன் கோவைக்குப்
போயிருந்த ஒரு மாலை,
சுந்தரி அத்தைக்குப் பங்காரு ஃபோன் செய்திருந்தாள்.
தனக்கு மாலாவின் போக்கு பிடிபடவில்லை என்றும்.
பள்ளிக்குச் செல்லும் போது 
இன்னோரு வாலிபனுடன் தெரு முனையில்
நின்று பேசி வருவதாகவும்,
அவர்கள் இருவரும் சினிமாவுக்குக் கூடச் சென்று வந்ததாகத்
தன் கணவன் சொல்கிறான் என்றும் 
செய்தி சொன்னாள்.
பங்காருவின் கணவன் அந்த வீட்டுக்கு வாட்ச்மேன்.

இந்த செய்தி வந்ததிலிருந்து
சுந்தரிக்கு அந்தப் பெண்களைத் தனியே விடுவதில் 
விருப்பம் இல்லை. 
கணபதிக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட
6 வயது வித்தியாசம். 
அவனைச் சிறுவனாகவே பார்த்து, தம்பியாகவே 
பழகி வந்திருக்கிறாள்.
இப்பொழுது மனைவியும் இல்லாத வேளையில் அந்தக் 
குடும்பம் சீரழிவதில் அவளுக்கு வேதனை. அதனாலயே 
ஏதாவது ஒரு காரணம் காட்டி 
மைலாப்பூருக்கு வர ஆரம்பித்தாள்.

இது நீடித்தால் கணபதியுடன் பேச வேண்டிய தேவை
வரும் என்று யோசனை வந்தது.
இந்த நேரத்தில் தான் நம் கதை ஆரம்பித்தது.
சுந்தரி தன் மதிய சாப்பாட்டை முடித்துக் 
கொண்டு மயிலை வந்தடைந்தாள்.
மந்தைவெளியில் இறங்கி சிறிது நடந்தால்
அந்தத் தனி வீடு வரும்.
அவள் தொலைவில் வருவதைப் பார்த்த
பங்காரு,  அவசரமாக வெளியே வந்தாள்.
''சுந்தரி அம்மா, அந்தப் பையன் வீட்டுக்கே வந்து விட்டான்"
ஐய்யா இன்னும் வரவில்லை. லக்ஷ்மிப் பொண்ணும்
வரப் போகிற மாப்பிள்ளை வீட்டுக்குப் 
போயிருக்கு. சின்னப் பாப்பா டென்னிஸ் விளையாடப் போயிருக்கு"
என்று படபடத்தாள்.

 சுந்தரி சற்றே நிதானித்தாள்.
அவளுக்கு மாலாவின்  கோப குணம் தெரியும்.
இருந்தாலும் இப்போது அதை எல்லாம் 
பார்க்கும் நிலைமை இல்லை.

என்னதான் 80கள் என்றாலும்  பண்பாடு மீறி நடப்பது 
எப்பொழுதும் சரியில்லையே.!!

பங்காருவை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நிதானமாக 
நுழைந்தாள்.
வாசல் கதவு சாத்தியிருந்தது.
உள்ளே வானொலி சத்தமும் சிரிப்பும் கேட்டன.
காலிங்க் பெல் அடித்ததும் சத்தம் நின்றதும்

கொஞ்ச நேரத்தில் வாசல் கதவு திறந்து மாலாவின் முகம்
தெரிந்தது.
கதவைத் திறந்து விட்டு உள்ளே தன் அறைக்குள் 
போய்விட்டாள்.
''என்னம்மா.லக்ஷ்மி எங்கே? ''
என்று சுந்தரியும் விடாமல் கேட்டாள்.
வெளில போயிருக்கா. சாயந்திரம் ஆகும் என்றபடி அறைக்கதவை
மூடிக்கொண்டாள்.

தொடரும்.

Sunday, May 23, 2021

பெரிய தம்பி ,சின்னத் தம்பிக்குப் பிடித்த....

முதல் இரண்டு பாடல்களும்   பெரிய தம்பியின் 
விருப்பங்களில் இரண்டு.
பிறகு வரும்  மபாடல்கள்
சின்னத்தம்பியின்  மனதைக் கவர்ந்தவை.




Saturday, May 22, 2021

தம்பி




வல்லிசிம்ஹன்

கவலையை விட்டொழிக்கத் தம்பி முரளி
 தேர்ந்தெடுத்தது 
தெய்வ தரிசனங்கள்.
 1992 இல் முதல் இதய அதிர்ச்சி வந்த போது
காப்பாற்றிக் கொடுத்த விஜயா மருத்துவ மனைக்கும் நன்றி.

அத்தனை மருந்துகளையும் தேகப் பயிற்சிகளையும்
இம்மி பிசகாமல் ஏற்றுக் கொண்டான்.

அறுவை சிகித்சை முடிந்து ஆறு மாதங்களில்
வெளி நாட்டுப் பயணங்கள்.
அசரவே இல்லை. எந்த விதத்திலும் தன்னை
முன் நோக்கி செலுத்திக் கொண்டே இருந்தான்.

எந்த தேசம், எந்த சூழ்னிலை என்றே கவலைப் படவில்லை.
இரவானாலும் பகலானாலும்  மூன்று மைல்களாவது நடப்பான்.

அத்தனை நம்பிக்கை மருத்துவத்தில்.

சின்னத்தம்பி மறைந்த போது எனக்கும் அம்மாவுக்கும் அவனே
துணை.
அம்மாவும் சென்றாள். சிங்கமும் மறைந்தார்.
அந்த மெலிந்த தேகத்துடன்,என்றும் துணை இருப்பேன் என்று சொன்னவன்,
சிரித்த முகத்துடன் என்றும் மாறா தெய்வ நம்பிக்கையுடன்
நான் அவனைக் கடைசியாகப் பார்த்தது
2016 ஐப்பசி மாதம்.
ஜகார்த்தாவில் ஒரு காலை அவனும் இறைவனடி 
சேர்ந்த செய்தியை மகன் கொண்டுவந்தான்.
உடனே கிளம்ப முடியாத நிலையில்
ஒரு வாரத்தில் சென்னை வந்தோம்.

இயந்திரமாகச் செயல் பட்டது மனமும் உடலும்.

அவன் குடும்பம் மனைவி,
மகன்,மருமகள்,
பேத்தி பேரன் என்றும் நிறைவோடு இருக்க
அவனே காத்திருப்பான்.

Thursday, May 20, 2021

SUPERMAN RETURNS: How it Could Have Been

எப்பொழுதும் அதிசயங்களிலும் நல்ல எதிர்காலத்திலும்
நம்பிக்கை வைக்க வேடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கி. ராஜ நாராயணன் ஆவணப்படம் - இயக்கம் தங்கர் பச்சான்.

🤩

Tuesday, May 18, 2021

ஐயா. 2


வல்லிசிம்ஹன்



இப்போது கி.ரா. தன்னுடைய படைப்புகளுக்கான உரிமையை மூவருக்கும் எழுதி வைத்திருப்பதோடு அந்த மூவரிடம் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறார். கி.ரா.வின் படைப்புகள் வழியாகக் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை ‘கரிசல்’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி, எழுத்தாளர்களுக்கும் சிறுபத்திரிகைகளுக்கும் பணமுடிப்புடன் கூடிய விருதுகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். “எழுத்தாளர் – வாசகர் உறவுக்கு அப்பாற்பட்டு, ஒரு தந்தையாகவும் நண்பராகவும் என்னோடு கி.ரா. பழகியிருக்கிறார். உண்மையில், நான் பாக்கியவான்” என்றார் புதுவை இளவேனில்.
முதுபெரும் எழுத்தாளுமை கி.ராஜநாராயணன் அவருடைய எழுத்தாக்கங்களுக்கும் படைப்புகளுக்குமான உரிமை டிசம்பர் 26, 2020 முதல் மூவரைச் சேரும் என்று எழுதி வைத்திருக்கிறார். 1) சங்கர் (எ) புதுவை இளவேனில், 2) திவாகரன், 3) பிரபாகர். பொதுவாக, தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் காலத்திலேயே படைப்புரிமையை எழுதி வைப்பது வழக்கம் கிடையாது. அந்த வகையில் இந்த அறிவிப்பு முக்கியமானது. இன்னொரு காரணத்துக்காகவும் இந்த அறிவிப்பு பேசப்பட வேண்டியதாகிறது. கி.ரா.வின் மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபாகர் இருவருக்கும் முன்வரிசையில் இருக்கும் புதுவை இளவேனில் எனும் பெயர்தான் நம் கவனம் ஈர்க்கக் காரணம். புதுவை இளவேனிலுக்கு கி.ரா. கொடுத்திருக்கும் முன்னுரிமை உண்மையில் மெச்சத்தக்கது.



அப்போது புதுவை இளவேனிலுக்கு 14 வயது. ஓவியராகும் கனவோடு சுற்றிக்கொண்டிருக்கும் சிறுவன். ‘ஆனந்த விகடன்’ இதழில் கி.ரா.வின் ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவல் தொடராக வந்துகொண்டிருந்தபோது அதை ஆதிமூலத்தின் ஓவியத்துக்காக வாசிக்கிறான். அப்படித்தான் அந்தச் சிறுவனுக்கு கி.ரா. அறிமுகமாகிறார். பின்பு, இளவேனிலுக்கு அவரது 18-வது வயதில் கி.ரா.வைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பானது, தந்தை – மகன் உறவாகும் அளவுக்கு வளர்ந்தது.

“கி.ரா.வுடனான முதல் சந்திப்பில் என் பெயரைக் கேட்டபோது ‘பாபு’ என்றேன். என் உண்மையான பெயரான சங்கர் என்பதையோ, புனைபெயரான இளவேனில் என்பதையோ அவரிடம் சொல்லவில்லை. என்னுடைய அம்மா என்னைச் செல்லமாக அழைக்கும் பாபு என்ற பெயரை யதேச்சையாக அன்று உச்சரித்துவிட்டேன். அன்றிலிருந்து என்னை பாபு என்றே அவர் அழைக்கிறார். கி.ரா.வுக்கு இப்போதும் நான் பாபுதான்” என்று பழைய நாட்களை நினைவுகூர்ந்தார் இளவேனில். சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் மிக வறுமையான வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருந்த இளவேனில், உணவுக்காக கி.ரா. வீட்டுக்குச் சென்ற கதையைப் பகிர்ந்துகொண்டார். காலை 10 மணி வாக்கில் கி.ரா. வீட்டுக்குச் சென்றால் டிபன் கிடைக்கும், அதை முடித்துவிட்டு கி.ரா.வோடு கொஞ்ச நேரம் அளவளாவல், பிறகு நேரே நூலகம். இதுதான் சில வருடங்களுக்கு இளவேனிலின் அன்றாடம்.

பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்திருக்கும் இளவேனிலோடு இலக்கியம் பேசுவதற்கு அப்பாற்பட்டு அவரது வாழ்க்கைப்பாடுகளுக்கு வழி சொல்பவராகவும் கி.ரா. இருந்திருக்கிறார். “ஒருமுறை மாலைபோல வீட்டுக்கு வரச் சொல்லி கி.ரா. கூப்பிட்டார். தினமும் அவர் வீட்டுக்குப் போய்வருபவனாக இருந்தாலும் என் பின்னணி அவருக்குத் தெரியாது. என் வீடு தெரியாது, என் முகவரி தெரியாது, நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. அப்படி இருக்கும் என்னிடம், நாளிதழில் சுற்றி வைக்கப்பட்ட ரூ.60 ஆயிரம் பணக்கட்டை என்னிடம் கொடுத்தார். ‘அப்பா எதுக்கு இது?’ என்று கேட்டேன். ‘ஆட்டோ ஓட்டத் தெரியும் என்று சொன்னாய் அல்லவா. இந்தப் பணத்தை வைத்து ஆட்டோ வாங்கிக்கொள்’ என்றார். பணத்தை வாங்கிக்கொண்டேன். அது என் வாழ்க்கையில் முக்கியமான தருணம்” என்றார் இளவேனில். அவர் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்த நான்கைந்து வருடங்களிலேயே ஸ்டுடியோ வைக்கிறார். ஸ்டுடியோவைத் திறந்து வைப்பதும் கி.ரா.தான். அதன் பிறகு, தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் ஆவணப்படுத்தும் அரிதான புகைப்படக் கலைஞராக இளவேனில் வளர்ந்தது நாம் அறிந்த கதை.
மொழிக்காகவும் சமூகத்துக்காகவும் எழுத்தை அர்ப்பணிக்கிறேன் என்ற சொற்கள் நம் சமூகத்தில் சகஜம் என்றாலும், அதைச் செயலில் காட்டியவர்கள் அரிது. கி.ரா. முன்னதாகத் தன்னுடைய படைப்புகளை எவரும் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக எல்லோர்க்கும் பொதுவாக அர்ப்பணிக்கவே விரும்பினார். பின்னர், அதிலும் ஓர் ஒழுங்குமுறை பேணப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த ஏற்பாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இளவேனிலுக்கான உரிமைப் பங்கு என்பது ஒரு குறியீடுதான். தமிழுக்காக உழைக்கும் பலர் தமக்குப் பின்னர் தம் படைப்புகள் எப்படிப் போய் மக்களிடம் இலகுவாகச் சேர வேண்டும் என்று யோசிப்பதில் சொதப்பிவிடுவது உண்டு. பலர் குடும்பப் பொறுப்பில் உரிமையை முழுமையாக விட்டுச்செல்வதில் நேரும் துயரம் என்னவென்றால், குடும்பத்தினர் ஏதோ ஒருகட்டத்தில் எழுத்துலகோடு முழுத் தொடர்பு அற்றவர்களாக மாறும்போது, எழுத்துகளைத் தொடர்ந்து பிரசுரிப்பதிலேயே சங்கடம் நேரிடுவது இயல்பாகிவிடுகிறது; மாறாக, தன்னையும் தன் எழுத்தையும் முழுமையாக உள்வாங்கிய ஒருவரைக் குடும்பத்தினரோடு இப்படி எழுத்துரிமைக்கான வாரிசாக நியமிக்கும்போது மேற்கண்ட சங்கடம் தவிர்க்கப்படும் ஒரு வாய்ப்பு உருவாகிறது. ஆனால், இத்தகைய முடிவை எடுக்க ஒரு பெரிய மனது வேண்டும். கி.ரா. தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார்!

Message  sent  by  My Cousin Smt. Subha Srivathsan.