Blog Archive
Monday, April 19, 2021
Sunday, April 18, 2021
சாலைப் பயணங்கள், பாடல்கள்
பயணங்கள் நாம் போக முடியாவிட்டாலும்
நம்மை அழைத்துச் செல்லும் திரைப் பாடல்கள்.
Friday, April 16, 2021
அன்பின் அரவணைப்பு,......
முகத்தில்
தெரியும். அத்துடன் குழந்தைகளைத் தொட்டுப்
பேசுவது, அருகில் அழைத்து அணைப்பது எல்லாம்
அந்தக் குழந்தையின் நாலு அல்லது ஐந்து
பிராயத்தில் முடிந்துவிடும்.
முதல் குழந்தைக்குப் பின் மற்ற குழந்தைகள்
வந்து விடுவார்கள்.
தாயின் கவனம், குட்டிக் குழந்தையை சமாளிப்பதிலும்
சமைப்பதிலும்
கணவனுக்கு ஈடு கொடுப்பதிலும் செலவழிக்கப் படும்.
அதனால் மற்ற குழந்தைகள் நிராகரிக்கப்
பட்டார்கள் என்று சொல்ல வரவில்லை.
அம்மாவின் தொடுதல் அணைப்பு குறைந்தால் என்ன?
கூடவே , சித்தப்பாக்கள், மாமாக்கள்,அத்தைகள்
எல்லோரும் தான்.
இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள்
ஆகும்போது,
தங்கள் மணவாழ்க்கையில் நுழையும் நேரம்,
அவர்கள் எதிர்கொள்வது அன்பையும் அரவணைப்பையும்
நோக்கியே இருக்கும்.
அதே சமயம் உடல் வழி அணைப்பையோ,வேறெதையும் எதிர்
கொள்ளத்தயங்குவார்கள்.
உள்ளத்தால் மிக நெருங்கிவிட்ட தம்பதிகளின்
உணர்வு பூர்ணமாகத் தொடுதல்
இவை வருவதற்கு நாட்கள் பிடிக்கிறது.
இங்கே உட்கார்ந்திருக்கும் குடும்பம் உங்களுக்குப்
பழகிய குடும்பம் தான்.
குழந்தைகள் நெருக்கி அடித்துக் கொண்டு
உட்கார்ந்திருக்க
அம்மா தனி ஸ்டூலில்:)
1973இல்
படம் எடுக்கச் சென்ற திருச்சி ஸ்டூடியோவில்
இத்தனை ஏற்பாடு தான் இருந்தது.
இருந்தாலும் ,
மகளையாவது தன் மடியில் வைத்துக்
கொள்ள என்ன தடை அந்த அம்மாவிற்கு?
மன முதிர்ச்சி போதவில்லை.
அந்த ஸ்டூல் மூன்று காலில்
நின்று கொண்டிருந்ததும் ஒரு காரணம்:)
எனக்கு அந்த அம்மாவிடம் பிடிக்காத குணங்களில்
இதுவும் ஒன்று.
எத்தனை உன்னதமான நேரத்தில்
கட்டுப்பாடுகளை மட்டுமே கருத்தில் வைத்துக்
கொண்டு,
சுருங்குவது சரியா என்று கேட்க ஆவலாக இருக்கிறது. அந்தத் தம்பதிகளுக்கு
அன்று ஏதோ ஊடல் என்பது மட்டும் நினைவில்.
அது போகட்டும். நடந்த சம்பவத்துக்கு இப்போது
வருந்தி என்ன பயன்.:(
இதெல்லாம் நினைவுக்கு வந்தது சமீப காலங்களாக்ப் பார்த்து வந்த
இங்கிலாந்து அரச பரம்பரை பற்றிய
தொடர் என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது.
இந்த ஆங்கிலேயர்கள் என்ன ஒரு கொடுமையைப்
புகுத்தி விட்டுப் போயிருக்கிறார்கள் என்று தோன்றியது.!!
எதற்காக நம் ஆனந்தத்தையும், அழுகையையும்
வெளிப்படுத்தக் கூடாது?
திரைப்படங்களின் சோகக் காட்சிகள் நம்மை
அழவைத்த காலங்கள். நல்லிசைப் பாடல்கள்
நம்மனதை ஆட வைத்த காலங்கள்.
உன்னதமானவை.! அவை நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளாகச்
செயல் பட்டன என்றே நம்புகிறேன்.
என் தலை முறையைக் குறை சொல்லவில்லை.
ஆனால் ''stiff upper lip'' கொடுமை இனி வேண்டாம்
என்று தோன்ற வைத்த கணங்கள் இப்போதாவது
வந்தால் சரியென்று தோன்றியது.
இப்போது நிறைய மாறிவிட்ட காலங்களைப் பாராட்டுகிறேன்.
நான் வளர்த்தாலும்,
என்னைப் பின்பற்றாமல் தங்கள் குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து
அரவணைத்து ,முத்தமிட்டு கொஞ்சியே வளர்க்கிறார்கள்.
*(((இப்போது இந்தத் தொற்று காலத்தில் யாரும் யாரையும்
அணைத்துக் கொள்வது என்பதே
நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றே ஆனது,
வேறு விஷயம்.))))))
![]() | ||||
வல்லிசிம்ஹன்
Thursday, April 15, 2021
லில்லி ஏப்ரஹாம் என் தோழி 1964
சென்னையில் எனக்குக் கிடைத்த தோழிகளில்
முக்கியமானவள் லில்லி.
புரசவாக்கத்தில் ஆங்க்லோ இந்தியர்கள் அதிகம்.
முதலில் பார்த்த போது
அவர்கள் உடையையும் பேச்சையும்
பார்க்கும் போது கொஞ்சம் வினோதமாக
இருந்தது.
ஆனால் பழகப் பழக அந்தக் குடும்பத்தின் வெள்ளை மனமும்
புரிய என் மனத்தடை அகன்றது.
பாட்டியோடு இருந்ததால், நான் அங்கே அவர்கள்
எழும்பூர் வீட்டுக்குப் போகிறேன்
என்றால் சற்று மனத்தாங்கல் வரும்.
இருந்தும் ஒரே பஸ்ஸில் போய் வரும் நேரங்களை
வெகுவாக அனுபவித்து ரசிப்பேன்.
அவளது சங்கீதமும் அவளுடைய கிடாரும்
என்னை அவ்வளவு ஈர்த்தது.
பார்க்க ஒரு பப்ளிமாஸ் போல நல்ல ஆகிருதியுடன் இருப்பாள்.
அவள் கூந்தல் கழுத்து வரை தான்.
குழந்தை முகம். நல்ல சிரித்த தோற்றம்.
எங்கள் குழுவில் எல்லா மானிலத்துப்
பெண்களும் இருப்பார்கள்.
எல்லா மொழிப் பாடல்களும் என்னையும்
சேர்த்து...... குழுவாகப் பாடுவோம்.
அந்த இனிய நாட்களை நினைத்து இந்தப் பதிவு.
Wednesday, April 14, 2021
Britain Welcomes the President of India (1963)
இன்னும் நம் மனதில் ஒரு கௌரவம் கூட்டும் மனிதர். பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
Tuesday, April 13, 2021
மாங்காய்ப் பச்சடி
அனைவருக்கும் பிறக்கும் புது வருஷம்
ஆரோக்கியத்தையும்
நல் வாழ்வையும் அளிக்கட்டும்.
மனம் நிறை வாழ்த்துகள்.
Monday, April 12, 2021
Subscribe to:
Posts (Atom)