Blog Archive

Thursday, February 11, 2021

குறுங்குடி எங்க ஊர்

9 comments:

கோமதி அரசு said...

குறுங்குடி கோவில் தரிசனம் செய்தேன்.

இங்கு நடைபெறும் கைசிக நாடகம் மிக அருமையாக இருக்கும் . காணொளியில் பார்த்து இருக்கிறேன்.
கார்த்திகை மாதம் "கைசிக ஏகாதசி" அன்று தான் சார் இறைவனடி சேர்ந்தார்கள்.

ஸ்ரீராம். said...

பாஸ் இங்கு சென்றிருக்கிறார்.  எனக்கு இன்னும் வாய்ப்பு கிட்டவில்லை.  எங்கள் மாமியார் பிறந்த வீட்டின் குலதெய்வம்.  இப்போதுகூட மாமியாரின் அண்ணன் கல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறார்.  அங்கு சென்று வந்தார்.

Geetha Sambasivam said...

திருக்குறுங்குடி இன்னொரு முறை போக வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருக்கோம். அந்த ஆவலை இது தூண்டி விடுகிறது.

நெல்லைத் தமிழன் said...

அந்தக் கோவிலுக்கு இரண்டு முறை சென்று சேவித்திருக்கிறோம். இரண்டவது தடவை சென்றபோது மலைமேல், சூரிய கிரஹண தர்ப்பணம் செய்தோம். கோவில் பலவித எண்ணங்களை வரவழைக்கிறது. அங்கு ஒரு மண்டபத்தில் மிக அழகான சிலைகள் உண்டு (நெல்லை கிருஷ்ணாபுரம் கோவில் போன்று). நிறைய படங்கள் எடுத்திருந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
ஏகாதசி அதுவும் கைசிக ஏகாதசி
அன்று இறைவனடி சேர்வது எவ்வளவு புண்ணியம்
செய்திருக்க வேண்டும்.
என்றும் நம்முடன் இருக்கும் இனிய நினைவுகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
தந்தை வழி சொந்த ஊர் என்று தெரிந்து சென்றதுமுதலில் 9 ஆவது வயதில். பின் தரிசனம் கிடைத்தது 71 ஆம் வயதில். அவரவர்க்கென்று சில நேரங்கள் சில தெய்வ தரிசனங்கள்
ஒதுக்கப் படுகின்றன என்று தான் நினைக்கிறேன்.
கிடைத்தவரை புண்ணியம்.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
சுலபமாகச் சென்று வரலாம். மதுரை வரை
விமானம். பிறகு நல்ல வண்டி வைத்துக் கொண்டு சென்று வரலாம். இறைவன் ஒருவனே அழியாத சாட்சியாக அங்கே
நிற்கிறான்.
அப்பாவுக்குச் செய் நன்றி கடமையாக அங்கே சென்று வந்தேன்.
நல்ல வாய்ப்பு உங்களுக்கும் கிடைக்க நம்பி அருளட்டும்.
பத்திரமாகச் சென்று வரவும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு முரளிமா.
நம் முன்னோர் செய்த புண்ணியம் நம்மை
அங்கே வரவழைக்கிறது.
மலை மேல் நம்பியைக் காண உடலில் தெம்பில்லை
எனக்கு.
வலுவிருக்கும் போது புண்ணியத் தலங்களைத் தரிசிக்க வேண்டும். அதற்கும்
புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
நீங்கள் அனுப்பிய படங்கள் இருக்கின்றன.
அவன் அருள் எப்பொழுதும் நம்முடன் இருக்க வேண்டும்.
அதி அற்புதமான சிற்பங்களைப் பார்க்கும்
பாக்கியம் கிடைத்தது. நீங்கள் சொல்வது உண்மையே.

வெங்கட் நாகராஜ் said...

யூவில் தான் பார்க்க முடியும் என்று சொல்கிறது! :) அலைபேசி வழி யூவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.