Blog Archive

Thursday, October 25, 2018

இன்பக் கனவொன்று கண்டேன்... கதை

Vallisimhan
என்றும்  ஆனந்தமே .

 கனவுகளுக்கு என்றுமே பஞ்சமில்லை  கனகாவுக்கு.
 ஒரு இரவில் நான்கு  தடவையாவது கனவுகள்  வரும்.

சினிமா தியேட்டரில் காட்சிகள் ஓடுவது போல 10 லிருந்து 12 அரை வரை ஒன்று. விழித்தெழுந்து தண்ணீர் குடித்து இறை நாமம் உச்சரித்தபடி தூங்கிவிடுவாள்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில்  இன்னோரு கனவு .இது கொஞ்சம் பயங்கரமாக இருக்கும்.
அப்போதுதான்  நினைவுக்கு  வரும், கனவில் வந்தவர்கள்
கஷ்டப்படும்  நிலமை இப்போது இல்லை. இறைவன் திருப்பாதங்களை அடைந்து விட்டார்கள் என்று. இந்த நிம்மதி தனக்குத் தோன்றும் என்று கற்பனை செய்ததில்லை.

ஐந்து மணிக்குக் கணவர் சபாபதி, நடைப்பயிற்சிக்குக் கிளம்பும் 
சத்தம் கேட்கும் போது, மெதுவாக நனவுலகுக்கு வருவாள்.

கடைசியாக வந்த கனவு என்ன என்று நினைவில் இருக்காது.
நல்லவேளை என்று நினைத்தபடி,அந்த நாளைத்தொடங்குவாள்.

அதிகப் படியான மருந்துகள் உள்ளே போவதால் 
வரும் தொந்தரவு இது என்று நினைத்தபடி 
 காலை உணவு  தயார் செய்து ,கணவருக்கு எடுத்து வைத்துவிட்டு
கணினியில் வேலை தொடங்கும் போது, முதலில் கூகிளில்
கனவு பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று தேடுபொறியை இயக்கினாள். 

ஒன்பது மணிக்குத்தான் அலுவலகத்துக்கு லாகின் செய்ய வேண்டும்.
இல்லாவிடில் அவளின் தலைமை ping செய்து செய்துவிடுவார்.

கனவுகள் பற்றி ஒரு 15, 20  நபர்கள் விளக்குவதைப் படித்துக் களைத்து
ஒரு முடிவுக்கும் வரமுடியாமல்,கையில் வைத்திருந்த ரொட்டிக் கலவையைச் சுவைத்தபடி

முருகா நீ வரவேண்டும் என்று டிஎமெஸ் கணீரென்று பாடுவதை
ரசித்தவாறு வேலையை ஆரம்பித்தாள்.

சத்தமில்லாமல் உள்ளே வந்த சபாபதி, மெல்ல மனைவியின் 
தோளில் கைவைத்தார்.
புன்னகையுடன் திரும்பிய கனகா, எவ்வளவு நடந்தீர்கள் இன்று 
 கேட்டபடி எழுந்தாள்.
காலை உணவை அவருடன் தான் உண்ண வேண்டும்
என்ற தீர்மானம் அவளுக்கு.பேசாவிட்டாலும் அமைதியாகத் தொடங்க
இந்த வேளை உதவும். இதற்காகக் கையில் புத்தகம் இல்லாமல் சாப்பிடத்தெரியாத தன் வழக்கத்தையே விட்டிருந்தாள்.
அவருக்கு அது பிடிக்காததுதான் முதல் காரணம். ஏம்மா, சாதம் எங்க இருக்கு ,வாய் எங்க இருக்குன்னு தெரியாமல் அப்படி
அந்தப் புத்தகத்தின் மேல் ஈடுபாடு என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.

கனகாவின் மாமியார் மதியம் சாப்பிடும்போது கனகா விகடன் இருக்கு எடுத்துக்கோ, சாப்பிடும்போது வேணுமே என்பார்.
புதிதாக யாரவது இருந்தால் விகடன் எல்லாம் இந்த அம்மா // ஒரு பேச்சுக்குத் தான்//
சாப்பிடுவாங்களோன்னு கூடத் தோன்றிவிடும்.
இன்று அவர் சாப்பிடும்போது அவரிடம் தான் கண்ட கனவைச் சொல்லத் தோன்றியது  கனகாவுக்கு.
எங்கம்மா சொப்பனத்தில் வந்தார் என்றாள்.
முதல் தடவை வராங்களா அத்தை என்றார் சபாபாதி.
ஆமாம் என்னும் போதே கண் கலங்கியது அவளுக்கு.
முடியாமப் படுத்திட்டிருக்காங்க. அவங்க உதவிக்கு ஒரு பருமனான அம்மா
ஒருவர் கட்டில் மேலேயே அமர்ந்திருந்தார். அரக்குப் புடவை, கறுத்த நிறம், பெரிய குங்குமப் பொட்டு.
இதைதான் நான் பார்த்தேன். அம்மாவை டாய்லெட்டு அழைத்துச் சென்று
அழைத்து வந்தார்.
அவ்வளவு உடம்பு பலவீனத்திலும்  அம்மா , இவளுக்கு
நல்ல புடவையாக வாங்கிக் கொடு என்றார்.
விழித்துக் கொண்டேன் என்றாள்.

இவ்வளவுதானே, உனக்கு சமயபுரம் போகவில்லை,
சங்கரன் கோவில் போகவில்லை என்ற ஏக்கம் எப்போதும்.

இப்பொழுதே மணி ஆர்டர் அனுப்பிவிடுகிறேன்.
நாம் இந்த டிசம்பரில் இந்தியா செல்லும்போது
கோமதியம்மனுக்கும், சமயபுரத்துக்கும் புடவைகள் வாங்கி
சார்த்திவிடலாம்.
நிம்மதியாக இரு. என்று சாப்பிட்டு முடித்தார்.

திருப்பதி என்று ஆரம்பிக்காதே. அம்மாவுக்குத் தள்ளாது இரண்டு மூன்று பயணம்.
அடுத்த தடவை. 
நம் பாலாஜி மந்திரில் காணிக்கை செலுத்திவிடு என்றாரே பார்க்கணும்.
கனகாவின் முகத்தில் சிரிப்பு பொங்கியது.
நான் நினைக்கலியே. உங்களுக்கும் ஏதாவது கனவு வந்ததோ
என்றபடி எழுந்தாள்.
நீண்ட பயணமோ வாழ்க்கை.
அம்மா 
Add caption
    

No comments: