Blog Archive

Saturday, October 22, 2022

தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள் | மன்னர் மன்னன்

3 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு....முதலில் ராஜராஜ சோழன் குறித்து இப்போது இவ்வளவு சர்ச்சைகள் அவசியமா....மனுஷங்க எப்பவுமே நேற்று நடந்ததைத்தான் சானல் சானலா பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் படிச்சவங்கதானே!!!!? இன்று நம் சமுதாயம் நாடு எதிர்கொள்ளும் யதார்த்த பிரச்சனைகள், விலைவாசி, பெண்கள் பாலியல் வேலை வாய்ப்பு குழந்தைகளின் எதிர்கால்ம, தண்ணீர்ப் பிரச்சனை, குழந்தைகளின் உளவியல், வாழ்க்கை போகும் திசை, அது ஆரோக்கியமானதா, கல்வி, மருத்துவம் இதைப் பத்தி ஆக்கபூர்வமாகப் பேசி தீர்வு காணாமல் எதிர்கால நலத்திட்டங்கள் பத்தி யோசிக்காமல், எதையோ தேவையில்லாமல் பேசி பேசி சமுதாயத்தில் விஷத்தை விதைக்கிறார்கள்.

கேள்வி கேட்பவர் கேட்கும் கேள்விகளை நினைத்து சிரிப்பு வந்தது...யாரிவர்?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சிப்பு சிப்பா வருது....தேவதாசிகள் பத்தி இவ்வளவு கேள்விகள் கேட்கறாங்க..அன்னிக்கு அக்காலத்தில்தான் தான் வந்ததுன்னு...அதுக்கும் முன்ன நம் சமுதாயம் எப்படி இருந்ததுன்னு கேள்வி கேட்பவர் வாசித்தது இல்லை போல!!!!.சரி அன்னிக்கு அப்படி இருந்தது...ஓகே ஆனா இப்ப அதைவிட மோசமாக இல்லையா இருக்கு? பாலியல் தொழில் இப்போது எந்த அளவிற்கு இருக்கிறது!....அப்ப சமுதாயம் முன்னேறவே இல்லைன்னுதானே சொல்ல வேண்டும்? இல்லையா?..அன்னிக்கு வந்தது என்று பேசும் இவர்கள் இன்னிக்குப்பாலியல் தொழிலில் இருக்கும் பெண்கள் பத்தி ஏதேனும் நல்லது செய்யணும் என்று யோசிக்கிறாங்களஆ? நல்ல சிந்தனைகள் பத்தி கேள்விகள் கேட்டு பேசறாங்களா...யாரும் இப்போதைய பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமாகத் தீர்வு காண்பதைப் பற்றி யோசிப்பதில்லை..

கீதா

ஸ்ரீராம். said...

ஏற்கெனவே ஒருமுறை இவர் பேசிய பேச்சுகள் கேட்டிருக்கிறேன்.  இப்போதும் மிக மிக விவரமாகப் பேசுகிறார்.