எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
கண்ணனைப் பற்றி ஒரு கதை.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
வெண்ணெய்க்கு ஆடும் கண்ணன்
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
எல்லாம் உனக்கு கண்ணா.
கண்ணன் பிறந்து மூன்று நாட்கள் கழித்து அவனைப் பற்றின பாட்டி ஒருத்தியின் கதை கிடைத்தது. அனுப்பினது என் குட்டித் தங்கை. கண்ணனையே தியானம் செய்து அவனுக்கே எல்லாம் என்று சொல்லும் வழக்கம் கொண்ட வயதான மாது வாழ்ந்துவந்தாள். குருவாயூரப்பன் அவள் நினைத்துவந்த வந்த தெய்வம். எதை எடுத்தாலும் கிருணார்ப்பணம் என்று சொல்லி அனுபவிப்பது அவள் வழக்கமாம். ஒரு நாள் பழைய காலத்து வீட்டு வாயில்படிகள் கொண்ட ஒரு வீட்டுக்குள் நுழையும்போது நிலைவாசல் அவள் தலையில் தட்டிவிட்டு வலித்ததாம். வலியின் கொடுமையிலும் கிருஷ்ணார்ப்பணம் சொல்லிக் கொண்டாள் பாட்டி. இப்படியே இருந்தவள் வாழ்விலும் தனம் வந்து சேர்ந்தது தங்கங்களாக. அவளுடைய பகதர்கள் செல்வந்தர்கள்.அவளுக்குச் சமர்ப்பித்த செல்வமாகப் பெற்றுக் கொண்ட பாட்டி அதைப் பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டாள். கண்ணனுக்கு என்று சொல்ல மனம் வரவில்லையோ இல்லை மறந்தாளோ தெரியாது. ஒருநாள் பவதி பிக்ஷாந்தேஹி என்று கேட்டவண்ணம் ஒரு அந்தணர் வாயிலில் வந்து நின்றார். அவர் எத்தனை முறை கூவியும் பாட்டி வெளியில் வந்து பிக்ஷை கொடுக்கவில்லை. கோபம் கொண்ட அந்தணன் கிருஷ்ணன், படி இடிச்சா எனக்கு. பதக்கம் கிடைத்தால் உனக்கா என்று உரக்கச் சொன்னாராம். பகீர் என்றது பாட்டிக்கு. ஓடிவந்து கண்ணனில் பாதங்களில் விழுந்தாள். அவனுக்கு உபசாரம் செய்து தன்னிடமிருந்த அத்தனையும் அவன் காலடியில் சமர்ப்பித்து எல்லாம் உனக்கே கண்ணா. உன் அருள் ஒன்று போதும் எனக்கு என்றாளாம். கண்ணன் அவளையும் பொருளையும் ஏற்றுக் கொண்டானாம். இணைய வழியில் தங்கை அனுப்பிய கதையை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
வெண்ணெய் திருடன் ஆட்டம் படு ஜோர். சொன்னது சின்ன கதையானாலும், அதிலுள்ள தத்துவம் மிகப் பெரிது . அந்த அம்மா மாதிரி தானே நாமும், கஷ்டம் வந்தால் கடவுள் கொடுத்தது, நல்லது நடந்தால் நம்முடைய பிரயத்தனம் என்கிற நினைப்பும் .......
நாம் எவ்வளவு மறந்தாலும் நம்மை வந்து பார்ப்பதில்லை கண்ணன்! கலியுகக் கண்ணன் படம் பார்த்திருக்கிறீர்களோ? தேங்காய் சீனிவாசன் அமர்க்களப் படுத்தி இருப்பார் இதே போன்ற ஒரு கேரக்டரில்.
கலியுகக் கண்ணன் படம் லேசாக ஞாபகம் இருக்கிறது ஸ்ரீராம். கொஞ்சம் சிவாஜி சாயல் அடிக்குமோ.யூ டியூபில் தேடுகிறேன்.உங்களுக்குத் தேங்காய் நடிப்பு பிடிக்கும்னு தோன்றுகிறது.
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அல்லாதன மனதில் தங்குவது அதிகம். நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன்........... பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள் என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள் வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான் வேண்டும்:) பிறகு அவர்களின் திருமணங்கள். இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது. பிறகுதான் நினைவுகள் தடம் மாறுகின்றன. தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான் மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துக...
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,மனைநலம் காத்து நூறாண்டு காலம் செழித்திருக்க வேண்டும்.
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
Comments
துளசியின் கமெண்ட் சூப்பர் !!
க்ருஷ்ணர் விக்ரகம் நல்ல களை.