Blog Archive

Wednesday, January 25, 2023

சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு ஒருமுறை இப்படி செய்ங்க



வல்லிசிம்ஹன்


  கத்திரிக்காயின் பலன்

முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது. போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கும். உடல் பருமனைக்  குறைக்கும். மூளை செல்களைப் பாதுகாக்கும். கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் அதிக அளவு சாப்பிட்டால்தான் உடம்பில் அரிப்பு ஏற்படும்.


புற்றுநோய் வராமல் காக்கும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.






 
உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புசத்தை சமன்படுத்தும். நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக்  கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. பசியின்மை அகல்கிறது. உடல் வலுவு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.
 
டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும். முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மன அமைதியைத் தரும்.
 
உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது  நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.

9 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை.கத்திரிக்காயின் பயன்கள் பற்றி சொன்னது நன்றாக உள்ளது. கத்திரிக்காய் கொஸ்த்து செய்முறை ரொம்ப நன்றாக உள்ளது.கத்திரிக்கயை விரும்பாதவர்கள் குறைவே.எங்கள் மாமியாருக்கு இந்தக் காய் மிகவும் பிடிக்கும். தினமும் செய்து தந்தாலும் அலுக்காது சாப்பிடுவார்.எனக்கும் மிகவும் பிடிக்கும்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

இது சிதம்பரம் ஹோட்டல் ஸ்டைல் ஆனால் ஹோட்டல்ல கூட பூண்டு சேர்க்கறாங்களான்னு தெரியல...நான் சாப்பிட்ட ஹோட்டல்ல கேட்டுத் தெரிந்து கொண்டேன். இவங்க செய்வதை விடக் கொஞ்சம் வித்தியாசமா....

கோயில்ல செய்வது வெங்காயம் சேர்க்காம...

இதுவும் நன்றாக இருக்குதான் ஆனா ஏன் சிதம்பரம்னு சொல்றாங்கன்னு தெரியலை. கத்தரிக்காய் கொத்ஸுன்னு சொல்லல்லாமோ!!! ஹாஹாஹா

கீதா


ஸ்ரீராம். said...

அது நன்மை செய்யுமோ, தீமை செய்யுமோ கத்தரிக்காய் ரொம்பப் பிடிக்கும்!!!

மாதேவி said...

சிதம்பரம் கத்தரிக்காய் கொஸ்சு நாங்களும் செய்வோம். விடியோ பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் வாழ்க வளமுடன்.

நம் கீதா சாம்பசிவம் முன்பு ஒரு பதிவு இந்த கொத்சு பற்றி எழுதி இருந்தார்.
வெங்காயம் இல்லாமலியே கூட
கத்திரிக்காய் நன்றாக இருக்கும்.
உங்க மாமியாருக்குப் பிடித்தது போலவே
நாமும் கத்திரிக்காயை ரசிப்போம்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

கும்பகோணம் கடப்பா சொல்வார்களே
அதுபோல இதுவும் காரணப் பெயரா இருக்கும் போல் இருக்கு.

கொத்சுக்கு எதுக்கு பூண்டும் வெங்காயமும்?
தனி ருசியாக இருக்குமா இருக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
அதேதான் . உ.கிழங்கும் , கத்திரிக்காயும் பிடிக்காதவர்களே இருக்க முடியாது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி நலமுடன் இருங்கள்.

உங்கள் ஊர் செய்முறையும் சில வருடங்களுக்கு முன்னால்
பார்த்தேன்.
அதில் கொஞ்சம் தேங்காய் வறுத்து சேர்த்தார்கள்.

மிக நன்றி மா.

ஸ்ரீராம். said...

உருளையில் பெருவிருப்பம் இல்லாதவன் நான் இருக்கிறேனே...!