Blog Archive

Sunday, February 21, 2021

வானில் என்ன?

வல்லிசிம்ஹன்

திடீரென்று வானில் இருந்து விமான இஞ்சினின் பாகம் பாகம் வந்து விழுந்தால்
எப்படி இருக்கும்.?
யாருக்கும் அடிபடவில்லை. இறைவன் கருணை. https://youtu.be/Ez0z8KNUA3s






அந்த விமானியின் மன நிலை. அந்த விமானத்தில் 
இருந்தவர்களின் பதட்டம்.
இவ்வளவு பதட்டத்திலும் விமானத்தை தரை இறக்கிய விமaaனியின் திறமை.....
நினைக்கவே மனம் கலங்குகிறது.

அவர்கள் உயிர் பிழைத்தது இறைவன் அருள்.


8 comments:

ஸ்ரீராம். said...

விமானியின் திறமை போற்றப்பட வேண்டியது.  இதைதான் வாட்சாப் க்ரூப்பிலும் சொல்லி இருந்தீர்களா...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
நம் வீட்டுக்குப் பக்கத்திலேயே
ஒரு சிறு விமானங்கள் நிறுத்தும்
ஒரு county இருக்கிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் முன்னால் சிறு விமானம் நிற்கும் .அதை ஒட்டியே ரன்வே இருக்கும் ...அதிலிருந்து
இனிமேல் விமானங்கள் பறக்க ஆரம்பிக்கும். பை ப்ளேன் வகையறா
செஸ்னா என்று. இப்போது குளிர்காலத்தில் யாரும்
விமானங்களை வெளியே எடுக்கவில்லை. நல்ல வேளை.
++++++++++++++++++++++++++++++++

இன்று செய்தியின் விமானம் பயணப்பட்ட சிறிது நேரத்தில்
வலப்புற எஞ்சினில் விபத்து. டென்வர், கொலராடோ
மாகாணத்தில் நடந்தது. நீங்களும் செய்திகளில்
படித்திருக்கலாம்.

கோமதி அரசு said...

விமானியின் திறமையை பாராட்ட வேண்டும்.நானும் செய்தி பார்த்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

செய்திகளில் பார்த்தேன் மா. நல்ல வேளையாக உயிரிழப்பு இல்லாமல் போனது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. உண்மைதான். அது கீழே விழுந்து யாருக்கும் அடிபட வில்லை.
சரியான அதிர்ச்சி கொடுத்த நிகழ்வு.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நல்லபடியாக விமானத்தை
தரை இறக்கிய விமானியை மிகவும் பாராட்ட வேண்டும்.

Bhanumathy Venkateswaran said...

செய்தியில் பார்த்தேன். விமானி பாராட்டுக்குரியவர்.ஒரு முறை மும்பையிலிருந்து கிளம்பிய நாங்கள் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் டில்லியில் இறங்கும் முன் பறவையால் தாக்கப்பட்டு என்ஜின் செயலிழ்ததால் தரையிரக்கப்பட்டது.அப்போதே எங்களுக்கு பயமாகத்தான் இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா,
இனிய காலை வணக்கம்.
பேத்தியும் மருமகளும் நல்ல சுகம் என்று நினைக்கிறேன்.

நேற்று மதியம் இந்த செய்தி மிக அதிர்ச்சி
தந்தது.
அத்தனை குழந்தைகள் விளையாடும்
இடத்தில் விழுந்திருக்கிறது.
எல்லோரும் அடிபடாமல் தப்பி இருக்கிறார்கள்.
240 பயணிகளையும் பத்திரமாகக்
கொண்டு சேர்த்திருக்கிறார் அந்த விமானி.
இறைவன் தான் நம்மைக் காக்கிறான்.
நீங்களும் தப்பி இருக்கிறீர்கள் என்று கேட்க
பயமாகத்தான் இருக்கிறது அம்மா.
நலமுடன் இருங்கள்.