Blog Archive

Saturday, July 04, 2020

பௌர்ணமி நிலவில்....

வல்லிசிம்ஹன்  மஞ்சள் மகிமை படம்
உடுமலை நாராயண கவி பாடல்
பௌர்ணமி நிலவில்
SPB ,JANAKI AMMA SONG FROM KANNIPENN 1969இந்தப் பாடலின் வரிகளை இணைக்க முயன்று
தோல்விதான் கிடைத்தது.
அழகான பாடல். படம் பார்த்ததில்லை.
வானொலிக் காலங்களில் 
ரசித்துக் கேட்ட பாடல். 

அம்மாவுக்கு மிகப்
பிடித்த பாடல்.
அவளைப் பாடச் சொல்லி கேட்க ஏன் தோன்றவில்லை
எனக்கு.?
நல்ல குரல் அம்மாவுக்கு.
அப்பாவும் பாடச் சொல்லி கேட்க மாட்டார்.
அம்மாவுக்கும் வாய்விட்டுப் பாடத் தயக்கம்.
ஏதோ ஒரு நவராத்திரி கொலுவில்

அம்மா பாட என் தோழிகளும் நானும்
திகைத்துப் போனோம். 
அவ்வளவு  ஸ்வரசுத்தம். நல்ல தமிழ்ப் 
பாட்டு. பாரதியாரின் ,
''ஒளிபடைத்த கண்ணினாய்'' பாடல்.
வாய் ஓயாமல் பேசும் நானே,
மௌனமான நாள் இப்போது 
நினைவுக்கு வருகிறது.

8 comments:

கோமதி அரசு said...

எல்லா பாடல்களும் கேட்டேன் . அருமையான பாடல்கள்.
பகிர்வுக்கு நன்றி அக்கா.

மனோ சாமிநாதன் said...

' பெளர்ணமி நிலவில்' புகழ் பெற்ற பாடல். படம் கன்னிப்பெண். லக்ஷ்மியின் நடிப்பும் வாணிஸ்ரீ நடிப்பும் அருமையாக இருக்கும். இந்தப்பாடலை விட ' அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே' என்ற பாடல் இனிமையாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மிக மிக நன்றி மா.
விடாமல் வந்து கேட்டு கருத்தும் சொல்கிறீர்கள்.

இதுவும் ஒரு நல்ல பலன் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
அந்தப் பாட்டு நினைவில் இருக்கிறது.
படம் ஞாபகம் இல்லை. பார்க்கவில்லை என்றே நம்புகிறேன்.

70 களில் பல படங்களைத் தவற விட்டிருக்கிறேன்.
பரவாயில்லை இப்பொழுது பார்த்தால் போகிறது:)
நன்றி மா. சும்மா நிலவுப் பாடல்களைப் பதிந்து கொண்டிருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து பாடல்களுமே அருமையான பாடல்கள் அம்மா...

வெங்கட் நாகராஜ் said...

அனைத்து பாடல்களும் சிறப்பானவை. கேட்டு ரசித்தேன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், தவறாமல் வந்து பாடல்கள் கேட்பதற்கு
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் இனிய திங்கள் காலை வணக்கம்
மிக நன்றி மா.