Blog Archive

Monday, October 10, 2022

கல்வெட்டை மாற்றி எழுதிய சுந்தர சோழன்... வெளியான பரபரப்பு தகவல்கள்! | TKV...

10 comments:

நெல்லைத் தமிழன் said...

அப்ப்பா...பலருக்கும் இப்போது நிம்மதியாயிருக்கும்.

நம்மதான் திருடலை... ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் நம் முன்னோர்கள் திருடியிருக்காங்க... என்று சந்தோஷப்பட்டுக்கொள்வார்கள். (நம் குல முன்னோர் செய்த தொழிலைத்தானே நாமும் செய்கிறோம் என்று)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
இனிய காலை வணக்கம். என்றும் நலமுடன் இருங்கள்.

காலம் காலமாக நடந்து வரும் திருட்டு.
வருத்தமாக இருக்கிறது இல்லையா.

மனிதர்கள் பிறக்கும் போதே வஞ்சமும் சூழ்ச்சியும்
வந்து விடுகிறது போல. அதுவும் கோவில் விஷயம்!!

கேட்கக் கேட்க அதிசயம். நன்றி மா.

KILLERGEE Devakottai said...

துரோகம் என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கிறது. இன்று அதிகர்த்து விட்டது மற்றபடி புதிதாக நாம் செய்யவில்லை.

இன்று மக்கள் தொகையும் அதிகரித்து விட்டதே... அன்று இறை நம்பிக்கை உள்ளவர்களாக அதிக சதவீதம் மனிதர்கள் இருந்தனர். இன்று இறை மறுப்பாளர்கள் அதிகரித்து விட்டனர். - கில்லர்ஜி

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா, நான் அடிக்கடி சொல்வதுஇதுதான்....அந்தக்காலம் இந்தக்காலம்னு ஒப்பீடு அவசியமே இல்லை என்று. அந்தக்காலத்துல் இப்படி எல்லம் இல்லைன்னு பலரும் சொல்வதுண்டு இல்லையா...அப்படி கிடையாது அப்ப இருந்தவங்களும் மனிதர்கள்தான் இப்பவும் ம்னுஷந்தான் உலகம் முழுவதும் எனவே ம்னுஷன் இருக்கும் இடங்களில் இவை எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கும் அந்தக் காலத்தில் மக்கள் தொகை குறைவு, மீடியா இப்படி கிடையாது எனவே வெளியில் தெரிந்தவை குறைவு இப்படி கல்வெட்டுகள் மூலமாகத்தான் ...

இப்போது அப்படி இல்லை ஜனாகாரம் கூடுதல்....அளவுக்கு மீறி. மீடியாவும் அது போல...எனவே மூச்சுவிட்டாலும் மீடியாவில் வந்துவிடும் அளவு!!!

கடைசிதான் ரொம்ப பிடித்தது சுந்தரச் சோழம் விஷயம்!!! அருமை இல்லையா இதுவரை தெரியாத ஒரு விஷயம்...

கீதா

மாதேவி said...

சுந்தரசோழரின் நீதியை இக் கல்வெட்டு ஆதாரத்துடன் எடுத்துக் காட்டுகிறார்கள்.அறிந்து கொண்டோம். நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லி அம்மா நலமா. இடையில் உங்கள் ஆரோக்கியம் பற்றி அறிந்தேன். இப்போது உங்கள் நலம் பரவாயில்லையா. சரியாகிவிடும்.

காணிளி கண்டேன். வியப்பான தகவல்கள். அதுவும் கோயில் கொள்ளை பற்றி எல்லாம் கல்வெட்டுகளில் குறித்திருப்பது ஆச்சரியம்தான். சுந்தரச் சோழன் பற்றிய தகவல் அருமை. பெருமையாகவும் இருக்கிறது.

பகிர்விற்கு மிக்க நன்றி

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.

மக்களும் அதிகம், வறுமையும், அதிகம்.குறுக்கு வழியில் சம்பாதிக்க'
வழி தேடும் பணம் முதலைகள் அதிகம்.


'இன்று மக்கள் தொகையும் அதிகரித்து விட்டதே... அன்று இறை நம்பிக்கை உள்ளவர்களாக அதிக சதவீதம் மனிதர்கள் இருந்தனர். இன்று இறை மறுப்பாளர்கள் அதிகரித்து விட்டனர். - கில்லர்ஜி'

உண்மை தான். மனிதம் குறைந்து விட்டது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

''அம்மா, நான் அடிக்கடி சொல்வதுஇதுதான்....அந்தக்காலம் இந்தக்காலம்னு ஒப்பீடு அவசியமே இல்லை என்று. அந்தக்காலத்துல் இப்படி எல்லம் இல்லைன்னு பலரும் சொல்வதுண்டு இல்லையா...அப்படி கிடையாது அப்ப இருந்தவங்களும் மனிதர்கள்தான் இப்பவும் மனுஷந்தான் உலகம் முழுவதும் எனவே ம
னுஷன் இருக்கும் இடங்களில் இவை"


மிக மிக உண்மை.
எல்லாக் காலங்களிலும் நன்மையும் இருந்திருக்கு. தீமையும்
இருந்திருக்கு. சோழ சாம்ராஜ்யத்தில்
நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம் பொற்கைப் பாண்டியன் இல்லையா.
நீதியைப் போற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மிக மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,

நலமாப்பா. இணையத்தில் சரித்திரச் சான்றுகள், கல்வெட்டுகள்
படிக்கக் கிடைப்பது எவ்வளவு நன்மை கொண்டு வருகிறது.
மிகவும் பிடித்திருக்கிறது.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நல் வரவு. வணக்கம் மா.''
''வல்லி அம்மா நலமா. இடையில் உங்கள் ஆரோக்கியம் பற்றி அறிந்தேன். இப்போது உங்கள் நலம் பரவாயில்லையா. சரியாகிவிடும்.''

சென்னை சென்று இருந்த போது
வயிற்று நலம் கெட்டது. அதுதான் இன்னும் தொடர்கிறது.

சரியாகிவிடும். ஒரு பதிவு கூடப் போய் படிக்கவில்லை.

முன்பு பதிந்த பதிவுகளை ஒவ்வொன்றாகப்
பதிவிடுகிறேன்.

சுந்தரச் சோழன் பற்றிய பதிவு மிகவும் சுவாரஸ்யமாக
இருந்தது. நன்றி மா.