Blog Archive

Wednesday, August 15, 2012

சுதந்திர தின நினைவுகள்

 


இடம் பசுமலை   மதுரை
நாள்     15/8/1965
  12  ஆம் தேதியிலிருந்தே  தபாலாபீஸ் அல்லோலகல்லப் பட்டது.
இருக்கும் நான்கு  ஜன்னல்கள் அழுந்தத் துடைக்கப்பட்டு   சுத்தம் பளிச்சிட்டது.
என்னா விசேசாம் கண்ணு .அப்பா இத்தனை பேரோட
இவ்வளா வேலை செய்கிறார் என்று கேகும் தேவானை.
தபால் ஆப்பீசைச் சுத்தம் செய்யும் பெண்மணி.
நமக்கெல்லாம் சுதந்திரம்   கிடச்ச நாள் வருது தேவானை.

அன்னிக்கு நம்ம ஆபீஸ் மேல கொடி ஏத்திப் பறக்கவிட்டுப் பாட்டுப்
பாடிக் கொண்டாடணும்.
ஏன்  என்னா  கிடச்சுதுன்னு பாடணும்?
போன வருஷமெல்லாம் என்ன செய்தீங்க. ஒண்ணும் செய்யலையே அந்த அய்யாவுக்கு உடல் சரியில்ல. எங்களுக்கெல்லாம் லீவு  விட்டுட்டாங்க.

ஏதோ தெரியாமல் சொல்கிறார் என்று தெரிந்தது.
வெள்ளைக்காரங்க  இருந்தாங்க நம்ம ஊரில.
அவங்க நம்மளை ரொம்பக் கட்டுப்பாட்டில்  வைச்சிருந்தாங்க.

நீ சினிமா போகும் போது பார்ப்பியே
நேருஜி  இந்த மாதிரி  தலைவர்களை?
நியூஸ்னு போடுவாங்களே. அவர் இறந்துட்டாரேமா.
ஆமாம் அவருக்குப் பதிலா இப்ப  ஸாஸ்திரிஜி
வந்திருக்கார். அவர்தான் நமக்குப் பிரதம மந்திரி.
அவங்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?

அவங்க எல்லாம் போராடி வெள்ளைக்காரங்களை விரட்டி
அடிச்சாங்க. அந்த நாள் தான் ஆகஸ்ட் மாசம் 15.

நம்ம ஊருக்கு  எல்லாம்   வந்திடுச்சா/
 எது? 
சுதந்தரம்...
எல்லாருக்கும் வந்துடுத்துப்பா.
என்ன னு சொல்லேன்பா.
இப்ப நம்மளை இங்க நில்லு. அங்க நிக்காதேன்னு சொல்ல மாட்டங்க..
என்ன வேணா சொல்லலாம். நமக்கு வேணும்கறவங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
எதுக்கு?
 நம்மளைப் பத்தி நமக்கு வேணும்கற    தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பாங்க

யார்கிட்டப் போய்க் கேப்பாங்க.
  மெட்ராஸ் பட்டணம் இருக்கு இல்ல.
அங்க கூடிப் பேசி நல்லது செய்வாங்க.

யார்கிட்டச் சொல்லணும் .
 தேர்தல் வருமே அப்ப..
நீ சொல்லி இருக்கியா
இல்ல 21 வயசாகணும்(அப்பொழுது)
பாப்பா   அப்ப  நீ நான் போட முடியாது
ம்ஹூம்.
சரி நாளைக்கு வரேன்.
அப்பா கொடியை த் துவைச்சுக் கிட்டிருக்காரு. காயப் போடலாம்
இதுக்கப்புறம் தோக்கவேண்டிய அவசியம் வராது. நல்லா மடிச்சு அதுக்கான பொட்டியில் வச்சிரலாம் தேவானை.
அடுத்த நாள் காலையிலிருந்தே அப்பாவோடு எங்களுக்கும் உற்சாகம் பற்றிக் கொண்டது.
தம்பி பறந்தான் மிட்டாய் வாங்க.
தபால் ஆபீசின் மேலிருந்த கொடிக்கம்பத்தைப் போஸ்ட்மேன்
ப்ராசோ  போட்டுத் தங்கமென மின்ன வைத்தார்.
அப்பா வெள்ளைக் கயிறின் வெள்ளை போதுமான்னு பார்த்துவிட்டு
தேசியக் கொடியைக் குழந்தையைப் போலத் தூக்கி அதில் ரோஜ இதழ்களை நிரப்பினார். பிறகு  வடிவாக மடித்துத் தயார் செய்தார்.
கொடி மேலே ஏறியது கயிறு அப்பா கையில்.
அனைவரும்  வந்தாச்சா என்று கேட்டபடி சுற்றிப் பார்த்தார்.
அம்மா  கதவிற்குப் பின்னால் இருந்தபடி முகம் பூராவும் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் மூவருமாபீஸ் குமாஸ்தாக்களுடனும் மற்றவர்களுடன் சேர்ந்து
சல்யூட் செய்ய ,ஏற்றப்படி  பறக்க ஆரம்பித்து ரோஜா இதழ்கள் எல்லோர் மேலும் விழுந்தது.
உடனே ஜனகணமனவும், தாயின் மணிக்கொடி பாரீரும்,வந்தே மாதரமும்

பலகுரல்களில் ஒலிக்க  அப்பா  சிறு சொற்பொழிவு நிகழ்த்தினார்..
காத்திருந்த இனிப்புப் பொட்டலங்களும் தட்டில் வைக்கப் பட்டு வந்தன.

அன்று சாயந்திரம் அப்பா கொடியை மரியாதையோடு   இறக்கும் வரை நாங்கள் நொடிக்கொருதரம்  வெளி வந்து  பறக்கும் கொடியைப் பார்த்துச் சந்தோஷப் பட்டதெல்லாம் பழங்கதையாகி விட்டது.
இந்தியா   வளம் பெறட்டும்.




















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

16 comments:

துளசி கோபால் said...

அருமை!

ஆமாம்.... இப்ப சுதந்திரம் வந்துச்சோ?
எங்க வேணா நிக்கலாமா?

ராமலக்ஷ்மி said...



அருமையான நினைவலைகள்!

சுதந்திர தின வாழ்த்துகள்!

சாந்தி மாரியப்பன் said...

இனிமையான நினைவலைகள்..

சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா... நன்றி...

ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

ஸ்ரீராம். said...

அந்தக் கொடியை மடிக்கும் விதத்தில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அது சரியாகத் தெரிந்து மடித்தால்தான் மேலே சரியாக ஏறி நேரத்தில் மலர்களை உதிர்க்கும். இங்கு அது தவறிய கணங்கள் எல்லாம் உண்டு.
சுதந்திர தினங்கள் ஒரு மிட்டாயின் சந்தோஷத்தில் முடிந்து விடுகின்றன!

Unknown said...

அருமை அம்மா. சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
கோமதி அரசு said...

அருமையான நினைவலைகள்.

சிறுவயதில் பள்ளியில் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு மிட்டாய் வாங்கி கொண்டு மகிழ்ச்சியாக வீடு வந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது.
சுதஎதிரதின நல் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நா என்ன நாட்டுக்குத் தானெ சுதந்திரம்னு தானே சொன்னேன்.:)
நிக்கறது நிக்காததும் அம்மா அப்பா மாமனார் மாமியார் பொறுத்து அமையும்.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா ராமலக்ஷ்மி.சுதந்திரம் எல்லோருக்கும் உண்மையாகக் கிடைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

உங்களுக்கும் நல் வாழ்த்துகள் சாரல்.நாடு வளம் அடைய வேண்டும்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தனபாலன் ஏன் என்ற கேள்வி யும் விழிப்புணர்வும் எப்பவும் நம்முடன் இருக்க வேண்டும்,சுதந்திரம் நம்முடன் எப்பவும் தங்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் சொல்வது சரியே ஸ்ரீராம். அப்பா எங்களையெல்லாம் தள்ளி நின்றே பார்க்கச் சொல்வார்,. அவரைப் பொறுத்தவரை நாட்டின் கொடி தெய்வத்திற்கு சமானம்.தன் கடைசி வருடம் வரை தாங்கள் குடியிருந்த
அபார்ட்மெண்ட் சுதந்திர நாள் கொடியேற்றுவதை நிறுத்தவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இந்திரா சுதந்திரம் செழிக்க நாமும் செழிக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி. சிறுபிராயத்தில் சட்டையில் குத்திக் கொண்ட கொடி அவ்வளவு ஏற்றம் தரும் மனதுக்கு.

மிகவும் நன்றி.நல் சுதந்திரம் எம்றும் நம்முடன் இருக்கட்டும்.

நிரஞ்சனா said...

நான்லாம் பிறக்கறத்துக்கு பல வருஷங்களுக்கு முன் நிகழ்ந்த உங்களோட நினைவுகளை இப்ப பகிர்ந்துட்டதைப் படிக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சும்மா. இந்தத் தலைமுறைக்கு இதெல்லாம் பொக்கிஷம்தான்.